Monday, June 15, 2026

மின்சார சம்சாரம்...2007

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  2007 செப்டம்பர்.

 இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து
 ஸ்விஸ், துபாய் டேரா போட்டு ,
சென்னை வர 10 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த இடைக்காலத்தில்
 எங்க வீட்டில   ஒரு எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.
இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.

இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.
சரியான சம்பல் பூனை:))

பத்து மாதங்கள் கழித்து வீட்டுக்குள் நுழையும் போது
இருக்கும் பிரச்சினைகளில் இந்த மின்சாரப் பிரச்சினையும் உண்டு
ஊரிலிருந்து
வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.
எனக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்
பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) 
தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.



























மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. 
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு
மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் . அது அப்படித்தான்:)
இப்போது எல்லாவற்றையும்  சரி செய்தாச்சு..

இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலயும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை...
 அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா 
உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும்  தொடாமல் தாவினார்கள். அவர்கள் போட்ட
சத்தத்தைவிட
இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)
அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் 
கிறீச்னு சத்தம் போட்டு ஓடி  விட்டான்.
என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது 
ஸ்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.

ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் (வழுக்காமல்), மெல்ல போயி மெயின் போர்டின் (தடித்த) ஸ்விட்சை 
அணைத்தோம்.
(இப்போது இருக்கும்  புது அறை அப்போது இல்லை)

பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,
ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீரிஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது பாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:))
இந்த மின் விளையாட்டில் எலி பெரிய பயில்வான் தான்!!!! வின்னர்.



Saturday, June 13, 2026

அழகு ரசிப்பதற்கு

வல்லிசிம்ஹன்
அனைவரின் நலனுக்கும் பிரார்த்தனைகள். 
இரண்டு வாரங்களாக எங்கள் ஊரில் மிரட்டும் மழை.

உங்க வீட்டு எங்க வீட்டு மழை இல்லை. பத்து மைல்கள் தள்ளி டொர்னெடொ தட்டி  விட்டுப் போனது. 

மழை வருவதைச்  சொல்லும்  சானல் அலறிக் கொண்டே இருந்தது. நான் தான்
 தூறல் போட்டாலே அடித்தளத்துக்குச் சென்று விடுவேனே:) பேரன் வீட்டிலிருப்பதால் உணவு நம்மத் தேடி வந்திவிடும். 
கொஞ்ச நேரம் காரம்போர்டும் என்னுடன் விளையாடிச் செல்வான். விசடுமுறையில் கூடப் படிக்கும். வகை அவன்.
நான் என் டிவியில் பாட்டுகள் க்ரேசியின் டிராமாக்கள்

சோ அவர்களின் பேச்சு என்று பொழுதைக் கழிப்பேன். 
 உயர் ரத்த அழுத்தம் உடல் தள்ளாட்டத்தையும். கொண்டு வந்திருக்கிறது:) 

பார்க்கலாம்.   வலைப் பதிவுகளில் அருமையாக விஷயங்களைப் பதிந்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு. 


Thursday, June 11, 2026

Grand Canyon..............1

வல்லிசிம்ஹன்


முதல் பார்வை


காதல் இருவர் கண்களை மறைக்குமோ மலை முகட்டில் இத்தனை 
உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத்  தனித் தைரியம் வேண்டும். அதுவும்   உருண்டு கீழே விழும் கற்கள் அதிகமுள்ள இடம்:(((

ஹெலி காப்டர்கள் இறங்கும் இடமோ.  சுற்றுலா கைடுகள் காட்டிய இடங்கள்.

எத்தனை வண்ணங்கள்!!!!! அத்தனையும் இயற்கையின் கருணை.


இத்தனை பள்ளங்களிலும் கொலராடோ ஓடி இருக்கிறது. 5000 வருடப் பழசு.
 இறைவன் படைத்த அதிசயம்

Monday, June 08, 2026

நயாகரா 2

வல்லிசிம்ஹன்

நயாகராப் பயணம்  முடிவானதும் வண்டியையும்  தயார் செய்தார்கள். 

முதல் பார்வை

 பக்கத்தில் போனால்.....
    பொங்கும் பிரவாகம்

நீல உறைக்குள் ஒளிந்து அருவியின் அருகாமையை உணர்ந்த அபூர்வ வினாடிகள். நானும், சிங்கமும், மகளும் அருவிக்கு மிக அருகில் சென்று சாரலை அனுபவித்தோம்:) அந்த உணர்ச்சிக்கு ஈடாக
வேறெதையும் சொல்ல முடியவில்லை.



தொடவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு சின்னஞ்சிறு குழந்தை பொம்மைகள்.

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.
ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.
சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.
'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) நாம இல்லாட்ட என்ன நம்ம அபி அப்பா கட்டியிருக்கிறாரே:)
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!
சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.
கீழே வந்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.
மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க சிங்கம். பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து அவன் மழலைப் பேச்சு கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நயாகரா காட்சிகள் மேலே/








Monday, June 01, 2026

நயாகரா 2008 ஆம் வருடம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


கண்ணாமூச்சி ஆடும் நதி  சாலையோடு  வந்து கொண்டிருந்தது.




நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூகிறது.
கரூர் சேலம் பாதைதான் அது.அகண்ட காவேரியில்லிருந்து பிரிந்து வரும் ஒரு அகண்ட வாய்க்கால் தண்ணீர் சலசலக்க பஸ்ஸோடூ கூடவரும்.
அந்தப்ப் பதினெட்டு வயதுக் கனவில் மூழ்கீய நாட்களில் ஒவ்வோருபயணமும் குட்டியோ ,,பெரிசோ
அலுப்பே தட்டாது. 




 மஹா  பெரிய
வாடகைக்காரில் பயணம் செய்து எம்பசி (ஹோட்டல்) ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லி முடியாது:))))))

அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த   ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசூ நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேணுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும்(பான வகையறாக்கள்) என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம்.

 பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.




 Slot machines .Casino in Niagara.

Wednesday, May 27, 2026

களியோ களி.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

துபாய் நாட்கள்.



எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் 
##########################################################
Dubai 2009.
வியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.🙂
ஒரே மகிழ்ச்சி.
ரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ
வெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ

கோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.
வார இறுதியாயிற்றே.!

இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.
அப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.
அது ஒரு தாய் உணவகம்.Thai Restaurant
எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான்.
பாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.
(அய்ய, இன்னோரு பயமா)
மகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,
கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.
நாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(

அப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.
நாசியைத் துளைக்கும் , ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.

அபௌட் டர்ன் செய்திருப்பேன்.
இரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/

அழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி ?
என்றது அந்தப் பெண்.
என்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் மருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்
 அந்தப் பெண்  '.ஒ. வெஜிடேலியன் !!!!!'
இவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.:)

அதற்குள் சிங்கம் தன்னுடைய பூமிங் வாய்ஸில் ஆஙகிலத்தில் ஏதோ ப்ரைட் ரைஸ் என்றாரா. 
அவள் நோட் பேப்பரைக் கையில வைத்துக்கொண்டு எழுதத்தெரியாத 
குழந்தை மாதிரி விழித்தாள்.
மீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்
வெஜிடேரியன்
க்ளீன் களி, லெட் களி,
ஃப்ளைட் லைஸ்,
ஷ்ளிம்ப் (!)என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.
''அப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கீதானு ஓடிடலாமே''ன்னால் மகன்
கேட்கவில்லை.
அவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.
மம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு போனாள்.
பப்பா  வெஜ் ஒரு டிக்
பேபி? நோ நோ.
மிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.
ஓகே:)
எல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.
க்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.🙁

காரம் குறைக்கலாம்.
லெமன் க்ராஸ் (விடுதியின்)நு பெயர் அழகு.  வாசனைக்குக்
கொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.:)
சந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.:) அங்கிருந்து சங்கீதா சென்று பஜ்ஜி, போண்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனோம்.
டிஸ்கி. Every one else enjoyed their food .


Monday, May 25, 2026

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன்
15.5/1996
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்




மகளின் திருமணத்தின் போது எடுத்த படம்.  சிங்கம், வலது பக்கம் பெரிய தம்பி முரளி, இடது பக்கம் சின்னத்தம்பி ரங்கன்.


அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன்.

1965 வாழ்வை மாற்றிய படம்.
2002  தந்தையும் மகனும்.முகங்கள் தான் மாறி விட்டன:)

 வல்லிம்மா:)

AI   வல்லிம்மா:)






 முதல் படம் அம்மாவும் அவருடைய தோழியும். இரண்டாவது நானும் என் தோழிகளும், இடமிருந்து வலமாக மயிலி, வத்சலா, ஆண்டாள் ,பத்து என்ற பத்மா.

சிங்கம் தன் தோழர்களுடன் லண்டன் 1962


 கோவிந்தா கோவிந்தா.

தாத்தாவும் பேரன்களும் 2011 மெரினா.
Thank you ChatGpt.  





மின்சார சம்சாரம்...2007

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்   2007 செப்டம்பர்.  இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து  ஸ்விஸ், துபாய் டேரா ...