வல்லிசிம்ஹன்
இசைக்கு மொழியில்லை.
மனமும் அதன் விசால நோக்கும் தான் அதற்குத் தேவை.
கண் வழியே அந்த நிலவின் கிரணங்களைக்
காட்டக் கூடிய விழிகள்
அன்பு நிறை உள்ளங்களை என்றும் கவரும்.
அப்படிச் சில சிறந்த நடிகைகளில் நூதனும் ஒருவர்.
எந்த நடிகரோடு சேர்ந்து நடித்தாலும் அவர் சோபிப்பார்.
இங்கே பௌர்ணமி அன்று நிலவைக் காண முடியவில்லை.
இன்று வேர்டில் போடுவதற்கு முன்பே நிலா
அம்மா தரிசனம் கிடைத்தது.
நான் இங்கே தான் இருக்கிறேன்.
மேகங்கள் சூழ்ந்து மறைத்தாலும் அவற்றுக்கு மேல்
நான் இருப்பேன் என்று நீ உணர்ந்தாலே போதும்
என்று சொல்கிறாள்.
அனைவரும் நலமுடன் வாழ்வோம்.