



பதினெட்டு பதிவாக வந்துவிட்டச் சித்திரம்,
பதினெட்டு நாள் யுத்தம் முடியும் வரை வந்துவிட்டது.
கும்பகர்ணனின் வீரமூம் விஸ்வாசமும்,
இந்திரஜித்தின் நிகும்பலையும்,
மண்டோதரியின் அழியாத பதிபக்தியும் ராவணனைக் காக்கத் தவறின.
அனுமனின் சஞ்சீவி சாகசம்,
ராமனுக்குச்
சூரியக் கடவுளின் மந்திர உபதேசம்,
ராமனின் கருணா விலாசம்,
எல்லாவற்றிற்கும் மேல் நன்மையே ,
தர்மமே
வெல்லும் என்ற உறுதிப்பாடு
இவையே யுத்தகாண்டம் முழுக்கக் காண்கிறொம்.
வானர சேனைகள் சகிதம்ஸ்ரீராமன்
இலங்கையில் கால் வைத்த முகூர்த்தம்,ராவணனின்
நெஞ்சில் பாரம் ஏறியது..
உப்பரிகையில் நின்று ராம சைன்யத்தை
அளவிடுகிறான்.
ராவணன் நிற்பதை ராமனும் பார்க்கிறான்.
அப்போதும் அவனுக்கு தூது அனுப்பி,
ரத்தம் சிந்தாமல்
சீதையை மீட்கத்தான் தோன்றுகிறது.
அங்கதன் தூது செல்ல , தோல்வியுற்று வருகிறான்
ராவணனின் மனதில் மாற்றம் இல்லை.
யுத்தம் துவங்கி 18 நாட்கள் ,சமர் நடக்கிறது.
இலங்கையில் கால் வைத்த முகூர்த்தம்,ராவணனின்
நெஞ்சில் பாரம் ஏறியது..
உப்பரிகையில் நின்று ராம சைன்யத்தை
அளவிடுகிறான்.
ராவணன் நிற்பதை ராமனும் பார்க்கிறான்.
அப்போதும் அவனுக்கு தூது அனுப்பி,
ரத்தம் சிந்தாமல்
சீதையை மீட்கத்தான் தோன்றுகிறது.
அங்கதன் தூது செல்ல , தோல்வியுற்று வருகிறான்
ராவணனின் மனதில் மாற்றம் இல்லை.
யுத்தம் துவங்கி 18 நாட்கள் ,சமர் நடக்கிறது.
சகல அரக்கர்களையும் அழித்து,
யுத்தம் முடிகிறது.
யுத்தம் முடிகிறது.
ராவணனோடு மண்டோதரியும் உயிர் துறக்கிறாள்.
சீதாபிராட்டியின் அக்கினிப் பிரவேசம் முடிந்து,
ராவணனுக்கு உண்டான கிரியைகளை விபீஷணன் முடித்து,
அனைவரும்
பூரண மனமகிழ்ச்சியுடன்
அயோத்தி நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஸ்ரீராம நாமம் பதித்த கணையாழியுடன்
அனுமன் சென்று,
, பரதனையும், குகனையும் காக்க.
ராமன் வரவுக்குமுன்னால் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொடுத்து அவர்கள் உயிரையும் மீட்கிறான்.
அனுமா உன் நாமம் வாழி.
மரவுரி நீக்கி ராம,லக்குவ, சீதை
அயோத்திப் பிரவேசம் நடக்கிறது..
பிரிந்தவர்கள் கூடுகிறார்கள்.
வசிஷ்டர் ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கும் நாள் குறித்துவிடுகிறார்.
அந்தப் புண்ணியநாளும் வந்தது வசந்தமாக.


ஸ்ரீராம பட்டாபிஷேகம்
வைதேகி சகிதம் சுரத்ரு மதலே
ஹைமே மகாமண்டபே//
மத்யே புஷ்பகமாசனே
மணிமயெ வீராசனே சூஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே
தத்வம் முனிப்யபரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிஹி பரிவ்ருதம்
ராமம் பஜே ச்யாமளம்//
ஸ்ரீராம வள்ளலுக்கு, சுவாமிக்கு வசிஷ்டர்
உலகின் புனித நீரெல்லாம் நிரம்பிய குடத்தைக்
கையில் பிடித்து ராஜ்யாபிஷேகம் செய்கிறார்.
சுந்தரவதனன் என்றும் மாறாத புன்னகையோடு மணிமுடி ஏற்றுக்கொள்ளுகிறான்.
அருகில் வைதேஹி,
சீதாபிராட்டி ,நம் தாயார் இந்தப் பட்டாபிராமனைப் பார்த்துப் பூரிக்கிறாள்.
பரதன் குடை பிடிக்க,
இலக்குவனும் சத்ருக்கினனும் சாமரம் வீச,
அங்கதன்
அரியாசனத்தைத் தாங்கிப்பிடிக்க
அனுமன் கைகூப்பி என்றும்
பக்தனாய்ச் சிரஞீவியாய் நிற்க
சுற்றமெல்லாம் மங்கள கோஷம் எழுப்ப
ராம பட்டாபிஷேகம் இனிதே பூர்த்தியானது.
ஸ்ரீராம கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்
பூரண ஆயுசும்
சகல சம்பத்தும், புத்திர பாக்கியமும்,
பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாக இருக்கும்.
எப்போதெல்லாம் மனம் சஞ்சலப் படுகிறதோ அப்போதெல்லாம் ராமனையும்,
அவன் தூதனான அனுமனின்சுந்தர வைபவத்தையும்
நினைத்து ருசிப்பவர்கள்,
படிப்பவ்ர்கள்
என்னாளும் சோர்வடைந்தது இல்லை.
எல்லாம் நலமே.
ஸ்ரீராகவம் தசராத்மய அப்ரமேயம்
சீதபதிம் ரகுகுலான்வய ரத்ன தீபம்
ஆஜானு பாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி.
அன்புச் சக பதிவர் அனைவருக்கும் நன்றி.
ஆயிரம் பிழைகள் இருக்கும்,.
சொல், எழுத்து, வழ்ங்கிய விதம்
என்று
அனைத்துப் பிழைகளையும் பொறுத்து
படித்தவர்கள்,
உங்களுக்கு எப்போதும் நன்றி.
ஆனாலும் ராமன் இங்கே தன் நாமத்தைத் தந்து
எழுதவைத்தான்..
அதனாலேயே சித்திர ராமாயணம் பதிய முடிந்தது.
ஜெயஜெயராம் ஜானகிராம்.

