Posts

Showing posts from July, 2006

ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்

Image
கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள். அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு உடனே வநதாள். இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான். பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை. பத்து வயதில் காதல் வருமா. வரும். வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் என்று சொல்லப்படும் என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில், அதை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான். இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுரையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது. இப்போது, இந்தப்பதிவில் ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்! அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை. உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில் அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன. ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம். செய்து ஆண்டுகளாகிவிட்டன. நடுவ...

புது வரவு, நல்வரவு

Image
என் அன்பு சக வலைப்பூ நண்பர்களுக்கும்,சினேகிதிகளுக்கும் மனு வல்லி சந்தோஷத்துடன் தரும் சேதி. புதிய வரவான எங்கள் பேத்தி. மனம் நிறைந்த ஆசிகளைக் கோருபவள், எங்கள் புத்தம் புதிய பேத்தி. ஆடி மாதம், முதல் தேதி, திங்கள் கிழமை july 17th இரவு 10.45க்கு பிறந்து இருக்கிறாள். ரேவதி,நரசிம்ஹன் பாட்டி&தாத்தா

SRI LAKSHMINRUSIMHAN

Image
SRILAKSHMINRUSIMHA ! CHARANAM Thvayi rakshathi rakshakai ki kimanmyai thvayisaa rakshathi rakshaiki kimanayai hi ithi nischayathiisrayaami nithyam nruhare vekavathi thadaasrayam thvaam இந்த பாடல் ஸ்லோகத்திற்கு ப் பொருள் ச்ரி ந்ருசிம்ஹா உன்னைத்தவிர வேறு யாரால் என்னை ரக்ஷிக்க முடியும்? நீ வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் ரக்ஷிக்கவில்லை என்றால் யார் ரக்ஷிப்பார்? நீதான் ரக்ஷிக்க வேண்டும். உன்னாலேயெ முடியாது என்றால் வேறு யாரால் முடியும்? ரஷித்தாலும் ரஷிக்காவிட்டாலும் நீயே சரண். இந்த ஸ்லோகம் ச்ரி வேதாந்த தேசிகரின் "காமசிகாஷ்டகம்" என்ற பாடலில், வேகவதி நதிக்கரையில் இருக்கும் லகஷ்மிநரசிம்மரைப் பார்த்துப் பாடியது. எல்லாப் பாடல்களுக்கும் மேல் இந்தப் பாடல் எனக்குப் பிடித்தது எதனால் என்று பார்த்ததில் , அதில் பொருந்தி இருக்கும் ச்ரணாகதிதான். 'உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை என்றூ அவனிடம் சொல்லி விட்டால் போதும். நம் கவலை விட்டது. எத்தனையோ சங்கடங்கள்,நோய், மன வருத்தம் இவை எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம்தான். பயம் என்னை வாட்டும்பொது என்னைக் காப்பாற்றும் மந்திரம் இதுதான். ராம ராமா என்று சொல்...

ஸ்ரீவில்லிபுத்தூர்

Image
வில்லிபுத்தூர் வேதக்கோனூர். சொல்மங்கை ஆண்ட வடபத்ரசாயீ, அவனைக் கொண்டாடியே, வாழ்நாட்களைக் கழித்தவர்., அதன் பின் அவனையே மருமகன் வடிவில் கண்டு, மாமனாரும் ஆகிய (பட்டர்,விஷ்னுசித்தர்) பெரியாழ்வார். கோதையையும் ரங்கனையும் சேர்த்து வைத்த கருடாழ்வார், கோதையைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடும் வில்லிபுத்தூர் மக்கள். எல்லாவற்றிர்க்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கண்நிறைக்கும் கோபுரம். ஆடிப்பூரம் கண்டாள்  ஆண்டாள். அவளைக் காண நாமும் போகலாமா? எந்த அழகைப் பார்த்து விட்டு இமைப்பது கண்களை? அவள் மாலை அழகு. சின்னஞ்சிறு பெண்ணாக அவள் குளக்கரை போகும் அழகு. அவள் திருமஞசன மஞ்சளுக்காகக் காத்திருக்கும் பெண்களின் அன்பு அழகு. மஞ்சனமாடி விட்டு அலங்கார பவனி வந்து அழகனை வந்தடையும் ஒய்யாரம். இவை எல்லாவற்ரையும் வருடங்கள் கணக்கில் பார்த்தாலும் அதே உற்சாகத்தோடு அவள் ஊர்வலம் வரும் தெருக்கள் முழுவதும் போடப்படும் கோலங்கள், கட்டப்படும் தோரணங்கள், ஆண்டாளை நீராட்டத்துக்கு, ஏற்றீச் செல்ல பிளிரிய வண்ணம் மகிழ்ச்சியோடு காத்திருக்கும் கறுத்த யானைகள் அவள் கையில் தினம் புதிதாகப் பறந்து வந்து அமரும் பச்சைக...

எனக்குப் பிடித்த ஆறு

மா.சிவகுமார் அவர்கள் இடமிருந்து வந்த பின்னூட்டம்+ஆறு அழைப்பு மிக்க இன்ப அதிர்ச்சி. அட நம்மளைக்கூட அழைத்து மரியாதை செய்யராங்களே!! அதனாலே 6 மாதமே ஆன ஆரம்ப நிலைப் பதிவாளரின் ஆறு விருப்பப் பதிவை படிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு. ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மா.சிவகுமார் அழைத்ததால் ஆறு பற்றிப் பேச(எழுத) வந்து இருக்கிறேன்தமிழ்மணம் புதிய பதிவாளர் என்று தெரிந்தும் என்னை அழைத்துஇருக்கும் சிவகுமாரின்வீரத்தை பாராட்டுகிறென். இதோ ஆறு. ஆறுகளில்----------பிடித்தவை வைகை தாமிரபரணி, காவேரி, பெண்ணாறு பழையாறு(எங்களுக்கு ஏதுவாக குறைந்த ஆழத்தில் ஓடியதால்) பார்க்காத கங்கை என்னைப் பிடித்து வைத்து இருப்பவை &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 1, படிப்பதுபடித்ததைப் பேசுவது(பேச்சைக் கேட்கவிட்டாலும் அறுப்பது) 2,,,தமிழ்மணம் 3,சிரித்து , சிரிக்க வைக்க வேண்டும், 4 , நினைவுகள், எதிர்பார்ப்புகள், 5,பாடல்கள் ,எம்.எஸ் அம்மாவின் கீதம்,ஜாஸ் ம்யுசிக் , ...