வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
எதிர்பாராமல் நடந்தது 7
மாலாவும் கோகிலாவும் உள்ளே அறைக்குள்
ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சின்னவள் மாமி,அம்மாக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் தொந்தரவு இல்லை.
மாலா உனக்கு மாதவனைப் பிடித்து இருக்கு தானே. ஒரே கண்ஜாடையும் ,புன்னகையும் அந்த வராந்தாவே ஜகஜ்ஜோதியாக
இருந்ததே."
" ம்ம்ம்ம். இருக்கும் இருக்கும். இந்த மாதிரி கலகலப்பில்லாத பசங்களோட நமக்கு
ஒத்துவராதுமா என்றவளைப் பார்த்து கோகிலா அவர் உடன் வந்த பிரசாத் நல்ல ஜோக் சொல்கிறார்.
இல்ல?
ஓஹோ அப்படிப் போகிறதா கதை.
அத்தை ஏ!!!!!!! இவளுக்கு ராஜேந்திரகுமாரின் எப்படியடி காதலிப்பது வேணுமாம்."
என்னடி சொல்ற. இங்க வந்து பேசு என்று வந்தது அம்மாவின் குரல்.
மாலாவின் குரல் வெராந்தாவுக்குப் போய் விட்டது.
அந்த இளைஞர்கள் சிரித்து விட்டார்கள்.
கோகிலா பதிலுக்கு " காதலித்தால் போதுமா.... படிச்சியான்னு கேட்டாள்
அதுக்குப் பதில் சொன்னேன் மா.'"
பொன்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
உள்ளே வந்து இலைகள் போட்டுத் தண்ணீர் எடுத்து வையுங்கள். கெக்கே பிக்கேன்னு என்ன சிரிப்பு
என்றதும் இருவரும் உள்ளே சென்றனர்.
பலாப்பழம், சிறுமலைப் பழம், மாம்பழம் என்று கலவையாக ஒரு பெரிய பாத்திரத்தில் [பிட்டு மில்க்மெய்ட் டின்னிலிருந்து அவற்றில் கலக்க சொன்னால்.
அமைதியாக இருவரும் சொன்ன வேலையைச் செய்தார்கள்.
மோர்க்குழம்பும் , உருளைக்கிழங்கு பொடிமாஸும், வாழைக்காய் வறுவலும்
தக்காளி ரசமும் பிரமாதமாக அமைய,
உள்ளே பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய மாதவன் கண்களில் மாலா பட்டு மறைந்தாள்.
சென்னையில் அம்மா அப்பாவுடன் மழை, சாலைகளின் ரிப்பர் என்றதும், அவர்கள் தாமதமாக வந்தால் பரவாயில்லை. பத்திரமாக இரு என்று சொல்லிவிட்டு
பொன்னாவுடன் பேச ஆசைப் பட்டார்கள்.
பொன்னாவும் வந்தால். என்ன அண்ணா ,மாது பத்திரமா இருக்கான். நான்தான் அவனை இங்கே சாப்பிடச் சொன்னேன்.
அவன் விடுதிக்குப் போகும் வழி எல்லாம் வழுக்குகிறதாம். பால்காரர் சொன்னார்.
எப்படியாவது இரண்டு நாட்களில் வந்து விடுவான்.
கவலைப் படாதே என்றாள் .
சரிம்மா நீங்க எல்லோருமே வெளியில் செல்லாமல் பத்திரமாக இருங்கள். நான் ,அம்மா நாளை பேசுகிறோம் என்று வைத்து விட்டார்.
பசங்களா சாப்பிட வாருங்கோ என்றதும் உள்ளே வந்தவர்கள் கைகால்களைக் கழுவிக்கொண்டு , ,அத்தை,மாமி நீங்கள் உட்காருங்கள் நாங்கள் பரிமாறுகிறோம் என்றார்கள்.
அதெல்லாம் வேண்டாம்டா. உனக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா என்றாள்
பொன்னா . ம்ம். பாட்டியும் நானும் செய்வோம் என்றதும் சரி அப்படியே செய்யுங்கள், மாலா கோகிலா
அந்தப் பசங்களுக்கு எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னபடி வரதனின்
தங்கைகளும் , பொன்னாவும் , மாதுவின் இரண்டு தோழர்களும் தரையில் அமர்ந்தனர்.
பிரசாத் எதோ பாடலை முணுமுணுத்தபடி பழக்கலவையை ஒவ்வொருவர் இலையிலும் அளவாகப் பரிமாற
பொன்னா 'சத்தமா தான் பாடேன் .நாங்களும் கேட்கிறோம்."
கொஞ்சம் தயங்கினான் வீரன் 😄😄😄 பிரசாத்.
நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம் ,நீங்க பாடலாம்..என்று உத்தரவு போட்டாள் கோகிலா
அசந்து போய் விட்டார்கள் பெண்கள்.
ம்ம் . நல்ல சாய்ஸ் கோகி என்று காதில் சொன்னாள் மாலா.
மோர்க்குழம்பு, பொடேடோ யாருக்கு வேணும். என்ற படி வந்த மாதுவை நீயும் பா டலாமே என்றாள் மாலா.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சிரித்தபடி தயிர் கொண்டு வைத்துவிட்டு,
என்ன நாம் உட்காரலாமா என்று கேட்டான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து வானொலி கேட்க உட்கார்ந்தார்கள்.
மாது விடுதிக்கு ஃ போன்
செய்து ஆசிரியரிடம் பேசினான். மழை நின்றவுடன் ஜாக்கிரதையாக வரச் சொன்னார்.
அடுத்த நாள் பகலில் சாலைகள் சரியாகிவிடும். நாம் கிளம்பலாம். இரவு ரயிலில்
மதராஸ் கிளம்பலாம் என்றார்.
ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்தார்கள்.
பெரியவர்கள் ஓய்வெடுக்க ,பெண்களும் இளைஞர்களும் சினிமா புத்தகங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாலையும் வந்தது.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
எதிர்பாராமல் நடந்தது 7
மாலாவும் கோகிலாவும் உள்ளே அறைக்குள்
ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சின்னவள் மாமி,அம்மாக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் தொந்தரவு இல்லை.
மாலா உனக்கு மாதவனைப் பிடித்து இருக்கு தானே. ஒரே கண்ஜாடையும் ,புன்னகையும் அந்த வராந்தாவே ஜகஜ்ஜோதியாக
இருந்ததே."
" ம்ம்ம்ம். இருக்கும் இருக்கும். இந்த மாதிரி கலகலப்பில்லாத பசங்களோட நமக்கு
ஒத்துவராதுமா என்றவளைப் பார்த்து கோகிலா அவர் உடன் வந்த பிரசாத் நல்ல ஜோக் சொல்கிறார்.
இல்ல?
ஓஹோ அப்படிப் போகிறதா கதை.
அத்தை ஏ!!!!!!! இவளுக்கு ராஜேந்திரகுமாரின் எப்படியடி காதலிப்பது வேணுமாம்."
என்னடி சொல்ற. இங்க வந்து பேசு என்று வந்தது அம்மாவின் குரல்.
மாலாவின் குரல் வெராந்தாவுக்குப் போய் விட்டது.
அந்த இளைஞர்கள் சிரித்து விட்டார்கள்.
கோகிலா பதிலுக்கு " காதலித்தால் போதுமா.... படிச்சியான்னு கேட்டாள்
அதுக்குப் பதில் சொன்னேன் மா.'"
பொன்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
உள்ளே வந்து இலைகள் போட்டுத் தண்ணீர் எடுத்து வையுங்கள். கெக்கே பிக்கேன்னு என்ன சிரிப்பு
என்றதும் இருவரும் உள்ளே சென்றனர்.
பலாப்பழம், சிறுமலைப் பழம், மாம்பழம் என்று கலவையாக ஒரு பெரிய பாத்திரத்தில் [பிட்டு மில்க்மெய்ட் டின்னிலிருந்து அவற்றில் கலக்க சொன்னால்.
அமைதியாக இருவரும் சொன்ன வேலையைச் செய்தார்கள்.
மோர்க்குழம்பும் , உருளைக்கிழங்கு பொடிமாஸும், வாழைக்காய் வறுவலும்
தக்காளி ரசமும் பிரமாதமாக அமைய,
உள்ளே பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய மாதவன் கண்களில் மாலா பட்டு மறைந்தாள்.
சென்னையில் அம்மா அப்பாவுடன் மழை, சாலைகளின் ரிப்பர் என்றதும், அவர்கள் தாமதமாக வந்தால் பரவாயில்லை. பத்திரமாக இரு என்று சொல்லிவிட்டு
பொன்னாவுடன் பேச ஆசைப் பட்டார்கள்.
பொன்னாவும் வந்தால். என்ன அண்ணா ,மாது பத்திரமா இருக்கான். நான்தான் அவனை இங்கே சாப்பிடச் சொன்னேன்.
அவன் விடுதிக்குப் போகும் வழி எல்லாம் வழுக்குகிறதாம். பால்காரர் சொன்னார்.
எப்படியாவது இரண்டு நாட்களில் வந்து விடுவான்.
கவலைப் படாதே என்றாள் .
சரிம்மா நீங்க எல்லோருமே வெளியில் செல்லாமல் பத்திரமாக இருங்கள். நான் ,அம்மா நாளை பேசுகிறோம் என்று வைத்து விட்டார்.
பசங்களா சாப்பிட வாருங்கோ என்றதும் உள்ளே வந்தவர்கள் கைகால்களைக் கழுவிக்கொண்டு , ,அத்தை,மாமி நீங்கள் உட்காருங்கள் நாங்கள் பரிமாறுகிறோம் என்றார்கள்.
அதெல்லாம் வேண்டாம்டா. உனக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா என்றாள்
பொன்னா . ம்ம். பாட்டியும் நானும் செய்வோம் என்றதும் சரி அப்படியே செய்யுங்கள், மாலா கோகிலா
அந்தப் பசங்களுக்கு எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னபடி வரதனின்
தங்கைகளும் , பொன்னாவும் , மாதுவின் இரண்டு தோழர்களும் தரையில் அமர்ந்தனர்.
பிரசாத் எதோ பாடலை முணுமுணுத்தபடி பழக்கலவையை ஒவ்வொருவர் இலையிலும் அளவாகப் பரிமாற
பொன்னா 'சத்தமா தான் பாடேன் .நாங்களும் கேட்கிறோம்."
கொஞ்சம் தயங்கினான் வீரன் 😄😄😄 பிரசாத்.
நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம் ,நீங்க பாடலாம்..என்று உத்தரவு போட்டாள் கோகிலா
அசந்து போய் விட்டார்கள் பெண்கள்.
ம்ம் . நல்ல சாய்ஸ் கோகி என்று காதில் சொன்னாள் மாலா.
மோர்க்குழம்பு, பொடேடோ யாருக்கு வேணும். என்ற படி வந்த மாதுவை நீயும் பா டலாமே என்றாள் மாலா.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சிரித்தபடி தயிர் கொண்டு வைத்துவிட்டு,
என்ன நாம் உட்காரலாமா என்று கேட்டான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து வானொலி கேட்க உட்கார்ந்தார்கள்.
மாது விடுதிக்கு ஃ போன்
செய்து ஆசிரியரிடம் பேசினான். மழை நின்றவுடன் ஜாக்கிரதையாக வரச் சொன்னார்.
அடுத்த நாள் பகலில் சாலைகள் சரியாகிவிடும். நாம் கிளம்பலாம். இரவு ரயிலில்
மதராஸ் கிளம்பலாம் என்றார்.
ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்தார்கள்.
பெரியவர்கள் ஓய்வெடுக்க ,பெண்களும் இளைஞர்களும் சினிமா புத்தகங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாலையும் வந்தது.