இனிய கானங்கள் கிஷோர் சாப் உடன்
வல்லிசிம்ஹன் கிஷோர் குமார் அவர்களின் குரலை விமரிசிப்பது/வர்ணிப்பது சுலபம் இல்லை. அதை ரசிப்பதே நம் வேலை. வாழ்க இசை,. நம் வாழ்க்கையில் பல குரல்கள் நம்மை அமைதியுறச் செய்கின்றன. இன்றும் பாட்டுக் கேட்ட படியே தான் உறங்கப் போகிறேன். முருகன் பாடல்கள் துணை. 30 நிமிடங்களில் உறக்கம் வந்துவிடும்:) கணினியில் உட்கார, எழுத சி.எஸ் ஜயராமனில் ஆரம்பித்து, சீர்காழி, சுசீலா அம்மா, டி எம் எஸ் ,திருச்சி லோகனாதன் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இசை. காதையும், கேட்கும் திறனையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி,.