Wednesday, May 27, 2026

களியோ களி.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

துபாய் நாட்கள்.



எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் 
##########################################################
Dubai 2009.
வியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.🙂
ஒரே மகிழ்ச்சி.
ரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ
வெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ
கோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.
வார இறுதியாயிற்றே.!
இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.
அப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.
அது ஒரு தாய் உணவகம்.Thai Restaurant
எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான்.
பாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.
(அய்ய, இன்னோரு பயமா)
மகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,
கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.
நாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(
அப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.
நாசியைத் துளைக்கு ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.
அபௌட் டர்ன் செய்திருப்பேன்.
இரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/
அழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி ?
என்றது அந்தப் பெண்.
என்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் மருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்.ஒ. வெஜிடேலியன் !!!!!
இவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.
அதற்குள் சிங்கம் பூமிங் வாய்ஸில் ஆஙகிலத்தில் ஏதோ ப்ரைட் ரைஸ் என்றாரா. 
அவள் நோட் பேப்பரைக் கையில வைத்துக்கொண்டு எழுதத்தெரியாத 
குழந்தை மாதிரி விழித்தாள்.
மீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்
வெஜிடேரியன்
க்ளீன் களி, லெட் களி,
ஃப்ளைட் லைஸ்,
ஷ்ளிம்ப் என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.
''அப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கீதானு ஓடிடலாமே''ன்னால் மகன்
கேட்கவில்லை.
அவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.
மம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் கொண்டு போனாள்.
பப்பா  வெஜ் ஒரு டிக்
பேபி? நோ நோ.
மிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.
ஓகே:)
எல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.
க்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.🙁
காரம் குறைக்கலாம்.
லெமன் க்ராஸ் (விடுதியின்)நு பெயர் அழகு. 
கொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.:)
சந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.:)
டிஸ்கி. Every one else enjoyed their food See less


Monday, May 25, 2026

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன்
15.5/1996
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்




மகளின் திருமணத்தின் போது எடுத்த படம்.  சிங்கம், வலது பக்கம் பெரிய தம்பி முரளி, இடது பக்கம் சின்னத்தம்பி ரங்கன்.


அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன்.

1965 வாழ்வை மாற்றிய படம்.
2002  தந்தையும் மகனும்.முகங்கள் தான் மாறி விட்டன:)

 வல்லிம்மா:)

AI   வல்லிம்மா:)






 முதல் படம் அம்மாவும் அவருடைய தோழியும். இரண்டாவது நானும் என் தோழிகளும், இடமிருந்து வலமாக மயிலி, வத்சலா, ஆண்டாள் ,பத்து என்ற பத்மா.

சிங்கம் தன் தோழர்களுடன் லண்டன் 1962


 கோவிந்தா கோவிந்தா.

தாத்தாவும் பேரன்களும் 2011 மெரினா.
Thank you ChatGpt.  





Sunday, May 24, 2026

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.

வல்லிசிம்ஹன்

293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம்

உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார் 

 சம்சாரம் ஒரு சாகரம்னு தெரியும்.
நம்ம சம்சாரம் எல்லாம் சாகரத்தைத் தாண்டி இருக்கிறதுனால் ஒவ்வொரு சாகரத்தையும் தாண்டிப் போய்த்தான் சம்சாரத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

எங்க சம்சார சாகரத்தில லேட்டஸ்ட் ஆகப் படகில் குடியேறிய குட்டிப்பாப்பா
 ஒருவர் துபாயில் இருக்கிறார்:)

அவரைப் பார்க்கவும் கொஞ்ச நாட்கள் கொஞ்சவும் ,
சென்னையிலிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


இப்பத்தான் திரும்பி வந்தோம். என்ன, ஒரு எட்டு மாதம் ஆகிறது.
மறுபடி வீட்டுக்காவல்,மின்சார,தொலைபேசி கட்டண ஏற்பாடு என்று ஒரு சுத்து போக வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த ஈசிஎஸ் இதைப் பற்றித் தெரியாதான்னு நீங்க கேக்கலாம்.
இன்னும் அவ்வளவு முன்னேறவில்லை நாங்க.:) (2013க்குப் பிறகு எல்லாம் மாறிவிட்டது)


உண்மையான ரிடையர்டு வாழ்க்கை நடத்துவது நான். 
சுறுசுறுப்புக்கு இன்னோரு பெயர் சிங்கம். ஒரு இடத்தில உட்காருவேனா என்பது போல் பார்வை.

'சும்மா இரு'ன்னு யாரோ எப்பவோ அதட்டுப் போட்டதில் உட்கார்ந்தவள் 
தான். இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.!

இதெல்லாம் சரிவருமா?. இயங்கினாத்ததானே உலகம்.
நானென்ன தக்ஷிணா மூர்த்தியா.!

கண்ணை மூடித் தியானம் செய்துகொண்டால் எல்லாம் நடந்துவிடுமா.
அவர் சங்கல்பம் அவருக்கு எல்லாம் ஓடும்,ஆடும்.:)

நமக்கு நாமதான் ஓடணும்,
வேலை செய்யணும்.இப்படியாகத்தானே நாம் சும்மா 
கணினில ,இணையத்தில,வலைப் பதிவில
மொக்கை போடுவது,
இதைப்
பிடிக்காதவர்கள் செய்த ஏற்பாட்டினால் மீண்டும் புறப்படுகிறது க்ராண்ட்பேரன்ட்ஸ் எக்ஸ்பிரஸ்.:):)))))))))))))))))))))))))))))))))))))))))))))))


எல்லாம் சந்தோஷம்தான். ஆனா இந்த வலைகள் பக்கம் வர முடியுமா என்றுதான் தெரியவில்லை.
நமக்கோ இது புதிதாகத் திருமணம் செய்த தம்பதிகள் மாதிரி இணையத்தோடு
உறவாடும் பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது!
 காலங்கார்த்தாலேனு ஆவர்த்தனம் ஆரம்பித்தால்,குளியல், உணவு,
குட்டித்தூக்கம், வங்கி,கோவில் இத்யாதிகளுக்கு நடுவில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிக்காவிட்டால், பதில் போடாவிட்டால்.......
என்னவோ சாப்பிடாவிட்டால் யாருக்கோ கைகாலெல்லாம் பறக்குமாமே:)
அப்படி ஆகிப் போகிறது.!!

ஏதோ தமிழ்மணத்தில சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலேயும் ஆகிவிட்டது.
தத்தித் தத்தி 300 பதிவுகளாவது போட்டு விடலாம், அப்புறம் மீண்டும்
ஆட்டம் ஆரம்பிக்கலாம்னு பார்த்தால், நடுவில உனக்காச்சு எனக்காச்சுனு பேத்தி பிடித்து இழுக்கிறார்.

நாம் நம் தனித்துவத்தை எப்பவும் விடக்கூடாது இல்லையா.
மீண்டும் பார்க்கலாம்.




Friday, May 22, 2026

. தயிர் சாதம். 2600.

   எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.




முன்பு ஒரு பதிவில் , 
எங்கள் வீட்டில் பாட்டி செய்யும் முறையாகத்
தயிர் சாதம் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.
   பால் ,வெண்ணெய், தயிர் எல்லாம்
சேர்த்து ஒரு நரசிம்ம ஜயந்திக்கு  சூடான
தயிர் சாதம் பிசைந்த  ஞாபகம்.
மே  1982

எங்கள் வீட்டு நரசிம்ம சாமிக்கு  ஆராதனம் சாயந்திர வேளை. அப்பதானே அவதாரம் செய்யணும்:))))))

பாட்டி மதியம் 12 மணிக்கே கரியடுப்பில்
வெண்கலப் பானையை வைத்துவிடுவார்.
அவருடைய எடுபிடி நான் தான்.  மண்டை வெல்லத்தை உடைத்து
தூள் செய்து ஏலக்காயையும் அதனுடன் இணைத்துக் 
கொடுத்தால் மாமியார் பானகம் தயார் செய்வார்.
அரிசியைக் களைந்து 
இருவரிடமும் ஒப்படைப்பேன்.
மாமியாருக்கு 66 வயது, பாட்டிக்கு 88 வயது. எனக்கு 34 வயது:)

பாரிஜாத சமையலறை  கொதிக்கும். மே மாத வெய்யில்  
தாக்கும். கரியடுப்பில் சமைப்பதுதான் ஆசாரம் பாட்டி எண்ணம்.
என் மாமியாருக்கோ (பாவம்) டயபெதிஸ் ஆரம்ப நிலை. 
பசி தாங்காது. இந்த ஆத்மாவின் பொறுமையை
மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

நரசிம்ம ஜயந்தி என்றால் காலையில் மட்டும் அரிசி உப்புமா
பலகாரம். பிறகு பூஜை முடிந்த பிறகு 6 மணிக்குத் தான் உணவு.

பாட்டிக்குச் சுடச் சுட தயிர் சாதம் சாப்பிட வேண்டும்.
ராஜச குணம் . 
அடுப்பில் சாதம் ஆனதும் கீழே இறக்கிக் கஞ்சி
வடித்து...........பாலும்  (ஆலிவர் ரோடு பால்காரர் கறந்து கொடுத்தது,)
வெண்ணெயும்( ஒரு கிண்ணம்) சேர்ப்பார். தனியாக உறை
குத்தி வைத்திருந்த கெட்டித் தயிரில் ஒரு கரண்டி . அவ்வளவுதான்.
எல்லாம்  கலந்ததுதான் தாமதம். நீளக்கரண்டியில் நெய்யில் பொரித்த உலர் திராட்சை,முந்திரிப்பருப்பு  இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை
அனைத்தையும்  ,கலந்து தயிர் சாதம் தயார்.:)

பாட்டி கை கூப்பிய படி, ஆராதனை செய்பவர் வரும் வரை காத்திருப்பார்.
அவரும் எல்லா வீட்டுக்கும் போய்விட்டு அவசரமாக
உள்ளே நுழைவார். 

நரசிம்ம கோஷம் வீடு நிறையும். அந்தி சாயும் வேளையில்
அழகான தெய்வ சான்னித்யம் நிறையும்.
பசியுடன் காத்திருந்த அனைவரின் வயிற்றிலும் அமுதமாக அன்னம் இறங்கும்.

ஆற வைத்து சாப்பிடுபவர்கள்
அசத்தாக இருப்பார்கள்
என்று வேறு சொல்வார்கள்.
மாறாக என் மாமியார் எல்லாமே ஆறி தான் சாப்பிடுவார்.
பாட்டியும் மாமியாரும் வட துருவம் ,தென் துருவம்.

இருவரும் எப்படித் தான் ஒன்றாக இருந்தார்களோ.:)))

அனைவரும் வாழ்க வளமுடன்.

Thursday, May 21, 2026

பாரதி மணி ஐயா.

வல்லிசிம்ஹன்

திருமதி வல்லிசிம்மனுக்கு:

உங்களுடன் இருமணிநேரம் நானே பேசி போரடித்ததில் எனக்கு சந்தோஷம். என் ஒரே
புத்தகத்தைப்படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

புத்தகத்துக்குப்பிறகு நான் எழுதிய மூன்று கட்டுரைகளை இத்துடன்
அனுப்பியிருக்கிறேன். துளசியம்மாவுக்கு தனியாக அனுப்பவில்லை. பகிர்ந்து
கொள்ளுங்கள்.

அன்புடன்,

பாரதி மணி
Bharati Mani

Wednesday, May 20, 2026

குடும்பம் ஒரு கதம்பம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  என் அருமை ரங்கன்.

அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
 கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.

பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
 குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ளை செய்தான்.

1967இல்  எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
  '' ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//''

தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும் 
இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட ''டங்க மாமா.'' இருவருக்கும் ''ர'' நா வராது.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நானும் இன்னோரு தம்பியும் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான். 

திடீரென அப்பா மறைந்த போது நாங்கள் மூவரும்
கடற்கரையோரம் அஸ்தி கரைக்க நின்றோம்.
அப்பொழுது அவன் செய்து கொடுத்த சத்தியம் இது.
 நீ எப்ப வேணாக் கூப்பிடு, இருபது  நிமிடத்தில் உன் வீட்டில்
இருப்பேன்'' இப்போது எல்லாரும் அழைக்க
முடியாத தூரத்துக்குப் போய் விட்டார்கள்.

அடுத்த ஜன்மத்தில் கட்டாயமாக அவர்களைக் கேட்பேன்.
ஏன்  இப்படி விட்டுச் சென்றீர்கள் என்று.

இங்கே பக்கத்தில் இருக்கும் ஒரு பெண், தன் குடும்பத்தில் 
நிகழும் சொத்து தகறாரைப் பற்றிப் பேசும்போது
என் பெற்றோரோ தம்பிகளோ  பணத்தைப் பற்றியே
பேசாமல்  நேர்மையாகப் பாசத்துடன் நடந்து கொண்டார்கள் என்று இப்பவும்
நன்றியுடன் நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்


Monday, May 18, 2026

2012 இல் கூடிய தமிழ்ப் பதிவர்கள் மக்கள் சந்தை. (14 வருடப் பழையப் பதிவு)

வல்லிசிம்ஹன்




Monday, August 27, 2012

வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

வந்துவிட்டோம்
தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா.
விருது வாங்கிய திருமதி ரஞ்சனி
சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற  பெரியவர்கள்
திரு  செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும்
விழா மேடை
வீடுதிரும்பல் மோகன்குமார்


 காத்திருந்து நிகழ்ந்தேறிய  பதிவர் திருவிழாவின்  படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே  என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு  ஒரு     மகிழ்ச்சி.

பதிவர்கள்  அனைவரையும்   சந்தித்த   சந்தோஷம்.

பெரியவர்களை வணங்க முடிந்தது    இன்னோரு ஆநந்தம்.

நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம்.

கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா,  சுபாஷினி
தூயாக் குட்டி,அவள் தம்பி
எல்.கே,
பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி  ,
சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார்  என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம்

அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந்த நன்றி 
மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது நேற்று.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்.
வாழிய பாரத மணித் திரு நாடு.
வந்தே மாதரம்.




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

களியோ களி.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும்  ################################...