Blog Archive

Sunday, November 11, 2018

எங்கள் வீடு

Vallisimhan

 சிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும்
தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்கும் வரை எங்கிருப்பது என்று தெரியவில்லை என்று வருந்தி அழுதார்கள்.

நானும் வீட்டு முன்னறையை ஒழித்துக் கொடுக்கலாம் என்ற நினைத்துக்
கொண்டிருந்தேன்.
இன்று நான் கேட்ட செய்தி என் அஸ்திவாரமே நகர்ந்தது போல இருந்தது.

லஸ் முனையிலிருந்து , ஆழ்வார்பேட்டைக்கு அண்டர்க்ரௌண்ட் மெட்ரோ

போடப் போகிறார்களாம். அதற்கு எங்கள் வீடு உட்பட சாலையோர
வீடுகளின் நிலங்களை அரசு கையகப் படுத்துமாம்.
டிசம்பர் 7 க்குள்   உரிமையாளரோ ,அவருடைய வக்கீலோ
இந்த மெட்ரோ  அலுவலகத்தை அணுக வேண்டுமாம்.

எங்கள் பக்கத்து வீட்டு வக்கீல் சொன்ன விஷயங்கள் இவை.

பார்க்கலாம் மேற்கொண்டு இறைவன் செயல்.


No comments: