Blog Archive

Friday, March 31, 2017

என்றும் துன்பமில்லை. இனி சோகமில்லை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Saviour.

மன்னிச்சுடுடா. பெரிய தப்பு ஒண்ணும் இல்லை. க்ஷணப் பித்தத்துல
செய்துட்டேன் இனிமே இல்லை
இது சொல்லாத மனைவியோ கணவனோ இருக்க முடியாது.

 இன்று எங்கள் ஆன்மீகக் குழுவில் ஸ்ரீ காஞ்சிப் பெரியவா, மஹா பெரியபவா நிகழ்த்திய
ஒரு மகிமையைப் படிக்கும் புண்ணியம் கிடைத்தது.
 இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்ட தம்பதிகளாய்க் காமாக்ஷி அம்மன்
சன்னிதியில் ஒன்று ஸேர வைக்கிறார்.
அந்தத் தம்பதிகளிடம் அவரது கருணைப் பிரவாகம் பெருக்கெடுத்து
விவாகரத்தை விரும்பிய

ஈருயிரை ஒன்று சேர்க்கிறது.

இது எத்தனை பேருக்குக் கிடைக்கும்.
சகித்துச் செல்வதே எங்களுக்கெல்லாம் சொல்லப்பட்ட அறிவுரை.
இரு பாலருக்கும் தான்.
பேதம் கிடையாது.
உன்னை நான் மன்னிக்கிறேன். என்னை நீ மன்னித்துவிடு.
ஆக,முதலில் எதனால் இருவரும் ஈர்க்கப் பட்டோமோ
அதைத் தக்க வைத்துக் கொள்வதுதான் எத்தனை  கடினம்.

தனக்கு அநீதி  இழைக்கப் பட்டது என்று குற்றம் சாட்டும் நாம்
நாம் அந்த அனியாயத்துக்கு விதை போட்டோமா 
என்று யோசிப்பதிலும்தப்பில்லை.
அவசர முடிவிலோ,நாள்பட்டு விளைந்த முடிவிலோ எங்கோ ஒரு
அபஸ்வரம் வந்திருக்கிறது.
அதைக் கருணையோடு அணுகிவிட்டால்  மாறுபவத்ற்குச் சந்தர்ப்பம் உண்டு.

அதற்காகக் கசப்பை மனதி தேக்கி, அனலை வாய்வார்த்தைகளாக உமிழ்ந்து
எதிரில் நிற்கும் மனத்தைக் காயப் படுத்துவதில்
ஒன்றும் நேரப் போவதில்லை.

உடைந்த கண்ணாடிக்கு ஏது மதிப்பு.
இன்று மனதில் ஓடிய எண்ணங்கள்.






































Tuesday, March 28, 2017

திருவரங்கத்து அமுதம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நாளை பங்குனி மாதம், யுகாதி நாள்  நல் வாழ்த்துக்கள் ,

 ஸ்ரீரங்கனாதன் ரங்க ராஜாவுக்குப் பிறந்த நாள் என்று எனக்கு ஒரு
ஃபார்வர்ட் செய்தி வந்தது. 
திருமலை எம்பிரானுக்குத் திருவோணம் என்றால்
ஸ்ரீராமனுக்குப் புனர்வசு
ஸ்ரீரங்கனுக்கு எல்லோருக்கும் பெரிய பெருமாளுக்குப் பங்குனி ரேவதி நட்சத்திரம் அவதார நாள் என்றால்
 மிக அதிசயமாக இருந்தது.
ஆதி அந்தமில்லாத பெரும் சோதிக்கு அவதாரம் அந்தம் ஏது என்று
தெரிந்தவர்களிடம் கேட்டேன்.
சூரிய பகவானுக்கு விஷ்ணு  அரங்கனாதனாகப் பாற்கடலில் பள்ளிகொண்ட
திருமாலாகத் தோன்றிய நாள் என்று ஒருவரும்,
ஆதிதயன் தன் குலத்தோன்றல்களான இக்ஷ்வாகு குலதனமாகக் கொடுத்த நாள் என்றும்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி
விபீஷணன்  ,ஸ்ரீரங்கவிமானத்தைப் பரிசாகப் பெற்று ரங்கனாதனைக் காவேரிக்கரையில் இருக்க
வைத்த நாள் என்றும்
பலவித  சம்வாதங்கள்.
அந்த ரங்கனுக்கு காவேரியை மிகப் பிடித்து அவள் கரையில் பள்ளி கொண்டுவிட்டான்.
எங்கள் குடும்பத்துக்கும் 2003 ஆம் வருடம் அவனைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. அன்றுதான் இந்த விவரம் எல்லாம் திருக்கோயில் பட்டர் ஸ்வாமிகளிடம்
இருந்து அறிந்து கொண்டேன். 
அரங்கன் அனைவரையும் காப்பான்.
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ நாமும் வாழ்ந்திருப்போம் நலமாக.

Saturday, March 25, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
ஜானு ராகவன்.........பகுதி 3.
+++++++++++++++++++++++++++++++++++++
வண்டியைச் சீனுவின் வீட்டுக்குத் திருப்பினான் ராகவன்.
அந்த அதிகாலை வேளையிலும் ஒரே கலகலப்பு.
அதிகம் வாய்திறந்து பேசாத தன் காரியதரிசியின் வீடு எப்பொழுதுமே அமைதியாகப்
பார்த்திருக்கும் ராகவனுக்கு வியப்பாக இருந்தது.

கார் சத்தம் கேட்டு வெளியே வந்த சீனுவைப் பார்த்து இன்னும் ஆச்சரியம்.
அழகான மயில்கண் வேஷ்டி,சந்தனக்கலர் பட்டு சட்டை, வேட்டியைப் பிடித்து நிற்கும் 6 வயது செல்ல மகள்  நித்துக்குட்டி. அதுவும் பட்டுப் பாவாடை.
ஒன்றும் புரியாமல் நிற்கும் ராகவனை வாங்க சார் என்று வரவேற்றார் சீனுவோட தந்தை.
கரெக்டா  வாழ்த்த வந்துவிட்டீர்களே. இன்னிக்கு அவர்களுக்கு கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகிறது சார்.
நீங்களும் வாழ்த்துங்கள் என்று உற்சாகமாக உள்ளே
அழைத்து வந்தார்.
ராகவன் தயங்கினான்.
ஏன் இந்த மாதிரி விஷயங்களில் தனக்கு சுவை இல்லாமல் போகிறது.
ஒரு இயந்திர வாழ்க்கை அடிமையாகத் தான் மாறியது எப்போது
என்று வருந்தினான்.
கைகளில் இருந்த  சாக்கலேட் பெட்டி நினைவுக்கு வந்தது.
வண்டியிலிருந்து எடுத்து வந்து குழந்தை கையில் கொடுத்தான்.

சார் ஏதாவது முக்கிய விஷயமா என்று கவலையுடன் விசாரித்த சீனுவைப் பார்த்து முதுகில் தட்டிக் கொடுத்தான்.
பக்கத்துப் பிள்ளையார் கோவிலுக்கு வந்தேன் அப்படியே..  You carry on. Nothing that important
என்றபடி விரைந்துவந்து  வண்டியை மீனம்பாக்கம் செலுத்தினான்.
 அவன் உள்ளே விரையவும் மார்க் தம்பதியர் வெளியே வரவும், அங்கிள் ராக்ஸ்,
என்று அவன் குழந்தைகள், லென்னியும் க்ரிஸ்ஸும் அவனை ஓடி வந்து அணைக்கவும் சரியாக
இருந்தது.
   மார்க்கை ஏறெடுத்துப் பார்த்த ராகவன் whats wrong you look under weather என்று அணைத்துக் கொண்டான்.
 oh its something he ate .Rags. Lets go to the hotel. this heat is killing .என்றாள் மோனிகா.
 அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பெரிய வண்டியில்
அவர்களையும் பொருட்களையும் அமர்த்தித் தன் வண்டியில்
 பின் தொடந்தான் ராகவன்.இதென்னடா புதுக்கவலை.

விடுதி வந்ததும் மார்க், உடை மாற்றி படுக்கையில் சரிந்தான்.
அவன்பக்கம் உட்கார்ந்த மோனிகா ,ராக்ஸ் எங்கள் ப்ரொக்ராம்  இன்று வேண்டாம்.
 என்றபடி பெட்டியைத் திறந்தாள்.
இது உன் ஜானுவுக்கு என்று டூரிஸ்ட் சாக்கலெட் பெட்டியும்,
இதோ இந்த மியூசிக்கல் வீடும்.
ம்ம் வீட்டின் கதவைத் திற என்று சிரித்தாள்.
அழகான பெண் பிம்பமும் அவள் துணையும்
ஏடெல்வைஸ் என்ற பழையபடப் பாடலைப்  பாடியபடி வெளியே வந்தார்கள்.
ராகவனின்  ஆச்சரியம் அடங்கவில்லை.
 I know she loves Sound of Music and she is an incurable romantic. thats why I got it for her Birthday
she is such a sweet soul. Rags you are a lucky man.





Sunday, March 12, 2017

சித்திரம் பேசுதடி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சித்திர விசித்திரங்கள்.  1960 ..64.
++++++++++++++++++++++2017  மார்ச் 12.

எங்கள் பள்ளியில் ஆறாம் படிவத்திலிருந்து  கலையார்வம் வளர்க்கப் படும். பாட்டு, ஓவியம்,தையல்
விளையாட்டு எல்லாவற்றிலும் கன்யா சகோதரிகள்  நிறைய ஊக்கம் கொடுப்பார்கள். மிஸ். க்ளாரா ஜேம்ஸ்
மிகப் பிடித்த மிஸ். அவர்கள் தாவர இயலும் சொல்லித் தருவார்கள். விளையாட்டு நேரங்களில் அந்த சுடு வெய்யிலில் என்னை ஓட வைப்பார்கள்.
 இத்தனை உயரத்தையும் வீணாக்காதே. கூடைப் பந்து, ஓட்டம்

எல்லாவற்றிலும் ஈடுபடு என்று விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.
 தொண்டை சதை அழற்சி காரணத்தினால் காய்ச்சல் வருm நாட்களில்,
தையல் வகுப்பு  மதர் ரெபெக்காவிடம் அடைக்கலம்.
அங்கே உட்கார்ந்து சித்திரம் வரைந்தது நான் மட்டும் என்றே
நினைக்கிறேன்.
ஆனந்த விகடனில் சாரதி அவர்கள் வரையும் சித்திரங்களை ப்
பார்த்து
கட்டங்கள் வரையைப் பட்ட தாள்களில் அழகாக அளவு குறித்துக் கொடுப்பார்கள்.
 அதைப் பின்பற்றி வரையக் கற்றோம்.
கைகள் வரையத்தான் கற்கவில்லை.
 என் ஓவியங்கள் இடுப்பளவில் நின்று விடும். ஸ்மைலி போட்டுக் கொள்ளவும்.

என் ஓவிய மங்கைகள் வித விதமாகப் புடவை கட்டுவார்கள்.
அதற்கேற்ற ரவிக்கை.
எல்லாம் ஒரே டிசைன்.
கழுத்துக்குப் போடும் நெக்லஸில் கூட அந்த வடிவு, காதில் தொங்கும்
தொங்கட்டானிலும் அதே.  நாக்கில மூக்கில நத்து புல்லாக்கில
கூட  அந்த வடிவு பளிச்சென்று சிவப்பு பச்சை வண்ணங்களில்
ஜரிகை தூவி ஜொலிக்கும்.
இடுப்பு ஒட்டியாணத்திலும் அது இருக்கும்.
அதே  நெற்றிச் சுட்டியிலும் இருக்கும்.

அதிசயம் என்ன என்றால் அதே போல பல சித்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஒன்று தான் இன்றைய ஃப்ரொஃபைல் படம்.
படம் பார்த்துக் கதை சொல் பாகம் முடிகிறது.

Wednesday, March 01, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்






ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
மூவாயிரத்துச் சொச்ச கதையைக் காண்பித்தார்கள்.
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.