Showing posts with label யானை. Show all posts
Showing posts with label யானை. Show all posts

Tuesday, October 21, 2008

மரச் சிற்பக் கண்காட்சி

மரத்திலிருந்து வெளிப்பட்ட அதிசயங்கள் இவைகள் எல்லாம். இவர்களுக்கு உதவியாக அத்தனை உபகரணங்கள் இருந்தாலும் இந்த நுணுக்கமான கலையை வெளிக்கொண்டுவரும் திறமையை எப்படி விவரிப்பது!!

இது எனக்குத் தெரிந்தவரையில் ஒரு பௌத்தமத குரு.க்வான்யின் என்னும் பெயர் படைத்த தேவதை. நம் ஊரில் தன்வந்திரி தேவதையை மருத்துவத்திற்காகக் குறிப்பிடுவார்கள் இல்லையா. இந்த அம்மாவுக்குக் கருணையே உருவம் படைத்தவள் என்ற துணைப்பெயரும் உண்டு.


மற்றச் சிற்பங்கள். தத்ரூபமாகச் செதுக்கியவர்களும் பக்கத்திலியே இருந்தார்கள்.





பயணத்துக்கு முன் ஓய்வெடுக்கும் குதிரை.






மரப்பலகையிலிருந்து வெளிப்படும் கரடி ஓவியம்.







நடனத்துக்குப் புறப்படும் இளவரசி என்று வரைந்த அம்மா சொன்னார்.








காற்றில் அசைந்து ஓசை செய்யும் சிறிய மர பொம்மைகள்.









செதுக்கப்பட்ட வீடு,மற்றும் மரக்கைத்தடிகள்.










இந்தப் பெண்குழந்தை பிடித்திருப்பது பொம்மையா,தம்பியா,தங்கையா, கூர்ந்து பார்க்க , ஆக்கியவர் மறுத்துவிட்டார்:)
முந்தைய பதிவில் போட்டிருந்த படம் ஒரு யானையின் பல்.
அதுவும் கடைவாய்ப்ப்பல்.
எங்கள் தந்தை முதுமலைக் காடுகளில் உள்ள தபால் அலுவலக விஷயமாகப் போயிருந்தபோது வாங்கி வந்த யானைப்பல்.
அம்மாவிற்கு முதல் முதலாக வாங்கிய தோல் பெட்டியில் இதுவும், ஒரு குட்டித் தந்தமும், ஒரு ஏலக்காய்ப் பையும் வெகு நாட்கள் இருந்தன.
எங்கள் சின்ன வயதில் ,இந்தப் பெட்டியைத் திறந்து வாசனை பிடிக்க எங்கள் மூவருக்கும் மிகப் பிடிக்கும்.
இங்க இருக்கும் பெண் சாமர்த்தியமாகத் தாத்தாவிடமிருந்து கேட்டு வாங்கி வந்துவிட்டாள்.:)
எத்தனையோ தடவை,
எங்கள் பல்வலிக்கு இந்தப் பல் உதவி இருக்கிறது. இதை ஒரு கலுவத்தில் அரைத்து,அந்த விழுதை அம்மா பல்லில் தடவி விடுவார்.
மரப்பாச்சி பொம்மையை உரைத்துக் கண்ணுக்குத் தடவுவார்.
தேங்காயெண்ணெயைக் காய்ச்சி,அதில் ஒரு பல் பூண்டைப் போட்டு,அதை நசுக்கிய சாறு காதுவலிக்குப் பயன்படும்.

























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...