பாலைவன ரோஜாக்களுக்கு ஏது வாசம்
என்று நினைத்தே காமிராக்களுக்குள் அடைத்தேன்.
மக்கள் தொலைக்காட்சியில்
வேறுவிதமாக விளக்கினார்கள்.
இந்த ரோஜாக்களுக்கும் வித வித வாசனைகள் உண்டாம்.
அதற்காக ஒரு இணைய தளமும் இருக்கிறது.
www.adeniumsindia.com
இதில் இந்த அழகான செடிகளை வளர்ப்பது, உரமிடுவது,ஒட்டுச் செடிகள்
உற்பத்தி செய்து பலவித வாசனைகளைக் கொண்ட
மற்றவகை ரோஜாக்களை உற்பத்தி செய்வது பற்றியும்
விரிவாக க் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நம் பதிவர்களில் பலருக்கு தோட்டக்கலையில்
மிகவும் ஆர்வம் இருப்பது தெரிந்ததே.
அதுவும் டெல்லி, ஜெய்ப்பூர் பகுதிகள்,
அஹமதாபாது போன்ற வெயிலும் குளிரும் அதிகமாக
இருக்கும் இடங்களிலும் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும் விவரித்துச் சொன்ன அம்மா, மற்ற இடங்களிலும் வளர்க்க உபயோகமான குறிப்புகளைக் கொடுத்தார்கள்.
இந்தப் பதிவும் நண்பர்களுக்குப் பயன்படும் என்று
நினைக்கிறேன்.
பஞ்சகல்யாணிக்கு என்ன வேலை என்று கேட்காதீர்கள். அது படிக்க வந்திருக்கிறது செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து.:)



