Wednesday, April 22, 2026

திருக்குறுங்குடி பயணம் ,வேரை நோக்கி...........பாகம்3


வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் பக்கம் அமர்ந்திருக்கும் எனது அப்பாவும் பெரியப்பாவும், பின் இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசும் தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அத்தை... எல்லாவற்றிற்கும் மேலாக, காரின் பின்புறம் மெத்தென்ற அந்த 'ட்ரங்க்' பகுதியில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த எங்களின் அந்தச் சிறுவயது குதூகலம்!

"காலங்கள் மாறினாலும், பசுமை மாறாத சில நினைவுகள் நம் மனதில் என்றும் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிமையான பயணத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் பக்கம் அமர்ந்திருக்கும் எனது அப்பாவும் சித்தப்பாவும், பின் இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசும் தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அத்தை... எல்லாவற்றிற்கும் மேலாக, காரின் பின்புறம் மெத்தென்ற அந்த 'ட்ரங்க்' பகுதியில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த எங்களின் அந்தச் சிறுவயது குதூகலம்!

"காலங்கள் மாறினாலும், பசுமை மாறாத சில நினைவுகள் நம் மனதில் என்றும் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிமையான பயணத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.





செவர்லே ஸ்டேஷன் வாகன். நாங்கள் மூவரும் குட்டிப் பொண்ணும்
மிக சுகமாகப் பயணம் செய்த வண்டி. இந்த  டிரன்க்(நம்மூர்ல டிக்கி சொல்லலாம். அதுக்கு இங்க வேற அர்த்தம்)  தூங்க , சாப்பிட மிக வசதி.
இரண்டு பகுதிகளாகக் கதவு. கீழ் பாதி மூடி மேல் பாதி திறக்கலாம். ஆனால் தாத்தாவுக்கு அது பிடிக்காது. கார் கிளம்பியதும் முழுசாக மூடச் சொல்லிவிடுவார். எங்கள் சின்ன வடிவங்களுக்கு மிகப் பொருத்தம்:)


ஓ. இப்போது ஶ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறோம் இல்லையா.?

அங்கேயே முகம் கழுவி, பின்னல் ஜடை போட்டு பெரிய செண்டு மல்லி சரம் வாங்கி என் தலையை அலங்கரித்தார் அன்பு அம்மா.

பாட்டி, சித்தி,அம்மா எல்லோரும் ஆளுக்கு கொஞ்சம்  பூவைச் சூடிக்கொண்டார்கள். அங்கெல்லாம்  50, 100 என்றுதான் பூக்கணக்கு
சொல்வார்கள்.


திருக்குறுங்குடி காட்சி 1957

அக்ரஹாரம்.

இந்த மல்லிகைப்பூ வாசம் எப்பொழுதும் என்னைத் தொடரும்.

ஶ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பும்போது மதியம் மணி மூன்று ஆகிவிட்டது.
 வழிக்கு உணவாகப் பாட்டி  கொண்டுவந்திருந்த  முறுக்கு, வடை, ஶ்ரீவில்லிபுத்தூர் மடைப்பள்ளியில் கிடைத்த அழகர்கோவில் தோசை
எல்லாம்   எங்களுக்கு  விருந்தாகின.  நடுவில் சித்தப்பாவுக்குத் தலைவலி.அந்த தோசையின் மிளகு சுக்கு மணம் காருக்குள் சுற்றி வந்தது:)

தாத்தாவிடம் எப்பொழுதும் ஜெ அண்ட் ஜெ  டிசேன் மருந்துகள் இருக்கும்.
வழியில் நிறுத்தி ஒரு கோலி சோடாவும் வாங்கிக்
குடித்தபின்னர் சித்தப்பா கண்ணயர்ந்தார்.

இப்பொழுது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் 120 மைலுக்கா
இத்தனை நேரம் எடுத்தது என்று. தாத்தா பாட்டிக்கு ரயிலில் சென்றே வழக்கம்.

இப்பொழுது காரில் செல்வது கொஞ்சம் களைப்பாகத்தான் இருந்தது.
வண்டி மிக சௌகரியம். இருந்தாலும்  மதியத் தூக்கம் விட்டுப் போன களைப்பில் தென்காசியில்  ஒரு  நிறுத்தம்.

குற்றாலம் செல்ல ஆசை இருந்தாலும் ,முடியாத காரணத்தால்
அங்கு நுங்கு, கடலை மிட்டாய் ,அந்த ஊர் அரிசி முறுக்கு என்று
அப்பா வாங்கினார்.  எப்பவுமே சீரியசாக இருக்கும் அப்பா
இந்தப் பயணத்தின் போது சித்தப்பாவுடன் சிரித்துப்  பேசி
மகிழ்வதைப் பார்க்க எங்களுக்கு மிக சந்தோஷம்.




Sunday, April 19, 2026

திருக்குறுங்குடி நோக்கி....2


திருக்குறுங்குடி





வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.


                                                          குறத்தி,  தன் குழந்தைகளுடன்  ,,,,நம்பி கோயிலில்.
மதுரைக்கு அடுத்த  நிறுத்தம்  ஶ்ரீவில்லிபுத்தூர்.  மொத்த குடும்பத்துக்கும்  ஆண்டாள் அம்மாவிடம் அதீதப்  ப்ரேமை.

அதனால்  ஓட்டுனர் மாயாண்டி  ,தாத்தா வின் விருப்பபடி கோவில் அருகே வந்து நிறுத்தினார்.  பலராமா பல பத்திரா சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் கீழே இறக்கப் பட்டோம்:)"வெறும் சீட்டு விளையாட்டு மட்டுமல்ல அது, நாங்களே கார்ட்போர்டு அட்டைகளைச் சதுரமாக வெட்டி, கைப்பட எழுதித் தயாரித்த எங்களின் பொக்கிஷம். மொத்தம் 54 கார்டுகள்! காரில் வரும்போது அந்தச் சீட்டுகளோடு எங்கள் நேரமும், நினைவுகளும் அத்தனை அழகாகக் கழிந்தன."

"அன்றைய காலத்து வண்டிகளில் 'டிக்கி' என்பது ஒரு தனி உலகம். சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட அந்தப் பெரிய இடத்தில், அப்பா மெத்தை விரித்துத் தயார் செய்திருந்தார். எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு மகா சௌகரியமான சொர்க்கம். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த மெத்தையில் அமர்ந்து கொண்டு பலராமா பலபத்திரா விளையாடுவது ஒரு தனி சுகம்."

பலராமா கார்டுகள் நாங்களே தயாரிப்போம். வீட்டுக்கு வரும் எந்த அட்டையும் எங்களைத் தாண்டிப் போகாது.:)
சின்னச் சின்னக் கத்திரிக்கோலால் 3"பை 3" கத்திரித்துக்
கடவுள்கள் பெயர்களை பென்சிலால் எழுதி( பேனாவுக்கு அனுமதி 
இல்லை) மிகுந்த சிரமப் பட்டுத் தயாரிப்போம்.
இங்கே  தாத்தா பாட்டி பற்றி ஒரு சிறு குறிப்பு.

"எங்கள் பாட்டி திருவேங்கடம், தாத்தா ஸ்ரீநிவாசன். பெயரிலேயே மஹா பெயர்ப் பொருத்தம்! அந்தப் பெயர்களுக்குள் அடங்கியிருந்த தெய்வீகமும் அன்பும் தான் எங்களை அந்த 14 ஆண்டுகள் பத்திரமாக அரவணைத்தன. பாட்டிக்குச் சர்க்கரை வியாதி இருந்தும், எங்களைப் பசி ஆற வைப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்."



பாட்டி  கொண்டு வந்திருந்த ஜமக்காளத்தைக் 
கோவில்
முன் பிரகாரத்தில் கடைகளிலிருந்து ஒதுங்கி இருந்த
இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில்
விரித்தார் அப்பா. சித்தப்பா உணவுப் பாத்திரங்களையும் 
பெரிய  தெர்மாஸ்  குடுவையையும்  கொண்டு வர
தண்ணீர்க் குடத்தை நான் தூக்கிவந்தேன். 
முதல்னாளே  தயாரித்து வைத்திருந்த பொல பொல சாதம்.
இரண்டு பெரிய பாத்திரங்களில் புளியோதரையாகவும் , தயிர் சாதமாகவும்   மணம் வீசியபடி இருந்தன. 
கூடவே ஒரு கூடையில் அப்பள வடகங்கள்.  ஒரு சின்ன எவெர்சில்வரில் சம்புடத்தில்  துண்டு போட்ட மாங்காய் ஊறுகாய்

என்று ஒரே  அமர்க்களம் தான்.  அம்மா, சித்தி,பாட்டி அனைவரும் விறகடுப்பில் சமைத்த உணவு.
இந்தத் தாம்பாளம் எங்கே போச்சோ:)
ஸ்ரிவில்லிபுத்தூர் கோவில் பிராகாரம்,   அங்கே இனிமையாகக்
கூவிக்கொண்டிருந்த கிளிகள், பூக்கடைகளின் 
மல்லிகை மணம், யானைக் கொட்டாரத்திலிருந்து வந்த
பிளிறல் சத்தம், கோவில் மேளக் கொட்டு,நாதஸ்வர இசை,
உள்ளே தாயாருக்கு நடக்கும் அர்ச்சனைகள் ஒலிகள்

எல்லாம் மிக இனிமையாக இன்னும் என் மனதில் நிற்கின்றன.
அடுத்தாற்போல்  திருனெல்வேலி பக்கம் நகர வேண்டும்.
மீண்டும் பார்க்கலாமா. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




Friday, April 17, 2026

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1



வல்லிசிம்ஹன்
1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:)
தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்
திடீரென்று அதிகரித்தது.

குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து  வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள்
கொடுத்த செய்திதான் காரணம். 

ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு
இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு
ஒரு வேளை தான்  ஆராதனை நடப்பதாகவும்
 வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது
மனம் வருத்தத்தில்  ஆழ்ந்து விட்டது.(இது  70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.)

ஒரு கிராம சூழல். 

திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா
சித்தி அவரின்  பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....






Tuesday, April 14, 2026

14 th April Parabhava New Year.

வல்லிசிம்ஹன்  

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் 
அருள பிரார்த்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Sunday, April 12, 2026

Asha Bhosle

வல்லிசிம்ஹன்
12th April 2026. 

The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,

Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


திருக்குறுங்குடி பயணம் ,வேரை நோக்கி...........பாகம்3

வல்லிசிம்ஹன், எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே...