Blog Archive

Showing posts with label ##கடிதங்களும்நினைவுகளும். Show all posts
Showing posts with label ##கடிதங்களும்நினைவுகளும். Show all posts

Tuesday, October 10, 2017

நேற்றும் இன்றும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
#கடிதங்களும்நினைவுகளும்

கடிதங்களைப் படிக்கும் போது அந்தக் காலத்துக்கே
போய் வந்த உணர்வு.
எத்தனையோ ரகசியங்கள். அந்த வயதிற்கான ஏமாற்றங்கள் ஏக்கங்கள்.
அத்தனையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கடிதத்துக்குப் பதில் போட நாட்கள் எடுத்தால்
பத்துப் பதில் கடிதங்கள் வந்துவிடும்.
சென்னையிலிருந்து  பத்து தோழிகள் போடும் கடிதங்களுக்கு
ஒன்றொன்றாகத்தானே பதில் போடமுடியும். அதுவும்
நாலைந்து முழுத்தாளில் வரும் செய்திகள்
 அதற்கு சரியாகப் பதில் எழுத வேண்டும்.,
சோகமாக எழுதிய ஜானுவுக்கு ,அதே கரிசனத்தோடு எழுத வேண்டும்.
எங்க அக்காவுக்குக் கல்யாணம் என்று எழுதின
ஜயந்திக்கு , விவரங்கள் சொல்லச் சொல்லி கேட்கவேண்டும்.
தீபாவளிக்கு என்ன வண்ண தாவணி என்று கேட்கும்
சந்திரா,அவள் தங்கைகளுக்கு .கடைக்குப் போன விவரம் சொல்ல வேண்டும்.

பாடங்கள் புரியவில்லை, நீ ரொம்ப லக்கி. உனக்குக் கல்லூரி
போகவேண்டாம் என்று புலம்பும் ராஜேஸ்வரிக்கு, நான் படும்
அவஸ்தைகளைச் சொல்ல வேண்டும்.
பெரம்பூரிலிருந்து  கவி மழை பொழியும் சீதாவுக்குப் பதில் கவிதை.
 இத்தனை அன்புகளையும் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.