Showing posts with label பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road. Show all posts
Showing posts with label பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road. Show all posts

Tuesday, August 20, 2019

பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3

Sea to Sky Highway



வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

பயணத்தின் ஏழாம் நாள்   பகுதி 3
 Vancouver லிருந்து  கிளம்பி  பிரிட்டிஷ் கொலம்பியாவின் 
கடலோரமாகச் செல்லும்  கடற்கரை  சாலை புகழ் பெற்றது.
ஏழாம்  நாள்   காலை 
விடுதியின்  காலை உணவை முடித்துக் கொண்டு 
கிளம்பினோம். கனடா நாட்டின் இயற்கைக்கு காட்சிகளும்  மிதமான உஷ்ணமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
காலையிலே மதிய உணவுக்கான  ஏற்பாடாக கத்திரிக்காய்  சாதமும்  பலவிதமான  நொறுக்குத் தீனிகளும்    கூ டவே ஏறின. 
மாப்பிள்ளையும், பெரிய பேரனும் பழவகைகளை  சிறிய அளவில் நறுக்கிக் கொண்டு  ஐந்து பைகளில் போட்டு வைத்தார்கள்.
Image result for sea to sky highway
இரு வழிச்சாலை கள் நிறைய விரையும்  பலவித  வண்டிகள் 

முதல் நிறுத்தம்  இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய  வரை  நீல நிறம் தான்.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்  நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது.
   ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை  மறைத்தாலும்  வெண்மேகங்கள் பலவித வடிவங்களில்  எங்களைத் தொடர்ந்தன.

Image result for sea to sky highway
ஒரு  இடத்தில்  நிறுத்த பலமைல்கள் போக வேண்டி இருந்தது 
மலையும்  மடுவும்
பாறைகளாகச் சில மலைகள்.  பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள்  என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே  போகும் சாலையிலிருந்து 

கீழே  தெரியும்  சாலை. என்று  பல காட்சிகளை 
காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் 

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...