Sunday, January 24, 2021
Saturday, January 23, 2021
வாழ்வை நிர்ணயிப்பது .........
வல்லிசிம்ஹன்
எங்கேயோ படித்த வரிகள்.
கடவுள் நமக்கு த்தரும் கொடை
24 தங்க நாணயங்கள்
ஒரு நாள்.
அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம்??என்பது
வார்த்தைகளையும்
நம் மனதையும் நடத்தையையும் பொறுத்தது.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே..////////////
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே..////////////
திருமூலர் திருமந்திரம்.
இங்கே நான் வந்ததிலிருந்து
தேர்தல் ஜுரம் ஆரம்பித்தது. ஆமாம் கடந்த ஒரு வருடமாக
தேவையோ இல்லையொ
நம் காதுகளில் வந்து விழும் வார்த்தைகள். அவன் சரி. இவன் கெட்டவன்.
அவன் வாழ்க்கை இப்படி இருந்தது
இவன் இத்தனை மனிதர்களை அழித்தான்.
இப்படி விரும்பியோ விரும்பாமலோ
கேட்க நேர்ந்தது.
இதில் வேடிக்கை என்ன என்றால் நான் இந்த ஊர்க் குடியுரிமை
இல்லாதவள். எனக்கு ஓட்டு உரிமையும் கிடையாது.
இந்த வீட்டுக்கு ஒருபக்கம் தனியாக வசிக்கும்
நடுத்தர வயது பெண்.
அந்தப்பக்கம் ஒரு பெரிய குடும்பம்.
குடும்பத்தினர் கடந்த ஆட்சியைச் சேர்ந்தவர்கள்.
தனியாக இருக்கும் பெண் இப்போது
வந்திருக்கும் ஆட்சியை ஆதரிப்பவள்.
ஒரு வியாழக் கிழமை .....அன்று குப்பை போடும் நாள்.
நான் மாட்டிக் கொண்டேன்.
இந்த மனிதர் வந்தது நம் கொடுப்பினை.
இனிமேல் அசட்டுப் பேச்சு தொலைக்காட்சியில்
கேட்க வேண்டாம் என்றாள்.
நான் தலையாட்டி வைத்தேன்.
குளிர் அதிகமாக இருக்கவே, மெதுவாக உள்ளே
வந்துவிட்டேன்.என்ன இருந்தாலும் அவர்கள் உண்பது,
குடிப்பது எல்லாம் வேறு வேறு அல்லவா:_))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மாலையில் குப்பைத் தொட்டியை உள்ளே வைக்க வேண்டுமே.
இம்முறை இந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டியின் முறை........
அனியாயத்துக்கு வருத்தப்பட்டார்.
இப்படி ஆச்சுதே. இனிமேல் இடது சாரி ஆட்சி
கெட்டிப்படும்.
நம் கதி அதோ கதி என்றார்.
நமக்கு இடதும் வேண்டாம், வலதும் வேண்டாம்,
மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால்
சரி என்று வந்துவிட்டேன்.
அதுதான் இப்போ இங்க நிலைமை.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
நமக்காவது ஒன்றும் இல்லை.
நாம் இங்கே குடியல்லோம்!!!!!!!
Friday, January 22, 2021
எங்கேயோ கேட்ட பாடல் மீண்டும்.....
எங்கள் ப்ளாக் வலைத்தளத்தில் வெள்ளியிக்கிழமைப்
பாடல்கள்
எங்கள் சேலம் நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்தன.
சேலத்தில் நான்கு ரோட், ஐந்து ரோடு
என்று சாலைகள் சந்திக்கும் இடங்களுக்குப் பெயர்.
அங்கே இருந்து பிரியும் ஒரு இடத்தில் டிவிஎஸ் கிளையில்
சிங்கம் பணி புரிந்து வந்தார்.
திருமணமான புதிது.
புதுக்கோட்டையிலிருந்து வந்த உடன் சின்ன
மாமனார் வீட்டில் இருந்தோம்.
இரண்டு வாரங்களில் பணிமனைக்குப் பக்கத்திலேயே
புது வீட்டைப் பார்த்துவிட்டார்.
எப்பொழுதும் போல் ஊருக்கு எட்டா தூரம்.
ஏன் என்று இப்போது யோசிக்கிறேன்.
சிங்கம் தனிக்காட்டு ராஜா தானே எப்போதும்.!!!
நாலு சகோதரிகளுடன் வளர்ந்ததில்
தனிமையை விரும்பும் ஆணாக இருந்திருக்கிறார்.
எனக்குத்தான் புரிபடவில்லை.
எனக்கு வீடு நிறைய மனிதர்கள் இருந்தால் தான்
பிடிக்கும்.
அந்த வீட்டின் ஜன்னலோரத்தில் ஒரு சோஃபாவும் போட்டு,
பக்கத்தில் தன் நூலகத்தையும் வைத்து,
இசையில் மனம் லயிக்கும் படி ஒரு வானொலியும் வாங்கிக் கொடுத்து
தான் தன் வேலைக்களத்தில்
மூழ்கிவிட்டார்.
ஜன்னல் வழியே தெரியும் சாலையையும், அதற்கும் அப்பால் இருக்கும்
மலைத் தொடர்களையும்,
அந்த மலைத் தொடர்களில் அவ்வப்போது
எரிக்கப் படும் மரங்களின் அக்கினிச் சிவப்பையும்
பார்ப்பேன்.
குன்றின் மேல் ஒரு தனி மரம் என் பார்வையில் படும்.
அதன் பக்கத்தில் ஒரு சிறு வீடும் இருக்கும்.
என் எண்ணங்களில் அந்த வீட்டில் இருக்கும்
தலைவியையும் அவள் குழந்தைகளையும் நினைத்துப்
பார்ப்பேன்.
எனக்காவது அடுத்தாற்போல் ஒன்றிரண்டு வீட்டாராவது இருக்கிறார்கள்.
அந்தக் குடும்பத்தலைவிக்கு யார் துணை?
மகிழ்ச்சிக்கோ , இல்லை அவசிய உதவிக்கோ
யாராவது இருப்பார்களா என்றெல்லாம் மனம்
கணித்துக் கொண்டே இருக்கும்.
அந்த யேற்காடு மலைக்கே ஒரு நாள்
அழைத்துப் போனார் சிங்கம்.
ஏரிக்கரையின் அருகே இருந்த ஒரு
நண்பரின் வீட்டுக்கும் போனோம்.
அந்த வீட்டில் தான் மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்குனர் திரு ராம்சுந்தரம் அவர் மனைவி கலை, மகன்,
மகள் எல்லோரையும் சந்தித்தேன்.
இப்போது அவர்கள் வளர்ந்து திருமணம் முடித்து
அவரவர் குடும்பங்களுடன் சுகமாக இருக்கிறார்கள்.
கலை, தன் கணவரின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதாகக் கேள்விப்பட்டேன்.
இதமான பெண்மணி,
இதெல்லாம் பழங்கதை.
அவர்கள் படத்தின் இசையில் கண்டு
கொண்ட நயம் என்னை வெகுவாக
ஈர்த்தது.
பாடல்களின் அமைப்பு,இந்தி ,ஆங்கிலத்தைத் தழுவினாலும்
பாடலின் வரிகளை எப்படி இதுபோலக்
கச்சிதமாக அமைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக
இருக்கும்.
மேலே பதிந்திருக்கும் இந்திப் பாடல் ஏப்ரில் ஃபூல் படத்தில் லதா மங்கேஷ்கர்
பாடியது.
அதே போல இருவல்லவர்கள் படத்தில் ''அங்கே யேன் இந்தப் பார்வை""
பாடலும் எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஒலிக்கும்.
இதோ இன்னோரு பாடல். '
நூறு வருடங்களுக்கு முன்பே'
என்னும் வரிகளுடன் ஆரம்பிக்கும் ஒரு இந்திப்
பாடல். இதன் பிரதி
''மனம் என்னும் மேடை மேலே'' பாடல். வல்லவனுக்கு வல்லவன். அசோகனும் மணிமாலாவும்
பாடும் பாடல்.
ரசனையில் வல்லவர்கள். நாமும் ரசிக்கலாம்.
National Youth Poet Laureate Amanda Gorman Recites Poem At Biden Inaugur...
22 வயதுப் பெண்ணின் எதிர்கால அனுமானம்.
Wednesday, January 20, 2021
அங்கும் இங்கும் ஓடும் நெஞ்சம்
வல்லிசிம்ஹன்
இங்கேயும் அங்கேயும்.
விசாரம் இல்லாத வாழ்வு ஏது?
அலுத்து விடும் இல்லையா.
நட்புகளிடையே இப்பொழுது அடிக்கடி
கேட்பது இதே கதை.
நடப்பு அப்படி இருக்கிறது.
நம் ஜாதகம் அப்படிச் சொல்கிறது
இப்படிப் போகிறது என்று சொல்பவர்களின்
மீது நம்பிக்கை வைக்க மனம் அலுக்கிறது.
மருந்துகள் கேட்டதும், அவை அந்தரத்தில் விடப்பட்டதும்
தனிக்கதை. பிரபலமான நிறுவனத்துக்கே இந்தக் கதை
என்றால், இதைப் பார்க்கும் போது
நம் நாடு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.
கேட்டால் என்ன ஆச்சு என்றாவது சொல்வார்கள்.
இங்கே நம் சொந்த உடைமை எங்கே என்று
கேட்டால் கூடத் தப்பாம்.
அவர்கள் பேசும் ஆங்கிலமும் எனக்குப்
புரியவில்லை.விட்டுவிட வேண்டியதுதான்
என்ற முடிவுக்கு நானும் மகளும்
வந்து விட்டோம்.
++++++++++++++++++++++
சென்னை வீட்டிப் பார்த்துக் கொள்ளும்
தேவா திடீரென்று வாட்ஸாப்பில் அழைத்து அம்மா,
வீட்டுக் கதவில் கரையான் வந்திருக்கிறது என்றதும் மனதில் திகில்.
பெரியவன் உடனே
கட்டிட மேஸ்திரி ஞானப்பிரகாசத்தை அழைத்ததும்
அவரும் வந்து முழுக்கதவுக்கும் மருந்தடித்து
கதவைக் காப்பாற்றி இருக்கிறார்,.
சின்ன விஷயம் என்றாலும் மழை மிகுந்த நாளில்
தண்ணீர் அங்கே தேங்கியதுதான்
இந்தக் குறை வரக் காரணம்.
மனம் அலைபாய வேறு காரணம் வேண்டாமே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12000 நாட்கள்(40 வருடங்கள்) அலுக்காமல் உழைத்துத் தன் 78ஆவது வயதில்
இந்த நாட்டுக்கு அதிபர் ஆகி இருக்கும் திரு ஜோ பைடனுக்கும்,
திருமதி கமலா ஹாரிஸுக்கும்
இங்கே அனைவரும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் சொல்லிக் கொள்கிறேன்.
நல்லாட்சி மலரட்டும்.
அனைவரும் வளமாக இருக்க இறைவனிடம்
பிரார்த்தனைகள்.
Subscribe to:
Posts (Atom)
-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக இருப்போம். நல்ல மனம் வாழ்க R. Raghupathy, retired manager of Hindustan Levers – Ponds Ltd and longti...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...
-
வல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழவேண்டும். வீடு என்பது ... நினைவுகளால் ஆன சாம்ராஜ்யம். இப்போது இருக்கும் நம் உடல் சென்று ...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். எங்கள் வீட்டு ராணியின் சமையலில் அவியல் ராணி எங்க வீட்டு மெய்க்காப்பாளர், உதவி வேலை செய்...
-
வல்லிசிம்ஹன் தொடர்ச்சி முந்தைய பதிவு பப்லிஷ் ஆக மறுத்தது . இதோ இன்னொரு எழுத்து. இந்தப் பாடலைப் படித்துக் காண்பிக்கவும் சரியான நேரம...
-
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 80 ஆம் பிறந்த நாள் (சிங்கம்) 2010 இல் மயிலையில் தோழர்கள் தோழிகள், உறவினர்கள் மத்தியி...
