Showing posts with label remembrances. Show all posts
Showing posts with label remembrances. Show all posts

Saturday, February 28, 2015

.வாழும் எழுத்துகள்....



இன்று பிபரவரி   27. எதையோ மறந்துவிட்டோமே என்று யோசித்தேன்.
அநேகமாகக் கலயாண நாட்கள்,ஆண்டுநிறைவுகள் வரும்மாதம்.
 
சட்டென்று சுஜாதா சார் ஞாபகம் வந்தது.

தன்னுடைய 70ஆவது வயதுக்கு வந்த வாழ்த்துக்களை விட, பூங்கொத்துகளை விட,
திடீரென்று மூப்பு தனக்கு வந்துவிட்டதை நினைத்ததாகச் சொன்னதும் நினைவு வந்தது.
வாரவாரம் சனிக்கிழமை காலை பதினோறு மணிக்குக் காத்திருந்து ,எந்த ஊரிலிருந்தாலும் இந்திய நேரத்துக்கு ,
கணினி முன் உட்கார்ந்த ,
அம்பலம் அரட்டைக்கு வந்த நாட்கள்.
முகம் தெரியாத பல நபர்களின் அறிமுகம்.
எல்லோருடைய கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் லாகவம்.
அவர் வருமுன்னே களைகட்டி விடும்.
கணேஷ் என்று ஒருவர், மதுரை சுரேஷ் என்று ஒருவர்,அதியமான், நம் தேசிகன்,உஷா,
டார்-எஸ்-சலாமிலிருந்து ஒரு பெண்.
இப்படி எத்தனையோ .
ஒவ்வொரு தடவையும் ஸ்விஸ் ஆக இருந்தால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி விசாரிப்பார்.
கூடவே தான் டாவோஸ் ஏரிக்கரையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும் சொல்லுவார்.
''ஒரு சர்ச், ரெண்டு மரம்,ஒரு பார்க்,நாலு மனிதர்கள் இவர்களை வரைந்தால் ஒரு ஸ்விஸ் ஊர்த்தெரு வந்துவிடும் என்பார்.
}பிறந்த நாளைக்கு ஒன்றும் ஸ்பெஷல் கிடையாதா சார் என்றால் நான் பாயாசம் சாப்பிடுவது கிடையாது. மற்ற ஸ்வீட் ,கேக் உடலுக்கு ஆகாது.
இதுதான் பிறந்தநாள் என்று ''' matter of fact'' நினைவுக்கு வருகிறது.}
அம்பலமும் இல்லை, அரட்டையும் இல்லை,அவரும் இல்லை.
அவர் எழுத்துகள் இருக்கின்றன.


யாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனிய நினைவுகளுக்கு நன்றி  சார்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...