Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts
Thursday, July 01, 2010
Thursday, April 09, 2009
415,தம்பியின் கவிதைகள்
பின்ன நிற்குமா காலம்:)
தம்பி ரங்கன் பாட்டுகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்.
அதில் கொஞ்சமே தத்துவமும் சோகமும் இழையோடும்போது,
வேண்டாண்டா.
சந்தோஷமா எழுது.
என்று புத்தி சொல்லுவேன். நமக்குத்தான் புத்தி சொல்வது மிகவும் பிடித்த விஷயமாச்சே.
அவன் ஒருவன் வசமாக மாட்டிக் கொள்வான். ஆம் ஆமா... என்று தலையாட்டிவிட்டு, மீண்டும் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்று பாட ஆரம்பிப்பான்.:)
போடா ஒன்னை ஒண்ணும் திருத்த முடியாது என்று விடுவேன்.
ஆனால் ஒன்று,, பாட்டில் தான் சோகம் காட்டுவான். உண்மையில் அவன் அலுவலகத்தில் அவனை அவனுக்கு சிரிப்பு (கடி)மன்னன் என்றே பெயர்.
அவனுக்கு இந்தப் பதிவு சம்ர்ப்பணம்.
இதோ அவன் பாட்டு.
********************************
பாட்டு ஒன்று எழுத முற்பட்டேன்..
பாட்டில் இலக்கணம் தேவை என்றனர்
யாப்பு இலக்கணம் கற்க முற்பட்டேன்
மூப்பெனக்கு இலக்கணமிட்டது..தெரிந்தது
கருத்தோடு கவிதை எழுத
கவிதையில் இனிமை இல்லை.
சீர் அமைத்து எழுதச்
சீராக அதில் ஏதுமில்லை.
புதுக்கவிதை புனையலாம் என்றால்
எழுந்தது அதிலும் குழப்பங்கள்
ஆசையின் விளைவில் எழுந்த நினைவுகளில்
ஓசையின் இனிமை ஒதுங்கியது
கவிஞனின் கருத்துக்கும் இலக்கணம் தேவை
அவன் எழுத்துக்கும் இலக்கணம் தேவை.
கருத்துக்கும் எழுத்துக்கும் இசை அமைந்தால்
கவிஞனின் தமிழுக்கு இயல் மகுடம்!!
பாடல்..
நா.ரங்கன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

