Blog Archive

Showing posts with label பாசல். Show all posts
Showing posts with label பாசல். Show all posts

Friday, August 28, 2009

மனதில் நிற்கும் காட்சிகள்

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்கா


ஒரு சர்ச்













போகும் பாதை .

சைக்கிள் கடை.






கல் பதித்த தெரு
ஒன்று.











பாலம் இரவு நேரத்தில் ,


இப்போது மழைக்காலம் சென்னையில். இனிமையாக இருக்கும் வீட்டினுள் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு.
இதே மழையின் போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டபாடும் இப்போது இனிமையாக இருக்கிறது.
மூன்று குழந்தைகளும் மூன்று பள்ளியில் படித்தார்கள்.
அதில் பெரியவனின் பள்ளிப் ஸ்கூல் பஸ் காலை 7 மணிக்கு வந்துவிடும்.
அதற்குள் சாப்பிடக் கொடுத்து கையிலும் டிபன் பாக்ஸ் கொடுக்க வேண்டும்.
அடுத்தவண்டி பெண். அடுத்தாற்போல் சின்னவன்.
மழையில் ஒவ்வொருவரையும் அவரவர் வண்டி நிற்கும் இடத்திற்குக் குடையையும் பிடித்துக் கொண்டு, குழந்த கையையும் பிடித்துக் கொண்டு போவது, இல்லாத ப்ளாட்ஃபார்மில் நடந்து, பஸ்ஸில் வழுக்காமல் ஏறுகிறதா என்று பார்த்துவிட்டு
கையில் குடை பறக்க, (அந்தக் குடை மேல்நோக்கித்தான் பார்க்கும்:) )
எதிர்த்தாற்போல் இருக்கும் ராமதூதனையும் கண்டுகொண்டு,
வீட்டிற்குத் திரும்பினால்,
பெரியவர்களின் வேலைகள் காத்து இருக்கும்.
அசை போட வைத்த மழைக்கும் நன்றி.
கூடவே சூடு பறக்கும் வேர்க்கடலை வாசமும்,
தொலைக்காட்சி இல்லாத புத்தக நாட்களானதால்,
வானொலியில் நல்ல பாடல்களும்,
கைகளில் புத்தகமுமாகக் கழிந்த வருடங்கள் ஒரு ஐந்து எண்ணம் இருக்குமா:)
படங்கள் இல்லாமல் பதிவு போட மனமில்லை.
ஸ்விட்சர்லாண்ட் காட்சிகளை,
மகன் இருக்கும் ''பாசில் ''பேட்டையைப் படங்களால் நினைவு கொள்கிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.