
இன்னிக்கு இவங்க எல்லாம் திருமணம் செய்துக்கறாங்க.
எனாலே ஒருத்தர் கல்யாணத்துக்கும் போக முடியாதததல கூகிள்ள தேடிப் படம் போட்டுட்டேன்பா.
எங்க கற்பகம்மா, கபாலீஸ்வரரையும்,
ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும்,
எங்கள் வில்லிபுத்தூர்ச் செல்வி கோதை அவள் கண்ணன் வடபத்ரசாயியையும்,
திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும்
திருமணம் செய்கிறார்கள்.
இன்னிக்குச் சந்திரன் அவ்வளவு தேஜசோடு இருப்பானாம்.
ஏனெனில் அவனுக்கும் திருமணம் இன்று.
ஸ்ரீமஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து எழுந்து வந்து
தன் நாயகன் பரந்தாமன் மார்பில் வந்து திருவாகத் துலங்கிய நாள்.
ஸ்ரீராமன் சீதா தேவியையும்,
லட்சுமணன் ஊர்மிளையையும்,
பரதன் மாண்டவியையும்,
சத்ருக்னன் சுருதகீர்த்தியையும்,
மிதிலையில் மணம் புரிந்த நாள்.இந்த வளம் மிகு நன்னாளில் நாம் அனைவரும் ,
தெய்வ தம்பதியர்களை நாடி, அவர்கள் அருளைப் பெறலாம் வாருங்கள்.


