Blog Archive

Thursday, October 30, 2008

TEST pathivu

தமிழ்மணத்துக்கு அனுப்ப முடிகிறதா.

முக்காலேமூணு வீசம் சினிமா..மூன்றாம் வாட்டி

அறிமுகம் தேவையில்லாத தாரகைகள் அமலாவும்,ரேவதியும்.

எனக்கு மிகவும் பிடித்த த்ற்கால(?) நட்சத்திரங்கள்.



இது கவிதாயினி அம்மா எனக்கு மூணாவாட்டி சினிமா பத்தி எழுதச் சொன்ன
அழைப்புக்கு முந்தின அழைப்பு:) ]]]]





புதுப்பெண் பண்டரிபாய்,அம்மாவாகி,பாட்டியாகி,ம்ம்ம் மறைந்தும் விட்டார்.
இதே போல எம்.வி. ராஜம்மா படம் கிடைத்தும் பதிவில் ஏற்ற முடியவில்லை:(






நம்ம மோஹனாங்கி.விகடனில் இப்படி இருந்தார்கள்








எல்லோஒருக்கும் அம்மா வேஷம் போட்டாலும் வெகு அழகான் அம்மாவாகக் கடைசி வரை இருந்தார். என்ன தமிழ் உச்சரிப்பு!!!







இந்த ஜோடி சேவை செய்ய வந்த ஜோடி. சந்தோஷமாக இருந்துவிட்டு வருந்தி மறைந்தனர்.









இவர் தனி ஹீரோ.எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தவர். ஜெய் சங்கர்.










அம்மா ஆகிவிட்ட ஜோ. இனிமை.













அவங்க வீட்டுக்காரர், சிவகுமாரின் புதல்வன் என்பதாலியே பிடிக்கும்:)















இவங்களைப் பற்றிச் சொல்லறத்துக்கு நிறையப் பேரு இருக்காங்க. அம்பியைத்தான் மறக்க முடியவில்லை:)
















ஸ்ரீவித்யா...படம் கூட வந்தூவிட்டதாம் இவர் வாழ்க்கையைப் பற்றி.




அந்த காந்த விழிகளை மறக்கவே முடியாது.

















நாடோடி மன்னன்.அலுக்காமல் சலிக்காமல் சிரித்துவிட்டு வரலாம் இவர் படங்களில் அவ்வளவு அழுகையும் இருக்காது.


















காதலித்து,மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டாடியவர்.




















டி.எஸ் பாலையா..காதலிக்க நேரமில்லை,தூக்குத்தூக்கி,ஊட்டி வரை உறவு ,தில்லானா மோஹனாம்பாள், பாகப்பிரிவினை(அந்த சிங்ராம் பய)
இந்த சினிமாக்களில் எல்லாம் மிகவும் ரசித்தேன்.
விரசமில்லாத வசனங்களை எப்போது பார்க்க,கேட்கப் போகிறோம்:(






























இளைய தலைமுறையினரின் 'தல'
வார்த்தைகள் தான் வேறு. நாங்கள் அப்பொது ஜெய்ஷங்கரை ரசித்தது போல
இப்போது புதிதாக வரும் அனைவரையும் இருபதுகளில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள்.
மக்களுக்கு பொழுதுபோக்காக வரும் அம்சங்களைத் தரும் விதத்தில் சினிமா மாறிவிட்டது.
மாற்றம்தானெ நிரந்தரம்.
அதனால சினிமா பற்றிப் பதிவுகளையும் நான் மாறிய பிறகு போடலாம் என்று நினைக்கிறேன்:0)
விடு ஜூட் மது. !!!
சுபம்,
THE END.






































































இவங்களுக்கு முதலில் தீபாவளி நல் வாழ்த்துகள் சொல்லிக்கறேன்.
























Monday, October 27, 2008

திரு .மாதவராஜ் அவர்களின் கேள்விகள்,என் பதில்கள்

மதுமிதா அவர்களின் பதிவில்,
தமிழில் வாசிப்பு என்பது எந்த அளவில் இருக்கிறது

என்று அறியும் முகமாகச் சில கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள்.
அதில் எழுத்தாளர் ,பதிவர் திரு.மாதவராஜ் அவர்களின்
பதில்களைவிடக் கேள்விகளே முக்கியம்
என்பது எனக்கு ஒரு பயிற்சிக் களமாகவே தெரிந்தது. ஒரு சுய மதிப்பீடு.

இந்தக் களத்தில்,பரீட்சையில் தொடராக நுனிப்புல்லில் நம் உஷா எழுதி இருந்தார்.

எனக்கு எழுதுவதில் அவ்வளவு அதிகப் பயிற்சி இல்லை. இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்காவது விடை எழுதலாம் என்றே தோன்றியது. அதன் பலன்
இந்தப் பதிவு.

மௌனமாக இருந்துவிடலாம் என்றால் அது முடியாது.
மழைக்கு முன்னால் தவளை கத்துவது போல், நாமும்
எழுதிப் பார்க்கலாம் என்ற ஒரு முயற்சிதான் இது.

http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post.html இந்தப் பதிவில் திரு .மாதவராஜ் கேட்டிருந்த கேள்விகள் மிக மிக அருமையானவை.

அவரை அறிமுகம் செய்த மதுமிதாவுக்கும் என நன்றிகள். இதை எழுதத் தூண்டுதலாக அமைந்த உஷாவின் பதிவுக்கும் நன்றி.










1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

மணியனின் காதலித்தால் போதுமா

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பதினொன்று,பனிரெண்டு வயது இருக்கும்

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

சமூகமும் பிடிக்கும் சரித்திரமும் பிடிக்கும்


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?


ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பதாலும், வாரப்பத்திரிகைகளில் அவர்கள் கதைகளைப் படித்துப் பிடித்து நாவல்களைப் படிக்கத் தோன்றும்.
)
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

நீட்டப்பட்ட சிறுகதைகளாக நாவல்களை நான் பார்க்கிறேன்.
அதே போல சுருக்கப்பட்ட நாவல்களாகச் சிறுகதைகளையும் நினைப்பதுண்டு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
அ. வாசகனின் அக நிலையிலிருந்து
இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?


250லிருந்து 300 வரை இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யம் குன்றாத
எந்த நாவலையும் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் படிக்கத்தோன்றும்

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

பக்கங்களைப் பற்றிக் கவலையில்லை. கதையிருந்தால் போதும்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

ம்ம்.
சிறிய வயதில் துப்பறியும் நாவல்கள் படிக்கும் போது பி.டி.சாமியின் இரட்டை மனிதனின் இருட்டு மாளிகை என்று நினைக்கிறேன்.:)
கடைசிப் பக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் திருப்பிப் படித்தேன்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

தீவிரமாக நாவல்களைப் படிக்கும் காலம் இருந்தது. அப்போது ஒன்றை முடித்த கையோடு இன்னோரு நாவலை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
இப்போது படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் துவங்கும் என்றே நம்புகிறேன்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

அப்படி எந்தப் புத்தகத்தையும் விடவில்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?


இருக்கின்றன. சொல்ல மனமில்லை

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

படிக்க நினைப்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நாவலகள். சுவை வேறுபாடு இருப்பதால்
படிக்கவில்லை
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?


கல்கியின் சிவகாமியின் சபதம்,
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்,இன்னும் பிற நாவல்கள்
ஜயகாந்தன் அவர்களின் சிறுகதை யுகசந்தி,யாருக்காக அழுதான்,
பாரீசுக்குப்போ,
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
லக்ஷ்மி யின் அரக்கு மாளிகை,
ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
ஆர்.சூடாமணியின் சில நாவல்கள்.
எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் நாவல்கள்
சத்தியப் பிரியனின் கல்கியில் வெளிவந்த தொடர் ஒன்று,.
இன்னும் நிறைய.
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

வி.ஸ ,காண்டேகரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள்.
மாயாவி என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பு செய்த சில பிற மொழிக்கதைகள்,
ஏண்டமூரி விஸ்வநாத்தின் கதைகள்.

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? \

நிறைய உண்டு.
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

அரக்கு மாளிகை, சிவகாமியின் சபதம், அன்பே ஆரமுதே

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

வேங்கையின் மைந்தன் பற்றி யோசித்ததுண்டு. எவ்வளவு பொருத்தம் என்று.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

நா.பாவின் அரவிந்தன், பூரணி.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்ள்

ஒன்றும் இல்லை, தமிழ் நம் மொழி மனதுடன் ஒன்றும். பிறமொழி வேற்ருக்குப்  போன உணர்வு.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


நிறைய இருப்பதாகத் தோன்றும்..
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? ..

சிவசங்கரியின்,வாசந்தியின் நாவல்கள்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கொத்தமங்கலம் சுப்பு  அவர்கள்.
++++++++++++++++++++++++++++++++
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

திரு கி.ராஜநாராயணன் ஐயா அவர்களின்  படைப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?


இல்லை
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?


நன்றி மதுமிதா,மாதவராஜ்என்னால் இயன்றவரை நேர்மையாகச் சொன்னதாகவே நினைக்கிறேன்..
சிறு தொண்டாக அது இருக்கலாம்.
முன் பக்கம்


Sunday, October 26, 2008

தீபாவளி நல் வாழ்த்துகள்




அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துகள்.
நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழ
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வல்லிம்மா,அவங்க வீட்டு சிங்கம்,மற்றும் குடும்பத்தார்.


Thursday, October 23, 2008

மீண்டும் சினிமா..கவிதாயினிக்காக

பாலும் பழமும்,இந்தப் படத்திலிருந்து எங்கள் பதின்மவயது தீர்மானம், நோய் வந்தாலும் கணவன் பணிவிடை மறக்கக் கூடாது:)

அழகான படம்.

ஆச்சி இல்லாமல் சினிமாபற்றி எழுதக் கூடாது இல்லையா.
பெண்களின் திடத்திற்கு இவர் ஒரு முன்னோடி. பானுமதி அம்மா கூடவே போட்டி போடத் துணிந்தவர்:)


தேவ் ஆனந்த் க்ரேஸ், சிங்கத்து கிட்டயிருந்த்து பிடித்தது. இவரும் கிஷோர்ர் குமாரும் சேர்ந்து இசைக் கோவில் கட்டி இருக்கிறார்கள். ரசிகர்கள் மனத்தில்.



அஷ்டாவதானி.
சிவாஜி சாருக்கு சமானமாக இவருக்கும் அப்பொது மரியாதை உண்டு.
மீண்டும் ஒரு அன்னை படம் வருமா.




டெய்சி இரானி. மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்த்ரராஜனைத் திரையில் காட்டியவர். நல்ல சுட்டிப் பெண். பையன் யார் என்று கேட்க வைத்தவர். இப்போது உருவமும் புகழும் வேறு விதமாக இருக்கின்றன. பாவம்தான்.





இவர்களையெல்லாம் பற்றியும் இவர்ர்களின் நடிப்பைப் பற்றியும் ஒரு மாநாடே நடத்தலாம்.
இரூவருக்கும் இடையே அப்படி ஒரு ஸின்க் இருந்தது.
பக்கா ஜெண்டில்மேன். நோய்க்கு இடம் கொடுத்துவிட்டார்.







இன்னும் நான் ரசிக்கும் கடோத்கஜன். அந்த மீசையை ஒதுக்கிப் பாயாசம்
உறிஞ்சும் அழகே அழகு.:)








நடீக்கவந்தபோது இருந்த அதே வெடுக் வாழ்க்கையிலும் இவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.









நல்லதொரு நாட்டிய நடிகை. வெகு அழகான கண்கள்.
மதுரை வீரனில் வாங்க மச்சான் வாங்க பாட்டுக்கு உயிர் கொடுத்தவர்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் பாட்டுக்கு ஆடும் நடனம் கண் முன்னே நிற்கும்.
மணப்பந்தல் படத்தீல் எஸ்.எஸ்.ஆருக்காகப் பாடும்' உனக்கு மட்டும் ''பாட்டு
அந்த நாட்களில் ரொம்பவே பிரபலம்.












சந்திரபாபு. நல்ல மனிதர், பாடகர். சிரிக்க வைத்து கோணங்கி செய்தவர்.
பிழைக்கத்தான் தெரியவில்லை.










சந்திரலேகா! சரித்திரம் தான். ரஞ்சன் படம் கிடைக்கவில்லை.
அவரும் மைலாப்பூர் வாசி என்று கேள்விப் பட்டீருக்கிறேன்.
''நான் ஆடுனு சொன்னா நீ ஆடணும்'' என்று சவுக்கோடு மிரட்டுவதை ரசிக்கலாம்.












சௌகார் அம்மாவை விட முடியாது. பாண்டி பஜாரில் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன்ன்.
உயர்ந்த மனிதனில் '' a time to play, a time to eat,and a time to rest''
மறக்க முடியாத வசனம்:)













பின்னுரை....

நாம் சினிமாவை விட்டாலும் சினிமா நம்மளை விட மாட்டேங்குது. இது யாரோ நடிகையோட புலம்பல் இல்லப்பா.


நானே தான். மன்றத்தில வந்து சினிமா பத்திச் சொல்லுங்கன்னுட்டாங்க நம்ம

மதுமிதா,கவிதாயினி,சுபாஷிதம் எழுதினவங்க,சமூக சேவகி
சொல்லாளர்
கடுதாசி அழைப்பு வச்சுட்டாங்க
நம்மளாலே தட்ட முடியுமா.

அதுவும் சினிமாங்கற அல்வாத்துண்டு பக்கத்தில வச்சுட்டு
கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடச் சொன்னாக் கசக்குமா என்ன:)
நேரம்தான் போறவில்லை.அவ்வளவு இருக்கு சொல்ல.
கேள்வி பதில்னு வந்தா கொஞ்சம் கற்பனை தடைப்படுது:)
நான் பார்க்க நினைச்சுப் பார்க்காம விட்ட படங்களே அதிகம்.
ஷோலேக்குக்கூட சிங்கம் தனியாப் போயிட்டு வந்தது. டூ மச் வயலன்ஸாம்:)
இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலே. சீன் பை சீன் யூ டுயூபில பார்த்தாகிறது.
மத்தபடி பராசக்தில ஆரம்பிச்ச நம்ம பயணம்
குழந்தைகள் பிறக்கிற வரை அப்படி இப்படி போச்சு. அப்புறம் ஒரு ஆறு வருஷம் சினிமா பக்கமெ போகவில்லை.
அப்புறமா பாமாவிஜயம் தொட்டு வருடத்துக்கு ஒரு சினிமாவாவது பார்க்கும் வழக்கம் வந்தது.
குழந்தைகளுக்காக ஹடாரி,ஷாக்கி டி ஏ, ஆஃப்ரிகன் சஃபாரி, சூப்பர்மேன்,
ஸ்டார்வார்ஸ்,மை டியர் குட்டிச் சாத்தான்னு
நிறைய படங்கள்.
அப்புறம் டிவி வந்ததில் ஏதாவது ஒரு படமாவது வாரத்துக்கு ஒரு முறை பார்த்துவிடுவதுதான்:)
சினிமா பிடிக்கும்.நல்ல சினிமா ,கொலைகள்,மற்ற குற்றங்கள்னு இல்லாம படங்கள் வரவேண்டும் என்று ஆசைதான்.
மக்கள் பார்ப்போர்களோ, தயாரிப்பாளாகளும் எடுப்பார்களொ. தெரியாது.
மீண்டும் என்னை எழுதவைத்த மதுமிதாவுக்கு வளர நன்னி.




.

,



.




Tuesday, October 21, 2008

மரச் சிற்பக் கண்காட்சி

மரத்திலிருந்து வெளிப்பட்ட அதிசயங்கள் இவைகள் எல்லாம். இவர்களுக்கு உதவியாக அத்தனை உபகரணங்கள் இருந்தாலும் இந்த நுணுக்கமான கலையை வெளிக்கொண்டுவரும் திறமையை எப்படி விவரிப்பது!!

இது எனக்குத் தெரிந்தவரையில் ஒரு பௌத்தமத குரு.க்வான்யின் என்னும் பெயர் படைத்த தேவதை. நம் ஊரில் தன்வந்திரி தேவதையை மருத்துவத்திற்காகக் குறிப்பிடுவார்கள் இல்லையா. இந்த அம்மாவுக்குக் கருணையே உருவம் படைத்தவள் என்ற துணைப்பெயரும் உண்டு.


மற்றச் சிற்பங்கள். தத்ரூபமாகச் செதுக்கியவர்களும் பக்கத்திலியே இருந்தார்கள்.





பயணத்துக்கு முன் ஓய்வெடுக்கும் குதிரை.






மரப்பலகையிலிருந்து வெளிப்படும் கரடி ஓவியம்.







நடனத்துக்குப் புறப்படும் இளவரசி என்று வரைந்த அம்மா சொன்னார்.








காற்றில் அசைந்து ஓசை செய்யும் சிறிய மர பொம்மைகள்.









செதுக்கப்பட்ட வீடு,மற்றும் மரக்கைத்தடிகள்.










இந்தப் பெண்குழந்தை பிடித்திருப்பது பொம்மையா,தம்பியா,தங்கையா, கூர்ந்து பார்க்க , ஆக்கியவர் மறுத்துவிட்டார்:)
முந்தைய பதிவில் போட்டிருந்த படம் ஒரு யானையின் பல்.
அதுவும் கடைவாய்ப்ப்பல்.
எங்கள் தந்தை முதுமலைக் காடுகளில் உள்ள தபால் அலுவலக விஷயமாகப் போயிருந்தபோது வாங்கி வந்த யானைப்பல்.
அம்மாவிற்கு முதல் முதலாக வாங்கிய தோல் பெட்டியில் இதுவும், ஒரு குட்டித் தந்தமும், ஒரு ஏலக்காய்ப் பையும் வெகு நாட்கள் இருந்தன.
எங்கள் சின்ன வயதில் ,இந்தப் பெட்டியைத் திறந்து வாசனை பிடிக்க எங்கள் மூவருக்கும் மிகப் பிடிக்கும்.
இங்க இருக்கும் பெண் சாமர்த்தியமாகத் தாத்தாவிடமிருந்து கேட்டு வாங்கி வந்துவிட்டாள்.:)
எத்தனையோ தடவை,
எங்கள் பல்வலிக்கு இந்தப் பல் உதவி இருக்கிறது. இதை ஒரு கலுவத்தில் அரைத்து,அந்த விழுதை அம்மா பல்லில் தடவி விடுவார்.
மரப்பாச்சி பொம்மையை உரைத்துக் கண்ணுக்குத் தடவுவார்.
தேங்காயெண்ணெயைக் காய்ச்சி,அதில் ஒரு பல் பூண்டைப் போட்டு,அதை நசுக்கிய சாறு காதுவலிக்குப் பயன்படும்.

























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Wednesday, October 15, 2008

சினிமா சினிமா தொடர் விளையாடலாமா!!

எனக்கும் சினிமாக்கும் உள்ள பந்தம் ஒரு உணர்ச்சியானது. அதனால் நான் இந்த சினிமா சம்பந்தமான தொடர் கேள்விகள் அதே போலத்தான் இருக்கும்.

ஸ்ரீதர் நாராயணன், கொத்ஸைக்கூப்பிட, கொத்ஸ் மத்தவங்களை வலையில் இழுத்துப் போட்டு இருக்காரு.அதில நானும் ஒண்ணு.


பதினோரு கேள்விகள். எல்லாவற்றுக்கும் தெரிந்த வரையில் பதில் எழுதறேன்.:)



எதில ஆரம்பிச்சாலும் கணேசன் இல்லாம முடியுமா.




என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத்தோணும்னே நிறையப் பாடிட்டாங்க:)





மத்தவங்களைச் சிரிக்க ,அழ வச்சிட்டுத் தானும் அழுது போய்ச் சேர்ந்துட்டாங்க.






காந்தக் கண், வாளிப்பான உடல்வாகு, நடிப்பு,அழகு போதுமே!!

கேள்விகளுக்கு வருகிறேன்.
சினிமாவே துணை!!!!
------------------------------------------------
------------------------------------------------------

1,1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஒரு நாலு ,அஞ்சு வயசு இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில்.. பக்கத்துவீட்டு அம்மாவுக்கு இரவுக் காட்சிக்குப் போக ரொம்பப் பிடிக்கும். என்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு (இடுப்பில உட்கார்த்திக்கிட்டுத் தான்)
பராசக்தி படம் பார்க்க அழைத்துப் போனாங்க.
அங்க போய் படத்தில் ஸ்ரீரஞ்சனி அழும் காட்சிகளில் நானும் அழவே திருப்பி அழைச்சுக் கிட்டு வந்துட்டாங்க.:)
அடுத்து தேவதாஸ்.
அதில் இன்னும் அழுகை.
ஆனால் அவங்க வீட்டு ஊஞ்சலிலேயே உட்கார்ந்து உலகே மாயம்னு இருமல் எஃபெக்டோட நான் பாடினதும் ,எங்க அம்மா என் முதுகில நாலு வச்சது ஞாபகத்தில இருக்கு.(அவங்க வீட்டுத் தாத்தா படுத்த படுக்கையா இருந்தாரு:)
முற்றுப்புள்ளி சினிமாவுக்கு:))


2,2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அரங்கில தமிழ்ப் படம் பார்க்கிற அளவுக்கு எங்க சிங்கத்துக்குப் பொறுமை கிடையாது.
தம்பி அழைத்துப் போன படம் இதயத்தை திருடாதே:)
ஒரு நாலு நாளுக்கு அந்தப் பாடல்களைப் பாடின நினைவு இருக்கு:)

3,கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்னையில் கடைசியாக டிவியில் ,கே டிவி மதியக் காட்சிகளில் வரும் பழைய சினிமாக்கள்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி''
மிகவும் பிடித்த மென்மையான இசை, அந்த நாட்களுக்கே உரிய
ஸ்லாப்ஸ்டிக் வசனங்கள்.
பத்மினி ராகினி நாட்டியம். அப்புறம் ''பெண்''
ஜாலி லைஃப், ஜாலி லைப்'' சந்திரபாபு பாடி வீணை பாலச்சந்தர் ஆடிய பாட்டு என்று நினைக்கிறேன்.....
4,மிகவும் தாக்கிய தமிழ் சினிமா??
மகாநதி,மனம் பதைத்தாலும்,கமல் பழி வாங்கும்,சண்டை போடும் இடங்களைக் கண்மூடாமல் பார்த்துவிட்டுச் சோகப்பட வைத்த படம். கமல் மாமியாரா வர பெண்மணி எவ்வளவு வருஷங்களாக திரையுலகில் இருக்காங்க. gutsy lady!!!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இருவர் படம்.
ஒரு வினோத அனுபவம். மிகவும் தாக்கம்னு சொல்ல முடியாது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தாக்கமெல்லாம் சொல்ல மாட்டேன்.
ஆளைவிடுங்கப்பா. நமக்கு அதிர்ச்சியே ஆகாது:)
பாலுமஹேந்திரா படத்தில வருகிற போட்டோக்ராஃபி
ரொம்பப் பிடிக்கும்.

6,. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஓ,வாசிக்காம என்ன. அதான் குமுதத்தில கிசு கிசுன்னு ஆரம்பிச்சு இப்ப எல்லாப் பத்திரிகைகளிலும் வருதே. !!!
அதைத்தவிர பேசும்படம்னு ஒரு பத்திரிகை, என் சினேகிதி பள்ளிக்குக் கொண்டு வருவாள். அதை மதியம் உணவு இடைவேளையில் பிரித்துப் படித்து சூடாக விவாதிப்போம்:))
ரொம்ப சாரிப்பா. நமக்கு அவ்வளவுதான் சினிமா தெரியும்.


7,தமிழ்ச்சினிமா இசை?
மிகவும் பிடிப்பது பழைய பாடல்களும், எப்பவுமே காதுக்கு இனிமையா இருக்கிற,
இளங்காற்று வீசுதே, விழிகளின் அருகினில் வானம்,சுட்டும் விழிச் சுடரே,
இப்படீ.........


8,தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பார்ப்பது உண்டு.
தாக்கம் என்றால்
டாக்டர் ஷிவாகோ, மெக்கென்னாஸ் கோல்ட்,லவ்ஸ்டோரி,
ஜாக்கிச்சான் படங்கள்,மிஸ்ஸிப்பி பர்னிங் ...ஆங்கிலத்தில்.
ஏதாவது ஒரு விஷயத்தில் மெய்மறக்க வைத்துவிடும் இந்தப் படங்கள்.
அண்மையில் பார்த்த ''கங்ஃபூ பாண்ட்டா''வும் பிடித்தது:)
இந்தியில் வீடியோ எடுத்துப் பார்த்தபடம்
காபூல் எக்ஸ்ப்ரஸ்,
டோர்(DOR)
இரண்டுமே எனக்குத் தெரியாத,தெரிய வராத பல விஷயங்களை படம் பிடித்துக் காட்டின.


9,தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடித் தொடர்பா!!!!!!!
கமல்ஹாசனை நேரில் சந்தித்தது, நான் வேலையில்(ஒரு ஐந்து வருடம்)
பப்ளிஷர்ஸ் கம்பெனி(டைம்லைஃப்)க்காக ஒரு சர்வே....குழந்தைகள் புத்தகங்களைப் பற்றி.
அவருக்கும் ரசிக்கவில்லை.எங்களுக்கும் ரசிக்கவில்லை. ''மைக்கேல் மதன காம்ராஜ்'' படப்பிடிப்பில் இருந்தார்.
அவரது அலுவலகத்தில் பல பந்தாக்களோடு,நானும் என் தோழியும்
பார்க்கப் போன போது,ஒரு பத்துநிமிடத்தில், நாங்கள் படபடக்க , அவர் புத்தகங்களை நிதானமாகப் புரட்டிவிட்டுப் புருவத்தை உயர்த்தவும்,
செல்லுபடியாகாதுன்னு( அந்தப்புத்தகங்கள் விற்பனையாகாது அவரிடம்) வெளியில் வந்துவிட்டு
அப்புறமா பெண்ணிடம் பீற்றிக் கொண்ட அனுபவம்:)
மற்றபடி சினிமா பார்த்தால் அந்தத் தொழிலாளர்களுக்கு வரும்படி என்று மட்டும் தெரியும்.அவ்வளவுதான்.

10,தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். அதுவும் புதுசு புதுசா (வாளமீன் பாட்டு வந்த படம்)
வேறு மாதிரிப் படங்கள் வந்தால் முன்னேறாமல் என்ன.


11,அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
செய்திகள் வரவில்லை என்றால் ஒன்றும் பாதிப்பு இல்லை.பாட்டுக் கேட்கலாம் இல்லையா:)
தமிழர்களுக்குக்..... கொஞ்சம் வித்ட்ராவல் சிம்ப்டத்தில கஷ்டப்படுவாங்க.
எனக்கு ஒன்றும் ஆகாது.
தியேட்டருக்குப் போகும் பழக்கம் விட்டுவிட்டது.அதீதமான டெசிபல் அளவு தாங்க முடியாத்தால்.
மற்றபடி இன்னும் கொஞ்சம் அலுப்பாக இருக்கும் தொலைக்காட்சி பார்க்க முடியாததால் .

கொத்ஸுக்கு ரொம்ப நன்றி. இன்னும் ஐந்து பேரை அழைக்கணும்னு வேற சொல்லி இருக்கு.
நான் அழைக்க நினைப்பவர்கள்.
(தனி மடல் அனுப்பறேன்பா)
ஆயில்யன்....எழுதிட்டீங்களா?
சதங்கா.......... நல்லா எழுதிடுவீங்க
ராமலக்ஷ்மி....கவிதையே பாடிடுவாங்க
நானானி, கதை சொல்ல இவங்கள விட்டா யாரு!!
ராதாஸ்ரீராம் ப்ளீஸ் கொஞ்சம் உங்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்க.
ஆங்கிலம் கலந்த வார்த்தைகளோடு பதிந்திருக்கிறேன்.
பயிற்சி தமிழ்சினிமா பற்றித்தானே.:)))

Friday, October 10, 2008

விளம்பரமோ விளம்பரம்..PIT OCTOBER

இதுல எழுதின வாக்கியமெல்லாம் வரவில்லை. அதுக்கு என்ன செய்யணுமோ???

ரொம்பக் குடச்சல் எடுத்தா எடுக்க வேண்டிய் ஆயுதம்:)


பச்சைக் கலர்ல ஒண்ணு, மஞ்சக் கலர்ல ஒண்ணு இந்த துடைப்பான்கள் இல்லாமல் இவங்க வீட்டில ஒண்ணும் துலங்காது:)



மகளொட படக்கருவி. என்னுதை விட அழகா இருக்கிறதுனால போட்டேன்.





சோப் இவங்க ஊரில திரவமாத்தான் இருக்கு.
அது பாதி தண்ணீர்ல போயிடும்.
நம்ம ஊரு லைஃப்பாய் போல வருமா:)














Posted by Picasaநவராத்திரிக்கு வாங்கின பைகள். வண்ணம் அழகா இருக்கு இல்ல??