
துளசி இலைகளின் பெருமைகளை உறவினர் எடுத்துச் சொல்ல கேள்விப்பட்ட விஷயங்கள்.
தினம் இரண்டு இலை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம்.
குழந்தைகளின் நுரையீரல் சுத்திகரிக்க,கபம் கட்டினால் அதைப்
போக்க,
வாய்,பற்கள் சுத்தத்திற்கு என்று பலவிதமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
அவர் துளசியைப்பற்றி இவ்வளவு விவரம் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது.
அதுவும் இன்று போன் செய்து எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, 'துளசி வீட்டில இருக்கோ?' என்றும் கேட்டார்.
நானும் அம்மா பாட்டி காலம் தொட்டு துளசி மாடம் வைக்கிறதும் கோலம் போடுவது விளக்கேற்றுவதும்
வழக்கம்தான் என்று சொன்னேன்.
அவருக்குத் தெரியுமா நம்ம வீட்டில பல வகைத் துளசிச் செடி சேகரிப்போம் என்று:))
இப்பவும் திருப்பதி திருமலை போய் வரும் போதும் கிருஷ்ணதுளசிச் செடி வாங்கி வந்தோம்... அதெல்லாம் அவரிடம் சொல்லவில்லை.
புத்திமதி சொல்ல வருபவரிடம்,பெருமை பீற்றிக் கொள்ள முடியுமா:)
இல்லை, இந்த அம்மா துளசி,கிருஷ்ண துளசி போலவே கோபால் துளசி ஒருத்தரை எங்களுக்குத் தெரியும்னோ,
சொல்லலை.
இங்கே இப்போது சொல்கிறேன்
அவரும் இன்று இந்த ஃபெப்ருவரி ஐந்தாம் தேதி பிறந்து....இத்தனை வருடங்களாகத் தமிழில் ,நல்ல தமிழில் நல்ல விஷயங்களை இணையத்தில் சொல்பவர்.
நகைச்சுவை நாயகி,
பின்னூட்ட அரசி நம்ம துளசிக்கு இன்னிக்குப் பிறந்தநாள்.
அவரும், அவரது மறுபாதியும் ,மகளும் ஜிகேயும் அவரது நண்பர்களான நாமும் நீண்ட நெடுங்காலம் நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஹேப்பி பர்த்டே துளசி.
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.