Posts

Showing posts from September, 2021

இனிய கானங்கள் கிஷோர் சாப் உடன்

Image
வல்லிசிம்ஹன் கிஷோர் குமார் அவர்களின் குரலை  விமரிசிப்பது/வர்ணிப்பது சுலபம் இல்லை. அதை ரசிப்பதே நம் வேலை. வாழ்க  இசை,. நம் வாழ்க்கையில் பல குரல்கள் நம்மை அமைதியுறச் செய்கின்றன. இன்றும் பாட்டுக் கேட்ட படியே தான் உறங்கப் போகிறேன்.  முருகன் பாடல்கள் துணை. 30 நிமிடங்களில் உறக்கம் வந்துவிடும்:) கணினியில் உட்கார, எழுத சி.எஸ் ஜயராமனில் ஆரம்பித்து, சீர்காழி, சுசீலா அம்மா, டி எம் எஸ் ,திருச்சி லோகனாதன்  என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இசை. காதையும், கேட்கும் திறனையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி,.

சுட்டு சாப்பிட்ட பதிவு:)

வல்லிசிம்ஹன் Thank you Jayanthi Kannan dear Sister, சுட்டு சாப்பிட்ட பதிவு இன்னைக்கு வெளில சாப்பிடலாமா?” என்று கேட்டான் மகன். ( இவனுக்கு இதே வேலையாப் போச்சு.... நல்லதா வீட்டில் எதைச் சமைத்தாலும் சாப்பிட மாட்டேங்கிறாங்க.வெளியில் எதைப் போட்டாலும் தின்கிறார்கள்) ‘வெளியே என்றால் எங்கே?  வெளியே என்பது ஒரு Broad term. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்துப் படிக்கட்டில் சாப்பிடுவது கூட வெளியேயில் தான் அடக்கம். “பார்பக்யூல சாப்பிடலாமா?” “பார்பர் ஷாப்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாதுடா. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பழக்கம் இருக்கே தவிர ஷேவிங் க்ரீம் எல்லாம் இது வரைக்கும் சாப்பிட்டது இல்லே” “அப்பா...  இது Barbeque.  ஒரு விதமான ஹோட்டல்” “டேய்... எனக்கு பார்வதி பவன் போதும்.  இந்த பார்பெக்யூ எல்லாம் வேணாம்”  “நீங்க வந்தே ஆகணும்..  நான் டேபிள் புக் பண்றேன்” பிறகு மகன் ஹோட்டல் ஆட்களிடம் ஏதோ இங்கிலீஷில் பேசினான்.  “டேபிள் புக் பண்ணி ஆச்சு.  நமக்கு மத்தியானம் 2:30 மணிக்கு அலாட் ஆகி இருக்கு” “பார்பெக்யூன்னா என்னடா?” என்றேன். “க்ரில்.  நீ இதுவரைக்கும் Grill சாப்பி...

நீல நிறத்தின் சிறப்பு

Image
மதிய நேரங்களில் பேரனை அழைத்து வருவது  வழக்கம் ஆகிவிட்டது.  நல்ல காற்று முகம் எல்லாம் படர, மதிய நேரமே இப்போது இனிமையாக இருக்கிறது.  வல்லிசிம்ஹன் இனியொரு மாதம் சென்றால் சாளரங்களைத் திறந்து வைக்க முடியாது. இந்த நீல நிறத்தையும் காண முடியாது. பள்ளிக்கூடத்தில் படம் எடுக்க முடியாது. அங்கே  நடக்கும் கோலாஹலமான பேச்சுகள். மாணவ மாணவிகளின் உற்சாகப் பேச்சுகள் கிண்டல்கள் எல்லாமே காதில் விழும். விளையாட்டுக்குச் செல்லும் சத்தம். வாலி பால், சாக்கர், ஹாக்கி என்று வித விதமான யூனிஃபார்ம்கள், பெரிய மைதானத்தைச் சுற்றி ஓடும் விளையாட்டு வீரர்கள். ஒன்றும் செய்யாமல் மரத்தடிகளில் பேசிக்களிக்கும் சிலர். தனிதனியே உட்கார்ந்து மொபைல் பார்த்த வண்ணம் நேரம் கழிக்கும் சிலர். கை கோர்த்தபடி  வண்டிக்குச் சென்று  வண்டியை வேகமாக விரட்டும் 17 வயது விடலைகள். (அவர்களுக்கு வேகமாகச் செல்ல அனுமதி கிடையாது) பள்ளி போன்ற இடங்களில் மாணவர்களுக்கே முதல் உரிமை. அதையும் மீறி அவர்கள் லைசென்ஸ் பெற்ற  உற்சாகத்தில் 16 ஆவது பிறந்த நாளுக்குக் கொடுக்கப் பட்ட வண்டியை வ்ரூம் வ்ரூம் ஒலிக்க  எடுப்பது நம்மை சாலை...

அக்கா ,தம்பி பாசம்:)

Image
  என் தம்பிகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. எனக்குத் திருமணம் நடந்த போது  இன்னோரு குடும்பம் கிடைத்ததாகவே மகிழ்ந்தனர். அவ்வளவு  இன்னொசெண்ட்  ஆத்மாக்கள். என் தம்பி ரங்கனின் நினைவில்.  டேய்  ரங்கா. ஹாப்பி  பர்த்டே டா. 70 ஆகிறது உனக்கு. உன் மனைவி, குழந்தை, மாப்பிள்ளை, பேரன் அனைவரும் நலமாக இருக்கட்டும். என்னாளும் செய் நன்றி மறவாமல் இருக்க வேண்டும்.  இதற்காகவே மிஞ்சி இருக்கும் நான்  இந்த மஹாலய பட்சத்தில் உங்கள் இருவருக்கும் நற்கதி கிடைத்திருக்கும் என்று நம்பி, உங்கள் எல்லாப் பிறவிகளிலும் அன்னம், தண்ணீர்,இருப்பிடம் எல்லாம் நலமாக அமைய இறைவனைப்  பிரார்த்திக்கிறேன்.

மஹா பாரதக் கதைகள்..தர்மம் 2

Image
வல்லிசிம்ஹன்  ·  மஹாபாரத கிளை கதைகள்: மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி. பாரதத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை பாரதங்கள் உலவுகின்றன. நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த மூன்று கதைகள் இங்கே. முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துடியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை. துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகி...

தெய்வ கானம் கொடுத்த அம்மா

Image
வல்லிசிம்ஹன்செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பதிந்திருக்க வேண்டிய கானங்கள். சில பல காரணங்களால் இன்று பதிகிறேன். தேவ கானத்துக்கு ஏது  காலம்.? நிறைவுடன் நினைப்போம். நமஸ்காரங்கள்  அம்மா. கோடிப் பிரமாணங்கள்.

Yercaud | Weekend Gateway

Image
எங்கள் சேலம் நினைவுகளுக்கு  ஒரு பாலம் யேர்க்காடு. சிங்கத்தின் ஆகச் சிறந்த தோழர் வசித்த இடம். எங்களுக்கு வார இறுதிப் பயணம் போகக் கிடைத்த இடம்.  யேற்காடு ஏரி அருகே இருந்த சேர்வராய்  விடுதியில் தங்கி அடுத்த நாள் சேலம் திரும்பி விடுவோம். காலை உணவுக்குப் பின் , நடை நடை நடைதான். அந்த மரங்களும் ,பறவைகளின் குரல் ஒலியும் மறக்க முடியாத நினைவுகள். அடிக்கடி வந்து போகும் மேகப் பொதிகள். மஞ்சு என்று  சொல்வார்கள். மஞ்சி வருது பார்த்துப் போங்க என்று எதிரே வருபவர்களின் குரல் மட்டும் கேட்கும்:) நல்ல நினைவுகளுக்கு நன்றி.

கண்ணிற்கினிய காட்சிகள்.

Image
வல்லிசிம்ஹன்❤ இணையத்தில் கண்களில் பட்ட காட்சிகள். இவை எல்லாம் ஓவியங்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை. அப்படியே அச்சாகவா வரைவார்கள். அதுவும் அந்தத் தென்னைமரம் ஓலைகள் பளிச்சிட, கீற்றுகள் அளவோடு  பிரிந்திருக்க  மிக மிகச் சிறப்பு.  நான் எல்லா இடங்களையும் காமிராவில்  படங்களாக அடைத்தபடி இருந்தே.  சின்னக் கையளவு  காமிராவிலிருந்து  வீடியோ காமிராவரை  பிள்ளைகளும் ,பெண்ணும் வாங்கிக் கொடுக்க ரோல் ரோலாகப் படம் எடுத்து  ஸ்டூடியோவில் கொடுத்துப் படமாக்கி வீடு நிறைந்தது. பிறகு கணினியில்  ஏற்றப் பழகிக் கொன்டேன். அப்போது நம் ராமலக்ஷ்மியின் பிட் காண்டெஸ்ட் எல்லாம் இருந்தது. காமிராவில் எடுத்த படங்களை இப்போது  பார்த்தாலும் அப்படி கச்சிதமாக இருக்கிறது. இப்போது கணினி, இணையம், மொபைலில்  படம் எடுப்பது எல்லாம் கைகொடுக்கிறது. தோழி அனுப்பிய ஓவியக் கண்காட்சிப்  படங்கள் அசர வைத்தன. பிறகு நானே தேடினேன். இப்போது கண்காட்சிக்கு எல்லாம்  போகும் நிலை இல்லையே. இந்தப் படங்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.  இலைகள்   உதிர்ந்து நி...

தர்மம்...பழமொழி

Image
வல்லிசிம்ஹன் #படித்ததில்பிடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்: தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். தம்மிடம், பசித்து வருவோருக்கு வேறு இடத்தை சுட்டிக்காட்டி, அங்கே செல்லும்படி சொன்னாலும் சிறிதளவு அன்னதானப் பயன் உண்டாம். இதனையொட்டி எழுந்தது, மேலே உள்ள பழமொழி. இது தொடர்பான பாரதக் கதை: கர்ணன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட பிறகு தன் புண்ணிய பலத்தின் காரணமாக கைலாசம் சென்றான். அங்கே அவனுக்குப் பசி எடுத்தது. அந்தப் புனித லோகத்தில் எவருக்கும் பசி, தாகம் இல்லை. ஆனால், தனக்கு மட்டும் பசி ஏற்படக் காரணம் கர்ணனுக்குப் புரியவில்லை. அவன் நந்திதேவரிடம் சென்று விசாரித்தான். நந்திதேவர், ‘‘கர்ணா! நீ பூவுலகில் எல்லா வகையான தானங்களும் செய்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் உனக்கு இங்கே வந்ததும் பசிக்கிறது. நீ உன் ஆள்காட்டி விரலை வாயிலே வைத்துச் சுவை. அப்போது பசி போய்விடும்’’ என்றார். கர்ணனும் அப்படியே செய்தான்; பசி போய்விட்டது. உடனே கர்ணன் நந்தியடிகளைப் பார்த்து, ‘‘இந்த ஆள்காட்டி விரலில் என்ன மர்மம் இருக்கிறது?’’ என்றான். அதையடுத்து அவர் சொன்ன வரலாறு இ...

சில இனிய கீதங்கள்.

Image
வல்லிசிம்ஹன்

குறும்படங்கள். …ரசிக்கலாம்.

Image
வல்லிசிம்ஹன்

மஹாலய பட்சம் ஆரம்பம்..

வல்லிசிம்ஹன் மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். வரும் 20.09.2021 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 6.10.2021ஆம் தேதி வரை 15 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.  இந்த  நாட்களில் தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது.  மஹாளய பட்சமாகிய இந்த நாட்களில் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதிக்கின்றனர். பித்ருக்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்ப...

..பிடித்த நகைச்சுவை:)

Image
ஞாயிறு காலை நன்றே விடிந்தது. சூரியனுக்கு வணக்கம் சொல்லி வாசலின் செக்யூரிட்டி  லாக்கை அலார்ம் அணைத்துவிட்டுத் திரும்பும்போது  கதவுக்கு அப்பால்  டமால் என்று ஏதோ விழும் சப்தம் அமேஸான் பாக்கெட்டை வைத்து விட்டுப் போகிறார்களா என்று பார்த்தால்,( they are always very gentle) அமேஸான் டப்பா பக்கத்தில் ஒரு மீன்!! மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.என் பதட்டத்தில், என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீனின் கண்கள் என்னைப் பார்த்த வண்ணம். கண் முன்னே அது சலனமற்றுப் போனது. மேலிருந்து ஒரு பறவை இதை நழுவ விட்டிருக்க வேண்டும்:( பக்கத்தில் ஏரி இருக்கிறது. கதவைத் திறந்தால் சத்தம் கேட்கும்.  மகளுக்கு யோசனையாகிவிடும். எல்லோரும் ஞாயிறு தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே புரியவில்லை.நம் ஊராயிருந்தால் அதன் மேல் தண்ணீராவது விட்டிருக்கலாம். மனக் கலக்கத்தைப் போக்கிக் கொள்ள சபாஷ் மீனா படம் பார்க்க ஆரம்பித்தேன். நம் கோமதி அரசு காப்பாற்றிய பறவைகள் நினைவு  வந்தது.நம் எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் விதவிதமான உயிரினங்களைக் காத்து இருக்கிறார். சிங்கம் இருந்திருந்தால் உடனே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத...

நெல்லைக்குப் போகலாமா. ஒரு பயணம்!

Image
முன்பு சென்ற இடங்களெல்லாம் மனதில்  நிழலாகச் செல்ல, அவசரப் பயணமாக நெல்லை சென்று வந்தது ஒரு  கனவு போலத் தோன்றுகிறது. பல நல்லவர்களின் விளை நிலமாக இருக்கும் நெல்லைத் தாமிரபரணி தீரம்  1995இல்  இருந்து  திட்டமிட்டு 2019இல்  நிறைவேறியது. திருக்குறுங்குடி, கீழ நத்தம், திருக்குருகூர் -ஆழ்வார் திரு நகரி இவையே வரித்திட்ட ஸ்தலங்கள்.  தந்தை ஊர், தாயின் ஊர், குரு,ஆச்சார்யனின்  ஊர் என்று திட்டம் இட்ட மனம். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம். பழங்கா நத்தத்தில் தங்கல். அடுத்த நாள் வாடகைக்காரில் திரு நெல்வேலிக்குப்  பயணம். பழகிய இடங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை. திருப்பரங்குன்றம் கோயிலும் ,மலையும் ,கப்பலூரும் கண்ணில் பட்டன. திருமங்கலத்தைதாண்டி விரைந்த வண்டியின் ஓட்டுனருக்கு சகல அரசியலும் தெரிந்திருந்தது. வேண்டுமோ வேண்டாமோ அத்தனையையும் காதில் திணித்தார். சிங்கமாயிருந்தால் ஒரு அதட்டலில் நிலமை மாறி இருக்கும்.  மகன்கள்  இருவரும் மரியாதை நிமித்தம் பொறுத்துக் கொண்டு வந்தார்கள்:) மனம் 71 வருட வாழ்க்கையின் ஒவ்வொரு  சம்பவங்களையும் அசை போட்டுக் கொண்டு...

அந்தரங்கமும் அந்த ரங்கனும்

Image
வல்லிசிம்ஹன் Thank you @Geetha Rangan for  making  me to muse about Srirangan. வட பத்ர ஸாயி ரங்க மன்னார் ஆண்டாளை  இந்த ரங்கன் ஆண்டுகொண்டு அவளும் ஆண்டாள். நமக்குக் கிடைத்தது அவர்களின் வாத்சல்ய அருள். அந்தக் கருணையை என்றும் அனுபவிக்கும்  மனம்.வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேகர்  ஸாந்த்ர வாத்சல்ய சிந்து என்றே அழைக்கிறார். அவளே விஷ்ணு சித்தரின் மனக் கடலில் விளைந்த புதல்வி. அவர் ஒரு மாபெருங்ககடல் என்றால், அவர் மகள் ஆலிலைக் கண்ணன் அரங்கனுடன் இணையும் முன்னேயே கருணைக் கடல் ஆகிறாள். கோதா தேவி காத்தருள். புரட்டாசித் திரு மாதம் திருவோண நாளில் பிறந்தது. தவ நாட்கள் ஆரம்பம். அத்தனை அருள்தெய்வங்களையும் நித்தம் சிந்திப்போம் அவனே கருணை செய்வான்.

5 ways to use your kitchen better

Image
இப்பொழுதுதான் கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவைப் படித்து விட்டு வந்தேன். இங்கே வந்தால் இந்த அம்மா சொல்லுகிறார்கள்:)

Sudhir Srinivasan's The Late Review: Thalaivii | Kangana Ranaut | Arvind...

Image
ஒரு பிரபலமான மனிதர்/மனுஷி  பற்றி எடுக்கப் படும்  பயோபிக் சாதாரண விஷயம் இல்லை. சொல்லுவது செல்லுபடியாக வேண்டும் என்றால் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் உணர்ச்சிவசப்படுபவர்களே அதிகம்.  ஆராய்ச்சிகள் பல செய்து, தெரிந்த விஷயங்களையே  நாசூக்காகவும் அழகாகவும் கதைச் சம்பவங்களாகக் கோர்த்திருக்கிறார் இயக்குனர். அர்விந்த் சுவாமி, மிகப் பாடுபட்டு தலைவராக மாறி இருக்கிறார். தமிழே தெரியாத  கங்கணா ரணாவத் ஜெயாவாகவே மாற இயக்கப் பட்டு இருக்கிறார். அங்கங்கே சில ஒத்துக் கொள்ள முடியாத இணைப்புகள் இருந்தாலும் ,பொதுவாக இவர் ஆளப் பிறந்தவர்  என்ற முனைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறார். ஏற்றுக்கொள்வதும் இல்லாததும் மக்கள் கையில். அவருடன் சேர்ந்து பயணிக்கும் நாஸர், சமுத்திரக்கனி இன்னும் பலருடைய ஆழ்ந்த அர்ப்பணிப்பு  செம்மையாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் நடுவில் இந்திப் பாடலின் இசை  பின்னணியில் வருவது அத்தனை சுகமாக இல்லை. அதே போல மிகப் பழங்கால பாகவதர்  காலத்து பாக்க்ரௌண்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஜெஜே நடிக்க வந்த காலத்தில் ஆங்கில இசை தழுவி வந்த பாடல்களே அ...

மௌனம்...

Image
மௌனம் என்னும் மொழி வலியது. பேசிக்கொண்டே இருக்கும் போது மனம் நிறைவானால் மௌனம் மட்டுமே போதும். நிறைந்த மனங்களிடையே  கசப்பு எழும்போதும்  மொழி வெளியே வருவதில்லை. யாராவது ஏதாவது பேச மாட்டார்களா என்னும் ஏக்கம் வரும்போது  கேட்கும் கிளியோசையும், காகத்தின் குரலும்  இனிமை. தொலைக்காட்சியின் செய்திகள் மனதில்  கலவரம் எழுப்பும்போது  நெஞ்சம் தேடுவது நிசப்தம். வஞ்சம் இழைக்கப்பட்ட 120 சின்னப்  பெண்களின் குரல் எழும்பியிருக்காவிடில் இன்னும் அநீதி  தொடர்ந்திருக்கும். இதுபோல் இன்னும் எத்தனை விபரீதங்களோ  என்று கூக்குரலிடும் குரல்கள்  தொண்டையிலேயே அடங்கி இருந்தால் இனி விளையாட்டே கிடையாது என்று இன்னுமொரு லாக் டௌன் வந்திருக்கும். ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கும் முன்னமேயே தங்கள் பால்யத்தை இழந்துவிட்ட குழந்தைகள் இன்னும் எத்தனை ஆயிரமோ? தொலையக் காரணமாக இருந்த வழிகாட்டிகள் எத்தனை நூற்றுக்குள் அடங்குவார்களோ. இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும்..   வாரக்கணக்கில் ஓடிக் கொண்டிருக்கும் சாட்சி விசாரணைகள் செய்தி  சானல்களில்.. .நீதி கிடைக்குமா?

மௌனம் ?????

Image
வல்லிசிம்ஹன் அன்புத் தங்கை சுபா ,  Kovai  அனுப்பிய செய்தி. நன்றியுடன்.

Magic!!! Music and All that!!

Image
வல்லிசிம்ஹன் இசை வலியைக் குறைக்கும். மனதை மிருதுவாக்கும்.  நாடித்துடிப்பை சீராக்கும். ஓடிக் கொண்டே இருந்தால் அலுக்கும் வாழ்க்கை சிலசமயம் ஓய்வையும் விரும்புகிறது.

அக்கம் பக்கம் என்ன செய்தி..3

Image
வல்லிசிம்ஹன் நம் பிள்ளையார் நன்றே வந்தார். எல்லாக் குறைகளையும் கவலைகளையும் தீர்த்து நோயில்லாப் பாதையில் பயம் இல்லா வாழ்க்கையை  அவரே தரவேண்டும். வெகு நாட்களாக வராதிருந்த முதுகுவலி இப்போது மீண்டும் உன்னை விட்டேனா  என்று பயம் காட்டிப் பார்க்கிறது.! அது வரும் நேரம் எதனால், எந்த உணவுக் கோளாறினால் என்று துல்லியமாகத் தெரிந்துவிடும். வாயுயும்,அசிடிடியும்  மார்பு, வயிறு, முதுகு என்று பயணம் செய்து உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். ராமா ராமா ஜபமும் பொறுமையும்  தான் மீட்கவேண்டும். உடல் பாதிப்பு இருந்தால் பதிவு எழுத முடியாது.  யூடியூபில் வரும் சில நல்ல  விஷயங்களை இணைத்து விட்டு பின்னூட்டங்களுக்கும்  பதில் எழுதாமல் இருந்தால் மிக மரியாதைக் குறைவு, சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். லஸ் பிள்ளையார், வடபழனி முருகன், மாங்காடு காமாக்ஷி, மயிலை கற்பகம்,மந்தைவெளி ஸ்ரீனிவாசர் தாயார், பாங்க் ஹனுமார்  எல்லோரயும் மனதில் நினைத்துக் கொண்டு  காலைப் பிடித்துக் கொள்கிறேன். 'துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் .''அவனை நெஞ்சில் பதிப்போம்.

வா மகளே வா ! சுகி சிவம்

Image
🧡

ஒரே ராகம்.

Image
வல்லிசிம்ஹன்

பழைய நினைப்புதான்.....3

Image
291, நூறும் ஒண்ணும்  2007  இந்தப் பாட்டிக்கு நூறு வயசாச்சு. நம்ப முடியுதா:) அவங்களோட பேரன்தான் இவங்களை நல்லா வச்சிருக்காரு. பாட்டிக்குப் பொண்ணு வயித்துப் பேரன்.                                                                                     அவரோட பொண்டாட்டி நம்ம பொண்ணுக்கு நல்ல சினேகிதி. சாலினு பேரு. க்ரானி,க்ரானினு கூப்பிடறதைப் பார்த்துட்டு நான் அசந்து போனேன்.அத்தனை அன்பு இந்தப் பாட்டிகிட்ட அவங்களுக்கு. இந்த வயசுக்கே உரித்தான சில முக்கிய பிரச்சினைகள் இருந்தும், இந்த சாலி(Sally) ரொம்பப் பொறுமை சாலியா(!)ப் பார்த்துக்கறாங்க. பாட்டிக்கு நல்ல க்ரொஷா பின்ன வருமாம். நான் பொண்ணு வீட்டில இருந்த சமயம் ஒரு நாள் இவங்களை ஒரு மாலைப் பொழுதுக்கு வரச்சொல்லி இருந்தோம். பாட்டிக்கு வாக்கர் கூடத் தேவையா இருக்கவில்லை. பேத்தி கையை இறுக்கப் பிடித்து மெதுவா ஏறி வீட்டுக்குள்ள வந்து இருக்கையி...

மீண்டும் வெங்காயம்.

வல்லிசிம்ஹன்  செய்தி உபயம் ,தம்பி முகுந்தன் ,மதுரை. +++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++ வெங்காய புராணம் ( தொடர்கிறது)  எனக்குத்தெரிந்த ஒரு  வெங்காய வெறியர் ஒருவர் காசிக்குப் போவதாக சொன்னார், காசிக்குப் போனால்   நமக்கு பிடித்த காய்கறி ஏதாவது ஒன்றை விட்டு  விட வேண்டும் என்ற வழக்கம் உள்ளதால், நான் அவரை “உங்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி எது?” என்று கேட்டேன்.  “வெங்காயம்” என்றார்.  “அப்படியானால் நீங்கள் காசியில் வெங்காயத்தை விட்டு விட வேண்டும்” என்றேன். “அப்படியானால் கங்கையில் வேணாலும் 4 வெங்காயத்தை விட்டு விடுகிறேனே” என்றார். “நோ, நோ, நீங்கள் அதை சாப்பிடுவதை விட்டு விட வேண்டும்”. என்றேன்.  “எத்தனை நாளைக்கு?” என்றார்,  “ஆயுள் முழுவதும்” என்றேன்.  உடனே அவர் “விட்டு விடகிறேன்” என்றார்.  “ஆகா, உங்களுக்குத்தான் காசி மீது எவ்வளவு நம்பிக்கை, மரியாதை”  என்றேன்.  அவர் “இல்லை நான் காசிக்குப் போவதை  விட்டு விடுகிறேன்” என்றார். '  “நோ காசி ஈவன்  இஃப் இட் கம்ஸ் ஓசி” என்ற...

பழைய நினைப்புதான்......2

Image
வல்லிசிம்ஹன்  2008  எழுதின பதிவு. மீள் வாசிப்புக்கு. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ நாமும்தான் எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருஷம் ஆகிறது. பிடிச்ச பதிவு பிடிக்காத பதிவு ஒண்ணும் கிடையாது. நம்ம பெத்த பசங்களை (எழுத்துகளை)  நாமே குறை சொல்லக் கூடாது. எனக்கும் என் சின்னத் தம்பிக்கும் ஒரு அன்யோன்யம் உண்டு. நான் சொல்றதுக்கெல்லாம் அவன் ஆமாம் சாமி போடுவான். சின்னவயசில் வாங்கின குட்டுகள் நினைவில வச்சிருந்தானு நினைக்கிறேன். அதே போல அவன் அங்க போனோம்,இங்க போனோம்னு அவன் அலுவல் விஷயமாக சென்ற இடங்களில் சம்யோசிதமாக நடந்து ஏகப்பட்ட அன்னிய செலாவணி கண்டுபிடிச்ச வீரப் பிரதாபங்கள் சொல்லும்போது, உன்னை மாதிரி உண்டாடா'ன்னு நானும் சொல்லுவேன்:))))))   அது எங்களுக்கு ஒரு மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது:)) அதனால் நாம சொல்லும் எல்லாமே சுவாரசியமானது என்கிற நினைப்பு வந்து மனதில் தங்கி விட்டது. வலைப்பூ ஒன்று ஆரம்பித்து அதில் அபிப்பிராயங்களை எழுத ஆரம்பித்ததும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் நிறைய வரும்(10னு வச்சுக்கலாமெ:) ) சிலதுக்கு 2 வரும். அதில ஒண...

குறும்படங்களும் கதைகளும்.:))))))))

Image
வல்லிசிம்ஹன் இளமை இனிமை. மகிழ்ச்சி.

கொறக்களி பிடித்தால்.....

வல்லிசிம்ஹன் [8:31 AM, 9/4/2021] Jayanthi Kanna.: உடல் நலம்: குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால் Middleage, senior citizens க்கு  பொதுவாக ஒரு problem வரும். Cramp... பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு. சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.  அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும். Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable. பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும். ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார். வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலே...

பழைய நினைப்புதான் பேராண்டி:)

வல்லிசிம்ஹன் Friday, March 23, 2007 கவிதை(யா?)  எதிர்காலம்.. கண்ணளவே வானம் என்றெண்ணித் தலை குனிந்து போனதால் அழகு கொண்ட மரமும் செடியும் நான் காணவில்லை காதளவே சொற்கள் என்றே எண்ணிக் கருத்தினிலே போடவில்லை. அரியனவெல்லாம் தெரியவில்லை. அறிந்து கொள்ளவும் வழியில்லை நெடி அடிக்கும் என்று மூக்கை மூடியதால் பூக்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை. உணவு தன்னை மதிக்காததால் மணக்கும் உணர்வும் மறந்து போனது. இப்போதோ பேரன் எனக்குச் சொந்தம் நான் பேசுகிறேன் அவன் கேட்கிறான் இரண்டு வருடம் போய்வந்தால் இவனும் பதில் எனக்குச் சொல்வான். இனியே கண்கள் திறக்கும் காதுகள் கேட்கும் வாய் நிறையக் கொஞ்சும் விடுதலை கொடுத்தது யார்?

ஒரு தற்கொலை தடுக்கப் படுகிறது.

Image
வல்லிசிம்ஹன் குறும்படங்கள். மிக சுவாரஸ்யமாகப படம் எடுக்கப் படுகின்றன. இந்தப் படம்  ரசிக்கப் படும் விதத்தில். எடுக்கப் பட்டிருக்கிறது. நேரே நடப்பது போல ஒரு  பிரமிப்பு. நல்ல நடிப்பு. கோவிட் காலத்தில் நாம் அனுபவிக்கும் சங்கடங்கள் அதன் விளை வுகள்.   அந்த ஸ்டாக் ப்ரோக்கர், ரிலேஷன்ஷிப் மேனேஜர்  என்று சொல்கிறார்.  தொலைபேசியில் கேட்கும் வன்முறை, அவரை ,அந்தப் பெண்ணுடன் பேசவைக்கிறது. பேசியே மனதை மாற்றுகிறார். இல்லாத ஒரு அக்காவை உருவாக்கிக் கதையாகப் பேசுகிறார். மிக நல்ல கதை அம்சம் கொண்ட குறும்படம்.

சில பல கானங்கள்

Image
வல்லிசிம்ஹன் நமக்கு ஒரு சில பாடல்கள் மட்டும்  மனதின் முன்னணியில் நின்று காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன என்று சில நேரம் யோசிப்பதுண்டு. நல்ல எழுத்துகள்  அகத்தில் பதிவது போல எப்பொழுதோ கேட்ட  இசை திடீரென்று சிந்தையில்  நடமாடும்.  இது வரை அதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வதில்லை. இதற்கெல்லாம் ஆதி காரணங்களை ஆராயப் பலர் இருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நெடு நாளைய தோழி சொன்னதைப் போல ''இன்றைய நன்மைகளை அனுபவியேன் ரேவதி. !! யேன், எப்படி என்று கேள்வி கேட்டு இந்தக் கணத்தை விட்டு விடாதே.'' எப்பொழுது  பார்த்தாலும் விசாரம், விசாரணை, தேடல் என்றில்லாமல்  அந்தந்த நொடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.:)

அக்கம் பக்கம் என்ன செய்தி.

Image
வல்லிசிம்ஹன் செப்டம்பர் 3.  ஒரு முக்கிய நாள். முதல் பேரன் எங்கள் வாழ்வில் வருகை புரிந்த நாள். அன்பின் விஷ்ணு  என்றும் ஆனந்தத்துடன்,ஆரோக்கியத்துடன் வள வாழ்வு பெற இறைவன் கருணை செய்வான். மற்ற செய்திகளில் இங்கே நேற்று வடகிழக்கு மாகாணங்களில்  அடித்த சூறாவளி. நம் பக்கம் வந்தால் நம் பயத்தோடு போகும். நம் உறவினர்கள் அங்கே இருப்பதால் நேற்று எல்லோரையும் தொடர்பு கொண்டு கிடைக்காமல் கவலைப் பட்டுப் பொழுது கழிந்தது. சாயந்திரம் தான் அவர்களிடம் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வந்து விட்டோம் என்ற செய்தி கிடைத்தது. இறைவனுக்கு நன்றி. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ எப்பொழுதும் சாலைகளில் ஓட்டிச் செல்லும் போது, சிங்கம் ரூல்ஸ் ராமானுஜம் தான்.  ஒரு சட்டத்தையும் மீற மாட்டார். அவருக்கு இண்டர் நேஷனல்  லைசென்ஸ் இருந்தாலும் இந்த ஊர் வேகத்தைப் பார்த்து  இங்கேயும் லைசென்ஸ் எடுக்க முயற்சித்து மனம் மாறிவிட்டார். எல்லோரும் ஒரே மாதிரி ஓட்டுவதில்லை என்ற குறை அவருக்கு. அதை நிரூபிப்பது போல அடுத்த வீட்டுப் பெண் ஒரு அரசு வேலையில் இருப்பவர் கடந்த திங்கள் மாலை சொன்ன விஷயம். ...