Blog Archive

Showing posts with label பத்தியம். Show all posts
Showing posts with label பத்தியம். Show all posts

Friday, June 29, 2007

194,காரக்குழம்பு.. எங்க ஊர் வகை



 அம்மா வழிப்பாட்டி மகா ஆச்சாரம்.பூண்டு,வெங்காயம் பக்கம் போக மாட்டார்.

அப்பா வழிப்பாட்டி என்னை மாதிரி மாடர்ன்.:)))
ச்சின்ன வெங்காயம்,முருங்கை எல்லாம் கீரையோட சேர்த்து மண்சட்டியில் சமைப்பார். வாசனை ஊரைத்தூக்கும்.

அவங்க செய்யற இந்தக் காரக்குழம்பு, கெட்டியாக, நான்குநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

படித்து சமைச்சுப் பாருங்க. நல்லா இருந்தா சரி. இல்லாட்ட இப்பப் பாட்டிகிட்ட கேக்க முடியாது.


செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள்,
சின்ன வெங்காயம், ........2 கால்கிலோ பாக்கெட்
கொஞ்சம் பூண்டு,.......... 25 பல்லு
மிளகு........100கிராம்
புளி...........பெரிய எலுமிச்சம் அளவு
தனியா.......100கிராம்
மிளகாய் வற்றல்...100 கிராம்
தேவையான அளவு உப்பு.
இந்தக் குழம்பில் போடக்கூடிய தான்,அதாவது காய்கறிகள்...
முருங்கைக்காய்,.
கத்திரிக்காய்,
அவரைக்காய்,
சௌ சௌ,
கொத்தவரங்காய்,
உருளைக்கிழங்கு.
1,
புளியை முதலில் ஊற வைக்கவேண்டும்,
2 ,வாணலியில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணை விட்டு
3..தனியா,மிளகாய்வற்றல்,மிளகு,10பூண்டு,சின்னவெங்காயம் கால்கிலோ (பொடியாக நறுக்கினது)எல்லாவற்றையும் வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
4,நறுக்கின காய்கறிகளையும் வதக்கிக் கொண்டு,
புளியைக்கரைத்தத் தண்ணீரை மஞ்சள்பொடி உப்பு போட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
புளிவாசனை போனதும் , காய்கறிகள் வெந்த பிறகு இறக்கிவைத்துவிட்டு,
கொஞ்சம் தாரளமாக எண்ணைவிட்டுக் கடுகும் சீரகமும் சின்னவெங்காயம்,மிச்சமான பூண்டு இவற்றை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
இதுவும் கொதித்தவரும் போது அரைத்தகலவையைப் போட்டுக்
கொதிக்க விடவேண்டும்.
குழம்பு ரெடி.
எண்ணைத் தனியாகத் தெரிய வேண்டும்.அதுதான் இந்தக்குழம்பின்
இலக்கணம்.:))))
கருவேப்பிலை,பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்க வேண்டியதுதான்.
பி.கு.
செல்வநாயகி சுட்டிக் காடியதால் தான் காய்கறிகளைச் சேர்த்தேன்.
இல்லாவிட்டால் அவை வாடிப் போயிருக்கும்:))))
நன்றிப்பா.