கங்கை நதியைப் பற்றி எழுதுவதோ,
அது களங்கப்படுவதை விவரிப்பதோ, இந்நதியைச் சுத்தப் படுத்த ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் அப்படியே நிற்பதோ
பெரிய ,அகண்ட அழுக்கடைந்த காவியம் ஆகிவிட்டது.
ஓடும் நதிக்கு அழுக்கு கிடையாது என்பது பழைய வரி.
கங்கை நதி சீர்குலைவதை ஒவ்வொரு இடத்திலும் பதிக்கப் பட்ட வார்த்தைகளிலும்
படிக்க நேர்ந்தது.
மனம் சோர்ந்த போதுதான் இந்த ஆங்கிலேயர் வில்லியம் டார்லிம்பிள் எடுத்த குறும்படத்தைப் பார்த்தேன்.
அதுவே போதும். இனிமேல் கங்கையை நோக்கிப் பயணம் வேண்டுமா என்ற நினைப்பே மேலிடுகிறது.
இவ்வளவு கோடி மக்களை வசீகரிக்கும் கங்கையம்மா, இனி நீயே உன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல நீயும் உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொண்டு இன்னும் சளைக்காமல் ஓடுகிறாய்.
உன்னைத் தூய்மையாக்க இன்னுமொரு
சாணக்கியனோ,அசோகனோ,சந்திரகுப்தனோ
தென்னாட்டிலிருந்து உன்னைச் சந்திக்க வந்த சேரனோ சோழனோ மறு பிறவி எடுத்தால் நீயும் வளம் பெறுவாய்.
இது எனக்குக் கிடைத்த சிறு செய்திகள் மூலம் நான் பதிய வந்த விஷயம்.
குறையிருக்கச் சாத்தியக் கூறுகள் ஏராளம்.
கங்கை அன்னை வாழ்க.
Showing posts with label நதி. Show all posts
Showing posts with label நதி. Show all posts
Sunday, April 05, 2009
Subscribe to:
Posts (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...