வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நவராத்திரி நல் நாட்கள்
+++++++++++++++++++++++++++++++
சின்ன கொலு, பெரிய கொலு, தெய்வங்கள் கொலு,
நாகரிக கொலு,
தீம் கொலு,
வீடு முழுக்க கொலு.
கடித அழைப்பு, ஈவை ட் அழைப்பு,
நாம் கடைகளில் போகும்போது சட்டென நினைவு வந்தவர்களாக
அழைக்கும் அழகு.
இந்தியா செல்லும்போதே கொலு ரிட்டன் என்று சொல்லப் படும் பரிசு பொருட்கள் வாங்கி வந்து விடுகிறார்கள்.
ஒன்பது நாட்களில் நாலு நாட்களாவது வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்லும்படி
சாப்பாடு. ஒரு விருந்துக்கு 25 நபர்களாவது கலந்து கொண்டு
விவரங்கள் பரிமாறிக்கொண்டு
படங்கள் எடுத்து,அடுத்த நாளே முக நூலிலே யோ
வாட்சாப்பிலோ வந்து குவியும்படி
இந்த ஊர்மக்கள் கொண்டாடும் விதமே
அலாதி தான்.
நம் ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி நாயகிகள் வந்திருக்கும் போது வாசலை மூடக் கூடாது
என்பது பாட்டியின் கட்டளை.
உறவுகளும் அதிகம் என்பதால், அதிக தேங்காய்கள், வெற்றிலை,
மஞ்சள், பாக்கு, பழம் ,பூ என்று வீடே மணக்கும்.
மாமியாருக்கு ,சரஸ்வதி பூஜை அன்று ஒன்பது பெண்களுக்கு
கட்டாயம், ரவிக்கைத்துணி வைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுவும் அவர்கள் தைத்துப் போட்டுக் கொள்ளும்படி
கொடுக்க வேண்டும்.
என் சின்ன மாமியார் வீட்டில் அதுவே புடவையாகிவிடும்.
எனக்கு ஒன்று கட்டாயம் உண்டு.
ரங்காச்சாரி கடையும் ,நல்லி யுமாக வந்து குமியும்.
வீட்டில் லட்சுமி பூஜை தினமும் உண்டு.
அதற்காகவே ஒரு சுண்டலும், ஒரு இனிப்புமாகத் தினம் தயாராகும்.
வெள்ளிக்கிழமை என்றால் அப்பம் , சனிக்கிழமை என்றால் எள்ளுசாதம்,
இவ்வளவு நாட்களையும் தாண்டி விஜயதசமி அன்று நான் எல்லோர் வீட்டிற்கும் போய் வருவேன்.
இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும், அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.
நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நவராத்திரி நல் நாட்கள்
+++++++++++++++++++++++++++++++
சின்ன கொலு, பெரிய கொலு, தெய்வங்கள் கொலு,
நாகரிக கொலு,
தீம் கொலு,
வீடு முழுக்க கொலு.
கடித அழைப்பு, ஈவை ட் அழைப்பு,
நாம் கடைகளில் போகும்போது சட்டென நினைவு வந்தவர்களாக
அழைக்கும் அழகு.
இந்தியா செல்லும்போதே கொலு ரிட்டன் என்று சொல்லப் படும் பரிசு பொருட்கள் வாங்கி வந்து விடுகிறார்கள்.
ஒன்பது நாட்களில் நாலு நாட்களாவது வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்லும்படி
சாப்பாடு. ஒரு விருந்துக்கு 25 நபர்களாவது கலந்து கொண்டு
விவரங்கள் பரிமாறிக்கொண்டு
படங்கள் எடுத்து,அடுத்த நாளே முக நூலிலே யோ
வாட்சாப்பிலோ வந்து குவியும்படி
இந்த ஊர்மக்கள் கொண்டாடும் விதமே
அலாதி தான்.
நம் ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி நாயகிகள் வந்திருக்கும் போது வாசலை மூடக் கூடாது
என்பது பாட்டியின் கட்டளை.
உறவுகளும் அதிகம் என்பதால், அதிக தேங்காய்கள், வெற்றிலை,
மஞ்சள், பாக்கு, பழம் ,பூ என்று வீடே மணக்கும்.
மாமியாருக்கு ,சரஸ்வதி பூஜை அன்று ஒன்பது பெண்களுக்கு
கட்டாயம், ரவிக்கைத்துணி வைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுவும் அவர்கள் தைத்துப் போட்டுக் கொள்ளும்படி
கொடுக்க வேண்டும்.
என் சின்ன மாமியார் வீட்டில் அதுவே புடவையாகிவிடும்.
எனக்கு ஒன்று கட்டாயம் உண்டு.
ரங்காச்சாரி கடையும் ,நல்லி யுமாக வந்து குமியும்.
வீட்டில் லட்சுமி பூஜை தினமும் உண்டு.
அதற்காகவே ஒரு சுண்டலும், ஒரு இனிப்புமாகத் தினம் தயாராகும்.
வெள்ளிக்கிழமை என்றால் அப்பம் , சனிக்கிழமை என்றால் எள்ளுசாதம்,
இவ்வளவு நாட்களையும் தாண்டி விஜயதசமி அன்று நான் எல்லோர் வீட்டிற்கும் போய் வருவேன்.
இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும், அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.
நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.
