Blog Archive

Showing posts with label மதுமிதா. Show all posts
Showing posts with label மதுமிதா. Show all posts

Monday, October 27, 2008

திரு .மாதவராஜ் அவர்களின் கேள்விகள்,என் பதில்கள்

மதுமிதா அவர்களின் பதிவில்,
தமிழில் வாசிப்பு என்பது எந்த அளவில் இருக்கிறது

என்று அறியும் முகமாகச் சில கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள்.
அதில் எழுத்தாளர் ,பதிவர் திரு.மாதவராஜ் அவர்களின்
பதில்களைவிடக் கேள்விகளே முக்கியம்
என்பது எனக்கு ஒரு பயிற்சிக் களமாகவே தெரிந்தது. ஒரு சுய மதிப்பீடு.

இந்தக் களத்தில்,பரீட்சையில் தொடராக நுனிப்புல்லில் நம் உஷா எழுதி இருந்தார்.

எனக்கு எழுதுவதில் அவ்வளவு அதிகப் பயிற்சி இல்லை. இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்காவது விடை எழுதலாம் என்றே தோன்றியது. அதன் பலன்
இந்தப் பதிவு.

மௌனமாக இருந்துவிடலாம் என்றால் அது முடியாது.
மழைக்கு முன்னால் தவளை கத்துவது போல், நாமும்
எழுதிப் பார்க்கலாம் என்ற ஒரு முயற்சிதான் இது.

http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post.html இந்தப் பதிவில் திரு .மாதவராஜ் கேட்டிருந்த கேள்விகள் மிக மிக அருமையானவை.

அவரை அறிமுகம் செய்த மதுமிதாவுக்கும் என நன்றிகள். இதை எழுதத் தூண்டுதலாக அமைந்த உஷாவின் பதிவுக்கும் நன்றி.










1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

மணியனின் காதலித்தால் போதுமா

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பதினொன்று,பனிரெண்டு வயது இருக்கும்

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

சமூகமும் பிடிக்கும் சரித்திரமும் பிடிக்கும்


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?


ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பதாலும், வாரப்பத்திரிகைகளில் அவர்கள் கதைகளைப் படித்துப் பிடித்து நாவல்களைப் படிக்கத் தோன்றும்.
)
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

நீட்டப்பட்ட சிறுகதைகளாக நாவல்களை நான் பார்க்கிறேன்.
அதே போல சுருக்கப்பட்ட நாவல்களாகச் சிறுகதைகளையும் நினைப்பதுண்டு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
அ. வாசகனின் அக நிலையிலிருந்து
இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?


250லிருந்து 300 வரை இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யம் குன்றாத
எந்த நாவலையும் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் படிக்கத்தோன்றும்

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

பக்கங்களைப் பற்றிக் கவலையில்லை. கதையிருந்தால் போதும்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

ம்ம்.
சிறிய வயதில் துப்பறியும் நாவல்கள் படிக்கும் போது பி.டி.சாமியின் இரட்டை மனிதனின் இருட்டு மாளிகை என்று நினைக்கிறேன்.:)
கடைசிப் பக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் திருப்பிப் படித்தேன்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

தீவிரமாக நாவல்களைப் படிக்கும் காலம் இருந்தது. அப்போது ஒன்றை முடித்த கையோடு இன்னோரு நாவலை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
இப்போது படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் துவங்கும் என்றே நம்புகிறேன்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

அப்படி எந்தப் புத்தகத்தையும் விடவில்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?


இருக்கின்றன. சொல்ல மனமில்லை

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

படிக்க நினைப்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நாவலகள். சுவை வேறுபாடு இருப்பதால்
படிக்கவில்லை
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?


கல்கியின் சிவகாமியின் சபதம்,
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்,இன்னும் பிற நாவல்கள்
ஜயகாந்தன் அவர்களின் சிறுகதை யுகசந்தி,யாருக்காக அழுதான்,
பாரீசுக்குப்போ,
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
லக்ஷ்மி யின் அரக்கு மாளிகை,
ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
ஆர்.சூடாமணியின் சில நாவல்கள்.
எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் நாவல்கள்
சத்தியப் பிரியனின் கல்கியில் வெளிவந்த தொடர் ஒன்று,.
இன்னும் நிறைய.
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

வி.ஸ ,காண்டேகரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள்.
மாயாவி என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பு செய்த சில பிற மொழிக்கதைகள்,
ஏண்டமூரி விஸ்வநாத்தின் கதைகள்.

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? \

நிறைய உண்டு.
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

அரக்கு மாளிகை, சிவகாமியின் சபதம், அன்பே ஆரமுதே

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

வேங்கையின் மைந்தன் பற்றி யோசித்ததுண்டு. எவ்வளவு பொருத்தம் என்று.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

நா.பாவின் அரவிந்தன், பூரணி.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்ள்

ஒன்றும் இல்லை, தமிழ் நம் மொழி மனதுடன் ஒன்றும். பிறமொழி வேற்ருக்குப்  போன உணர்வு.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


நிறைய இருப்பதாகத் தோன்றும்..
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? ..

சிவசங்கரியின்,வாசந்தியின் நாவல்கள்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கொத்தமங்கலம் சுப்பு  அவர்கள்.
++++++++++++++++++++++++++++++++
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

திரு கி.ராஜநாராயணன் ஐயா அவர்களின்  படைப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?


இல்லை
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?


நன்றி மதுமிதா,மாதவராஜ்என்னால் இயன்றவரை நேர்மையாகச் சொன்னதாகவே நினைக்கிறேன்..
சிறு தொண்டாக அது இருக்கலாம்.
முன் பக்கம்


Thursday, October 23, 2008

மீண்டும் சினிமா..கவிதாயினிக்காக

பாலும் பழமும்,இந்தப் படத்திலிருந்து எங்கள் பதின்மவயது தீர்மானம், நோய் வந்தாலும் கணவன் பணிவிடை மறக்கக் கூடாது:)

அழகான படம்.

ஆச்சி இல்லாமல் சினிமாபற்றி எழுதக் கூடாது இல்லையா.
பெண்களின் திடத்திற்கு இவர் ஒரு முன்னோடி. பானுமதி அம்மா கூடவே போட்டி போடத் துணிந்தவர்:)


தேவ் ஆனந்த் க்ரேஸ், சிங்கத்து கிட்டயிருந்த்து பிடித்தது. இவரும் கிஷோர்ர் குமாரும் சேர்ந்து இசைக் கோவில் கட்டி இருக்கிறார்கள். ரசிகர்கள் மனத்தில்.



அஷ்டாவதானி.
சிவாஜி சாருக்கு சமானமாக இவருக்கும் அப்பொது மரியாதை உண்டு.
மீண்டும் ஒரு அன்னை படம் வருமா.




டெய்சி இரானி. மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்த்ரராஜனைத் திரையில் காட்டியவர். நல்ல சுட்டிப் பெண். பையன் யார் என்று கேட்க வைத்தவர். இப்போது உருவமும் புகழும் வேறு விதமாக இருக்கின்றன. பாவம்தான்.





இவர்களையெல்லாம் பற்றியும் இவர்ர்களின் நடிப்பைப் பற்றியும் ஒரு மாநாடே நடத்தலாம்.
இரூவருக்கும் இடையே அப்படி ஒரு ஸின்க் இருந்தது.
பக்கா ஜெண்டில்மேன். நோய்க்கு இடம் கொடுத்துவிட்டார்.







இன்னும் நான் ரசிக்கும் கடோத்கஜன். அந்த மீசையை ஒதுக்கிப் பாயாசம்
உறிஞ்சும் அழகே அழகு.:)








நடீக்கவந்தபோது இருந்த அதே வெடுக் வாழ்க்கையிலும் இவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.









நல்லதொரு நாட்டிய நடிகை. வெகு அழகான கண்கள்.
மதுரை வீரனில் வாங்க மச்சான் வாங்க பாட்டுக்கு உயிர் கொடுத்தவர்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் பாட்டுக்கு ஆடும் நடனம் கண் முன்னே நிற்கும்.
மணப்பந்தல் படத்தீல் எஸ்.எஸ்.ஆருக்காகப் பாடும்' உனக்கு மட்டும் ''பாட்டு
அந்த நாட்களில் ரொம்பவே பிரபலம்.












சந்திரபாபு. நல்ல மனிதர், பாடகர். சிரிக்க வைத்து கோணங்கி செய்தவர்.
பிழைக்கத்தான் தெரியவில்லை.










சந்திரலேகா! சரித்திரம் தான். ரஞ்சன் படம் கிடைக்கவில்லை.
அவரும் மைலாப்பூர் வாசி என்று கேள்விப் பட்டீருக்கிறேன்.
''நான் ஆடுனு சொன்னா நீ ஆடணும்'' என்று சவுக்கோடு மிரட்டுவதை ரசிக்கலாம்.












சௌகார் அம்மாவை விட முடியாது. பாண்டி பஜாரில் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன்ன்.
உயர்ந்த மனிதனில் '' a time to play, a time to eat,and a time to rest''
மறக்க முடியாத வசனம்:)













பின்னுரை....

நாம் சினிமாவை விட்டாலும் சினிமா நம்மளை விட மாட்டேங்குது. இது யாரோ நடிகையோட புலம்பல் இல்லப்பா.


நானே தான். மன்றத்தில வந்து சினிமா பத்திச் சொல்லுங்கன்னுட்டாங்க நம்ம

மதுமிதா,கவிதாயினி,சுபாஷிதம் எழுதினவங்க,சமூக சேவகி
சொல்லாளர்
கடுதாசி அழைப்பு வச்சுட்டாங்க
நம்மளாலே தட்ட முடியுமா.

அதுவும் சினிமாங்கற அல்வாத்துண்டு பக்கத்தில வச்சுட்டு
கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடச் சொன்னாக் கசக்குமா என்ன:)
நேரம்தான் போறவில்லை.அவ்வளவு இருக்கு சொல்ல.
கேள்வி பதில்னு வந்தா கொஞ்சம் கற்பனை தடைப்படுது:)
நான் பார்க்க நினைச்சுப் பார்க்காம விட்ட படங்களே அதிகம்.
ஷோலேக்குக்கூட சிங்கம் தனியாப் போயிட்டு வந்தது. டூ மச் வயலன்ஸாம்:)
இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலே. சீன் பை சீன் யூ டுயூபில பார்த்தாகிறது.
மத்தபடி பராசக்தில ஆரம்பிச்ச நம்ம பயணம்
குழந்தைகள் பிறக்கிற வரை அப்படி இப்படி போச்சு. அப்புறம் ஒரு ஆறு வருஷம் சினிமா பக்கமெ போகவில்லை.
அப்புறமா பாமாவிஜயம் தொட்டு வருடத்துக்கு ஒரு சினிமாவாவது பார்க்கும் வழக்கம் வந்தது.
குழந்தைகளுக்காக ஹடாரி,ஷாக்கி டி ஏ, ஆஃப்ரிகன் சஃபாரி, சூப்பர்மேன்,
ஸ்டார்வார்ஸ்,மை டியர் குட்டிச் சாத்தான்னு
நிறைய படங்கள்.
அப்புறம் டிவி வந்ததில் ஏதாவது ஒரு படமாவது வாரத்துக்கு ஒரு முறை பார்த்துவிடுவதுதான்:)
சினிமா பிடிக்கும்.நல்ல சினிமா ,கொலைகள்,மற்ற குற்றங்கள்னு இல்லாம படங்கள் வரவேண்டும் என்று ஆசைதான்.
மக்கள் பார்ப்போர்களோ, தயாரிப்பாளாகளும் எடுப்பார்களொ. தெரியாது.
மீண்டும் என்னை எழுதவைத்த மதுமிதாவுக்கு வளர நன்னி.




.

,



.