Showing posts with label எதிர்பாராமல் நடந்தது 2. Show all posts
Showing posts with label எதிர்பாராமல் நடந்தது 2. Show all posts

Saturday, September 14, 2019

எதிர்பாராமல் நடந்தது 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


எதிர்பாராமல் நடந்தது 
++++++++++++++++++++++++++மாலா தினம் இரண்டு மணி நேரமாவது நடன அசைவுகளைப் பயிற்சி செய்து
திறன்பட ஆடினாள்.
மதுரைக்கு ஏதோ திருமண விழவிற்காக வந்த கிச்சம்மாப் 
பாட்டியின் வருகை  அவளுக்கு இன்னும் மகிழ்ச்சி கொடுத்தது.
பேத்தியின் அருகாமையில் பாட்டிக்கு இன்னும் மகிழ்ச்சி கூடியது.

மகள் பொன்னாவிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
பொன்னாவுக்கும் மாதவனிடம் மிகுந்த அன்பு உண்டு. மகள் அவனை நினைப்பதையும் அவள் அறிவாள்.

ஆனால் குடும்ப ஒற்றுமை கலைய அவள் விரும்பவில்லை.
அம்மா சொல்வது போல  எல்லாமே சரி என்றாலும், அண்ணா, மதனி மனம் நோக
தான் நடக்கக் கூடாது என்பதில் அவள் வைராக்கியமாக இருந்தாள்.

அம்மாவிடமும் அதையே சொன்னாள்.
மாலா படிக்கட்டும். அவளுக்கு ஏற்ற வரன் கிடைப்பான்.
அவள் மனதில் இன்னும் ஆசையை வளர்க்கக் கூடாது.

இப்போது படிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் சந்தர்ப்பம் கிடைக்காது.
என்று உறுதியாக அம்மாவிடம் மறுத்து விட்டாள்.

கிச்சம்மா பாட்டி சலித்துக் கொள்ளவில்லை.
திருமோகூர், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், ,மீனாக்ஷி அம்மன் என்று
போய் வந்தார்.
பேத்தியை அழைத்துச் செல்லவும் மறக்கவில்லை.
அந்த அந்தக் கோவில் தல புராணங்களையும்
சொல்லிக் கொண்டே வருவார்.
இடையே ஒரு நாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தார்கள்.
மாதவன் பற்றிப் பேச்சே எடுக்கவில்லை.
காலம் கனியும் போது காரியம் கைகூடும் என்ற திட நம்பிக்கை
அவரிடம் இருந்தது.
பள்ளி ஆண்டுவிழாவும் வந்தது.
அடக்கமான ,ஆடம்பரம் இல்லாத உடையில் 
மாலா மிக அழ்காகத் தெரிந்தாள். அத்தைகள்,அவர்களது 
மக்கள் எல்லோரும் வந்திருந்து கொண்டாடி போனார்கள்.

தேர்வு நாள் வருவதையொட்டி பாட்டிம்மா 
கிளம்பிவிட்டார்.
குழந்தை நல்ல தேர்வடைஅய வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது.
அப்போது பதினோராம் வகுப்பு இருந்தது.
மாலா கணக்கு,விஞ்ஞானம் ,சிறப்புத் தமிழ் எல்லாவற்றிலும் நல்ல
தேர்ச்சி பெற்றாள்.
கோடை மாதங்களில் கொடைக்கானல் செல்வது வழக்கம்.
வரதனின் அப்பா அங்கே தனி வீடு வாங்கி இருந்தார்.
மாலா,அவளுடைய அத்தைகள், அவரது மகள்கள் எல்லோரும் உற்சாகக் கிளம்பி அங்கே
சென்றனர்.
வரதனும் பொன்னாவும் வார இறுதிகளில் வந்து சென்றார்கள்.
மே மாத நடுவில் மாதவனின் கல்லூரி சுற்றுலா
அங்கு வந்தது தான் ஒரு கலகலப்புக்குக் காரணமானது.




தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...