Blog Archive

Sunday, June 26, 2022

ஸெர்மாட் பயணம் 3 ஆம் பகுதி







வல்லிசிம்ஹன். விமானநிலையத்திலிருந்து ஒரு பதிவு எழுதலாமே என்று தோன்றியது. சென்னைக்கு வணக்கம்.

Sunday, June 19, 2022

அன்றைய பயணம் 2002 இல் ஸெர்மாட்.

வல்லிசிம்ஹன்

November  2014  .

நாங்கள் ஸெர்மாட் எக்ஸால்சியர் எனும் விடுதியில் மாலை 4
மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

சுமாரான் மூன்று நக்ஷத்திர விடுதி.

கொஞ்சம் சிறியதோ என்று தோன்றியது.படிகள் ஏறி அறையை அடைந்தோம்.

அறையா கியூபிகிளா என்னும் படி சந்தேகம் வந்தது. இத்தனை காசு கொடுத்து இத்தனூண்டு இடத்திலா, என்று யோசித்தபடி

அங்கிருந்த ஒரே ஒரு நாற்காலியில் அப்பாடி என்று உட்காரப்

போனேன்.

அம்மா ஒரு நிமிசம்னு"" மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால் வந்துவிட்டது.

தடால்....

சே,னு போயிட்டது.

அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து

மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.

கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.

நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.

மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும்.

சுவரோடு சுவராகக் கட்டில் இருக்கும்.தலைக்கு

மேலெ பாதி சுவர் ஜன்னல்.

அது வழியாக அறுபத்துமூவர் கும்பல் மாதிரி ஒரே சத்தம்.

அதுசரி!!!! சந்தோஷமா இருக்கத்தானே வந்து இருக்கிறார்கள்.!!!!

நமக்கு விழுந்த அதிர்ச்சியில் பாலும் கசந்ததடின்னு

பாட்டு வருது.
மேடராவது ஹார்னாவது.போப்பா சரிதான்னு

தோன்றியது.

இத்தனை குட்டி அறைக்கு 200  ஃப்ரான்க்  வாடகை.அட்டாச்சிடு  பாத்ரூம் இருக்காம்.

நம்ம ஆகிருதியோ சைட்வேஸ்ல

கூடப் போகமாட்டேன் என்கிறது. எப்படியோ சமாளித்து கிடைத்த காபியை முழுங்கிவிட்டு வெளியே வந்தோம்.

இங்கெ ஒரு சுவையான செய்தி என்னன்னால் புகையே கிடையாது.

மனுஷப்புகை பற்றி சொல்லவில்லை. வாகனப்புகையைச் சொல்கிறேன்.

போக்குவரத்து என்பது குதிரை வண்டியில்,இல்லாவிட்டால் மின்சாரக் காரில்.

சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த ஏற்பாடாம்

ஆனால் இந்தக் குளிருக்கு மனிதர்களின் சிகரெட் புகை அதிகம்.

மலைக்குப் போவதற்குத் தனி ரயில். உச்சியை அடைந்த கணம்

மறக்கமுடியாத தருணம்.அப்படி ஒரு உயரம்,கம்பீரம்.

சூரியன் சிகரத்தில் விழும் ஒளி கண்கூசவைக்கும் ஜாலமாக

இருந்தது.

அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ

தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்

நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
 இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி

,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் , 
ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

கொஞ்ச நேரத்தில் சூழ்ந்த மேகங்களும், பனித்திரையும்

மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை.

அன்றைய வெதர்மேன் எண்ணம் அப்படி.!!

கீழே இறங்கி வந்ததும் சாப்பாடு நினைவு வந்தது.

இவர்கள்தான் எட்டு மணிக்குக் கடைகளை மூடிவிடுவார்கள்.

அதற்குள் நமக்கு வேணும் என்கிற மரக்கறி உணவு கிடைக்கவேண்டுமே

என்ற கவலை.

திறந்த கடை ஒன்றில் வெறும் சாண்ட்விச் கேட்டோம்.

அந்த அம்மாவுக்கு அது பெரிய ஆர்டராகத் தோணவில்லை.

இரண்டு நிமிஷத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.

திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.

இருந்தபசியில் கண்மண் தெரியாமல் கோபம்.

என்ன செய்வது. சரிம்மா  சாதா ப்ரெட் இருந்தாக் கொடுதாயேனு கேட்டு வெண்ணையும் தயிருமாய் இரவு உணவை முடித்தோம்.

நாங்கள் சென்ற காலம் அங்கே அவ்வளவு குளிர் இல்லை.

காலையில் எழுந்து இலவச காலைச்சாப்பாடும் காப்பியும் சாப்பிட்ட கையோடு க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வண்டியைப் பிடித்து

 ஆல்ப்ஸ் மலைகளின் ஊடே அது சென்ற வேகத்திலும்,நடுவில் வந்த குகைளின்

அற்புதத்திலும்,

இத்தனை திடமான ரயில்பாதை மலைகளுக்குள்ளே

அமைத்த ஸ்விஸ் எஞ்சினீயர்களின் அதிமேதாவித்தனத்தையும்,

உழைப்பையும் அதிசயத்தவாறே ................

வில்லியம்டெல் கிராமத்துக்கு வந்து

அந்தக் கதையையும் கேட்டுவிட்டு இண்டர்லாகென் வந்தோம்.

அங்கிருந்து போட்.

லுசெர்ன் மறுபடி வந்து ஒருமணிப் பயணத்தில் வீடு வந்து  ஹப்பாடி!!!!!

விழாத  திடமான கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.

தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.

பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





   மீண்டும் போனேனே !!! அதுதான் க்ளைமாக்ஸ்.:)

இந்தத் தடவை  பயணம். எப்படி இருந்தது?பார்ப்போம்.

சென்னை வெய்யிலை விட அதிக வெய்யிலை 
இங்கே  பார்க்கிறேன். நேற்று சென்னை 30டிகிரி செல்ஷியஸ்,
இங்கே 36 டிகிரீ!!!!!!!

இதுவும் புவி சூடேறுவதால் என்று சொல்கிறார்கள்.
கண்கள் உஷ்ணத்தால்  பொங்கி மூடிக் கொள்கின்றன.

எல்லாமே அதிசயமாக இருக்கிறது.











Saturday, June 18, 2022

வெந்தயம்

வல்லிசிம்ஹன்


   வெந்தயம்  உணவு



வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி  வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும்  இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.
இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர்  கொண்டு முழுங்கலாம்.


நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து  சாப்பிடலாம்.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற  கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக்  கொள்ள உதவும்.
நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில்  குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.


 வெந்தய தோசை, வெந்தய இட்லி, வெந்தயக் குழம்பு,
வெந்தயக் களி. என்று வெந்தயம் கலந்த  சட்டினி 
கசப்பாக இருந்தாலும்  நல்ல பலன் கொடுக்கிறது.

உளுந்தே  ஒத்துக்காத சில பேருக்கு
மெந்தியமும் சேர்த்துக் கொண்டால் தோசையும் இட்லியையும்
கவலை இன்றி சாப்பிடலாம்.


  · 
வெந்தயம்- Fenugreek – मेथी – மருத்துவ குணங்கள்

உடல் சூடு, தீப்புண், நீரிழிவு, நெஞ்சுவலி, பொடுகு, மலச்சிக்கல், முகப்பரு, வயிற்று உப்பிசம், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை, வெந்தயம்

வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

உடல் சூடு, மலச்சிக்கல்

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர்குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது.

உடல் வனப்பு

உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்து, பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.





Tuesday, June 14, 2022

இங்கே இப்போது......






வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

ஜூன் 4 ஆம் தேதி சிகாகோவை விட்டுப் 
புறப்பட்டோம். 
அதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே
பெட்டிகள் நிறைக்க ஆரம்பித்தோம் .
மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் உறவினர்களுக்காக
மகள் வாங்கிய பொருட்கள்.கவனம் வைத்து வாங்கினதை  அடுக்குவதில்
பெட்டிகள் கச்சிதமாக நிரம்பின.

15/6/2022
 பதிவுகள் எழுத ஆரம்பித்ததிலிருந்து
இவ்வளவு நாட்கள் , இணைய தளங்களிலிருந்து விலகி இருந்ததில்லை.

இதுவும் நல்ல மாறுதலே :)

விமானப் பயணம் இத்தனை களைப்பைத் தரும் என்று எதிர்பார்க்கவில்லை.
கணினியைத் திறக்கவே சோர்வாக இருந்தது.
ஏதோ நாமும் உலாவுகிறோம் என்பதற்காக 
வாட்ஸ் ஆப்பில் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன்.
அது கூட இல்லாமல் 
இருப்பது கடினம் தானே.

மகள் குடும்பம் ஒரு சிற்றுலா போய் வந்த மறு நாள்,
மூன்று நாள்
300 மைல்கல் தொலைவிலிருந்த செர்மாட்  Zermatt என்ற
மலைச் சிகரம் பார்க்கக் கிளம்பினோம். 
நல்ல குளிரும் இயற்கைக் காட்சிகளும் 

பிரமிக்க வைக்க,  டீசல் வாசமே இல்லாத அந்த 
நகர கிராமத்தில் வலம் வந்த 
அருமை சொல்லி முடியாது.

பல பல பிரபலங்கள் வந்து போகும் இடம் ஆதலால்
எல்லாமே  உச்ச பட்ச விலையில்தான்
கிடைக்கின்றன.
மகன் ஏற்பாடு செய்திருந்த விடுதி நல்ல
வசதி வாய்ந்ததாகச் சமையல் அறை வசதிகளோடு
இருந்தது.
காலையில் உணவை முடித்துக் கொண்டு ,
கையிலும் எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு
மலைரயில் ஏறி சிகரத்தை அடைந்தோம்.
இந்த ஊருக்கு மட்டும் இறைவன் இத்தனை 
இயற்கை வளத்தை அளித்திருக்கிறானே என்ற பொறாமையும்
கூடவே எழுந்தது.:)
மக்களின் நேர்மை, உதவும் மனப்பான்மை,
குழந்தைகளின் கபடம் இல்லாத மகிழ்ச்சி,
ஒரு பயமில்லாத வாழ்க்கை எல்லாமே

மீண்டும் மீண்டும் நெகிழ வைத்தன.
ஏற்கனவே 2002 இல் பார்த்த நகரம் என்றாலும் 
20 வருடங்களுக்குப் பிறகு ,மாறுதல் என்று சொல்லப்
போனால் மேலும் மேலும் கட்டிடங்கள்
அதிகரித்திருப்பதைத் தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் எல்லா விதத்திலும் கட்டுப்பாடோடு இருக்கிறது.
நாட்டின் வருமானமே சுற்றுலாப் பயணிகளால் 
தான் என்பதால் அவர்களுக்கு  நல்ல விதமாக
சேவைகள் நடக்கின்றன.

அத்தனை பயணிகளுக்கு நடுவில் நாங்கள் 
மட்டுமே முக உறை அணிந்திருந்தது வேடிக்கையாக இருந்தது.

தொடரலாம். 






Wednesday, June 08, 2022

பசி பொறுக்காத கண்ணன்.

வல்லிசிம்ஹன்




 Muguntan Rajagopal: ஓம் நமோ நாராயணாயா 🙏




கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு ஸ்ரீகிருஷ்ணன் கோவில்🙏:-

கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா?- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ. திருவார்ப்பு
ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம். கோட்டயம்.

கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மூடப்படுவதே இல்லை அதுமட்டுமல்லாமல், எல்லா கோயிலும் மூடப்படும் கிரகண காலத்தில் கூட திறந்திருக்கும் அதிசயம் நிறைந்த கோயிலின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மூடப்படுவதே இல்லை அதுமட்டுமல்லாமல், எல்லா கோயிலும் மூடப்படும் கிரகண காலத்தில் கூட திறந்திருக்கும் அதிசயம் நிறைந்த கோயிலின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில்

ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்.

அனைத்து இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டு, கோயிலை சுத்தம் செய்து பின்னர் சிறப்புப் பூஜை செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு விடுவது வழக்கம். ஆனால் திருப்பதி போன்ற சில கோயில்கள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக வருவதால் நள்ளிரவில் கூட தரிசிக்கலாம். ஆனால் திருப்பதி கோயில் கூட ஒரு குறிப்பிட்ட மணி நேரம் மூடப்பட்டுத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரமும் கோயில் திறந்திருக்கக் கூடிய அதிசய கோயிலாக உள்ளது. வாருங்கள் கோயில் குறித்த விபரத்தை முழுமையாக பார்ப்போம்.

#கோயில் #பெயர்: திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்

கோயில் அமைந்துள்ள இடம்: திருவார்ப்பு, கோட்டயத்திலிருந்து 6-8 கிமீ தொலைவில் உள்ளது.

#மூலவர் :  ஸ்ரீகிருஷ்ணன்

கோயில் திறக்கப்படும் நேரம்:

அதிகாலை 2 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது.

3 மணிக்கு சிறப்பு பூஜை அதாவது உஷ பாயசம் எனும் உணவு கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.

இந்த திருவார்பு கோயில் 1500 வருடங்கள் பழமையான கோயில். இந்த கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், ஆண்டின் எல்லா நாட்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

சம்பிரதாயத்திற்காகக் கோயில் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.

#பசியை #தாங்காத #கிருஷ்ணர்.

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேளையில் கையில் கோடாரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை  ஜெர்மன் வகையான ஜி நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால் கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி கொடுக்கப்படுகிறது.

அரக்கன் கம்சனை கொன்ற கிருஷ்ணன் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் அந்த கிருஷ்ணரே இந்த கோயிலில் மூலவராக அமர்ந்தார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

​அபிஷேகம் முடிந்ததும் நைவேத்தியம்:
தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தை குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. அவர் பசியாக இருப்பார் என்பதால், பின்னர் உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் உலர்த்தப்படும்.

#கிரகணத்தின் #போது #மூடப்படாத #கோயில்:

திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் என இந்து கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.

ஒரு முறை கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டது. அப்போது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை கீழே வீழ்ந்திருப்பது கண்டனர். அந்த நேரத்தில் வந்த ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் இப்படி நடந்ததாக கூறியுள்ளார். அதன் காரணமாக, அப்போதிலிருந்து, கோயில் நடை தினமும் வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

​பிரசாதம் பெறாமல் போகக் கூடாது
இந்த கோயிலில் நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.

இரவு 11.58 மணிக்கு கோயில் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? என சப்தமாக கேட்பார்.

அதே போல் இந்த கோயிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

#பசியால் #வாட #மாட்டீர்கள்:

இந்த கோயிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போது வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.

#திருவிழா, #சிறப்பு #நாட்கள்:

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

​கோயில் முகவரி:

திருவார்பு கிருஷ்ணன் கோயில், திருவார்பு - 686 020

கோட்டயம் மாவட்டம், கேரளா.

கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் திருவார்பு கோயில் அமைந்துள்ளது.

விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால், கொச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து, கோட்டயம் வந்து கோயிலுக்கு செல்லலாம்.

தமிழ் நாட்டிலிருந்து கோட்டயத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

ஹரே கிருஷ்ணா
குருவாயூரப்பா உன் திருவடிகளே சரணம் 🙏

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் 🙏
[3:24 PM, 6/7/2022] Revathi Narasimhan: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, June 06, 2022

பயணங்களில் நேசம்....2022 இல் ஒரு பதிவு.



இப்போது திருமங்கலத்துக்கு வருவோம்:)
 '' ஏணியைக் கொண்டுவா. முதல்ல பரண்ல இருக்கற கூஜா,
பச்சை டிரங்க், ஹோல்டால் எல்லாம்
கீழ கொண்டு வரணும்'' அப்பா சொல்ல பக்கத்து வீட்டிலிருந்து
 ஏணி கொண்டு வந்து விட்டான் ரங்கன்.

அப்பாவுக்கு இன்றிலிருந்து லீவு!!!!!
கடைசி நிமிடம் வரை அப்பாவுக்குப் பர்த்தியாக(டெபுடி)
வரவேண்டிய  போஸ்ட்மாஸ்டர் வரவில்லை.
அம்மாவுக்கு ஒரே டென்ஷன். 
அம்மாவின் தம்பி திருமணம் இன்னும் ஒரு வாரத்தில்.

அம்மாவின் வரவுக்காகக் காத்திருக்கும்
பாட்டியும் மாமாக்களும்.
ஒரே ஒரு மாப்பிள்ளை எங்க அப்பா.
எல்லோரையும் அழைத்துப் போய் ஜவுளி எடுக்க வேண்டும். 
இரண்டு நாட்களில் மங்கலிப் பொண்டு 
பூஜை நடக்கும்.
எத்தனையோ வேலைகள்:)

இப்போது திருமங்கலத்துக்கு வருவோம்:)
இந்தப் பை மாதிரி  இருக்கும் ஹோல்டால் 
அப்பாவின் மிகப் பெருமைக்குரிய சொத்து.
அவருடைய மாமா இரண்டாம் உலகப் போரில்
இந்திய சிப்பாய்களுடன் சென்று வந்தவர்.
அப்பாவுக்குக் கொடுத்த  பொக்கிஷம். 
அவருடைய பெயர் கூட அதில் பொரித்திருக்கும்.

இந்தப் பிரம்மாண்ட பையைத் திறக்கவே அப்பாதான் வரவேண்டும்.

அதன் ஸ்பெஷல் வாசம். ஐந்தடி நீள விரிப்பு.
தலைப்பக்கம் ஒரு தலையணை வைக்க வேண்டும்.
நடுவில் ஜமக்காளம், போர்வை,அம்மாவின் புடவைகள் 
இரண்டு என்று அப்பா மடித்துப் போட்டு
மீண்டும் கட்டுவார்.
இதெல்லாம் எதற்காக என்று கேட்கி றீர்களா.?
எங்கள் ஐவருக்கும் டிக்கெட் வாங்கி இருந்தாலும் அப்போதெல்லாம்
பர்த் வசதி கிடையாது.


  பழைய ரயில் பெட்டிகளைத் தேடினேன் கிடைக்கவில்லை:}

பழைய சினிமாக்களில் வறுமையில் வாடும் குடும்பம்
,குழந்தைகள் பாடுவது  போல எல்லாம் 
வரும். அப்படி இல்லாமல் ஒரு நம்பிக்கைப்
பாடலைப் பதிகிறேன்.
சிங்கத்துக்குப் பிடித்த வஹீதா ,தேவ் ஆனந்த் பாட்டு ஒன்று.:)


   இப்படியாகத்தானே ஒரு டிரங்க், ஒரு ஹோல்டால்
இவற்றில் எங்கள் துணிமணிகள்
அடங்கிவிடும். 
வெங்கலக் கூஜா (இப்போது எந்தக் கடையில் இருக்கோ :()

தேய்க்கும் படலம். என்னைச் சேர்ந்தது. அன்று 
குழம்பு, ரசம் செய்த பிறகு 
சேரும் புளி யைப் போட்டு, கூஜா, அதன் திருகு மூடி, உள்ளே இருக்கும் டம்ப்ளர்
எல்லாவற்றையும் தேய்த்து, மண்ணும், அரப்பும் சேர்த்து
தேங்காய் நார் அழுந்த அழுந்தத் தேய்த்தால்
தங்கம் போல மின்னும்.


இனி குதிரை வண்டி வர வேண்டியதுதான். ஏற வேண்டியதுதான்.

முடிந்தால் இந்த ஊரில் தொடருகிறேன். இல்லாவிடில் மகன் ஊரில் தான். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.



Saturday, June 04, 2022

காலம் காலமாக.......நல் நினைவுகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

ஒரு சிறு பயணமாக  இரண்டு வருடங்களுக்குப் பிறகு
இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம்.
ஒரு மாதம் சின்ன மகனுடன். 
பிறகு 20 நாட்கள் சென்னையில் என்று திட்டம்.

இறைவன் துணையோடு எண்ணங்கள் நிறைவேற
இறை தரிசனம் கிடைக்க
பிரார்த்திக்கிறேன்



Friday, June 03, 2022

சீரகம் (Cumin Seed)

வல்லிசிம்ஹன்



சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டு முறை- வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்.




சீரகம் (Cumin Seed) விதை ஒரு பிரதான உணவாகும், இது கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் சமையலறைகளிலும் எளிதாகக் காணப்படுகிறது. சீரகம் உணவை சுவையாக மாற்றுவதற்கு மட்டுமல்ல, பல வகையான மூலிகைகளும் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சீரகத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதால் அவை வயிற்றுப் பிரச்சினைக்கு மிகவும் பயனளிக்கின்றன. வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர, சீரகத்தில் பல சிக்கல்களிலிருந்து (Cumin Seed benefits) நிவாரணம் தரும் பண்புகள் உள்ளன. சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றிலும் இது ஏராளமாகக் காணப்படுகிறது, இது வீக்கத்தைக் குறைக்கவும் தசைகளை தளர்த்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சீரகம் நினைவகத்தை அதிகரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும். பயன்பாட்டு முறை- சிந்தனை, புரிதல் மற்றும் நினைவில் வைத்திருக்கும் சக்தியை அதிகரிக்க, அரை டீஸ்பூன் சீரகத்தை மென்று, தினமும் சாப்பிடுங்கள். 

குடலில் வாயு இருக்கும்போது, ​​பாதிக்கப்பட்டவர் மிகவும் வருத்தப்படுகிறார். இது போன்ற சூழ்நிலையில், சீரகம் பயன்படுத்தவும். சீரகம் வயிற்று வலி மற்றும் குடல் வாயுவை நீக்குகிறது.  பயன்பாட்டு முறை- இந்த பயன்பாட்டிற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள், சிறிது இஞ்சி, பாறை உப்பு மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் அது குளிர்ந்து குடிக்கலாம்.

சீரகம் கால்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்பாட்டு முறை- நீங்கள் சீரக தண்ணீர் குடிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒரு ஸ்பூன் சீரகம் தூள் மற்றும் மிளகு ஆகியவற்றை மோர் சேர்க்கவும்.

Thursday, June 02, 2022

கனமான பார்ட்டி. :)பாட்டி...


வல்லிசிம்ஹன்  2009 August

சில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.
ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
எனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.
நான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.
என்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி
ஒட்டடைக் குச்சியை.
இப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)
அவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர
அது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
'
கொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல
உனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.???
படிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
ஷி வாஸ் இன் ஷாக்!!!
பசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.
பின்னே!
அவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.


நாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,
அவர்களின் "'நற நறக் :'கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.
ஒருவழியாக நாதஸ்வர இரைச்சலிலிருந்து(!!!) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன??
என்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.
ஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....
தொடரும்( சங்கடங்கள். )

 
23 comments:
வல்லிசிம்ஹன் said...
test

7:24 PM 
துளசி கோபால் said...
ஏம்ப்பா...ஒல்லியா இருப்பது முக்கியமா ? இல்லை சந்தோஷமா இருப்பது முக்கியமா?

சந்தோஷமா இருப்பதால் நாம் எடை கூடுனோம் என்றால் நம்ம வயசில் ஒல்லியா இருக்கறவங்க துக்கத்தோட இருக்காங்கன்றதுதானே உண்மை.

குண்டோ ஒல்லியோ எல்லாம் அவரவர் குடும்ப வாகு.

குண்டா இருப்பவர்கள் ஏற்கெனவே குண்டா இருக்கோமேன்னு நொந்துக்கிட்டு இருப்பாங்க. இதுலே தான் ஒல்லியா இருப்பதால் அடுத்தவங்களை இளக்காரமா நினைப்பது தப்பில்லையா?

ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?

இங்கிதம் தெரியாதவர்கள் உலகில் நிறையப்பேர் இருக்காங்க(-:

எங்கூர்லே முந்தியெல்லாம் வயசாகியும் குச்சி மாதிரி இருக்கப்பட்டவங்களை என்ன சொல்வாங்க தெரியுமா?

உடம்பெல்லாம் வினையும் கெட்ட எண்ணமும். அதான் திங்கறது எதுவும் உடம்புலே ஒட்டலை(-:

7:30 PM 
துளசி கோபால் said...
சொல்ல விட்டுப்போச்சு....
பிள்ளையார் சூப்பர்.

அவரை ஒல்லியாக்கணுமா? :-)))))துளசி கோபால் said...
புள்ளையாரை ஏன்ப்பா சுருக்கணும்? படம் நல்லாத்தானே இருக்கு.

தோழி பிள்ளையாரையும் ஒல்லி ஆக்குவாங்களான்னு கேட்டேன்:-)))))

8:11 PM 
Earn Staying Home said...
Good posting.

8:52 PM 
வல்லிசிம்ஹன் said...
பிள்ளையாரை மூணு அவதாரமா மாத்திட்டேன்:)
ஓகேயா.
அந்த சினேகிதி இப்ப பெரிய ஆபீசரா ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறாங்க.
பணம்,தங்கம் எல்லாம் நிறைய பார்த்து உடம்பு இளைச்சுட்டாங்களோ என்னவோ!!

8:53 PM 
துளசி கோபால் said...
இருக்கட்டுமே....
பதவியால் மட்டும்தான், மனுசனுக்கு மதிப்பா?

என்னமோ போங்க.....

8:56 PM 
கோபிநாத் said...
அட எங்க பிடிச்சிங்க பிள்ளையாரை...அட்டகாசம் ;))

தொடரும்ன்னு போட்டுவிட்டு கூடவே சங்கடங்கள்ன்னு போட்டா எப்படிம்மா அதை தொடர சொல்ல எங்களால முடியும் ;(

12:37 AM 
வல்லிசிம்ஹன் said...
Thank you,
earn at home.

5:15 AM 
வல்லிசிம்ஹன் said...
கோபிம்மா,

நான் வேற எங்க தேடுவேன். கூகிள் ஆண்டவர்தான் உதவறார். இவரை
ஃபோட்டொ பக்கெட் ல பிடிச்சேன்.
சங்கட நாசன கணேசனைப் படமாப் போட்டுட்டு கவலைப் படலாமா.

சரியாகிவிடும். குண்டா இருந்தா நம்ம பிரச்சினையை விட
நம்மளைப் பார்க்கறவங்களுக்கு
இன்னும் சங்கடமாப் போயிடுது:))
அதைச் சொன்னேன்!!!!

5:20 AM 
Geetha Sambasivam said...
என்னத்தைச் சொல்ல, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வந்தா பதிவே திறக்கலை, என்னனு பார்த்தா பிள்ளையார், இன்னும் என்னோட "சேத்தி" விடலை போல! :))))))

போகட்டும் அருமையா இருக்கார் பிள்ளையாரும், அவரைப் பத்தின பதிவும். நானும் உங்க கட்சி தான். ஆனால் ஒண்ணு, குண்டா இருக்கிறதிலே நான் அனுபவிச்ச, அனுபவிக்கும் சங்கடம் என்னன்னா, எனக்கு மட்டும் நல்லா வேலை செய்யமுடியும், நிறையவும் செய்யமுடியும், உடம்பு களைச்சுப் போகாதுனு மத்தவங்க நினைக்கிறது தான்! :)))))))) மத்தபடி நான் குண்டா இருக்கிறதிலே பிரச்னை எதுவும் இல்லை.

6:59 AM 
Anonymous said...
வல்லிம்மா, உங்க பதிவை திறந்ததுமே பிள்ளையார், அப்பறம் ஒரு பசும்புல்வெளி(மலைன்னு கூட சொல்லலாம்) ஆடு அப்படின்னு ஒரே படமா இருக்கு. எங்கே பதிவ காணமேன்னு பாத்தா கீழ இருக்கு. வேற ஏதாவது டெம்ப்ளேட் முயற்சி செஞ்சு பாருங்க. :)

9:03 AM 
வல்லிசிம்ஹன் said...
வாங்கப்பா சின்ன அம்மிணி, ஆடும் புல்லும், மலையும் ஒரு சிம்பாலிக்கா போட்டு இருக்கேன்.
ஆடு மாதிரி புல்லைச் சாப்பிடணும்.
மலைமேல ஹைக்கிங் போகணும். உடலை நல்லா வச்சிக்கணும்னு:)

பிள்ளையாரும் போட்டு இருக்கேன் பாருங்க.:))

10:35 AM 
வல்லிசிம்ஹன் said...
வரணும் கீதா, நாந்தான் நேரிலியே பார்த்தேனே. நீங்க எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்கன்னு,.

எங்க மாமியார் கூட குண்டுதான். அத்தனை வேலை அசராம செய்வாங்க.
நீங்க சொல்கிற மாதிரி பார்க்கிறவங்க கண்ணில பிரச்சினை இருந்தா நாம என்ன செய்யறது:))))

10:38 AM 
ambi said...
எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. அப்படியே மோதகம் குடுத்தா நடைய கட்டிடுவேன். :)

பிள்ளையார் ரொம்ப கலர்புல்லா இருக்கார்.

10:59 AM 
மெளலி (மதுரையம்பதி) said...
விநாயகர் அருமை. அதிலும் 3 உருவங்களாக சூப்பர் வல்லியம்மா.

உங்கள் தோழியைப் போல பலர் இருக்காங்க. எதாவது பேசணுமுன்னு ஆரம்பிச்சு இப்படி ஆகிடறதுன்னு நினைக்கிறேன்.

12:07 PM 
Vetirmagal said...
I think your friend wanted to be admired by you. For being slim and not changing. I am sure you let her down.

Did she have some kind of old score to settle? :-)

Change is the essence oflife. Please have a look at all those old photographs in our twenties and thirties. Imagine if you were like that now? You will have a good laugh.

Please , take care. It is better to be plump and healthy. And write nice blogs.

Being officer in RBI is not so great. Three are almost thousands there. But feeling sorry for being plump is not nice.

You are healthy and happy and that is all that matters.

Cheers.

Agree with Tulasi madam's comments totally.By the way I am fat and happy :-)

4:07 PM 
வல்லிசிம்ஹன் said...
ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?
// Thulasi . this is sooooper:;;;;:)))

5:41 PM 
வல்லிசிம்ஹன் said...
அம்பி!!!!!! அம்பிதானே!!!
மோதகம் வேணுமனா ஞாயிறு வரவும்.
சூர்யாவுக்குத் தனி பார்சல்..

5:51 PM 
வல்லிசிம்ஹன் said...
ஆமாம்மா. பாவம். தன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையிலும்
புகுந்து
அவர்கள் பிரச்சினையைத் தலை மேல் போட்டுக் கொண்டு....கஷ்டம்தான்:)
பிள்ளையார் அழகா இருக்கார் இல்லையா. நன்றிம்மா மௌலி.

5:54 PM 
வல்லிசிம்ஹன் said...
oh yes she had some scores. you are right. We did not invite her into our clan of SEVEN!!!!

Thought she would have changed .very competetive person.
I did not have that fire then. I do not now.lucky me:))

For health reasons I want to reduce.
otherwise I am happy as I am!! thank you Vetri magal. you have given me a good boost:0))

5:58 PM 
கோமதி அரசு said...
வடநாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு லட்சுமியும் விநாயகரும் சேர்ந்த படம்,
சிலை விற்பார்கள்,நீங்கள் அனுப்பியிருக்கும் படம் அழகு.







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
at August 20, 2009  



Labels: உடல், காரணம், பருமன்










































































Wednesday, June 01, 2022

என்றும் அப்பா.

வல்லிசிம்ஹன்



Thursday, May 30, 2013

அப்பா 1921- மே 30 பிறந்த நாள்

தெய்வமான அப்பா




வணங்கிய தெய்வம்

 தன்னைப் பற்றியப் புகழோ  பேச்சோ விரும்ப மாட்டார்.
எப்பொழுதும் கீதை.
இல்லாவிட்டால்   குழந்தைகளுக்காக நல்ல விஷயங்களை

எழுதிவைப்பார்.
அபார்ட்மெண்டில் குடியிருந்ததால்  பொக்கிஷதார்  பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்ததால் அந்தக் கணக்குகளைச்  சரி   பார்ப்பார்.

பேத்தியை ஹோலி ஏஞ்சல்ஸ்  பள்ளியில் கொண்டு போய் விடுவார்.

வீட்டுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டிய
பொருட்களை  பட்டியல் போட்டுக் கொள்வார். கடைக்குப் போவதும்
கோவிலுக்குப் போவதும் மிகவும் பிடித்த விஷயங்கள்.

பாண்டிபஜார் வழியே   நான் ஏதோ வேலையாகப் போய்க் கொண்டிருப்பேன் பஸ்ஸில். திடிரென்று அப்பா பண்டியன் காஃபிப் பொடி
கடையிலிருந்து வெளியே  வந்துகொண்டிருப்பார்.''அப்பா'' என்று வாயோட முணுமுணுப்பதோடு  பஸ்ஸில் போய்விடுவேன்.


வீட்டுக்குப் போகும் வரையிலும் அப்பாவின் உருவம் கண்ணிலேயெ நிற்கும்.

வீட்டுக்கு வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது
தொலைபேசி  கூப்பிடும். மகள் எடுத்துவிட்டு,அம்மா.....தாத்தா
ஃபோன்ல.

அவசரமாக வருவேன். ஏம்மா  பாண்டிபசார்வழியாப் பஸ்ஸில போனியா?
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ஆமாம்பா. ஜோசியர் வீட்டுக்குப் போய்
வந்தேன்.
ஜன்னலில் உன் முகம் மாதிரி தெரிந்தது.
நீதானா  என்று சந்தேகம். இவ்வளவு தூரம் வந்த பொண்ணு
வீட்டுக்கு    வருவியேன்னு நினைச்சேன்.

குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு
இரவு சமையலுக்கு நேரமாகிவிட்டதுப்பா.
 சாரி.!!
அடடா  இல்லம்மா.இவ்வளவு சாயந்திர வேளையில் தனியாகப் போகிறாயே.
உன் வேலைகளில் பாதி எனக்குக் கொடேன்.
நானும் நன்றாகச் செய்து கொடுக்கிறேன்.

இனிமேல் உங்கள் வீட்டுக்கு வந்து....
ஏன்மா இது உனக்கும் வீடுதான்...அப்பா சிரிக்கும் சத்தம் கேட்கும்.

சரிப்பா நம்ம வீட்டுக்கு வந்து,  உன்னையும் அழைத்துக் கொண்டு

ஜாதகங்கள் விஷயமாக நாம் யோசித்து   முடிவு செய்யலாம்.

ஆமாம்  இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால்  செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)

குறுக்கே  அம்மா குரல். பொண் குரல் கேட்டால் அப்பாவுக்குத் தனி உற்சாகம்.

ஏம்மா நீயும்   சேர்ந்துக்கோயேன். உனக்குத்தான் எல்லாவற்றிலும் ஆசைகள்  நிறைய. நான் அம்மாவைக் கிண்டலடிப்பேன்.

அம்மாவை ஒண்ணும் சொல்லாதே ஆண்டாள்.
அவளுக்குத் தெரியாததே கிடையாது.

இந்த அப்பா  இயங்குவது அம்மாவுடைய சக்தியால்தான்!!!

சாமி. உங்க     வைஃபை  ஒண்ணும் சொல்லலைப்பா.

நாம் எல்லாம் சேர்ந்து இந்தத் திருமணத்தை முடிக்கலாம்
என்பதோடு அந்தத் தொலைபேசி  சம்பாஷணை முடியும்.

இப்பொழுது நினைக்கிறேன்  பாண்டி பசார் பக்கம் போகும்போது
அம்மாவீட்டுக்கும் போயிருக்கலாமோ.

இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய    நேரம்.

அப்பா  உன்னை மாதிரி தந்தை   இனிப் பிறக்கப் போவதில்லை.
எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பாய்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.

வணக்கங்கள் நமஸ்காரங்களுடன்
உன் குடும்பம்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்