Showing posts with label கதவுகளுக்கு ஒரு கவிதை. Show all posts
Showing posts with label கதவுகளுக்கு ஒரு கவிதை. Show all posts

Monday, March 07, 2011

கதவுகள் பழைய உரை நடை க(*வி)தை

 வீட்டுக்குள்   கடவுளின் அறைக் கதவுகள்
திறக்கும் கதவுகளுக்குப் பின்
நிற்கும் விழிகள்
சிலசமயம் அன்பு
சிலசமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சிலசமயம்  வரவேற்பு.

எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத கதவுகள்.


பாட்டியின் காலத்தில்  கதவை மூடினநாட்கள் இல்லை.
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.

அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.

இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி  மேலும் காவல்
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''


இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(
*********************************
இந்த உரைநடைக் கவிதை  '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது


ஆசிரியருக்கு என் நன்றிகள்.




தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...