Showing posts with label விடுமுறை. Show all posts
Showing posts with label விடுமுறை. Show all posts

Monday, April 26, 2010

ஓடம் அது ஓடும்.அது சொல்லும் கதை என்ன.
























எல்லோரும் வாழ வேண்டும்.





Posted by Picasa
ஒரு ஊரில ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்குப் பிள்ளைங்களும் இருந்தாங்களாம்.
பிள்ளைங்க ஒவ்வொண்ணும் படிச்சு வேலை தேடிக், கல்யாணம் கட்டிக்கிட்டு
வெளியூருக்கும் போய்ட்டாங்களாம்.
அப்பப்போ போனு போட்டு இங்க வா,அங்க வான்னு சொல்லுவாங்களாம். அம்மா அப்பாவும் , பாவம் பிள்ளைங்க ,நாமும் தான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவியைச் செய்துட்டு,ஊரையும் சுத்திப் பார்த்துட்டு வந்துடலாம்னு போவாங்க,.


அப்புறம் ஒரு பயணம் முடிஞ்சு வரும்போது வீட்டில எலிகள் நடமாட்டம்+ ரெண்டு எலிகள் இறந்தே கிடந்த நிகழ்ச்சி எங்களை வெகுவாகப் பாதித்தது. கிட்டத்தட்ட பத்து மாத அழுக்கை அகற்ற வேண்டிய கட்டாயம்.
உதவி செய்ய வருபவர்களுக்கோ இப்போது வேலை செய்யாமலே பழகிவிட்டது. நமக்கோ உடல் நலமும் முன் போல் இல்லை. ஒவ்வொரு வேலையும் இமாலய முயற்சியாகப் படுகிறது.
வீடும் சிறிது சிறிதாக வேலை வாங்குகிறது.அதற்கும் வயசாகிவிட்டது இல்லையா.
அதனால் தீர்மானம் செய்தோம்.
இனிமேற்கொண்டு குழந்தைகள், பேரன்,பேத்திகள் வந்து நம்மைப் பார்க்கட்டும்.
வீட்டைப் பூட்ட வேண்டாம். என்ற தீர்மானம்.
அதுவும் நல்லபடியாகவே நிறைவேறியது.

இதில நாங்க வெளியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு எங்களுக்கு வராமல் போன திருமண அழைப்புகள் ,நிகழ்ச்சிகள், கோவில் பயணங்களும் விட்டுப் போயின.:)
சம்பந்தப் பட்டவங்களைக் கேட்டால் ,''நீ ஊரிலயா இருக்கே!!! அடக் கடவுளே.ஏன்பா கல்யாணத்துக்கு வரலை''ன்னு ஒரு தோழி கேட்டதும் 'சே;ன்னு போய்விட்டது.
இது முன்கதை.
இப்போ பின்னுரை.
நாங்க துபாய் போறோங்க.
ம்ஹூம் அங்கிருந்து எங்கயும் போகலை. மூணு வாரத்தில திரும்பிடுவோம்.

கடவுள் கிருபைல ஒழுங்காப் போயிட்டு, ஒழுங்கா இருந்துட்டு, ஒழுங்கா திரும்ப அந்த லஸ் விநாயகனே பொறுப்பு.
நீங்கதான் பதிவே போடறதில்லையே.அதுக்கு எதுக்கு இந்த நீட்டி முழக்கி ஒரு பதிவுன்னு நீங்க கேட்டீங்கன்னால்.,என் பதில் இதுதான்.
நாங்களும் மொக்கை எழுதுவோமில்ல:)
வருகிறேன் நண்பர்களே. எல்லாரும் பத்ரமா இருங்க.

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...