Showing posts with label 2021 எண்ணங்கள்.. Show all posts
Showing posts with label 2021 எண்ணங்கள்.. Show all posts

Tuesday, June 01, 2021

புத்தம்புதுக் காலை

வல்லிசிம்ஹன்
அன்பின் சூடா, சூடாமணி.
வாழ்வின் அனேக அத்தியாயங்களை

பொறுமை, மேலும் பொறுமையுடன்,
கடந்து உன்னை விட இளையவர்களான
 எங்களிடம் எத்தனை அருமையாகச் சிரித்துப் பழகினாய்.

இன்று காலை எனக்குக் கிடைத்த செய்தி,
உன்னைக் கடவுளிடம் சேர்த்து விட்டதாகச் சொன்னது.
என் அப்பாவின் அன்பான அக்காவின் மகள் நீ.

87 வயதில் ஆரோக்கியமாக இருந்து,
ஒருவரையும் நோகவைக்காமல்
அமைதியாக  இறைவனிடம் கலந்தாய் என்று உன் தம்பி சொன்னான்.

வெகு நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் 
உரையாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்து
அதில் நீ கலந்து கொள்ள முடியவில்லை.

குணவதியாக இருந்து குணவதியாக மறைந்தாய்.
அமைதி பெற பிரார்த்தனைகள்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...