Skip to main content

Posts

குடும்பம் ஒரு கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்   என் அருமை ரங்கன். அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.  கேலி காட்டுவதில் மன்னன். நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம். பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப் பார்க்கவேண்டும். தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.  குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம் வாரிக்கொள்வான். என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு. தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான். சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. . என்பேன். ரசனையே இல்லை என்று போய்விடுவான். மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன். எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ளை செய்தான். 1967இல்  எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம். சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.   '' ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும். உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//'' தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்...
Recent posts

2012 இல் கூடிய தமிழ்ப் பதிவர்கள் மக்கள் சந்தை. (14 வருடப் பழையப் பதிவு)

வல்லிசிம்ஹன் நாச்சியார் எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே . Monday, August 27, 2012 வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற  பெரியவர்கள் திரு  செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார்  காத்திருந்து நிகழ்ந்தேறிய  பதிவர் திருவிழாவின்  படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே  என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு  ஒரு     மகிழ்ச்சி. பதிவர்கள்  அனைவரையும்   சந்தித்த   சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது    இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா,  சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி  ...

வட்டப் பொட்டா திலகமா..................பதிவின் பின்னூட்டங்கள் 2008 மே.

வல்லிசிம்ஹன் இது அந்தக்காலம். dondu(#11168674346665545885) //எல்லாம் ஒண்ணா இந்தியன் எக்ஸ்ப்ரஸ் எடிட்டோரியல் மாதிரி வந்து இருக்கு:)// பிரச்சினை ஒன்றும் இல்லை. எடிட் பட்டனை தட்டி விட்டு பத்திகள் பிரியும் இடங்களில் எண்டர் விசை மூலம் ஒரு ஸ்பேஸ் அதிகமாகத் தரவும். அதே போல பத்திகளுக்குள்ளேயே இருக்கும் வரிகளில் தேவையற்ற காலி இடம் இல்லாது பார்த்து கொள்ளவும். அன்புடன், டோண்டு ராகவன் 12:35 PM G.Ragavan திலகம்... திலகம்... என்னுடைய ஆதரவு நீட்டத் திலகத்திற்கே. ஓங்கி உலகளந்தான் போல் நிமிர்ந்து நிற்கும் திலகமே சிறப்பு. :) சிறுவயதில் திலகம் இட்டுக் கொண்ட பெண்களையும் சிறுமிகளையும் பார்த்திருக்கிறேன். அது அழகாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இப்பொழுது அப்படி இட்டுக் கொள்கின்றவர்கள் யாருமில்லை போல. 1:48 PM இலவசக்கொத்தனார் இதோட ஒரு போட்டோ அதோட ஒரு போட்டோ போட்டு ஒரு கருத்துக் கணிப்பு வைக்கலாமா? :)) 2:52 PM வல்லிசிம்ஹன் நன்றி டோண்டு சார். ஏற்கனவே ஒரு தடவை இந்த மாதிரி ஆச்சு. அப்போ விஎஸகே சார் வந்து இதே வார்த்தைகளைச் சொன்னார். எங்கியோ தப்பு நடந்து விடுகிறது. ;) 4:00 PM துளசி கோபால் என் ஓட்டு திலகத்துக்கே. என்...