திருக்குறுங்குடி பயணம் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு ஆகிவிட்டது. பக்கத்து வீட்டில் தாத்தாவின் தம்பி வீடு என்பதாலும் அவர்கள் இரண்டு நாட்கள் முன் தான் இங்கே இருந்துவிட்டு சென்னைக்குச் சென்றதாகவும் அவர்கள் கிளம்பு முன் இந்த வீட்டையும் சுத்தம் செய்து சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்ததாகப் பெரியவர்கள் பேசிக்கொண்ட நினைவு.. அப்போது தெரியுமா, அந்தக் குழுவில் இருந்த பேரனைத்தான் நான் மணம் முடிக்கப் போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது:)))) தோட்டப் பகுதி. (கொல்லைப் புறம்) தாத்தா ஆராதனை செய்யும் நேரம் திருக்குறுங்குடி மலை மேல் நம்பி பயணம் ஆரம்பம். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, நாங்கள் மூவர், இன்னோரு உறவினர். கற்பனை என்னுது. வடிவம் ஜெமினி ஏஐ:) அழகிய நம்பி திருக்கோயில் அருள்மிகு மலைமேல் நம்பி. இப்பொழுதும் என் மாமா மகள் இந்த மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறாள். அவளுடைய மூட்டு வலியுடன் ஏறி இறங்கியது நம்பியின் அருளை நம்பி மட்டும். மஹேந்திர கிரி மலையிலிருந்தே அனுமன் இலங்கையை நோக்கித் ...