Blog Archive

Thursday, March 29, 2007

சித்திர ராமன்..15..சுந்தரகாண்டம்.விச்வரூபம்,லங்கா தகனம்











ஸ்ரீராமனைப் பற்றிய சிந்தையிலிருந்து
சற்றே மீண்ட
ஜானகி,
'அனுமா, இத்தனை சிறிய உருவங்கொண்ட நீ எப்படி அத்தனை பெரிய சமுத்திரத்தை த் தாண்டி வந்தாயப்பா?'என்று கேட்க
அனுமனும் தன் விச்வரூபத்தைக் காட்டினான்.
மண்ணூம் விண்ணும் தொட, வெகு ப்ரகாசமாய் மலை போல வளர்ந்து நிற்கும் ஆஞ்சனேயனைப் பார்த்து சீதை வியக்கிறாள்.
'என் கணவன் திரிவிக்கிரமனாக எடுத்த அவதாரத்தில் கூட இத்தனை வளர்ச்சி இல்லையெ. இவன் எத்தனை யோக வலிமை படைத்தவன்' என்று மகிழ்கிறாளாம்.
கம்பர் சொல்லும் வார்த்தை, எப்போதுமே கணவன் பெருமையைவிடத் தன் குழந்தையின் பெருமை உயர்த்தியாக ஒரு பெண்ணுக்குத் தோன்றுமாம்.
அன்னை ஜானகி உலக மாதாவுக்கும் அப்படியே தோன்ற,
அனும, கண்கூசும் இந்த வடிவிலிருந்து சிறியவனாகவே என் முன் வா' என்கிறாள்.
அனுமனும் சீதையின் அருகில் வந்து ஒரு விண்ணப்பம் வைக்கிறான்.
அம்மா, நீங்கள் இப்போதே என் முதுகில் ஏறுங்கள். ஸ்ரீராமனிடம் உங்களைச் சேர்க்கிறேன்.
ஒரு நொடியில் போய்விடலாம்'
என்று சாதிக்க,
சீதை முறுவலிக்கிறாள்.
அனுமா உன் முதுகில் ஏறி என்னால் வரமுடியாது.
நீயோ வேகமாகப் பயணிப்பவன்.
தாண்டுவதோ சமுத்திரம்.
வானத்தில் இருந்து கடலைப் பார்க்க எனக்குப் பயம். நான் கீழே விழுந்தால் என்ன செய்வாய்?
மேலும் அரக்கர் துரத்தினால் , நீ என்னை எங்கே வைத்துவிட்டு ,அவர்களுடன் போர் புரிவாய்,?
இன்னும் ஒரு காரணமும் உள்ளது,.
பரபுருஷனை நான் தொட முடியாது.'
என்று சொல்லி நிறுத்தும் சீதையைப் பார்த்து சிரிக்கிறான் ஆஞ்சனேயன்.
'அம்மா முதலில் நான் பரபுருஷன் இல்லை. உன் புதல்வன்.
யாராவது புத்திரனைத் தொட மறுப்பார்களா?
இரண்டாவது என் விச்வரூபத்தைப் பார்த்தீர்கள். அதனால் உங்களைச் சுமப்பது பெரிய வேலையில்லை.
அதனால் அரக்கர்களை வெல்லுவதும் எனக்கு சுலபமே.
மூன்றாவதாக, உங்களுக்குக் கடலைப் பார்த்தால் பயம் இருப்பதாக நான் நம்பமுடியாது. நீங்களே அலைமகள் அல்லவா. கடலும் தாயகம்.
உங்கள் நாயகன் வசிப்பிடம் பாற்கடல்,,
வேறு உண்மைக் காரணத்தைச் சொல்லுங்கள். என்று அனுமன் வினவ,
மைதிலி அவனுடைய கூர்மையான சிந்தனையைப் பாராட்டி,
அனுமா, இந்த ராவணனை ஒழிக்க ராமனின் வில் வரவேண்டாம். என் சொல் ஒன்றே போதும்.
இந்த இலங்கையே எரிந்துவிடும்.
என்னால் அப்படிச் செயல்பட முடிந்தாலும்
ராமன்
என்னை வந்து மீட்பதையே நான் விரும்புகிறேன்.
என் சொல்லுக்கும் மேல் நான் ராமனின் வில்லையே நாடுகிறேன் என்றவள் முன், அனுமன் மெச்சி நிற்கீறான்.
இதுதான் பூரண சரணாகதி என்பது என்று புரிந்து அமைதியாகிறான்.
இவளே பரிபூர்ண அன்னை. ராமனுக்கு ஏற்ற சொல் திறம், சிந்தனை,திண்மை கொண்டவள்.
என்று மீண்டும் அஞ்சலிஹஸ்தனாய்
நிற்கிறான்.
அவன் புறப்பட ஆயத்தமாவதைப் பார்க்கும் சீதைக்கு மீண்டும் துயரம் கவ்வுகிறது.
ஆஞ்சனேயா இன்னும் ஒரு நாள் இருக்கலாமே.
நீயும் சென்று ராமனும் வரவில்லையானால்
என் சோகம் அளவுகடந்து போய்விடும்.;
என்று தீனமாக உரைப்பவளிடம்,
அனுமன் உறுதி கூறி
'இன்னும் முப்பது நாளில் உங்கள் துயரம்
தீரும் தாயே. தளர வேண்டாம். ராமன் காப்பான்.
நாங்கள் அத்தனை ஆயிரம் பேரும்,கரடிகளும் இன்னும் எல்லாவிதமான யோக,ஞானம் பொருந்திய பலவான்களுமிங்கே ராமலக்ஷ்மணர்களோடு வந்து இலங்கையை அழித்து உங்களை மீட்போம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வேறு நினைவே கிடையாது.
அவரது சினம் என்னும் தீயில் விழுந்து இறக்கப் போகிறான் ராவணன்'
என்று அவளுக்கு வீரம் ஊட்டும் சொற்களைச் சொல்கிறான்.
'அன்னையே விடை கொடுங்கள்.
நீங்கள் ஸ்ரீராமனுடன் சேரும் நாளைப் பார்த்துக் களிக்கக் காத்து இருக்கிறேன்.
மன உறுதியோடு இருங்கள். இதோ விடியல் அருகில் வந்துவிட்டது.
எல்லாத் துக்கமும் துயரமும் நீக்கக் கதிரவன்
போல ஜானகிமணாளன் வருகிறான் அம்மா'
என உரைக்க சீதையும் அவனுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கி எச்சரிக்கையுடன், க்ஷேமமாகப் போய் வரச் சொல்லுகிறாள்.
அவளைக் கீழே விழுந்து வணங்கி விடைபெறும் அனுமன், அந்த நந்தவனத்தின் தோரண வாயிலில் ஏறி உட்கார்ந்து யோசிக்கிறான்.
வந்த வேலை முடிந்தது,.
இத்துடன் போய்விட்டால் அது சரியில்லை.
அது ராமதூதனின் லட்சணம் அல்ல.
இங்கே ராவணனைப் பார்த்து சொல் ஆடிவிட்டு
செல்லவேண்டும்.
அதற்கு முதல் வழி இந்த வனத்தை அழிப்பதுதான்,
என்று மேலே எழுகிறான் வீர ஆஞ்சனேயன்.
ராவணனுக்கு மிகவும் பிரியமான அசோக வனத்தை
மேலிருந்து கீழே பார்க்கிறான்.
அவனுள் ராமமகிமை பொங்குகிறது.
கோபம் தளை மீறி,பாய்ந்து சென்று மரங்களை வேரோடு பிடுங்குகிறான். வரிசையாக எல்லா மரங்களையும் உலுக்குகிறான்.
மரங்கள் பேரோசையோடு விழுகின்றன.
பூமி அதிர்கிறது. மலர்களும் கனிகளும் வாரி
இறைகின்றன. சீதை உட்கார்ந்திருக்கும் மேடையைத்தவிர அத்தனை இடங்களும் நாசமாக்கப் படுகின்றன.
அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கும் அரக்கிகள் (எழுநூறு பெயர்களாம்)
ராவணினடம் ஓடி குரங்கு செய்யும் அட்டகாசத்தைச் சொல்லிமுறையிடுகிறார்கள்.
இது
ஒன்றையும் சகிக்க முடியாத ராவணன்
சபையைக் கூட்டி ஆலோசனை
செய்கிறான்.
வந்திருப்பது ஒரு குரங்கு. அது செய்யும் அலங்கொலமொ
பெரியது.
நமது மந்திரிகுமாரர்களை அனுப்பி அதை வதம் செய்துவிடலாம் என்று அனுப்புகிறான்.
அவர்கள் அலங்காரமகத் தேர்களில் வரும்போது வனமழிந்த கோலத்தைக் காண்கிறார்கள். மனம் அதிர்ச்சியடைகிறது.
அவர்களைப் பார்த்த மாருதி வீர கர்ஜனையோடு
வானில் உயரெ எழுகிறான்.
கேட்போர்
அங்கமெல்லாம் கதிகலங்குகிறது.
!!ஸ்ரீராமனுக்கு ஜெயம். சீதாராமனுக்கு ஜெயம்.
வீழ்கிறது லங்கை''
என்று முழங்கிக் கொண்டு பெரிய வானுயர்ந்த மரங்களுக்கிடையே ஊஞ்சலாடுகிறான்
அஞ்சனை மைந்தன்.
ராவணனால் அனுப்பிவைக்கப் பட்ட சேனைகள் அழிகின்றன.
பாறைகளாலும், மரங்களாலும் அனைவரையும் மோதி அழிக்கிறான்.
ஜம்புமாலி, மந்திரிகுமாரர்கள்,அக்ஷயகுமாரன்
இவர்கள் ஒருவர் பின் ஒருவராக
வந்து அனுமனின்பலத்துக்கு முன் நிற்கமுடியாமல் மடிகிறார்கள்.
பாறைகளைத் தகர்த்து அவர்கள் இடித்து வீழ்த்துகிறான்
தேர்களை உடைக்கிறான்.
வில்லிலிருந்து புறப்படும் அம்புகளளவ்அன் மேனியில் பட்டு உடைகின்றன.
இவர்கள் கதை முடிந்தபின் க்அம்பீரமாக வருகிறான் இந்திரஜித். ராவணின் மூத்த மகன். அருமைத் தம்பி மடிந்து மண்ணில் கிடப்பதைக் கண்டு
மனம் ஆவேசப் பட்டலும் நிதானமாக் யோசித்துச் செயல்படுகிறான்.
மாய வேலைகளால் இந்தக் குரங்கைப் பிடிக்க முடியது.
அஸ்திர பலமே சிறந்தது என்று பிரம்மாஸ்திரத்தைப் பூட்டி அனுமனின் மேல் எய்கிறான்.
அனுமனை இந்த அஸ்திரம் ஒரு முகூர்த்த நேரமே கட்டி வைக்கும்.
அதை எஎற்ருக் கொண்ட டானுமன் ட்ஹரையில் விழ, சுற்றி வரும்மரக்கர் கூட்டம்,
அவனைத் துன்புறுத்துகிறது.
அஸ்திர மகிமை அறியாத அரக்கர் அனுமனை ம்ஏலும் கயிற்றால் கட்ட, பிரம்மாஸ்திரம் அவனை விட்டுப் போகிறது.
விடுதலை ஆனாலும் ,ராவணனைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்தால் அனுமன் காத்து இருக்கிறான்.
இராவணன் மந்திரிகளும் விபீஷணனும் புடை சூழ ப்ரமிக்கத்தக்க அலங்காரங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கிறான்.
அனுமனை ஏறெடுத்துப் பார்த்து, மந்திரியை
விசாரிக்கும்படி கட்டளையிடுகிறான்.
அவர் வந்து,
நீ யார்?
உனக்கு ஏது இத்தனை பலம்,
விஷ்ணுவோ,சிவனோ,நான்முகனோ இங்கு வரத் தோது கிடையாது.
உனக்கும் எனக்கும் என்ன பகை.
நந்தவனத்தை அழித்தது ஏன்/
என்று சரமாரியாகக் கேள்விகள் விழ
அனுமன் தெளிவாக ராவணனை நேருக்கு நேர்
நோக்கி கிஷ்கிந்தையில் அரசாளும் சுக்ரீவ மகராஜாவின் அமைச்சன்.
வாயுபுத்திரன்.
ஸ்ரீராமனின் தூதன்.
ராவண, நீ எங்கள் தலைவன் ராமனின்தேவியைச் சிறைபிடித்து இங்கே வைத்து இருப்பதாகத் தெரிய வந்தது.
அவளைப் பார்த்து உன்னையும் கண்டு அவளை சிறை மீட்கவே வந்தேன் என்று கேட்பவர் மனம் அதிரும்
கம்பீரக் குரலில் அறிவிக்கிறான்.
''ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்''
அந்த ஆஞ்சனேயனுக்கு ஜே.

Wednesday, March 28, 2007

ஓராயிரம் நாமம்







எந்த ஒரு நாமத்தைச் சொன்னால் ஆயிரம் நாமம் சொன்னதால் கிடைக்கக் கூடிய வீடு பேறு கிடைக்குமோ
அந்த நாமம் ராமா உன்னுடையது தான்.
ராம,ராம ராம என்னும் சொல்லும் பாக்கியம்
நினைக்கும் புண்ணியம்
என்றும் எல்லோருக்கும் வேண்டும்.
ஸ்ரீராமன் பிறந்தான்.
புல்லும் எறும்பும் கூட முக்தி பெறும்விதமாகத் தன்னுடன் அழைத்துச் சென்றவன், அயோத்தி மக்கள் உய்ய வழி செய்த எம் பெருமான் நாமம்
வாழிய வாழியவே.

Saturday, March 24, 2007

சித்திர ராமன் 14,சுந்தர காண்டம்....கணையாழி கொடுத்தல்
















ஸ்ரீராம தூதன்,



சீதையை அணுகும்போதே நடுங்குகிறாள் தாயார்.



ஒருவேளை இவன் ராவணாக இருக்குமோ. இவ்வளவு அருகில் வரவிடக் கூடாதே என்று பயப்படுகிறாள்.













அவளின் பயத்தை பார்க்கும் உணரும் அனுமன் அப்படியே



வணக்கத்துடன் நிற்கிறான்.






வினயமும்,பக்தியும் ஆதரவும் ஒன்று சேர நிற்கும் அவனைக் கண்டு, சீதை



'ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்கும் உன்னை நம்புகிறேன்.



என் பதியைப் பற்றிய அங்க அடையாளங்கள்,



நீங்கள் சந்தித்த விவரம், எப்படி நீ நூறு யோசனை கொண்ட சமுத்திரத்தைத் தண்டினாய்.






எல்லா விஷயங்களையும் சொல்லி என் உள்ளத்தின் தாகம் தணிக்கும் வார்த்தைகளைச் சொல்''



என்று சொல்கிறாள்.






அனுமனும் அவள் வார்த்தையைக் கேட்டு



ரிச்யமுக பர்வத்தில் நடந்த செய்திகளைச் சொல்கிறான்.






ராமனி வர்ணிக்க முற்படும்போதுதான் திணறுகிறான்.



திகைப்பாக இருக்கீறது.



'



ராமனை வர்ணிக்க வார்த்தைகள் ஏது சீதே.



தாமரைக் கண்கள் என்றால் உதடுகள் கோவித்துக் கொள்ளும்.



நாங்கள் தாமரைக்கு சளைத்தவர்களா என்று கேட்கும்.






பற்களோ முழுநிலவைத் துண்டம் செய்து கோர்த்தது போல இருக்கும்.



கழுத்தோ சங்கின் திடம் கொண்டு பருத்து வளைந்து



தோள்களில் இணையும்.



கழுத்தில் ஆடும் அளகபாரமோ சொல்லி முடியாது.



கறுத்து,நீண்டு,சுருண்டு



கருத்த நீல வண்னம் கொண்டு இடைவரை தொங்கும்



ராமனின் தோள்களின் வலிவு உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



நம்பி என்ற சொல்லுக்கு உரியவன் அவனே..



96 அங்குல உய்ரம்.



நீண்ட கைகள் முழங்காலைத் தொடும் புருஷ லட்சணம் கொண்டவன்.






இப்பொது கூட இருந்து கவனித்துக் கொள்ள தேவி இல்லாததால்



வறண்டு,சடைபிடித்த முடியோடு சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறான்.



உண்ணுவதில்லை.உறங்குவதில்லை. அப்படியே உறங்கிவிட்டாலும் மறுபடியும் சீதா என்று அழைத்துக்கொண்டே எழுந்துவிடுவார்..""






என்றெல்லாம் அனுமன் சொல்லச்சொல்ல சீதைக்கு ராம்ன தன்னை மறக்கவில்லை என்று இன்பம். மறுபக்கம் அவன் துயரப்படுகிறானே என்று துன்பம்.



இரண்டு உணர்ச்சிகளையும் சமாளிக்க முடியாமல் மீண்டும் அனுமனை நோக்கி ன் ரரமன் அடையாளம் ஏதாவது கொடுத்தாரா என்று கேட்கிறாள்






அனுமன் 'இதோ' என்று ராமா' என்று நாமம்பொறிக்கப்பட்ட கணையாழியைக் கையில் வைத்து அன்னை முன் நீட்டுகிறான்.






ஆயாசம் தாங்காமல் உட்கார்ந்த சீதை அதைத் தன் கையில் வாங்குகிறாள்.



ராமனே எதிரில் நிற்பதாக ஒரு கணம் அப்படியே



ஆனந்தத்தில் மூழ்குகிறாள்.



கையிலே கொண்ட மோதிரத்தை அப்படியே அணைத்துக் கொண்டு கண்களில் நீர் வழிய ஏதேதொ சொல்லிப் புலம்புகிறாள்.



கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறாள்.



ஒரு கணம் பரவசம்.



மறுகணம் துக்கம். கணையாழியைப் பார்த்தவுடன்



பழைய நினைவுகள்.





இவன் ராமதூதன் தான் என்னும் மகிழ்ச்சி.






ஐயோ ராமனைப் பார்க்க வேண்டிய நாம் அவன் நாமம் பொதிந்த கணையாழியைப் பார்த்து சந்தோஷிக்க வேண்டிய நிலை வந்ததே என்று துயரம்.






மோதிரத்தையாவது பார்த்தோமே என்ற ஆறுதல்






அவனை மீண்டும் பார்ப்போமா என்ர விசாரம். பார்ப்போம் என்ற உறுதி தரும் மனத் திண்மை.



தன்னிலைக்கு வந்து அனுமனை மீண்டும் வாழ்த்துகிறாள் ஜானகி.



உயிர் போக வேண்டிய தரூணத்தில்



ராமநாமம் சொல்லி என்னை மீட்ட



அனுமனே உனக்கு நான் என்ன சொல்லி



கைமாறு செய்யமுடியும்.






நீ நீடுழி வாழ வேண்டும்.என்று அவள் சொல்வதை அனுமன் ஏற்று நிற்கிறான்.



மீண்டும் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு,






''உங்கள் இருவருக்கும் எப்படி நட்பு சாத்தியமானது?''



என்று அனுமனை விசாரிக்கிறாள்.
ஆதியோடு அந்தமாக விவரிக்கிறான்.
லக்ஷ்மணனின் க்ஷேம லாபங்களை ஒரு தாயின் பரிவோடு கேட்கும் சீதைக்குத் தான் அவனிச் சுடுசொல்லால் விரட்டியது ந்இனைவுக்கு வர மீண்டும் வருந்துகிறாள்.
இது உன் புதல்வன் என்று எண்ணி சுமித்திரா தேவி ஒப்படைத்த செல்வனை நான் கோபித்தேனெ.
அதனால் தான் எனக்கு இந்தத் தண்டனையோ என்றும் சொல்கிறாள்.
அனுமன் அவள் அழுது ஓயட்டும் என்று அமைதியாகிறான்.
சீதை ''விதி என்பது அந்த மான் உர்வில் வந்து என்னை நாயகனிடமிருந்து பிடித்தது. இனிமேல் நடப்பதை யோசிக்கலாம். அனுமா, ராமலக்ஷ்மணர்கள் சுகமாக இருக்க நான் விழைகிறேன் எண்று. இன்னும் ஒரு மாதம் கெடு கொடுத்து இருக்கிறான் இந்த அரக்கன்.
அதாற்குள்ளென்னை வந்து மீட்காவிடில் நான் உயிர் தரியேன்.
என்னிடம் நீ கொடுத்த இந்த கணையாழி நான் ராமனுடன் மகிழ்ந்த இருந்த நாட்களை மீட்டுக் கொண்டு வ்அருகிறது. இது எங்கள் திருமணத்தின் போது அணிவிக்கப் பட்ட மோதிரம்.
எங்களுக்குள் ஊடல் ஏற்படும்போதெல்லம் இது எப்படியாவது எங்களைச் சேர்த்து வைத்துவிடும்.
அயோத்தியில் நந்தவனத்தில் ஊஞ்சலாடும் போது
விளையாட்டாக என் நெற்றியில் கும்குமத்தைக் கலைத்ததும் எனக்குக் கோபம் வந்து ஸ்ரீராமனுடன் பேசாமல் ,வார்த்தையாடாமல் இருந்தேன். இருவருக்கும் தன்மானப் பிரச்சினையாகி விட்டது.
இரண்டு நாட்கள் கழிந்ததும் ராமனுக்குத் தன் சிறுதவறு புரிந்து மறுபடி என்னைச் சமாதானப் படுத்த,
இந்த மோதிரத்தைத் தரையில் நழுவ விட்டு
விட்டு,''அடடா திருமண மோதிரத்தைக் காணோமே''
என்று அழைக்க, நானும் உடனே மோதிரத்தைத்
தேடி அவரது விரலில் பொருத்தி அழகு பார்க்க
மீண்டும் சிரித்துப் பழக ஆரம்பித்தோம்''
ராமா, இத்தனை நாளாக இந்த மோதிரம் இருந்து
என்னை உங்களுக்கு நினைவூட்டும்,
இப்போது இதுவும் இல்லாமல் நீங்கள் கவலைப் படுவீர்களே'
என்றும் அரற்றுகிறாள்.
வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கள் அம்மா
என்று அனுமன் வினயமாகக் கேட்க,
காகாசுரனின் விருத்தம் சொல்கிறாள் சீதை.
நாங்கள் சித்திர கூடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில் ஒருநாள் ஒரு மரத்தடியில் ராமன்
என் மடியில் தலைவைத்துத் தூங்கும் நேரம் நானும் கண்ணயர்ந்தேன்.
அப்போது பொல்லாத காகம்மொன்று அருகே வந்து
என்னைக் குத்தித் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. நானும் பலவாறு முயற்சி செய்தும்மென்னை விடுவதாக இல்லை.
ஸ்ரீராமன் ட்ஹுயில் கலையக் கூடாதே என்று கவனமமக நான் இருந்த போது அந்தக் காகம்
என் மார்பின் சதை பிய்ந்து போகும் வண்ணம் குத்திக் கிளறி விட்டு,
என் ரத்தத்துளிகள் அவர் மேல் தெறித்தன.
சட்டென்று எழுந்த அவர் சீதே உன்னை வருத்தியது யார்.
இப்போதே சொல் என்று சினம் கொண்டார்.
அவர் பார்வை அடுத்த கணம் அந்தக் காக்கையின்
மேல் விழ, அது நொடியில் பறந்தது.
உடனே அருகில் இருந்த புல்லில் அஸ்திரப்
பிரயோகம் செய்ய, ராமாஸ்திரம் ஜயந்தன்
என்னும் அந்த தேவேந்திரன் மக்அனைத் துரத்த ஆரம்பித்தது.
ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அடைக்கலம் தேடிக் கிடைக்கத அந்தக் காகம் ராமா சரணம்
என்று ராமனின் கால்களில் விழுந்தது .
சராணமடைந்தாலும் செய்த தவறு பெரியது ஆகையால் அதன் இருகண்கலில் ஒன்றை அஸ்திரத்துக்கு இலக்காக,
ராமன் சொல்ல உயிர் பிழைத்து ஓடியது அந்தக் காகம்.
அனுமனே கேவலம் ஒரு காக்கை என்னைத் துன்புறுத்தியதைப் பொறுக்காத என் நாயகன்,
இப்போது என்னைப் பாராமல் இருக்க நான் எத்தனை பாபம் செய்தேனோ?
இனி என் உயிர் பிழைப்பது உன்கையில்
என்று சொல்லி அதுவரைத் தன் புடவைத் தலைப்பில்
முடிந்து வைத்து இருந்த 'சூடாமணி' என்னும் தலையில் சூட்டிக் கொள்ளும் ஆபரணைத்து எடுத்து
''இந்த அடையாளத்தோடு நீ ராமனிடம் சென்று என் வார்த்தைகளையும் சொல்லி என் துன்பம் போக்கும் வழியைக் காண்பாய்''
என உரைக்கிறாள்.
மகா பக்தியுடன் சூடாமணியை பெற்றுக் கொள்கிறான் ஆஞ்சனேயன்.
கண்களில் அதை ஒற்றிக் கொண்டு
இன்னும் வேறு ஏதாவது விஷயம் இருக்கிரதா அம்மா
என்றும் கேட்கிறான்.
இன்று 27/3/2007 ஸ்ரீராமன் ஜனனம் செய்த நாள்.
எல்லோருக்கும் அவன் அருள் பரிபூர்ணமாக அமைய வேண்டுகிறேன்.
லோகாபி ராமம் ரணரங்கதீரம்
ராஜீவ நேத்ரம் ரகுவம்ஸ நாதம்/
காருண்ய ரூபம் கருணாகரம்தம்
ஸ்ரீராமச் சந்திரம் சரணம் பிரபத்யே//
அன்னையும் நீயே தந்தையும் நீயே
உறவும் நீயே துணையும் நீயே/
கல்வியும் நீயேகல்விப் பயனும் நீயே
சகலமும் நீயே எங்கள் ராமா.//









































Friday, March 23, 2007

கவிதை(யா?) அன்புடன் குழுமத்திற்கு


எதிர்காலம்..

கண்ணளவே வானம் என்றெண்ணித்
தலை குனிந்து போனதால்
அழகு கொண்ட மரமும் செடியும்
நான் காணவில்லை


காதளவே சொற்கள் என்றே எண்ணிக்
கருத்தினிலே போடவில்லை.
அரியனவெல்லாம் தெரியவில்லை.
அறிந்து கொள்ளவும் வழியில்லை
நெடி அடிக்கும் என்று மூக்கை
மூடியதால்
பூக்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை.
உணவு தன்னை மதிக்காததால்
மணக்கும் உணர்வும் மறந்து போனது.

இப்போதோ பேரன் எனக்குச் சொந்தம்
நான் பேசுகிறேன்
அவன் கேட்கிறான்
இரண்டு வருடம் போய்வந்தால்
இவனும் பதில் எனக்குச் சொல்வான்.

இனியே கண்கள் திறக்கும்
காதுகள் கேட்கும்
வாய் நிறையக் கொஞ்சும்
விடுதலை கொடுத்தது யார்?

Thursday, March 22, 2007

சித்திர ராமன்...13.ராவணன் மிரட்டல், ராமநாம மகிமை











அனுமன் அன்னை ஜானகியைப் பார்த்த களிப்பிலிருந்து விடுபட்டு
சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்தினான்.
காணக்கிடைக்காத பல உயர்ந்த மரங்கள்,பழங்கள், பூக்களைச் சொரிந்த வண்ணம் கானப்பட்டன.
கிஷ்கிந்தையில் கூட இத்தனை செழிப்பை அவன் பர்த்திருக்கவில்லை.

வனங்களை நம்பி வாழும் வானரங்களுக்கு இந்த வனம் எத்தனை களிப்பு அளிக்கும்
என்றும் நினைத்துக் கொண்டான்.
சீதையைச் சுற்றிக் காவல் இருக்கும் அரக்கியரின் கோர ஸ்வரூபத்தை
விளக்கி முடியாது. அவளை அச்சுறுத்துவதற்காகவே
ராவணன் அவ்வாறு அமைத்து இருந்தானோ என்னவோ.
அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும், சீதையை மிரட்டுவதும்,
கள் முதலிய மதி மயக்கும் பானங்களை அருந்தி
உணவுப் பதார்த்தங்களைப் பறித்துக் கொட்டி ரணகளப் படுத்திக் கொண்டிருந்தனர்.
இவை எதுவுமே சீதையைப் பாதித்தாகத் தெரியவில்லை.

அந்தியில் தலையைக் குனிந்த தாமரை மொட்டு சூரியன் வரும் காலைக்காகக் காத்துத்
தவம் புரிவது போல ஏகாக்க்கிரகச் சிந்தனையில் ராமனைத் துதித்த வண்ணம் இருந்தாள்.
கண்ணீர் வழிந்து வழிந்து அவளது முகம் அந்தத் தடங்களோடு காய்ந்து போயிருந்தது.
வாரப்படாத அழகிய நீண்ட கூந்தல் சடை பிடித்துத்

திரிதிரியாக வழிந்து கொண்டிருந்தது.
என்ன செய்வது எது செய்வது என்று அறியாமல் கலங்கிய முகம்,
பிறர் யாரும் பார்க்கமுடியமல் ஒடுங்கிக் கொண்ட அங்கங்கள்
இவைகளோடு அவள் அந்தத்
மரத்தடியில் உட்கார்ந்து ஒரு தபசியாகக் காட்சி கொடுப்பது அனுமன் நெஞ்சையே சோகத்தில் மூழ்கடித்தது.
முதன்முதலில் ராமனின் சோகத்தைக் கண்ட அனுமன், எதற்காக ஒரு பெண்ணினிடம் இத்தனை பாசம்
வைத்து உருகுகிறாரெ. என்று ஏளனமாகத் தோன்றியது அவ்னுக்கு.
இப்போது சீதாதேவியைப் பார்த்ததும், இந்த உத்தமியைப் பிரிந்து
இன்னும் ராமன் எப்படி உயிரோடு இருக்கிறான்.
என்று அதிசயப் படுகிறான்.
ராமா நீயா ஒரு பிரபு?
இவளைப் பறிகொடுத்தாயே.
பெண்களுக்குள்ளே மக உத்தமமான ரத்தினம் அல்லவா இவள்.
இவளைப் பிரிந்தும் உன் உயிர் பிழைத்து இருப்பது என்றால் உனக்கு இதயமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன் என்று மீண்டும் தன் சிந்தனையைத் தொடரும் முன்னர் உதய கால பறை,பேரி,இசைகளோடு ராவணன்
இருனூறு அந்தப் புரப் பெண்களோடு வருகிறான்.
தூக்கம் கலையவில்லை.
இரவு நித்திரையிலும் மைதிலியின் நினைவு.
கலங்கிச் சிவந்த கண்கள்.
நழுவும் உத்தரீயம், பசியில்
வெகுண்ட சிங்கம் இரையைத் தேடி விரைந்து வருவதுபோல் பூமி அதிர வருகிறான்.
அவன் வருகையை உணர்ந்த சீதை இன்னும் தனக்குள்ளேயே ஒடுங்குகிறாள்.
அனுமனும் தான் ஏறியுள்ள கிளையில் இன்னும் கெட்டியாக ஒட்டிக்
கொள்ளுகிறான்.
அதிர்ந்து வரும் ராவணன், ஓய்ந்த நிலையில் உள்ள சீதையிடம்
பேசத்தகாத வார்த்தைகளால் வருத்துகிறான்.
தன் அரண்மனைக்கு வந்து பட்டமகிஷியாக இருக்கும்படி
வற்புறுத்துகிறான்.
அவன் பேசும் வரை மௌனம் காத்த சீதை
குனிந்த தலை நிமிராமலே, ஒரு புல்லைப் பறித்துத் தன் முன்னே போடுகிறாள்.

எதற்கககப் புல்லை அங்கே இடுகிறாள் என்பதற்கு நிறைய வியாக்கினங்கள் கொடுக்கப் படுகின்றன.

முதல் காரணம்

அந்தப்புரப் பெண்களுக்கும் அன்னியர்களுக்கும் இடையே ஒரு திரை வேண்டும் அதற்காக.

அடுத்தது அவள் ராவணனைப் புல்லாக மதித்தாள்.

மூன்றவது ராவணன் தன்னைக் கொண்டுபோய்

ராமரிடம் சேர்க்காவிடில் அவன் புல்லென இவனை அழித்துவிடுவான் என்று பகிரங்கமாக அறிவிக்கிறாள்.


சீதையின் உரையைக் கேட்ட ரவணன் ம்ஏலும் வெறிகொண்டு, அங்கிருக்கும் ராக்ஷசிகளுக்குச்

சீதையைத் தன் விருப்பத்துக்கு

இணங்க வைக்குமாறு ஆணையிட்டுச்

சென்றுவிடுகிறான்.


இன்னும் முப்பது நாள் தான் கெடு என்று அவன் சொன்ன சொல்லைக் கேட்டுச் சீதையின் உடல் நடுங்குகிறது.

துக்கம் அவளை வதைக்க மெல்ல அந்த இடத்தைவிட்டு எழுகிறாள்.


ராமனுக்குத் தான் இருக்கும் இடம் தெரியாது. அவன் எப்போது வருவான் என்றும் துளி அறிகுறி இல்லை. ஒன்பது மாதங்கள் ராமனைப் பிரிந்தது

மிகப் பெரிய தண்டனை.

அதற்கும் மேல் இந்தக் கொடியவனின் மிரட்டல்.

'ராமா, என்னை மறந்தாயோ. இவள் போனால் போகட்டும்,

நாம் அயொத்திக்குப் போகலாம் என்று திரும்பி விட்டாயொ.

''ராமா ,நான் உன் மனைவி என்று இல்லாவிட்டால் கூட பரவயில்லை. உன் ராஜ்ஜியத்தில் ஒரு பிரஜை நான் இல்லையா.இந்தத் தீனக்குரலைக் கேட்க மாட்டாயா.

ஐயோ இங்கே எனக்கு விஷம் கொடுக்கக் கூட ஆள் இல்லையே.


அயோத்தியில் உள்ளவர்கள் என் துன்பம் அறியமாட்டார்கள்.

தெரிந்தால் சும்மா இருப்பார்களா.


மாமியரே என்னைப் பற்றி நீங்கள் அறியவில்லையே.

உங்கள் செல்ல மருமகள் இங்கே தனித்து விடப்பட்டதை அறிவீர்களோ.

நான்கு பரக்கிரமசாலிகளைப் பெற்ற என் மாமனார் இப்போது இருந்தால் ஆயிரம் ஆயிரம் ப்ஓர்வீரர்காளோடு வந்து இந்த தைலங்கையைத் துவம்சம் செய்திருப்பாரே.

இந்த அரக்கன் ஒருவரும் இல்லாத சமயத்தில் புலியின் உணவைத் திருடின நரியைப் போல் அபஹரணம் செய்தானே''





எத்தனன நாள் இந்தத் துன்பத்தைப் பொறுப்பேன்//


என்று குரல் எழும்பாமல் அழுகிறாள்.

அழுவதற்குக் கூட தெம்பில்லை அவளின் இளைத்த

தேகத்தில்.

முடிவில் சோகம் மேலிட அவள் மேலும் புலம்புகையில் திரிஜடை

என்பாள், விபீஷணின் புதல்வி,

அரக்கிகளை அடக்குகிறாள்.

தான் கண்ட அதிசய சொப்பனத்தை எடுத்துச் சொல்லி, அதில் சீதா ராமனின் வெற்றி விளங்குவதையும், ராவணின் வீழ்ச்சி நிச்சயமே என்று சூளுரைக்கிறாள்.


அவள் சொப்பனத்திலாவது ராமனைப் பார்த்தாளே. எனக்குத் தூக்கம் வந்தால் அல்லவா கனவு காண்பதற்கு!!

என்று இன்னும் துக்கம் மேலிடுகிறது




திரீஜடையின் வார்த்தைகளைக்கேட்டு பயந்த அரக்கிகளும் தங்கள் கோரக் குரலை நிறுத்தி உறங்குகிறார்கள்.


தனிமையில் விடப் பட்ட சீதை உயிர் விடுவதே நலம் என்ற ம்உடிவுக்க்கு வந்து சடை பிடித்துப் போன தன் நீண்ட கூந்தலை மரக்கிளையில் போட்டுச் சுரருக்குப் போட முயலுகையில்

அவளுக்கு நற்சகுனங்கள் தென்படுகின்றன.

இடது கண் துடிக்கிறது. மனதில் ஏதோ ஒரு மெல்லிய பரவசம் ஏற்படுகிறது.


இதே போலச் சகுனங்கள் முன்பேயும் நல்ல வேளைக்கு அறிகுறி என்று அறிந்து இருக்கிறாள்.

எனவே கொஞ்சம் நிதானிக்கிறாள்.



இத்தனை நேரம் கீழெ நடந்த அத்தனையையும்

கவனித்த அனுமனுக்குச் சொல்லொண்ணாத் துயரம்.

அன்னைக்கு இந்தத் துன்பம் அடுக்குமா.!!

லோக மாதாவுக்கா இந்த கஷ்டம்?

இப்படி அவன் வருந்துகையில், சீதை அவன் இருக்கும் மரத்தடியில் தன் உயிரைப் போக்கும் எண்ணத்துடன் வருகிறாள்.

பதை பதைத்த அனுமன் ,,மனதில் ஓடூம் ராமநாமத்தை ஜபிக்க ஆரம்பிக்கிறான்.

''அயோத்தியில் பூலோக, தேவலோகம் மெச்சும்

தசரத மகராஜா இருந்தார். புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமன்,பரதன்,லக்ஷ்மண,சத்ருக்னர்கள் பிறந்தார்கள்.

அவர்கள் சர்வ வல்லமை உள்ள வாலிபர்கள்.

திருமண வயதில் ராமன், மிதிலை சென்று சிவதனுசை முறித்துத் ஜனக மன்னன் மகள் ஜானகியை மணந்தான்.

அவள் சகோதரிகள் மற்ற மூன்று சகோதரரும்

மணக்க இல்லறம் இனிதே பன்னிரண்டு ஆண்டு நடந்தது.

அப்போது தசரத ச்சக்கரவர்த்திக்கு தன் மூத்த புதல்வன் ரகுநந்தனனுக்கு மணிமுடி சூட்ட ஆவல் வரவே,

சபை கூட்டி ஆலோசனை செய்து முடிசூட்டு விழாவுக்கு நாளும் குறித்தான்.

அவனது இரண்டாவது மனைவியின் நிர்பந்தத்தின்

பேரில் ராமனுக்கு வனவாசம் வாய்த்தது.

தம்பியும் மனைவியும் நிழல் ப்ஒல் தொடர ராமனும் இனிய முகத்துடான் வனம் வந்தன்.

அங்கும் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்

செய்யும் வேளையில் இந்த இலங்கை மன்னன் தன் தங்கை சூர்ப்பனகையின் பேச்சால் மதிகெட்ட்டு என் தலைவன் ஜானகிராமனின் துணையான தேவியை அபகரணம் செய்தான்.


சோகத்திலிருந்த ராமனைத் தேற்றி இலக்குவன் காட்டு வழியில் தடயமறிந்து ந்அடக்கும் போது எங்கல் அரசர் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது.

சுக்ரீவனுக்காக அவன் அண்ணன் வாலியை

நற்கதி பெறச்செய்வதாக அவனிடம் அக்னிசக்கியம் செய்து கொண்ட ராகவன்,தன் வாக்கையும் நிறைவேற்றிச்
சுக்ரீவ பட்டாபிஷேகம் நடந்தது.
தான் செய்த சத்தியத்தின் படி சுக்ரீவனும் தன்
வனர சைன்யத்தை எல்லாத் திக்குகளிலும்
அனுப்பி இருக்கிறார்.
அவனது அரசவையில் நானும் ஒரு சேவகன்.
எங்கள் படை தெற்கு நோக்கி வந்தது.
மகேந்திர மலைஅடிவாரத்திலிருந்து புறப்பட்ட அடியேன்
இப்போது தேவி தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
கீழே நின்றிருக்கும் பெண்மணிதான் சீதாதேவி, என் தலைவன் நாயகன் ஸ்ரீராமனின் பத்தினி என்று யூகிக்கிறேன்.
அடியேனை அங்கீகரித்து அனுக்கிரகம் செய்ய வேண்டும்.'
'' உயிரை மாய்த்துக் கொள்ள முனையும் நேரம் என் நாதன் நாமம் சொல்லி மீட்டது யாரோ?
நீ யாராயிருந்தாலும் சரி.
ஸ்ரீராம நாமம் சொல்பவன் வேறாக இருக்க முடியாது''
என்றவாறு மரத்தைப் பார்த்துத் தன் பார்வையை மேலே திருப்பினாள்.
அங்கே அவள் கண்டது நிலவொளியில் மின்னும்
செம்பொன் நிறம் கொண்ட ஒரு சிறிய வானரத்தை.
உடனே கண்களைத்தாழ்த்தினாளாம் சீதை.
'
இப்போது நேரிலேயே பார்க்கிறேனே.
குரங்கு கனவில் வந்தால் கூடத் தவறு என்பார்களெ''
என்று அஞ்சுகிறாள்.
மீண்டும் மனதை உறுதிப் படுத்திக் கொண்டு
அனுமனை நோக்கிக் கீழே வருமாறு சொல்கிறாள்.
அனுமனும் மெல்லக் கீழே இறங்கித்
தாயை நோக்கும் சேய் போல அன்னையை வணங்கிக் குவிந்த கரங்களோடு,
நிலம் பார்த்து நிற்கிறான்.
தாயாரின் ம்அனத்தில் கருணை பொங்குகிறது.
வாழி நீ. உன் பெயர் என்ன என்று கேட்கிறாள்.
அனுமனும் சற்று முன் வரும்போது அவள்
பயப்படுவதைப் பார்த்து மீண்டும்
வணக்கத்துடன் நிற்கிறான்.
'அம்மா, என் பெயர் அனுமன் வாயு குமாரன்.
உங்கள் நலம் நாடியே வந்திருக்கும்,
ஸ்ரீராம தூதன்''
என்கிறான்.
ராம லக்ஷ்மண ஜானகி// ஜய் போலோ ஹனுமானுகி//





Wednesday, March 21, 2007

நானொரு 'வியர்டூ'ங்க


























வியர்டூ என்கிற வார்த்தையே எனக்குத்தான் சொந்தம்னு ந்இனைச்சேன்.
பார்த்தால் இணணயத்தில் எல்லோருமே கிட்டத்தட்ட நம்ம சைடு தான்.
ஒவ்வொருபதிவாப் படிச்ச்ட்டு
வரும்போது ரரகவனின் தனி மெயில் வந்தது.
கிடைச்ச சான்சை விடலாமா/
நன்றி ராகவன்.
மனம்,சொல், நடவடிக்கை எல்லாமே ஒரு
மொத்தமான ''டொரிக் டொரிக் '' கும்பலைச் சேர்ந்தவள் நான்.
இந்த 'டொரிக்' வார்த்தை எங்களுக்குப் ப்இடித்ததற்குக் காரணமே பால் மணம் மாறாப் பச்சைபிள்ளையாக எங்களைப் பாவித்துக் கொள்ளுவதுதான்.
வார்த்தை உபயம்.....ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்.
நெர்ட் என்று சிறில் எழுதி இருந்தார்.
அது கொஞ்சம் அறிவார்ந்தவர்கள் உபயோகிக்கும் சொல்.
நான் எழுத வேண்டுமானால் கொஞ்சம் கன்ஃப்யூஸ்ட்.
எதிலேயும் தயக்கம்.
முடிப்போமா மாட்டோமா என்று.
எல்லாவற்றையும் பிள்ளையார் தலையில் போடுவதும் உண்டு.
அவருக்கு வேண்டிகொண்டால் ஒரெ ஒரு தேங்காயில் விஷயம் பூர்த்தியாகிவிடும்.
முடித்தால் நன்றாக இருக்குமா என்று மற்றுமொரு சந்தேகம். முடிந்ததற்குப் பின்னால்போனால் போகட்டும் போடா சொல்வதும் உண்டு.
பேசுவதும் அனேகமாக வம்பில் முடியும்.
திருமணமான ஆதிநாட்களில் இவருக்கு என்னை வெளியில் அழைத்துப் போகவே பயம்.
அதுவும் கடைக்கு.
கோயம்பத்தூரில் குளிர் மிகுதியாக இருக்கவே ஹீட்டர் வாங்க ஒரு கடைக்குப் போனொம்.
'ராகொல்ட் வாங்குங்க சார்' இது புதுசு''
(அப்போது) கடைக்காரர்.
என்ன விலை/--நான்
2150ரூபாய்மா.
இவர் வாயைத் திறக்கும் முன்னால்
நான்'' எங்களுக்கு அவ்வளவுதான் போனசே'(bonus)
வேணாம்பா'
எப்படி இருந்திருக்கும் இவருக்கு. அப்போதுதான் அவர் வேலை பார்த்த பெரிய 'கார்'க் கம்பனியில்
டாப் போஸ்ட் கிடைத்து இருந்தது'
அனேகமாக இவரைத் தெரிந்தவர்கள் நிறைய வரப் போக
இருப்பார்கள்.
கடையை விட்டு வெளியில் போய் ஜீப்பில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.
கடைக்காரர் முகத்தில் ஒரு knowing Smile.
அப்புறம் எங்க சமாதானக் கொடி பறக்க 10 நாளாச்சு.
இப்போ நினைப்பைப் பார்க்கலாம்.
'செண்டி,செமி' இது குடும்பத்தில் எனக்கு
உள்ள பட்டம்.
குளிர், திருட்டு பயம் வாசலில் கோலம் விடிஞ்சப்புறம் போடலாம்னால்,
சூரியன் உதிக்கும் போது அவர் முதலில் எங்க வீட்டுக்குத் தான் வருவதாக நினைத்துக் கொண்டு
கோலம் போடுவது.
பயம் இல்லாமல் இல்லை. அப்படித்தான் ஒரு தரம்,
கோலம் போட்டு நிமிர்ந்தால் யாரோ கருப்புப் போர்வை போத்திக் கொண்டு ஒரு ஒருவம்.
அம்மானு கரகர குரல்.
அடுத்த நிமிடம் கோலமாவு டப்பா கீழே.
செம்மண்ணில் காலை வைத்து வழுக்கி நானும் கீழே....
போச்சு!கால் உடஞ்சாச்சு,அவன் வர்ப் போறான். இன்னிக்குப் பாத்து சங்கிலி வேற கழட்டலை.
'அய்யாய்யோ ஆபத்து ஆபத்துனு'கத்த நான் என்ன மதுரை வீரன் ஈ.வி.சரோஜாவா!
'அய்ய அம்மா உழுந்திட்டீங்களெ, 'நாந்தான் கரும்பெடுத்து வந்தேமா. செல்வம்னு ' அவன்
போர்வையைக் களைய ,படபடப்புக் குறைந்து
தத்தி தத்தி உள்ள வந்தேன்.
எண்ணம்னு பார்க்கப் போனால்
விபரீதமாகத் தான் எல்லாம் தோன்றும்.மூடநம்பிக்கை கிடையாது.:-) சிம்பிள் டிடக்ஷனில் இது நடந்தால் அதுவரும். அந்த மாதிரி.
போன் அடிக்கும்போதே இவர்தான் கூப்பிடுகிறார்
என்று சொல்வேன்.
ஒரு பாட்டுக் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும்
ரேடியோவைப் போட்டால் அந்தப் பாட்டு வரும்.
இதுக்கெல்லாம் சமாதானங்களும் உண்டு தெரியும்.
இருந்தாலும் நமக்குத் தனி பவர் இருக்கு
என்று நம்புவதில் எனக்கு ஒரு திருப்தி.
காக்கா கத்தினால் விருந்தாளி உண்டு.
தென்னைமரக் கீற்று ஒரு மாதிரி ஆடினால் எங்கிருந்தோ நாகைப் புயல் வர சாத்தியக் கூறுகள் உண்டு.
கடல்பக்கம் போய் நின்றால் ஆனந்தம் ,துக்கம் இரண்டும் வரும்.
ரயில் பயணங்களில் ஜன்னலோரத்தில்
உட்காரும்போது அந்தத்தாளம் என் பாட்டிற்கு இசைவதாகவும்
தோன்றும். இன்னும் நிறைய கோளாறுகள் உண்டு.
வயசாயிடுச்சு இல்லையா. தெளிந்துவிட்டேன்.
மறந்தும் விட்டேன்.:-0)
நான் 'வியர்டூ' பற்றி எழுத அழைக்கும் நபர்கள்
தேசிகன்,
துளசிகோபால்,
தி.ரா.ச,
கீதா சாம்பசிவம்,
பிரேமலதா
கண்டிப்பாக நல்லாவே சொல்லுவார்கள்
.
ஐய்யொ இல்லைப்பா நான் யாரையும் weirdu னு சொல்லலை.
வந்து எழுதினால் நல்லா இருக்கும்.
டிஸ்கியும் போட்டுடலாம்.
எழுத வது ஒரே வருடம் ஆவதாலும், கோர்வையாக எழுதத் தெரியாத அரகுறை நினைப்பினாலும்
இந்தப் பதிவு எப்படி வந்திருந்தாலும்
நீங்க எல்லாரும் நல்லா இருக்குனு மட்டும் சொல்லிடுங்க.:-)


Sunday, March 18, 2007

சித்திர ராமன்.....12...சுந்தரகாண்டம்...3 லங்காப் பிரவேசம்











ஸ்ரீராம நாமம் சுவாசித்த வண்ணம், அனுமன் இலங்கையை லம்ப மலைச் சிகரத்திலிருந்து பார்க்கிறான்.
இரவு, முழுநிலா நிலா வெளிச்சத்தில்
அலங்காரம் நிறைந்த மணப் பெண் போல இருக்கிறதாம் இந்த நகர்.
இத்தனை அழகான நகரைக் கட்டி ஆளுபவன் பலசாலி.
ஆனால் புத்தி இல்லாதவன்.
இருந்தால் சீதை என்னும் கற்புக்கரசியை மனசாலே
துன்புறுத்தி இருப்பானா?
இவ்வாறு நினைத்து மதில் சூழ் இலங்கையின் வாயிலை
அடைகிறான்.
இலங்கையின் காவல் தெய்வம் லங்கிணி
வருகிறாள்.



உருவத்தில் சிறியவனாக இருந்த அனுமனைக் கண்டு ஆத்திரம் அடைகிறாள்.
'ஏ,குரங்கே உனக்கு ராவணனின் பட்டணத்தில் என்ன வேலை.'
என்று துரத்துகிறாள்.
அனுமன் பவ்யமாகப் பதில் சொல்லியும் ஏற்காமல்
அவனைத் தாக்க வருகிறாள்.
எஜமான விஸ்வாசம்.
அனுமன் அவள் பெண்ணாயிற்றே என்று இரக்கப் பட்டுத்,தனது இடது முஷ்டியால் சற்றே இடிக்கிறான்.
அந்த வலி கூடத் தாங்கமுடியாத லங்கிணி வந்திருப்பது சாதாரணக் குரங்கு அல்ல ,
பிரம்மா இலங்கை நிர்மாணத்தின் போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
''ஒருவானரம் உன் முன் தோன்றி உன்னனத் தாக்கும்போது இலங்கைக்கு அழிவு''என்று சொன்னதைப் புரிந்துகொண்டு
அவனுக்கு வழிவிட்டுச் செல்கிறாள்.
மறுபடியும் ராமநாமத்தைச் சொல்லிய வண்ணம்,
இலங்கைக்குள் புகுகிறான் அனுமன்.
எங்கும் ஆனந்தமும் அழகும் கூத்தாடுகிறது
இலங்கையில். ஆடவர் பெண்டிர் குழந்தைகள் அனைவரும் அவர் அவர்களுக்கு உண்டான கேளிக்கைகளில்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
நடனம்,இசை, நாடகம் என்று பல வேறு விதமான காட்சிகள்.வீரர்களும் மக்களும் கலந்து நடமாடிக் க்ஒண்டு இருக்கிறார்கள்.
மொத்தத்தில்
சுபிக்ஷத்திற்குக் குறைவே இல்லை.
எல்லாவற்றையும் ,தன் சின்ன வடிவில் இருந்துகொண்டே ப்ஆர்த்தவண்ணம் ராவணின் அரண்மனையை அடைகிறான்
அனுமம்.
பிரமிக்க வைக்கும் ம்அதில் சுவர்கள்.
ஒளி பொழியும் சாரளங்கள். மனததக் கவரும் உணவு மனம். மது,மாது என்று ஆரவாரமாக இருக்கிறது.
அங்கே யாருமெ மன விருப்பம் இல்லாமல் தனித்திருப்பதாகத் தெரியவில்லை.
எல்லாருமே ராவணனிடத்தில் பரிவு,விச்வாசம் உள்ளவர்களாக
செல்வச் செழிப்புடன் அதீத சந்தோஷத்தோடு காணப் படுகிறார்கள்.
மெல்ல ராவணின் அந்தப் புரம் நுழையும் அனுமனின் கண்களில் படுவது,
அங்கு துயிலிம் பெண்டிர் கூட்டம்தான்.
அவனோ நைஷ்டிகப் பிரம்மச்சாரி.
இப்படிப் பெண்களைப் பார்ப்பது அவனது
விரதத்துக்குப் பங்கமோ எண்று ஒரு கணம் வருந்துகிறான்.
பிறகு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு ராமனை நினைத்த ஓரோரு இடமாகக் கடந்தவன் கண்களில் மிக அற்புத அழகோடு தூங்கும் ஒரு சௌந்தர்யம் மிகுந்த பெண்மணி
உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பதைப் பார்த்து ,
அவள்தான் சீதை என்று உற்சாகக் களிப்பில் ஆடுகிறான்.
சீதையின் சோகமும், பதிவிரத மேன்மையும் அவனைச் சட்டென்று நிலைக்குக் கொண்டு வருகின்றன.
''என்ன தவறு செய்ய இருந்தேன்.!!
என் அன்னை ஜானகி மாதா,அண்ணலை விட்டுப் பிரிந்திருக்கையில் இப்படி ஒரு சுகமான
படுக்கையில் அமைதியாகத் தூங்குவாளா?''
தவறிழைக்க இருந்தேனே' என்று பக்கத்தில் தென்படுகிறான் ராவணேஸ்வரன்.!
பத்துத்தலைகள்.
கம்பீரமான பெரிய உருவம். விசாலமான கட்டிலில் நித்திரை கொள்கிறான்.ஏவல் பெண்களும்,
விரும்பி ம்அணந்த உயர் லட்சணப் பத்மினி வகைப் பெண்கலும் அவனருகில் நித்திரை செய்கிறார்கள். அவர்கள் யாரும் கட்டயப் படுத்தி அங்கே கொண்டுவரப்பட்ட மாதிரி தெரியவில்லை.
இத்தனை பெயர்கள் இருக்க சீதையை
விரும்பினது இவனது அழிவுகாலம் ட்ஹான் எண்று முடிவுக் கட்டி,
வெளியே வருகிறான் மாருதி.
சோகம் அவனைச் சூழ்கிறது.
வீராப்புப் பேசி வந்தோமே. வந்து வெகுநேரமாகியும்
ஜானகியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையேஎ.
ஒருவேளை என் பயணம் வீணா.'
என்று கொஞ்ச நேரம் மனம் வருந்திச் சிந்திக்கிறான்.


ராம நாமாவே சமுத்திரத்தைத் தாண்டவைத்தது.சீதையிம் மகிமையே
நமக்குத் துணைவரும் என்ற அபரிமிதமான நம்பிக்கை மீண்டும் மனதில் உறுதி அளிக்க
எழுந்தான் அனுமன்.
முதலில் பார்வையிட்ட புஷ்பக விமானம் அருகே மீண்டும் சென்று தேடி,
தான் தேடாமல் விட்ட இடங்கள் ஏதாவது இருக்கிறதா
என்று பார்வையிட ஒரு உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று
பார்த்தான்.
அதோ தெரிகிறதே இன்னுமொரு வனம். என்ன வாசம்.என்ன அழகு. உயரம் கூடிய மலர்கள் நிறைந்த
மரங்கள். கொடிகள் ,நதிகள்.
பளிங்கு மண்டபங்கள். அரசர்கள் உலவுவதற்காகக்
கட்டப்பட்ட நந்தவனமோ.
அது ஏன் அரண்மனையை விட்டுத் தள்ளி இருக்கிறது.
ஒரு வேளை அன்னைஜானகி அங்கே இருப்பாளொ.?
இந்த எண்ணம் மனதில் தோன்றிய வேகத்தில் அனுமன்
னிடம் புது உற்சாகம்
பிறந்தது.
எப்போதுமே ஒரு நல்ல காரியத்தை எடுக்கும்போது தடைகள் வருவது சகஜமே.
அப்போதும் நம்பிக்கையைக் கைவிடாமல் மீண்டும் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு
எடுத்துக்காட்டு அனுமனின் உயரிய பயணம்.
மீண்டும் மீண்டும் அவனுக்குத் தடைகள்.
மன உறுதி படைத்தவன் அனுமன். இல்லாவிட்டால் சூரியனுக்கு முன்பு
பின்னோக்கி நகர்ந்தவாறே
பறந்துகொண்டு,அவன் சொல்லச்சொல்ல
ஒன்பது வகை இலக்கணங்கள்,வேதங்கள்
எல்லாவற்றையும் கற்றிருக்க முடியுமா.
அஞ்சாநெஞ்சன் அஞ்சனை மைந்தன்.
வாழ்வின் இலக்கு எது என்று தேடியவனின் கைகளில் கிடைத்தது ஸ்ரீராமபதம்.
அதைத் திண்ணமாகப் பிடித்தவன் விடாமல் முன்னேறுகிறான்.
மனம்,வாக்கு,கார்யம் அனைத்திலும் நேர்மை.
இயற்கையாகவே சொல்லின் செல்வன்.
நுணுக்க புத்திக் கூர்மை,
செயல் திறமை,
அவ்வளவு திறனையும் ராமனுக்கு அர்ப்பணித்ததால்
சகல வித மகிமையோடு மிளிர்கிறான்.
தேகம் முழுவதும் ராமநாம மகிமை பரவ
அசோகவனத்தை நோக்கிப் பாய்கிறான்.
தேடி வந்தத் தாயைக் காணப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில்
அவன் தாவும்
வழியில் உள்ள பெரிய பெரிய கிளகள் எல்லாம் புயல் காற்றில் அகப்பட்ட
சிறுகொடிகள் போல ஆடுகின்றன.
மலர்கள் உதிர்ந்து அனுமன் வருகிறான். சீதைக்கு நல்ல காலம் பிறந்து விட்டது
நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்ற சேதியைச் சொல்லியபடி மரத்தின்
அடியை நோக்கி மிதக்கின்றன.
முழுநிலா கூட இனிமேல் என்ன நடக்கும் என்று ஆவலுடன்
மேகத்துக்குள் போகாமல் பார்க்கிறதாம்!!
சிம்சுபா மரங்கள் நிறைந்த அசோகவனத்தை அடைகிறான் அனுமன்.
அங்கு ஒரு பளிங்கினால் ஆன மணி மண்டபம்.
அருகே ஒடும் சிறிய ஆறு ஒன்று.
அதை ஒட்டியபடி இன்னுமொரு சிம்சுபா மரம்.
அதன் கிளைகளில் தாவிய அனுமன் கீழே நோக்குகிறன்.
ஒரு உயரமான திண்ணை.
அதைச் சுற்றி அரக்கியர் கூட்டம்.
கொடூரமான தோற்றம்.
அவர்களுக்கு நடுவில் புலிகளுக்கு இடையில் அகப்பட்ட மானைப் போல தாயார் சீதா தேவி.
அவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும்.
ராமனிடம் கண்ட அதே சோகம், பொலிவில்லாத ஆனால்
மிக சாத்வீகப் பெருமை ஒளிரும் தேஜஸ் பொருந்திய முகம்.
சோர்வுற்று இருந்தாலும் வீரவிலாசம்,திண்மை தெரிகிறது.
சௌந்தரியமோ அளவிடமுடியாமல் அடக்கமாகத் தோன்றுகிறது.
அன்னையே,சீதா உன்னைக் கண்டேனா.
இது நீயாகத்தான் இருக்க வேண்டும்.
அனுமன் கூத்தாடுகிறான்.

அம்மா,உன் மேனியில் நாங்கள் (அன்று)கண்ட
ஆபரணங்கள் இல்லை. ராமன் இருக்கும் என்று சொன்ன
வளைகளும் இதோ இருந்த மரத்தின் கிளையில் தொங்குகிறது.
கணவனைப் பிரிந்த சோகமே
அவளைச் சேற்றில் மறைந்தும்
மறையாமலும் இருக்கும் தாமரை மலரின்மேல்
சேறு போல
போர்த்தி உள்ளது.
இவளெதான் சீதை!
என் தலைவனின் தலைவி என்று தெளிந்து, யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத தேவியின் தரிசனம்,
ராமனின் உயிரைத் தன்னில் வைத்திருப்பவளின்
தோற்றம் தன்முன் தெரிய ,கூப்பிய கைகளுடன் அனுமன் அமர்ந்தான்.






Saturday, March 17, 2007

நாராயணா! என்னும் திவ்ய நாமம்

















நாராயணன் கோவில் என்றதும் உடனே சரி, பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் சொன்னாங்க அது ஒரு குருவுக்காக எழுப்பபட்ட மந்திர் என்றார்கள்.
நமக்குத்தான் பம்பாய்க்கு மேலே போன வழக்கமே இல்லை.
கண்ஷாம் என்று வேறு போட்டு இருக்கிறது.
பிள்ளையார் கோவில் போலிருக்கிறது.
நல்லதாப் போச்சு ,இதெல்லாம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் இந்த நாரயண் மந்திர் பற்றிக் கேள்விப் பட்டதும்.
இன்று துளசி எழுதி இருப்பதைப் பார்த்ததும் தான்
ஆதியோடு அந்தமாக எல்லாம் புரிந்தது.
இந்தக் கோவிலில் என்னை ரொம்பக் கவர்ந்தது
இந்த ஹவேலிதான்.
கலாச்சார மையத்துக்கு அப்படிச் சொல்லுவார்களம்.
எனக்கு 'புனியாத்'' தொடர் ஹவேலிராம் ஒண்ணுதான் தெரியும்.:-0)
அதில் கூரையில் பதித்திருந்த
யானைகள் முகம்.!!
யானை என்பது குறிக்கும் தத்துவம் தான் என்ன.?
ஏன் அதற்கு இத்தனை முக்கியம்?
சாது, பெரிய உருவம், தும்பிக்கை,குட்டிக் கண்,
முறமான காது,தந்தம்
இவ்வளவுதானே.
ஏன் இந்த யானையப்பனைப் பார்க்கும்போது இத்தனை சந்தோஷமா இருக்கு.
நமக்கு முன்னாடியே டீச்சரம்மா
இந்தக் கோவில் தல புராணம் எல்லாத்தையும் சொல்லிட்டதாலே அவங்களோட பதிவுலக
நட்புக்கு இந்தப் பதிவு.
அப்புறமா எந்த வார்த்தை வேணா போட்டுக்கலாம்.
அர்ப்பணம்,வாழ்த்துக்கள் இப்படி......
படம் அத்தனையும் இணையத்தில இருந்து எடுத்தது.
அங்கே ' காமிரா நாட் அல்லௌட்'
இத்தாலியிலிருந்து பளிங்கு.
துருக்கியிலிருந்து லைம்ஸ்டோன்!
இதையெல்லாம் இந்தியாவுக்கு வரவழைச்சு,
அங்கே செதுக்கிக்,
கப்பலில் ஏற்றி, இங்கே கொண்டுவந்து
கட்டி இருக்காங்க சாமி.
எட்டு மாதங்கள் ஆச்சாம் கட்டி முடிக்க.
இந்த ஊருக்கு வரவங்க பார்க்க வேண்டிய முக்கியமான் இடம் இந்தக் கோவில்.





Thursday, March 15, 2007

சித்திரராமன்....11..சுந்தரகாண்டம் 2ஆவது பகுதி





























அஞ்சனா நந்தன் மற்ற வானரர்களோடு மகேந்திர மலைகளை அடையும் போது சம்பாதி எனும் கழுகரசனை சந்திக்கிறான்.



இவர் ஜடாயுவின் மூத்த சகோதரர்.


வானரர்களைக் கண்டு சேதி அறிந்ததும் ராவணனைப் பற்றியும் இலங்கை போகும் வழியையும் காட்டுகிறார்.



தன் தம்பியைக் கொன்றவனைப் பழி வாங்க உடலில் சக்தி இல்லையே என்று கோபம் பொங்குகிறது. ஆனாலும் அத்தனை சோகத்திலும்



அறிவு பிறழாமல் வழி சொல்கிறார்.



எத்தனை மகாத்மாக்களை ராமாயணம் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது!



எப்படியும் இருக்கலாம் என்கிற எண்ணத்தை வளர விடுவதே இல்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முறை, கட்டுப் பாடுகளை வரையறுத்து



வழிநடத்துகிறது. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அங்கதன் தலைமையில் ஆலொசனை நடக்கிறது.
எல்லா வானரங்களும் தங்களால் எத்தனை யோசனை
தாண்ட முடியும் என்று
தங்களையே சோதித்துக் கொள்ளுகிறார்கள்.
கடலின் அளவு நூறு யோசனை.
கடைசியில் கடைசியில்தான் அனுமன் வருகிறான்.
மகேந்திரமலை உச்சிக்கு எல்லோரும் போகிறார்கள்.
(இப்போது எங்கள் திருக்குறுங்குடியில் இருக்கும் அதே மகேந்திர மலைதான்.)
அங்கிருந்து ஸ்ரீராம நாம தியானத்தை ஆரம்பிக்கிறான்
அனுமன்.
சர்வ மருத்கணங்களையும்,ஐம்பூதங்களையும்,தேவர்களையும் தியானித்துத், தன் குரு கிருபையுடன் வெற்றிகிடைக்க வேண்டுகிறான் ஆஞ்சனேயன்.
!!ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராமா!!
ராமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்ற வேகம் கொண்டு,
,வல்லமை பொருந்திய வஜ்ரதேகத்துடன்
அனைவரும் பார்த்திருக்க ஒரு நூறு சூரியனுக்கு ஒப்பான தேஜஸுடன்
விண்ணை நோக்கிப் பாய்கிறான்,.
அனுமனின் வால் வீர விலாசத்தில் கொடிபோல் பறக்கிறது.
அவன் கால் ஊன்றிய வேகத்தில் மலையில் உள்ள பாறைகள் பொடியாகின்ற்ன.
கீழே வானர கோஷம் அவனைப் பின் தொடர்கிறது.
சீதையோடு திரும்புவேன் என்று சூளுரைத்து மேலும்
உயரத்தை எட்டுகிறான்.
அவனது வீர கர்ஜனையில் அலைகள் அலைக்கப் பட்டு எழும்பி விழுகின்றன.
கடலுக்கடியில் உள்ள திமிங்கலம் கூட ஆழத்திற்குப்
போகிறதாம்.
இப்படிப் பறக்கும் அனுமனை நோக்கிப் பொன் வண்ணம் கொண்ட மலைச் சிகரம் ஒன்று வானை நோக்கி எழுகிறது.
மைனாகம் என்ற பெயர் கொண்ட அந்த மலை
முற்காலத்தில் இறக்கைகள் கொண்ட மலைகளில் ஒன்றாக இருந்தது.
மலைகளுக்கு இறக்கை?
ஆராய வேண்டிய விஷயம்தான்.
மலைகள் உற்சாகமாகப் பறந்துக் கண்ட இடங்களில் இறங்கிய வேகத்தில் ,
உயிரினங்கள் பாதிக்கப் படுவதைக் கண்டு தேவேந்திரன் அவைகளின் இறக்கைகளை வெட்டிவிட்டானம்.
அவன் ஆயுதத்துக்குப் பயந்து ,வாயுவின் உதவியை
மைனாகம் நாட அவன் இந்த மலையைக்
கடலுக்கடியில் கொண்டு சேர்த்தானாம்.
அனுமன் வாயுவின் மைந்தன் அல்லவா,.
ராம காரியமாகப் போகும் அவனைப் பார்க்கவும்,
தேவ கோஷங்கள்,வானரர்களின் இறைச்சல் இவையெல்லாம் காதில் விழ உடனே வாயுமைந்தனுக்கு உதவி செய்யவும் மைனாகம் கடலின் மேல் மட்டத்திற்கு வருகிறது.
மாருதிக்கு இது ஒரு தடை என்று தோன்ற தன்
தோளால் அதைத் தடுக்கிறான்.
உடனே மைனாகம் மனித உருக் கொண்டு அவனை இனிய சொற்களால் விளித்துத் தன் கதையைச் சொல்லி
அவனை உபசரிக்கிறது.
தான் போகும் வேகத்தைக் குறைக்காமல், மீண்டு வரும்போது உபசாரங்களை ஏற்றுக்கொள்வதாகக்
கனிவோடு மைனாகத்தைத் தட்டிக் கொடுத்து
விரைகிறான் வாயுமைந்தன்.
//மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார்
கருமமே கண்ணாயினார்//
என்றெல்லாம் படித்தது அனுமனின் கடல்
தாண்டும் படலம் படிக்கும் ஒவ்வொருதடவையும் நினைவுக்கு வரும்.
என்ன ஒரு விவேகம்.
இந்திரியக் கட்டுப்பாடு, சொல்லாண்மை நம் அனுமனுக்கு.
மீண்டும் பயணத்தைத் தொடரும் மாருதி இன்னும் மேலே எழும்புகிறான்,.
புவி ஈர்ப்புக்குமேலே போய் விட முயற்சிக்கையில் யாரோ தன்னைத் தடுக்க எழுவதைப் பார்க்கிறான்.
அவள் பெயர் சுரசா.
தேவர்களால் அனுமனைச் சோதிக்க அனுப்பப் பட்டவள்.
கடலில் பரந்து நிர்கும் அவளினுருவத்தைப் பார்த்த அனுமன் வீண் சண்டை வேண்டாமென்று தான் பயணிக்கும் நோக்கத்தை எடுத்துச் சொல்ல அவள் அதை எதிர்த்துத் தன் வாயில் அவன் தன் உணவாக நுழைய வேண்டும் என்று கட்டளையிட,
நுணுக்கமாகத் தன் உடலைச் சுருக்கி அவள் வாயில் புகுந்து காதுத் துவாரம் வழியே வெளி வருகிறான் வீர ஆஞ்சனேயன்.
சுய உருவெடுத்து அவனைப் பாராட்டும் சுரசை எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறாள்.
ஒரு நல்ல வேலைக்கு எத்தனை தடை வந்தாலும் எப்படி , கருத்தோடு, எண்ணிய வெல்லாம்
துணிந்து முடிக்க வேண்டும் என்று நமக்கு உரைக்க அனுமனைத் தவிர வேறுயார்.?
இன்னும் மேலே உயரத்துக்குத் தாவும் மாருதியின் நிழலைப் பற்றி இழுக்கிறாள் ஸிம்ஹிகை.
இந்த அரக்கியைப் பற்றி ஏற்கனவே சுக்ரீவன் அனுமனுக்கு எச்சரித்து இருப்பதால்,
நிதானிக்கும் அனுமன் அவளைக் கடக்கச் செத முயற்சி வீணாக,
மீண்டும் தன் உருவத்தைச் சுருக்கி,
அவள் இதயத்தில் பாய்ந்து உயிரை மாய்க்கிறான்.
அரக்கியிம் மாபெரும் உருவம் கடலில் வீழ்கிறது.
வெற்றியுடன் எழும் அனுமன்
ஸ்ரீராம சீதாராமனின் நாமப் பிரபாவத்தை எண்ணிய வண்ணம் கடலின் கரையைக் கான்கிறான்.
அழகான இலங்கைத் தீவு கண்ணில் பட அதன் முக்கிய சிகரங்களில் ஒன்றான லம்ப மலையில் காலைப் பதித்துக்
கீழே இறங்குகிறான் ஆஞ்சனேய சூரன்.
இராவணின் அழிவை எண்ணி இடது காலை முன்னே வைப்பதாகப் பாடல்வரிகள் அமைகின்றன.
அனுமன் அடி போற்றி.
சீதாராமனுக்கு ஜயம். வந்தனம்.








Tuesday, March 13, 2007

யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?






மரியாதைக்காக நாம்
சில பல வேளைகளில் சில பல சொற்களைக் கேட்கிறோம்,அதன்படி நடக்கிறொம், செய்கிறொம்.

சின்ன வயதில் பெற்றோர் வாக்குக்கு உடன் பட்டாலும்
சில சமயம் மறுப்பதும் உண்டு.

அதே நாம் ,நமது குழந்தைகளைப் பார்த்து
அறிவுரை இனாமாக, இலவசமாகக் கொடுக்கிறொம்

அவர்கள் 60 சதவிகிதம் காதில் வாங்கி, 40 சத்ிகிதம் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்னால் இதேதான் நடந்தது.
இப்போதும் இதேதான் நடக்கிறது

அப்போதும் திருமணம் முடியும் வரை தாய்,தந்தையரை

நம் முதல் அட்வைசர்ஸ் ஆக வைத்து இருப்போம்.
நமக்கு ஏதுவாக இருப்பதை எடுத்துக் கொள்வோம்.

திருமணம் முடிந்த பிறகு கணவர்
சொல்வது வேதவாக்கு.
அது பிறந்த வீட்டு வார்த்தைகள் பாணியில்இருக்காது.
இருந்தாலும் சொல்வது கணவர் இல்லியா.
அதனால் அதுபடி நாம நடக்கணும்.

நாம்,

'எங்க 'வீட்டிலெல்லாம் இப்படித்தானப்பா என்று அம்மா அப்பாவிடமே கதை அளக்கும் போது
அவர்களும் சிரித்துக் கொள்வார்கள்.

இங்கே சுருதி எப்போது குறையும் தெரியுமா.
பெண் வந்து புகுந்த வீட்டு சிறப்புகளை அள்ளி விடும்போது மகிழத்தெரிந்தவர்களுக்கு,

தன் வீட்டுப் பையன்கள் தங்கள் மாமனார் வீட்டுக்கு
அடிக்கடி போனாலோ,
அந்த மாமியார் சமையல் திறனை எடுத்துப்
பேசினால் வீட்டில் ஒரு சங்கடம் வந்து விடும்.

ஒண்ணுமே உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம்
அம்மாக்காரிக்கு சிணுசிணூப்புக் காட்ட
வேண்டி இருக்கும்.

சாதாரணமாக இருக்கும் பையனும் அம்மா முகத்தைப் பார்த்து, அம்மாவுக்குப் பிடித்ததையே பேசுவான்.
அதில் சில சமயம் பொய்யும் சொல்லி மாட்டிக்
கொள்ளுவான்.:-))
அம்மா கேட்கும் கிராஸ் கேள்விகளில் மாட்டிக்காதவங்க யாரு.
இதோ நம் மெரினா சாரின் ஊர்வம்பு நாடகத்திலிருந்து
சில வரிகள்..
''கணேசன்..........லலிதா பொறந்தாத்துக்குப் போறென்னு சொல்லறா.
'அம்மா----ஏண்டா அவள் ஒருமாசம் போனா குழந்தை படிப்பு என்னா ஆறது. '
'அந்த ஊரு அழுக்குத் தண்ணியும்,ரோடு புழுதியும் அவனுக்கு ஒத்துக்காது.
அதுக்குத்தான் சொல்லறேன்.
அப்புறம் உன்பாடு அவள்பாடு. ''

காட்சி மாறுகிறது. கணேசனும் தர்மபத்தினியும்
லலிதா, ''எனக்கு ஒரே ஓச்சலா இருக்கு.
நான் வாயைத்திரந்து ஒரு வார்த்தை உங்ககிட்ட சொல்லலை.//
அப்பா ஊருக்குப் போகும்போது நானும் போயி 2 வாரம் இருந்துட்டு வரேனே. ''
கணேசன்.........''.அத்தை சுரேஷ் படிப்பு கெட்டுடும்னு சொல்லறா// ''
லலி.......''ஆமாம் சொன்னாள். அவளுக்கு நான் ஊருக்குப் போனா பிடிக்குமா ஏதாவது சாக்கைச் சொல்லி நிறுத்தப் பாக்கிறா..// ''
கணே...''அவளுக்கு சுரேஷப் பத்திதான் கவலை// ''
லலி... //''ஆம்மாம் அவ்ன காலெஜ் படிக்கிறான்!!

அத்தை சொல்லறதைக் கிளி போலச் சொல்லுங்க.
நான் இங்கேயே உழைச்சு உழைச்சு துரும்பாப் போறேன்.''(கண்ணைக் கசக்குகிறாள்)
கணேசன் தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
இந்தப் ப்ரச்சினை எல்லா வீட்டிலும் இருக்கிறதுதானே. :-0)


எனக்குத் தெரிந்த ஒரு தோழி மிக்க கலகலப்புடன் இருப்பவள். பாட்டு,சித்திரம்,பக்தி எல்லாம்
ஒரே ஈடுபாடு.
ஆனால் மருமகள் வந்தபோது, மாமியார்-மருமகள்
ஹனிமூன்
பீரியட் என்பது இரண்டு வாரங்கள் தான் நீடித்தது.

வந்த மருமகள் உடனே ஆஸ்திரேலியாவுக்கு,
கணவனுடன்
கிளம்பிவிட்டாள்.
அங்கே ஏர்போர்ட்டில் மகனை இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பார்க்க முடியாத சோகத்தோடு என் தோழி.
பெற்றோரை விட்டுக் கிளம்பும் மனைவி கண்ணீரோடு இருப்பதைப் பார்த்த மகன் அம்மாவை அம்போனு விட்டு மனைவியைச் சமாதனப்படுத்தப்

போய் விட்டான்.

நான் கூட இருந்ததால் தோழியின் முக மாறுதலைப் பார்க்க முடிந்தது.
மகன் ஊருக்குப் போற சோகத்தைவிட , மருமகளை அணைத்து அவன் ஆறுதல் சொல்வது இவளுக்கு
மஹா கஷ்டமாகி விட்டது.
ஏர்போர்ட்டில இருக்கிறவர்கள் எல்லாம் அவனுடைய ப்ஃஇசிகல் டெமான்ஸ்டிரஷனைப் பார்ப்பதாக அனுமானித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

பெண்களுக்கு சூட்டிகை ஜாஸ்தி.

மாமியாரை எட்டிப் பார்த்த மருமகளும் ,'கொஞ்சம் தள்ளிப்
போங்கொ ' உங்க அம்மாவுக்கு பிபி ஏறுகிறது' என்று திருப்பி விட்டாள்.

அன்று ஆரம்பித்த பனிப்போர் இன்னும் தொடருகிறது.

மகனோ மாப்பிள்ளையோ,மகளொ, மருமகளொ
எல்லோரிடமும் முழுமனசுடன் அன்பைக் கொடு என்று சொல்ல முடியாது.
அதே போல நாமும் அவர்களிடம் மொத்த அன்பையும்
--கேள்வி கேட்காமல் செலுத்தினால் ஒரு வேளை

சந்தோஷமும், அமைதியும் திரும்பும் என்று நினைக்கிறேன்
உங்க அனுபவம் எப்படி??
நானும் மாமியார் தான்.
எனக்கும் நிறைய ஆவலாதி உண்டு.

யாருக்குக் கேக்க நேரம் இருக்கு/
யார் சொல்லி யாரு கேக்கறது?

Sunday, March 11, 2007

THE QUEEN......படம் பார்த்த கதை

அமெரிக்கா வந்ததிலிருந்து வேறு ஒரு முனைப்பே இல்லாமல் ராப்பகல் காத்து கண்விழித்து


வேலை வேலை என்று உழைத்து இதோ நாலு மாதமும் ஆச்சு.
ஒரு சினிமா உண்டா, ஒரு பைத்தியக்கார டிராமா உண்டா
ஒரு பொதிகை சானல் உண்டா, சுடச்சுட குபீர் சேதிகள் கொடுக்க தமிழ் சூரியன் தான் உண்டா என்று புலம்புவது
எப்படியோ:-) என் பெண்ணின் காதில் விழுந்துவிட்டது.!!
ராமச்சந்திரா புலம்பாதெயேன்.'
இது அவள்.
குளிர்ல வாக்கிங் போக முடியலை, எனக்காவது கார்பெண்ட்ரி,கார் ரிபேர்,
கராஜ் ஒழிக்கிறது இப்படி பொழுது போறது.
அம்மா பாவம்:-( இது எங்க சிங்கம்.
அடப்பாவி மன்னாரே!
சென்னைலே மூலைக்கு மூலை சபா. சத்யம் பக்கத்தில இருக்கு.ஏதோ ஒரே ஒரு படம் போகலாம்னா,
''lost interest in movies ma.
take muniyammaa and go.''
எனக்கு அந்த சத்தம் ஒத்துக்கலை.''
இப்படிச் சொல்லிக் கழுத்தை அறுப்பவர்,இங்கே
வந்து பெண்ணு கிட்டே சிபாரிசு செய்கிறார் என்று
ரோசமாக இருந்தாலும்,
படம் எதாவது ஒன்று பார்க்க வேண்டும்.
அதுவும் பாப் கார்ன் சாப்பிட்டுக் கொண்டு பார்க்கணும் என்ற ஆசை
தீவிரமானது.
ஆச்சு. ஆஸ்கார் நைட்.
ரெட் கார்பெட். ஏதோ நடுவில பாப்பாவும் அழாம, சமையலும் ஒரு மிளகுரசம், சுக்கினி கூட்டு,சலாட்
என்று முடிவாகிச் செய்துவிட்டு
என் அரசாங்கத்திலிருந்து இருபதடி தள்ளி இருக்கும்
டிவி பக்கத்தில் வந்து உட்கார்ந்து விட்டேன்.
அடடா, இப்படிக்கூட இன்னோரு உலகமா ஆஆ
என்று லயித்துப் பார்க்கும்போது இந்த ஹெலன் மிர்ரன் அம்மா வந்தாங்க.
கொஞ்சம் வெள்ளைத்தலையா இருக்கே
ஒரு வேளை ஹீரோயினியோட அம்மாவோ
என்று பெண்ணைப் பார்த்து கேட்க,
ஆஸ்கார் நாமினிம்மா இவர்.
ஒப்ரா ஷோ ல கூட வந்தாங்களே.
''ஓ நீ அதைப் பார்க்கலியா. சரி சரி, இவங்க க்வீன் படத்தில ராணி எலிசபெத்தா வந்து இருக்காங்க.
செலக்ட் ஆவாங்களொ என்னவோ''
சட்டுனு பேச்சைத் திசை மாற்றி மேலெ பார்க்க
ஆரம்பித்தோம்.
எல்லென் என்கிற பெண் ஆஸ்கார் நிகழ்ச்சியைப் பிரமாதமாகத் தொகுத்து அளித்தார்.
ஒரு தொய்வு இல்லை. அவரே ஒரு தொலைக்காட்சி அமைப்பின் நடத்துனராம்.
ஆஸ்கார் முடிந்து பெஸ்ட் ஆக்டிரெஸ்
அவார்டும் இந்த ஹெலன் அம்மாவுக்குக் கிடைச்சு,
அடுத்த நாள் ஒப்ரா ஷொவிலயும் வந்துட்டாங்க.
இப்படி 61 வயதில உடம்பைச் சிக் னு வச்சுக்கிட்டு
ஒரு டிராமடிக் ரோல் வேற செய்து
ஆஸ்கார் வேறத் தட்டியாச்சு.
ஹ்ம்ம். எங்களுக்கெல்லாம் சான்ஸ் இருந்தா எங்கேயோ போயிருப்போம்.
எங்கே ஆசை,தாசில்,மாடு என்று நான் பழமொழிகள் உதிர்க்கும் முன்ன என் பெண் ''இந்தப் படம் நாம பர்க்கணும்ம்மா' என்று டிக்ளேர் செய்தாள்.
நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சா இருக்கேனு நான் முறைத்துக் கொண்டேன்.
எல்லாம் முகத்தில் காட்ட மாட்டேன்.
அன்னியன் மாதிரி உள்ள ஒரு குரல், வெளில ஒரு
குரல்.!:-)
ஆனால் பாருங்கள் ஒரு வெய்யில் அடிச்சுது நேற்று.
வீடே கலகலத்துப் போச்சு.!!
சுறுசுறுப்புன்னாச் சொல்லி மாளாது!
கார் சீக்கிரம் கிளம்பறது. கதவு சீக்கிரம் திறக்கிறது.
சமையல் சீக்கிரம் முடிகிறது.(கத்திரிக்காய் கலந்த சாதம்,வெங்காயப் பச்சடி, உருளை கொத்சு)
எல்லாம் ஆதித்தனோட பெருமை!
சனிக்கிழமையா வேற போச்சா.
மாப்பிள்ளை,மாமனாரோடு குடும்பத்தை மேய்ப்பதாகச் சொல்லவும், விட்டோம் சவாரி ..
ஏஎம்சி காம்ப்ளெக்ஸுக்கு.
ஆன்லைன்ல டிக்கெட் விலை அதிகம்.
நேரிலேயே வாங்கிக்கலாம் என்று பத்துமைல்கள் கடந்துவந்தோம்.
வரிசை நீளமோ.கைக்குக் கிடைச்சு வாய்க்குக் கிடைக்காதொ என்று பயம் வந்தது. ஏனெனில் பார்க்கிங் லாட் பூராவும் ஒரே கார்கள்மயம்.
அப்புறம் தெரிந்தது 20 தியெட்டர்கள் இருக்காம்.
நாங்க பார்க்க வந்த 'குவீனு'க்கு எகப்பட்ட இடம் காலியாக இருந்தது.
பாப்கார்ன், ப்ரெட்சல் சகிதம் உள்ளே வந்தாச்சு.
ஒரே நிசப்தம். எண்ணிப் பதினைந்து பேர் இருப்பார்கள்.



படமும் ஆரம்பித்தது.
இளவரசி டையனா விபத்துக்குள்ளாகி,
இறந்து அரச குடும்பம்
பிரச்சினையில் மூழ்கிய ,பத்துவருடங்களுக்கு முன்பு நடந்த கதை.
லேசா நம்ம ஊரு மாமியார்,மருமகள் சண்டைதான்.
ஆனால் இத்தனை அரசு கட்டுப்பாடுகள், விதிமுறைகள்,கணவனின் தப்பான போக்கு எல்லாவற்றையும் கணித்து ,அதையும் மீறி அந்தப் பெண்ணுக்கு இருந்த தைரியம் அசர வைக்கீறது.
ஏற்கனவே ' ஹர் ராயல் ஹைனெஸ்' பட்டத்தை இழந்துவிட்ட டயானா ,தன் காதலனுடன் வெளியில் சுற்றினாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, அதுவரை ஏகபோக கவனிப்பிலிருந்து விலக்கப் படுவது
யாருக்குமே கஷ்டம்தான்.
அதுவும் பரம்பரைக் கௌரவம், ரிஜிட் ரூல்ஸ்,
இறுக்கமான முகம் இதை ஒன்றுமே விட்டுக் கொடுக்காமல், எலிசபெத் மகராணி இதை எப்படிச் சமாளிப்பார் என்று நான் அப்போது வேடிக்கை பார்த்தேன். டிவியில்தான்.
இப்போது இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஹெலன் மிர்ரன்
அப்படியே அரச முகபாவத்தைக் கண் முன்னால் கொண்டுவந்துவிட்டார்,.
குற்றம் சொல்ல முடியாத நடிப்பு. இயல்பான
வலு இழந்த ராணியைக் காட்டி இருக்கும் முகம்.
'என் மக்களை நான் புரிந்து கொள்ளவில்லை'
என்று பிரதம மந்திரியிடம் ஒப்புக்கொள்ளும் விதம்
தனிமையில் ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து மறைந்த மருமகளுக்காக அழுவது.,அது தன்னிரக்கமாகவும்
இருக்கலாம்,
தன் அம்மா குவீன் மதரிடம் மனம் விட்டுப் பேசுவது,அசட்டுத்தனமாகப் பேசும் கனவனை ஒரு பார்வை பார்ப்பது, பேரன்களின் நலனில் ,யோசனையில் முகம் குவிவது,,
அத்தனையும் வெகு அழகாகக் காட்டி இருக்கிறார்.
இவரைத்தவிர டோனி ப்ளேறாக நடிக்கும்
மைக்கேல் ஷீனும், பிரின்ஸ் பிலிபாக ந்டிப்பவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.









நல்லதொரு படைப்பு.
தைரியமாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்துக்கான ரெவியூக்கள் இணையத்தில் நிறைந்திருக்கின்றன.
லின்க் இதோ.
THE QUEEN..
www.thequeenmovie.co.uk/