Posts

திருக்குறுங்குடி பயணம் 4

Image
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு ஆகிவிட்டது. பக்கத்து வீட்டில் தாத்தாவின் தம்பி வீடு என்பதாலும் அவர்கள் இரண்டு நாட்கள் முன் தான் இங்கே இருந்துவிட்டு சென்னைக்குச் சென்றதாகவும் அவர்கள் கிளம்பு முன் இந்த வீட்டையும்  சுத்தம் செய்து சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்ததாகப் பெரியவர்கள் பேசிக்கொண்ட நினைவு.. அப்போது தெரியுமா, அந்தக் குழுவில் இருந்த பேரனைத்தான் நான் மணம் முடிக்கப் போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது:)))) தோட்டப் பகுதி. (கொல்லைப் புறம்) தாத்தா ஆராதனை செய்யும் நேரம் திருக்குறுங்குடி மலை மேல் நம்பி பயணம் ஆரம்பம். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, நாங்கள் மூவர், இன்னோரு உறவினர். கற்பனை என்னுது. வடிவம் ஜெமினி ஏஐ:) அழகிய நம்பி திருக்கோயில்   அருள்மிகு மலைமேல் நம்பி.  இப்பொழுதும் என் மாமா மகள் இந்த  மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறாள்.  அவளுடைய மூட்டு வலியுடன் ஏறி இறங்கியது நம்பியின் அருளை நம்பி மட்டும். மஹேந்திர கிரி மலையிலிருந்தே அனுமன் இலங்கையை நோக்கித் ...

2006 to 2026 வலைப் பயணம்.

Image
வல்லிசிம்ஹன் இன்று ஏப்ரல் 24. இருபது வருடங்களுக்கு முன் — இதே நாளில் — நான் என் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினேன். அதற்கு முன் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த நான், “ஏன் என் சொந்த மொழியில் எழுதக்கூடாது?” என்று ஒரு நாள் தோன்றியது. அந்த ஒரு எண்ணம்… இவ்வளவு நீண்ட பயணமாக மாறும் என்று அப்போது எனக்கே தெரியாது. இந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய பதிவுகள், நான் சந்தித்த நல்ல மனசுக்காரர்கள், நான் பெற்ற அன்பு — எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம் மாதிரி ஆகிவிட்டது. சில சமயம் நான் எழுதாமல் விலகி இருந்தாலும், இந்த இடம் என்னை மறக்கவே இல்லை. இன்று இந்த நாளில், என்னை வழிநடத்திய சிலரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நியூசிலாந்தில் இருக்கும் என் தோழி —துளசி கோபால், பின்னூட்டப் பேரரசி என்று பட்டம் சூட்டப்பட்டவர்!!! எப்போதும் பிறரைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி, “மற்றவர்களுடைய பதிவுகளுக்கும் சென்று கருத்து சொல்லு” என்று மெதுவாக நினைவூட்டியவர். அவரைப் போல சிலர் இருந்ததால்தான் நான் இந்த உலகில் இவ்வளவு நாள் தங்க முடிந்தது. சில காலம் நான் விலகி இருந்ததால், என் வாசகர்களும் அமைதியாகி விட்டார்கள். அது அவர்களின் தவறு...

திருக்குறுங்குடி பயணம் ,வேரை நோக்கி...........பாகம்3

Image
வல்லிசிம்ஹன், எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் பக்கம் அமர்ந்திருக்கும் எனது அப்பாவும் பெரியப்பாவும், பின் இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசும் தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அத்தை... எல்லாவற்றிற்கும் மேலாக, காரின் பின்புறம் மெத்தென்ற அந்த 'ட்ரங்க்' பகுதியில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த எங்களின் அந்தச் சிறுவயது குதூகலம்! "காலங்கள் மாறினாலும், பசுமை மாறாத சில நினைவுகள் நம் மனதில் என்றும் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிமையான பயணத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் ...

திருக்குறுங்குடி நோக்கி....2

Image
திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தைகளுடன்  ,,,,நம்பி கோயிலில். மதுரைக்கு அடுத்த  நிறுத்தம்  ஶ்ரீவில்லிபுத்தூர்.  மொத்த குடும்பத்துக்கும்  ஆண்டாள் அம்மாவிடம் அதீதப்  ப்ரேமை. அதனால்  ஓட்டுனர் மாயாண்டி  ,தாத்தா வின் விருப்பபடி கோவில் அருகே வந்து நிறுத்தினார்.  பலராமா பல பத்திரா சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் கீழே இறக்கப் பட்டோம்:) "வெறும் சீட்டு விளையாட்டு மட்டுமல்ல அது, நாங்களே கார்ட்போர்டு அட்டைகளைச் சதுரமாக வெட்டி, கைப்பட எழுதித் தயாரித்த எங்களின் பொக்கிஷம். மொத்தம் 54 கார்டுகள்! காரில் வரும்போது அந்தச் சீட்டுகளோடு எங்கள் நேரமும், நினைவுகளும் அத்தனை அழகாகக் கழிந்தன." "அன்றைய காலத்து வண்டிகளில் 'டிக்கி' என்பது ஒரு தனி உலகம். சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட அந்தப் பெரி...

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1

Image
வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து  வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள் கொடுத்த செய்திதான் காரணம்.  ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு ஒரு வேளை தான்  ஆராதனை நடப்பதாகவும்  வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது மனம் வருத்தத்தில்  ஆழ்ந்து விட்டது.(இது  70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.) ஒரு கிராம சூழல்.  திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா சித்தி அவரின்  பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....

14 th April Parabhava New Year.

வல்லிசிம்ஹன்   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன்  அருள பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

Asha Bhosle

Image
வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,