Blog Archive

Tuesday, November 27, 2018

அன்புடையார் எ ன்றும் நலமுடன் வாழ்க

Vallisimhan

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

 திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு
ஆறுதலாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதில் சிறந்தவர்கள் என் புகுந்த வீட்டுக்காரர்கள். எல்லோரும் என்னைவிட அதிகம் கற்றவர்கள். வயதிலும் பெரியவர்கள்.

அவர்கள் தன் சகோதரரின் மனைவியைப் புரிந்து கொள்ள
அதிக நேரம் செலவழிக்கவில்லை.
தங்கள் அன்பு வளையத்துக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.

அதில் மிக முக்கியம் என் இரண்டாவது நாத்தனார் பத்மா.
பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதில் மிகவும்
பாக்குவப்பட்டவர்.
புகுந்த வீட்டுப் பாட்டியின் செல்லம்.
ஒரு நாள் வரவில்லை என்றால் கூட ஆள் அனுப்பி விடுவார்.

நாத்தனாரும் பொறுமையாகப் பாட்டியிடம் சொல்லித் தன் வேலைகள் பொறுப்புகள்
எல்லாவற்றையும் விளக்கி இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லுவார்.

அவர்கள் வீட்டில் எப்பொழு தும்  விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள் .
அவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை.
உறவுகள் பிள்ளை பெறவும், பெற்ற பிறகு இவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் இருந்துவிட்டுப் போவார்கள்.
மாமியார் வழி உறவுகள் அனைத்தும்
வருடம் முழுவதும் வந்து கொண்டிருப்பார்கள்.
என் நாத்தனார் சமையலறையை விட்டு வெளியே வருவது என்பதே அதிசயம் தான்.

பாட்டி வண்டி அனுப்பித்தால் மட்டும் மாமியார் அனுமதி கொடுப்பார்.
தன அம்மாவிடம் கூட உரையாட நேரம் இல்லாமல், வாரம் முழுவத்துக்குமான
நிகழ்ச்சிகளை சொல்லிச் செல்வார்.
அவர் அலுத்துக் கொண்டு பார்த்ததே இல்லை.

அவருடன் கூட மற்ற சகோதரிகளும் சேர்ந்தால் நம் வீடு முழுவதும் குதூகலம் தான்.
அந்தப் பழைய பெரிய வீடு நிறைய குழந்தைகளும், பட்சணம் பலகாரம் செய்யும் வாசனையும்,
என்னை மகிழ்வித்தன.

வருடா வருடம் வருவோம். பத்து வருடங்களில் நிரந்தரமாக வந்துவிட்டோம்.
எனக்கு நல்லதொரு முன் மாதிரி அவர்.
அவர் பென்னுக்குத் திருமணத்துக்காக, ஜோதிடர்களை அணுகும் போது நான் தான் துணை.

பிற்காலத்தில  எனக்கு உதவியாக இருந்த்தது.
அவர்கள் மரங்களில் காய்க்கும் மாங்காய், புளிச்சகாய் எல்லாம் ஊறுகாய் போடுவது நான் தான்.
அழகான அபூர்வமான சமையல் முறைகளை சொல்லிக் கொடுப்பார்.

இவர் எங்களை பிரிந்து நான் வெளியூ ர் வந்துவிட்டாலும் ,மாதம் ஒரு தடவையாவது பேசுவேன்.
எங்க என் பெஸ்ட் ஃ ப்ரண்ட்  போன் பேசலியேன்னு நினைத்தேன். நீ செய்துட்டே என்று மகிழ்வார்,.
என் அன்புத் தோழி பிரிந்தது வருத்தமே.
ஆனால் சிரமப் படாமல் இறைவனடி அடைந்தார்.
பத்தா  ❤🙌    ....... என்றும் மறக்க மாட்டேன் உங்களை.
உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும்.
உங்கள் அன்பு ரேவதி.

Wednesday, November 21, 2018

பாசுமதி 3ஆம் பாகம்.

Vallisimhan  எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
கல்யாண சமையல் சாதம் 👌👌👌👌👌

வெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.

அறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த  மலைகளில்  மழை முயூட்டம்,அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள்  என்று தெரிய ஆரம்பித்தன.
இரவு  பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஒய்வு  பிடித்திருந்தது.

 நிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.

சுமதிக்கு தாரிணிக்கும்,அவளது அனஸ்தடிஸ்ட்  ரூபா மேனனுக்கும் ஒரு அறை  ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.

திங்கள்  அன்று காலை  காலை உணவுக்கு ஒவ்வொருவராக  வந்து சேர ஆரம்பித்தார்கள். 
பாசுவும்  சுமதி ,தாரிணி ஒன்றாக நுழையும் பொது,ரூபாவும் அழகான  டென்னிஸ் உடையில் உடல் வடிவம் 
தெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.
 ரெடி  ஃ பார்  எ கேம் என்று ஆவலுடன் வினவினான்.
தாரிணியும் சுமதியும்  ஒருவரை ஒருவர் பார்த்து  கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.
       
 ஓ  நான் ரெடி. முதலில்  நல்ல ப்ரேக்பாஸ்ட்  வேண்டும் என்றபடி தன்  தட்டை, ரொட்டி,வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத் துவங்கினாள் .
அவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.
தாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன் ஃ ப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள,
ஹாய் என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க ,
தினேஷ்,மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .

 இந்த டேபிளுக்கு  வாருங்கள்.  என்று அழைப்பு விடுத்தாள்.
மேஜை அடியில் அவள் காலை மிதித்தாள்  சுமதி.
ஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்.

மதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும்.
ஏன் தினேஷ்  வந்தால் கசக்கிறதோ.
சுமதியின் முறைப்பைக் கவனிக்காமல்,மற்றவர்களை  நோட்டம் விட்டாள் .
அடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உலகையே மறந்தவர்களாகப்   பேசிக்கொண்டிருந்தார்கள் 

மதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர 
கலகலப்புக்கு கூடியது.
மதிவாணனும்  தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார,சாப்பிடுவதில் மும்முரமானாள்  சுமதி.

மதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி,//எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா
சுமதி. குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா என்றான்.
சுமதி //,தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை.//என்றபடி
தன் காப்பிக்காக எழுந்தாள்.
ஃபில்டர் காஃபி மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். 
அங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
உங்களுக்கேன் சிரமம். என்றபடி அதை வாங்கிக்கொண்டு
அனைவருக்கும் காப்பியைப் பகிர்ந்தாள்.

பாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்.
என்றி நமட்டுத்தனமாகச் சிரித்தான்.
இப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை. நாம் நால்வரும் 
யானைகள் பார்க்கப் போவோமா என்று கேட்டான்.
அவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்
என்று வாசலை நோக்கி விரைந்தான்.

நான்கு பேரும் சேர்ந்த நடக்கையில் ,சுமதியிடம் ஒரு 
புதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.
மிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின்ற 
பூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம்
சட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.
//உன்னை மதி,பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்.
என்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்
என்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.
நான் பணம் சம்பாதிக்க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ்.
அதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.
இப்போதைக்கு நாம் யானைகளை மட்டும் 
பார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை..
நேரிடையாகச் சொல்லிவிடும் என்று
முன்னோக்கி விரைந்தாள்.


தினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை .
நில்லுங்கள் சுமதி . என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டால். தினேஷ் தன பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநடுவே  சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.

தான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது.
பெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த  ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள்  எல்லாம் அறிவுக்கு உரைத்தது.
அன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .

தினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான்,அவர்கள்  மத்திய உணவோடு உற்சாக பான ங்களான  பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள் .
தினேஷ் வா எங்களோடு சேர்ந்து கொள்  என்று அவனுக்கு வேறு அழைப்பு. 
மறுத்துவிட்டுக்  கிளம்பிய  தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.
மெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க  படுத்திருந்தவள் அவன் தட்டியதும் உள்ளே வரலாம் என்று குரல் கொடுத்தாள் .
தினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.
சுமதி என்று அழைத்தவன், உன்னைத்தவராக அணுகிவிட்டேன்.
இருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று 
தெரியாமல் உளறிவிட்டேன்  என்னை மன்னித்துவிடு என்றான்.

அது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம்.
நான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.
எனக்கு சற்று எட்டாக்  கைதான்.
என்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .

அதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் யாரென்று எனக்குத் தெரியுமா  என்று கேட்டான். உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில்  வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். என்று அவனை உபசரித்தாள்.
குழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இணைக்கவில்லை.

நீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா  என்றான். அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து 
இருக்கிறது.
நடக்கும் என்றே தோன்றுகிறது.
நம் வட்டத்தில் இருக்கிறாரா  என்றவனிடம் ,முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ம்ம்ம்ம். இருக்கிறார் என்றாள் 
மனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.

தினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம்,
வாருங்கள்  என்று அழைத்ததும்  
அவனும் எழுந்தான் . பெண்களை புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம்  என்றான்.
நான் புரிய வைக்கிறேன்.
ஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம் 
என்று பதில் கேள்வி போடா, உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான் 

என்றவனை  நின்று பார்த்தவள் ,
கிடைத்துவிட்டால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நேர்மறை எண்ணம் எப்பொழுதும்  
நிச்சயமாக நடக்கும். 

ஹியர் இஸ் டு தா வொண்டர்புல்  ஃ ப் யூச்சர் என்று அவனிடம் கையை நீட்டினாள்.
அவள் கையைப் பற்றியதும் 
மொழி படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது.  பின் நடந்ததெல்லாம்  அழகானவை.
சுபம்.









நம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை

Vallisimhan
நம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில் 
கவுதமன் ஜி யை மிஞ்சி யாரும் கிடையாது.

சுவையான பாத்திரங்களை,அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உரு வாக் கிவிட்டார். 
வாழ்த்துக்கள்.

நாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.
லஸ் விநாயகரே துணை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பாசு என்கிற  பாஸ்கர், தன் தந்தையிடம் பாலபாடம் கற்று, மதுரை மா நகரில் 
அந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 
சி இ ஓ ஆனான். அப்பா அவ்வப்போது வந்து போவதோடு 

தன் ஓய்வை ஏற்றுக்கொண்டார். 30 வயதில் இந்தப் பெரிய பொறுப்பை
ஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது,.
இரண்டு வருடங்களில் தேறிவிட்டான். அந்தப் பதவிக்கான 
மிடுக்கும், அதிகாரமும் சேர்ந்தன.

தனக்கென்று உண்டான தனிக்குழுவாக  விளம்பர அதிகாரி  மதிவாணன். ////என்ன தூக்குத்தூக்கி
படத்தில் வர பெயர் மாதிரி இருக்கேன்னு நினைத்துக் கொண்டேன்.///////////
மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக  சுமதி. இனிமையான பெண். 
நல்ல பல்கலைக் கழகத்தில் இஞ்சினீரிங்க் முடித்து
மேனாடு சென்று  நிர்வாகமும் கற்று வந்தவள்.

இவர்கள் கூட அவர்களுடைய உதவியாளர்களும் உண்டு.

பாசுவின் கூடப் படித்த தினேஷும் மாதம் ஒரு முறை வந்து போவான். 
இருவரும் பெரியப்பா, சித்தப்பா பசங்களாக இருந்ததால்.

உருவ ஒற்றுமை நிறைய இருக்கும். தினேஷ் ,பாசுவைவிட ஒரு பிடி
உயரம் கூட,.தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அழகனாகவே இருப்பான்.
 மார்ச் 15 ஆம் தேதி நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.
விமரிசையாகக் கொண்டாட பாசுவின் தந்தை முடிவு செய்தார்.
ஆரம்பத்திலிருந்து பணிமணையிலும் ,இப்பொழுது சர்வீஸ் செண்டரிலும் வேலை செய்பவர்களுக்கு 

நல்ல கைக்கடியாரமும் ,ஒரு வாரம் விடுமுறையில் செல்லவும் 
போனஸ் தொகையாக 2000 ரூபாயும் கொடுப்பதாக 300 தொழிலாளர்களைத் தேர்ந்து
எடுத்திருந்தார்.

மேல்தட்டு எக்ஸ்கியூட்டிவ்களுக்கு 
 தாராளமாக சன்மானம்.
ஒரு கோடை வாசஸ்தலத்தில் இரண்டு வாரங்கள்  தங்குவதற்கும்,
போகவர ஒரு பெரிய  லேட்டஸ்ட்  சொகுசு பேருந்தும்   கொடுக்கப்பட்டது. 

கம்பெனியின் கஸ்டமரான தினேஷுக்கும் இதே பரிசு.

பாசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விரும்பினான்.
காரணம் அவன் சுமதியின் வடிவழகில் லயித்து விட்டதுதான்.

அவளும் மதிவாணனும் தொழில் முறையில் சந்தித்துப் பேசினால் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கம்பெனி மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் தாரிணியும் சுமதியும் நல்ல தோழிகள்.

மதிவாணன்  சுமதியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.
தனக்குச் சரியான துணையாக அவள் இருப்பாள் 
என்று தீர்மானித்திருந்தான். அடுத்து என்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.
உற்பத்திக்கூடம்

பகுதி 2 பாசுமதி.

++++++++++++++++++++++++++

முதல் வேலையாக தினேஷை  அழைத்தான்.

"என்னடா, என் குழுவோடு தேக்கடி, மூணாறு வருகிறாயா?"

"கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால் 
ஒரு வேலை நடக்கணும் என்று பீடிகைபோடுபவனிடம்,  
என்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது
 பிடிபட்டு விட்டாயா? வலையிலிருந்து மீட்கணுமா?" 
என்று சிரித்தான் தினேஷ்.

"டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன், 
என்னைக் குத்திக் காண்பிக்கிறாயே.."  என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு பார்த்தான் தினேஷ்.

"நீதான் பறவைகள் பலவிதம்னு  பல வண்ணம் பார்த்தவனாச்சே,
  இப்போ புதிதா சாலஞ்ச் வந்திருக்கா உனக்கு?" 
 என்றவனிடம் விஷயத்தைச் சொன்னான்.  
மதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும் சுமதியைக் 
காதலித்து மணக்க வேண்டிய உணர்வு...  என்று விவரித்தவனைப் 
புதிராகப் பார்த்தான் தினேஷ்.

"உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள். 
வாட்ஸ் த ப்ராப்ளம்?"  என்று கேட்டவனிடம், 
தன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும் 
அறிந்தவளாக சுமதி இருப்பதே பிரச்சினை.

தன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை 
என்றதும் திகைத்துப் போனான் தினேஷ்.

இதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.

அவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு  மதி வந்திருந்தான்.
   "என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா?  நான் வேணா பேசிப்பார்க்கிறேன்" என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.

"இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார். 
 நீ தான் உதவி செய்யணும்." என்றான்.

"ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு" என்றதும்
அதிர்ச்சி காட்டினான்  மதிவாணன்.

"என்ன கேட்டிருக்கிறார்?" என்றதும் "அதை சொல்ல முடியாது. 
 உனக்கு என்னவேணும்" என்றதும்..

"நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள், 
அசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள்.  இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம் நடந்து கொண்டால் 
அவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.  
எனக்குச் சாதகமாக அமையும்"  என்றான்.   

கலகலவென்று சிரித்துவிட்டான் தினேஷ்.

"அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா"  என்று அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.  
ஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட 
 அலுவலக நண்பர்களுடன்  பாட்டும் நடனமுமாக 
உற்சாகமாகக் கிளம்பினார்கள்.

சுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும்
 உதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டரி சரண்யா
 என்று வண்ணமலர்க்கூட்டமாக மங்கையர்.

பாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம் 
வந்து நலம் விசாரித்துப் போனார்கள்.

சுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.
 'இதென்ன புது அக்கறை' என்றபடி திரும்பினவளின்
 கண்களில் தினேஷ் தென்பட்டான்.

சட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.

"ஹேய் அது யார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரே?"
 என்று கேட்ட தாரணியிடம் "அவர் இவருக்கு கசின்" என்றாள் சுமதி.

"ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்? 
 எனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ"  என்று கேலி செய்தாள்.

"இல்லைப்பா. நீ வேற 😔😔😔😔😔
 அவர்கள் லெவலே வேற.  நான் வெறும் பணி செய்பவள். 
பாசு அங்கு உட்கார்ந்திருந்தால்  மூணாறில் செய்திருக்கும் 
ஏற்பாடுகளைச் சொல்லலாம் என்று பார்த்தேன்.  
தினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்" 
 என்றவளைப் பார்த்து "அந்த பேப்பர்களை என்னிடம் கொடு, 
நான் நம்ம பாஸ் உடன் அரட்டை அடிக்கிறேன்.
 நீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்
 இளையராஜாவை மாட்டிக் கொள்" என்றபடி எழுந்த
 தாரிணியைத் திகைப்புடன்  பார்த்தாள்  சுமதி.

பேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும் தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து 
எழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான்.

திடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு 
அவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.

ஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.

"இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை
 என்றால் என் பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து
 தப்ப ஆசை " என்று இனிமையாகப் பேசினான்.

ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய
 சுமதி பதில் சொல்லத் திணறினாள். 

சமாளித்துக் கொண்டு, "இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. 
 தாரிணி..."  என்று பின்னோக்கிப் பார்த்தாள்.

"ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்.  
உங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே..."

"நான்...  நான்.."  என்று தயங்கிய சுமதியைப் பார்த்து
 புன்னகைத்தபடி,  "நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்.  
நான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்" என்று இருக்கையை நீட்டி, பரிபூரண அமைதி முகத்தில் பிரதிபலிக்கக் 
கண்களை மூடிக் கொண்டான்.

கண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள் 
அவளைச் சுற்றியே வந்தன.  

அப்பழுக்கில்லாத அழகு. பாசு இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை.  கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால் 
இவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது 
என்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே 
வர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

அவன் தோளில் சுமதியின் முகம்.

மூச்சே நின்றது போல உணர்ந்தான்.
 பஸ்ஸின் வெளியே மழை.

பாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.

பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.

அதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப்
 பார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

"மன்னிக்கணும். என்னை அறியாமல்..."  என்றவளைக் கனிவுடன் பார்த்தான். 

"இட்ஸ் ஓகே.  நாம கீழ இறங்கணும்"

"பலத்த மழை.  அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறோம்" என்றபடி  எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள்,
 பாசு அருகில் வருவது கண்டு  மழையைப் பார்ப்பது 
போலக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் . 
 பின்னாலயே வந்த  தாரிணி "நல்லாத் தூங்கிட்டியே சுமதி. 
இயற்கைக் காட்சிகள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே"  
என்று கேலி செய்தாள்.
இந்த  க்ரீன்வுட் ரிசார்ட்டில்  இடம் சொல்லி வைத்திருந்தேன். 
முன்னாரில் எல்லாம் நல்ல மழையாம்.
. நாம் இங்கேயே தங்கலாம்  என்றான் பாசு.

அங்கிருந்து உதவியாளர்கள் குடைகள் கொண்டு 
வர முப்பது பேரும்  இறங்கி  விடுதிக்குள் சென்றனர்.




- தொடரும் -

Saturday, November 17, 2018

இருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.

Vallisimhan
மீண்டும் தாழ்ந்த மன நிலைக்குப் போக மாட்டேன். அடுத்த
அடி என்ன என்று தீர்க்கமாக் யோசிப்பேன். வீடு என்பது எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.

அது ஊழ்வினையால் ஆட்கொள்ளப் படும் என்றால் இறைவன்
பார்த்துக் கொள்வான்.

மகன் களின் மனம் சோகப்படாமல்
அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியது என் கடமை.

மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து,அந்த வீடு
இன்னும் பெருமையுறும் என்ற நம்பிக்கையை
விதை த்துக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் எந்த சிரமமும் வரக்கூடாது.
 கஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களின் உள்ளம் என்ன பாடுபடுகிறதோ.
அவர்களுக்கு இறைவனும் அரசாங்கமும் நல்வழி காட்டட்டும்.
எப்பொழுதும் அவன் செயலே பரிமளிக்கும்.
வாழ்க இறைவன் நாமம்..அவனே காப்பான்.

Sunday, November 11, 2018

எங்கள் வீடு

Vallisimhan

 சிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும்
தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்கும் வரை எங்கிருப்பது என்று தெரியவில்லை என்று வருந்தி அழுதார்கள்.

நானும் வீட்டு முன்னறையை ஒழித்துக் கொடுக்கலாம் என்ற நினைத்துக்
கொண்டிருந்தேன்.
இன்று நான் கேட்ட செய்தி என் அஸ்திவாரமே நகர்ந்தது போல இருந்தது.

லஸ் முனையிலிருந்து , ஆழ்வார்பேட்டைக்கு அண்டர்க்ரௌண்ட் மெட்ரோ

போடப் போகிறார்களாம். அதற்கு எங்கள் வீடு உட்பட சாலையோர
வீடுகளின் நிலங்களை அரசு கையகப் படுத்துமாம்.
டிசம்பர் 7 க்குள்   உரிமையாளரோ ,அவருடைய வக்கீலோ
இந்த மெட்ரோ  அலுவலகத்தை அணுக வேண்டுமாம்.

எங்கள் பக்கத்து வீட்டு வக்கீல் சொன்ன விஷயங்கள் இவை.

பார்க்கலாம் மேற்கொண்டு இறைவன் செயல்.


Thursday, November 08, 2018

நவம்பர் 2018

Vallisimhan

தீபாவளித் திரு நாள் இறைவன் ஆசியுடன் மகிழ்வாக முடிந்தது.

இனி கார்த்திகை தீபம், நடுவில் சில உடல் நிலை பரிசோதனைகள்,
எல்லாம் முடித்து  ஒரு வாரம் கழித்து ஏதாவது எழுதலாம்.

சென்னையில் ஒரு நல்ல மனிதர் தனக்குத் தெரிந்த பத்திரிக்கையில்
என் பதிவுகளைப் போட
பிடிஎஃப் வடிவில் கொடுக்கும்படி கேட்டார்.

என்னால் முடிவெடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.

என் இணைய நண்பர்களே எனக்குப் போதும்.
என் எழுத்தும்  எண்ண்ங்களும் என் வலிகளும் சந்தோஷங்களும்
என்னுடனே போகட்டும். மீண்டும் பார்க்கலாம்,.

Monday, November 05, 2018

புதுப்பயணம் 5

Vallisimhan
  ஞாயிறு, காலை விடியும் போதே இன்னும் இரண்டு நாட்களில்
வரப் போகும் தீபாவளிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.

வாசலில் டாக்சி வந்து நின்றது. இறங்கியது ,வனிதாவின்
பெற்றோர்களும் ,தம்பிகளும்.

ஆச்சர்யத்தோடு வாசலுக்கு ஓடிய வனிதாவை அவள் பெற்றோர் அணைத்துக் கொண்டனர்.
என்னம்மா இது திடீர்னு.

தலை தீபாவளிக்கு நீங்க எல்லோரும் அங்கே வரவேண்டாமா. கையோடு அழைத்துப் போகத்தான் வந்தோம். என்று சிரித்தார்கள் இருவரும்.

முதலில் உள்ளே வாருங்கள் என்று பெரியப்பா அழைக்க
அனைவரும் ஹாலில் கூடினார்கள்.
வனிதாம்மா, எல்லோருக்கும் காப்பி என்று மாமியார் சொல்ல,ராதா மாமியிடம் சொல்ல
விரைந்தாள்.
சம்பந்தி ,இந்தத் தடவை நாம் இந்த வழக்கத்தை மாற்றலாம்.
நீங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம்..
என்றார் பெரியப்பா. வனிதாவின் அப்பா கணேசன்
அங்கே எல்லாம் ரெடி செய்து வைத்திருக்கிறோமே
என்று தயங்க,
சந்துருவின் அப்பா, திருமணம் ஆன பிறகு முதலில் 
வந்திருக்கிறீர்கள். முதலில் வண்டியை அனுப்புங்கள்.
மாடியில் உங்க பெண் அறைக்குப் பக்கத்தில் விருந்தினர்
அறை இருக்கிறது. குளித்துவாருங்கள் என்று சொன்னார்.

வாங்கப்பா என்று அழைத்துச் சென்றாள் வனிதா.
ஊர்க்கதைகளை அலசியவாறு அவர்களின் பெரிய அறையைத் திறந்துவிட்டு
எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,
அப்பா சொல்வதைக் கேளுங்கள் அப்பா. மிகுந்த பாசமான மனிதர்கள்.
சீக்கிரம் வாருங்கள்.இன்னும் பட்டாசு எல்லாம் வாங்க வேண்டும்.

பக்ஷணம் செய்ய வேண்டும் என்று அடுக்கும்
 பெண்ணைப் பெருமையோடு பார்த்தாள்
அம்மா. அங்கே வந்த ஏகாம்பரத்திடம். படுக்கையை எல்லாம் தட்டிப் போட்டுச் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, அம்மா கீழே பேசலாம் சுருக்க வாருங்கள் என்று
பறந்துவிட்டாள்.

இரண்டு மணி நேரத்தில் வீடு கொண்டாட்ட வேகம் பிடித்தது.
சம்பந்திகளுக்கு வனிதாவின் பெற்றோர் கொண்டுவந்திருந்த
பட்சண வகைகள் அமோகமாக இருந்தன. அதே போல அவர்களுக்கான புடவைகளும்
வேட்டிகளும், சந்துருவின் தங்கைகளுக்கான பட்டுப் பாவாடைகளும், தாவணிகளும் கண்ணைப் 
பறித்தன.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாங்கியது அங்கே இருக்கிறது என்றார்
கணேசன்.
அப்போ இன்னிக்கு இன்னோரு ஷாப்பிங்க் இருக்கு என்றவாறே, சந்துரு அம்மா வந்தார்.
சம்பந்தி உங்க நிறத்துக்கு ஏற்ற மாதிரி  இங்கே வாங்கியாச்சு. பசங்க அளவு தெரிந்து அவர்களை அழைத்துப் போய் வாங்கிவிடலாம். என்னடா பசங்களா என்றதும் வனிதாவின் தம்பிகள்
கூச்சத்துடன் சிரித்தனர்.
அப்படியே நடந்தது.
கணேசன் மாப்பிள்ளைக்கு அழகான மோதிரம் வைரக்கல் பதித்து
வாங்கி வந்திருந்தார்.
தீபாவளி குதுகலமாக ஆரம்பித்தது.
காலைப் பலகாரம் முடிந்ததும் வருடந்தோறும்  செல்லும், முதியோர் இல்லத்திற்குச் சென்று அன்று முழுப் பொழுதும் அவர்களுடன் செலவிட்டார்கள்.
அத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் இந்தக் குடும்பத்தைத் தெரிந்திருந்தது.

மன நிறைவொடு வீடு திரும்பியவர்கள் தங்கள் வீட்டிலும் மத்தாப்பு, புஸ்வாணம் என்று அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.
சந்துரு மனம் அமைதியாக இருந்தது. வனிதாவுக்கு இந்தக் குடும்பமும் அதன் 
வழிமுறைகளும் பிடித்திருந்ததால் தானே அவள் தன்னிடம் ஒன்றும் குறை சொல்லவில்லை.

நம் வாழ்க்கை நம் கையில் என்று நம்பிக்கை கொண்டான்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

Sunday, November 04, 2018

தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.

Vallisimhan
எத்தனையோ நகரங்களில் இருந்திருந்தாலும் மதுரைத் தீபாவளிகளே மறக்க முடியாமல் மனதில் தங்குகிறது.
 அம்மா,அப்பா,தம்பிகளோடு சிங்கமும் இணைந்த அந்தத் தீபாவளியின் மகிழ்ச்சி இன்னும் பெருகியது ,இரண்டு நாட்கள் கழித்துப் பிறந்த முதல் புதல்வன்.
வண்ண மயமான் கனவுகள் அவனைச் சுற்றி.
தாத்தாக்கள் பாட்டிகள், பெரிய பாட்டியின் ஆசி எல்லாம் சேர்ந்து மனதை நனைத்த
 மதுரைத் தலை தீபாவளி  ஆகச் சிறந்த அனுபவம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். தீப ஒளி எல்லோருக்கும் நல் வழி காட்டட்டும். ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மன அமைதி
எல்லாம் நிறையட்டும்.
Add caption

Saturday, November 03, 2018

புதுப்பயணம் 4

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

அடுத்த நாள் சனிக்கிழமை.
அன்று  எப்பொழுதும் போல பூஜை முறைகள் உண்டு. கொஞ்சம் தாமதமாக
ஆரம்பித்தன. பெரிய மாமியாருக்குத் துணையாக வனிதா தோட்டத்திலிருந்து பூக்கள் கூடை நிறையக் கொண்டுவந்து வைத்தாள்.

சந்துருவின் அம்மா, துளசி மாடத்தை நன்கு  சுத்தம் செய்து,
கோலமிட்டுப் பூஜைகளைச் செய்து கொண்டிருந்தார்.

வழக்கமான வழிபாடுகள் முடிந்ததும், அனைவரும் காலை உணவை
சேர்ந்து உட்கார ராதா அம்மா, வனிதா, இன்னோரு உதவிக்கான அம்மா
எல்லாரும் பரிமாற சந்தோஷமாகப் பேச்சு  சத்தம் ஆரம்பித்தது.
.
சந்துருவின் சகோதரிகள்  எல்லோருடைய அன்பிலும் நனைந்தபடி
உற்சாகமாக உரையாடினர். 
பெரியப்பா,பெரியம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை.
தம்பி குழந்தைகளே அவர்களது செல்வங்கள்.
அதுவும் இப்போது வந்த மருமகளிடம் இன்னும் அதிகப்
பாசம் வைத்திருந்தனர்.
அவளிடம் பணிவும். சொன்னதும் வார்த்தைகளை நிறைவேற்றுவதும்
மிகப் பிடித்திருந்தன.

காலை உணவு முடிந்ததும் அனைவரும்  வரவேற்புக் கூடத்தில் நிதானமாக உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்த போது, வரப் போகும் தீபாவளிக்கான
உடைகள் வாங்க முடிவு செய்யப் பட்டது.
அம்மா,பெரியம்மா, சந்துருவும் தி.நகர் நல்லியில் புடவைகள் வாங்குவதாகவும்,

வனிதாவும், பெண்களும் RMKV போவதாகவும் தீர்மானம்.
சந்துரு அம்மா, பெரியம்மாவை விட்டு நல்லியில் இறக்கிவிட்டுவிட்டு
ஆரெம்கேவிக்கு வந்து விட்டான்.

வனிதாவின் முகம் மலர்ந்தது அவனைப் பார்த்ததும்.
தங்கைகளுக்கும் ,அவளுக்கும் உயர்தரத்தில்  சுடிதார் 
வகைகளை வாங்கிக் கொடுத்தான் சந்துரு,.

அங்கேயே அவனுக்குப் பிடித்தவிதத்தில் இரண்டு மூன்று சட்டைகளை எடுத்தாள்.

முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பவும், சந்துரு நல்லிக்கு வந்தான்,
அங்கேயும் எல்லோருக்கும் வேட்டிகளும்,பட்டுப் புடவைகளையும்
முப்பாத்தம்மனுக்கு ஒரு அரக்குப் புடவையும் எடுத்துக் கொண்டு திருப்தியாக வீடு திரும்பினார்கள்.
 மீண்டும் சாப்பாட்டு மேஜையில் குழுமியவர்களுக்குப் பெரியப்பா
அவரவருக்கான புடவைகள் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். 
அத்தனை அழகான தரமான அவரவர்க்குப் பிடித்த வர்ணங்களில் 
அமைந்திருந்த புடவைகளைப் பார்த்ததும்
ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிறைந்தது.
சந்துருவின் தங்கைகள்  பெரியப்பாவின் இருபக்கமும் நின்றி அவர் முகத்தோடு 
ஒட்டி அணைத்துக் கொண்டார்கள்.

பெரியப்பாவின் கண்களில் நீர்.எப்பவும் சந்தோஷமாக இருங்கடா தங்கங்களே என்று சொல்லிஉச்சி முகர்ந்தார்.
அவர்கண்  வனிதா பக்கம் திரும்பியது.
அவள் கண் இன்னும் புடவையிலிருந்து எடுபட வில்லை.
இத்தனை பெரிய பார்டர். இளம்சிவப்பும்,பச்சையும் புடவையின் மேல் பக்கமும் கீழேயும்
இருக்க ஓர் அடி அகலத்துக்கு ஜரிகை ஓடக் கண்களைப் பறித்தது அவள் புடவை.
என்னம்மா ,வனி, உனக்குத் தலை தீபாவளி ...மறந்துட்டியா என்று சிரித்தார்கள் 
பெரியவர்கள். சட்டென்று எழுந்தவள். அப்படியே அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.

பெரியம்மாவும், மாமியாரும் அவளை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.
நீ எங்கள் வீட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்மா.
தீர்க்காயுசுடன் சந்துருவோடு குடும்பம் தழைக்க வாழணும் என்று 
ஆசிகள் வழங்கினார்கள்.

சந்துரு எனக்கு என்ன அவள் மாத்திரம் ஸ்பெஷலா
என்று கூவ சட்டென்று உணர்ச்சியிலிருந்து விடுபட்டுப் பழைய கலகலப்பு வந்தது.
இந்தாடா போனாப் போகிறதுன்னு 
இதை வாங்கி வைத்திருக்கேன் என்று விலை உயர்ந்த
கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தார்
உலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம். ஒரு நவ நாகரீக மனிதனுக்குத் தேவையான
அத்தனை  விஷயங்களும் அதில் அடங்கி இருந்தன.
அடடா, பெரியப்பா பதினாறடி பாய்ந்தால் நான் முப்பத்திரண்டடி
பாயணுமே  ...போனாப் போறது, நீங்க நாலு பேரும் சொகுசாப் பயணம் செய்ய ,இதோ ஒரு சாவி
என்று ஒரு பெரிய என்வலப்பை அவர் கையில் வைத்து வணங்கினான்.
என்னடா இது. என்று திறந்தவர் கையில் புது ஹோண்டா அக்கார்ட்  சாவி
கிடைத்தது .
இப்படி செலவு செய்வாயோ என்னடா பையா இது என்று செல்லமாகத் திட்டிய
பெரியப்பா அப்பா கண்களில் ஆர்வம் மின்னியது.

பின்ன எப்ப பார்த்தாலும் உங்களையும் கூட அழைத்துப் போகும்போது என் பெண்டாட்டியைக் கொஞ்ச நேரமே இருப்பதில்லை
என்று சொன்னவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

தங்கைகளைக் கண்டு கண் சிமிட்டிய சந்துரு உங்கள் இருவருக்கும் பொங்கல்
விழாவுக்கு ஸ்கூட்டி வந்துவிடும் என்று புன்னகைத்தான். ஹை என்று இருவரும்
 அவனைச் சுற்றி வந்தனர். புது மதினி,எல்லாம் உன் ராசிதான்.
என்று வனிதாவையும் அணைத்துக் கொண்டனர்.

பெரியப்பா அப்பா புது வண்டி நாளைக்கு வந்துவிடும்.
எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்றான் சந்துரு.
இப்ப சாப்பிடலாமா மணி இரண்டாகப் போகிறது... அடுத்த பாகத்துடன் பூர்த்தி.
  எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்....தொடரும்.

Friday, November 02, 2018

புதுப் பயணம்..3

Vallisimhan 
    நாட்கள் சென்றன. பெரிய குடும்பத்தில் எப்பொழுதும்  உறவுகாரர்களின் போக்குவரத்தும், சமையல் ,உணவு  எல்லாமே அதிகம்.
வனிதா வந்ததும் அவளுக்காகவே காத்திருந்தது போல, அந்தப் பெரிய வீட்டு வெளி வேலைகள் அவளுக்கு வந்தன.

வங்கி வேலை, மின்சாரக் கட்டணம் கட்டுவது,தொலைபேசி கவனிப்பது
தோட்டக்காரர்  வேலையை மேற்பார்வையிடல்
என்ற சின்னச் சின்ன ,ஆனால் ஓயாத  வேலைகள் வந்து சேர்ந்தன.

வீட்டில் மாடுகள் வேறு இருந்ததால்  அவைகளைக் கவனிக்கும் 
பால்காரரையும்  ,தீவனம் சரியாகப் போடுகிறாரா, கால்னடை மருத்துவரைப் 
பார்க்க வேண்டிய நேரம் என்று மேலாண்மைப் பொறுப்பு  எல்லாம்
அவள் கையில்.

எந்தப் பிரச்சினையானாலும் பெரியவர்கள் அவளை அழைப்பது
வழக்கமானது.

அலுவலகம் போகாமலேயே அவளுக்கு வீட்டுக் கவனிப்பே
நிறைய இருந்தது. 

பலன்....சந்த்ரு வரும் நேரம் அவளுடைய  ஓய்வு நேரமாக மாற,
அவன் விருப்பப்படும் நேரம் வெளியே போக முடிய வில்லை.

முதலில் அவனுக்கு இது வேடிக்கையாக இருந்தாலும், 
மாதங்கள் சென்றதும்  ஒரு பெரிய தொந்தரவாகத் 
தோன்றியது.

வனிதாவுக்கு அவனிடம் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.
சில வேலைகள்  அலுப்பாயிருந்தாலும்,
பெரியவர்களின் அன்பும் நல்வார்த்தைகளும் மிகப் பிடித்தன.
சந்துருவுடன் கூட எல்லோரையுமே பந்ததில் சேர்ந்ததாகக் கருதினாள்.

மெல்ல விளக்கவும் செய்தாள்.
 ஒரு அசிஸ்டெண்ட் போட்டுக்கோ.
ஒரு மேஜை சேர்,ஃபைல்ஸ்  எல்லாம் செய்து கொடுக்கிறேன்.
அலக்னந்தா அலுவலகம்னு போர்ட் போட்டுக்கோ.
என்றான் சந்துரு.
நல்ல ஐடியா. அப்பா, அறையில் நானும் அலமாரி வைத்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் பார்க்க சௌகரியமாக இருக்கும்.
அடக்கடவுளே, இவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது என்று திகைத்தான்.

அடுத்த நாள் தன் பெற்றோருடன் பேச நேரம் குறித்துக் கொண்டான்
சந்துரு.