Posts

Showing posts from August, 2021

செல்வி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்

Image
வல்லிசிம்ஹன் நளினமும், பக்தியும் அருமையாகக் கலந்த குரலும் தோற்றமும். வளமுடன் வாழ வாழ்த்துகள். மைலாப்பூர்க்காரர் என்பது கூடும் பெருமை.அனபுத் தோழி. கோமதி அரசுவின் வலைத்தளத்தில் பார்த்து இவரைத் தேடினேன். நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.

அந்தக் காலத்துல தூர தேசம் போகும் போது எடுத்துச் செல்லும் நீண்ட நாள் கெட்...

Image
வறுத்த தேங்காய்த் தொகையல்

சர்வம் கிருஷ்ணார்பபணம்.!

Image
கண்ணன் எப்பொழுது நினைத்தாலும் வந்து விடுவான். நாம் தான்  நினைக்க மறக்கிறோமோ என்று தோன்றுகிறது:)அனைவருக்கும் கண்ணன் வந்த நாள் வாழ்த்துகள். எப்போதும்அ வனைக் கொண்டாடு வோம். வல்லிசிம்ஹன்

காலிஃப்ளவர் பொரியல் கிராமத்து சமையல்

Image

ஜில்லென்ற காற்று வந்ததோ...

Image
ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தாரோ , சிறப்பாக்ச் சண்டை  போட்டாரோ தெரியாது. ஆனால் அவர் படங்கள் வெற்றி கண்டன. நல்ல மனிதர் என்று பெயர்  வாங்கினார். மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்களில் வலம் வந்தார். யார் அவரைப் பற்றிப் பேசினாலும்  நல்ல விதமாகவே சொன்னார்கள். பஞ்சவர்ணக்கிளி படத்தில் அவர் ' இரட்டை வேடத்தில் ,ஒரு வில்லனாக  வந்த போதுகூட நம்ப முடியவில்லை:) பூவா தலையா படத்தில் அவர் நடித்த  பாத்திரம்  மிகச் சிறப்பானது. தமிழ் உலகின் அந்த நாளைய கதா நாயகிகள்  அனைவருடனும் நடித்திருக்கிறார். பின்னாட்களில் ரஜினிகாந்த்,கமலஹாசன் இவர்களோடும் நல்ல பாத்திரங்களில்  படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார். இவ்வளவு சுருக்க, கலை வாழ்வில்  ஜொலித்தவர் 61 வயதில் காலமானது மிக வருத்தம்.பிற்காலத்தில் அரசியலில் புகுந்த ஜெயலலிதா அம்மாவுடன் இவர் நடித்த ஆரம்ப காலப் படங்கள் வெகுவாகப் பேசப்பட்டன. அவரது தாராள் குணம், கொடை மனப்பான்மை, இன்னும் அவரது மகன் செய்யும்  மருத்துவ சேவைகளில் வெளிப்படுகிறது. சிங்கமும் இவரும் யேற்காடு படப் பிடிப்புகளில் சந்தித்திருக்கிறார்கள். பிற்கா...

சாம்பல் பூசணி இலை பக்கோடா புதுவிதம்.

Image
பூசணிக்காய் உபயோகம் தான் எனக்குத் தெரியும் இங்க்வ் கொடுத்திருப்பது போல அதன் இலையும் சமையல் ஆகும்  என்று இப்போதுதான் பார்க்கிறேன். இன்னோரு பதிவில் இந்தப் பூசணி இலைகளைப் பறித்துக் கீரை மாதிரி மசித்துச் சாப்பிட்டார்கள்.  குழம்பும் அதுதான். பொரியலும் அதுதான்.  கிராமங்களில் அப்படித்தானே சாப்பிடுகிறார்கள்!! பார்க்க நன்றாக இருந்தது.

குறும்படம்

Image
வல்லிசிம்ஹன் இப்படிக் கூட ஒரு தோழமை தொடங்குமா, ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப் பட வைத்த படம் ஆனால் இயல்பாக இருந்தது. இருவரும் இள வயதுக்காரர்கள். இருவரும் ஏதோ ஒரு துறையில் உயர்ந்து இருப்பவர்கள். பேசத்தெரிந்தவர்கள்.  படத்தின் நாயக, நாயகி இருவரும் பார்க்கவும் அழகாக, கம்பீரமாக இருப்பதும்(அதனால் தானே அவர்கள் ஹீரோ ,ஹீரோயின்!!) ஒருவர் பால் ஒருவர் கவர்ந்திழுக்கப் படுவதின்  காரணம். இதுவே அவனோ அவளோ அந்தச் சூழலில் இருந்து மாறுபட்டிருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்:) பூனே  மும்பை சாலையில் நடக்கும் சந்திப்பு. தன் வண்டி திடீரெனப் பழுது படுவதால் நாயகன், பொதுப் பேருந்தில் ஏற, அங்கு ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும், பன்முக ஆய்வாளினி ரெயினாவைச் சந்திக்கிறான்.  உதயன். விவாதத்தில் ஆரம்பிக்கும் சந்திப்பு நட்பு+ காதலாக மலர்கிறது. KHAMAKHA   என்றால் Agree and Disagree or Strange Arguement என்று பார்த்தேன். ஏதோ ஸ்வரம் பாடுவது போல  இருந்தது எனக்கு. கமகம்... நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Robotics. கண்டுபிடிப்புகள் பிபிசி வழியே..

Image
வல்லிசிம்ஹன்

விட்டல விட்டல பாண்டு ரங்கா. 2400

Image
திருமங்கலத்தில் இருக்கும் போது கோவில்,பஜனைமடம் எல்லாமே அந்த இளவயதுக்கு மிக இனிமையான நினைவுகளில். ஹரே ராம ஹரே கிருஷ்ண பாடல்களும் அங்கே கற்றதுதான். நெருக்கமான வீடுகள், நெருக்கமான மனிதர்கள். ஆன்மீகம்,நற்செயல்  என்று பேதங்கள் இல்லாத ஒரு சமூக வாழ்வு. இப்போது மாறி விட்டதாகச் சொல்கிறார்கள். இரு வழி,நால்வழிப்பாதைகள்  திரு நெல்வேலி வரை செல்கிறது. பலவித மனிதர்களும்,வியாபாரங்களும் கலக்கும் போது வேறு வேறு ஊர்கள் கலந்து விடுகின்றன. கிராமங்கள் நகரமாகிப் பழைய அடையாள்ங்கள் மறைகின்றன். ஆனால் பக்தி மாறாது என்றே நினைக்கிறேன். கண்ணன் கழலே காக்கும்.

சுண்டைக்காயும் சுமை கூலியும்

Image
வல்லிசிம்ஹன் சுண்டைக்காய் மாடவீதியில் இறைபடுமே, இங்கே கிடைக்கவில்லையே என்று ஒரே விசாரம்:) என்னவோ அப்போதெல்லாம் வாங்கி வாங்கி அனுபவித்தது போல.:) இதெல்லாம் ஆவணியில் விற்கும் போது. சுண்டைக்காய்,மணத்தக்காளி, அரி நெல்லிக்காய் என்றும் ,மாங்காய் இஞ்சி, தஞ்சாவூர்க் குடமிளகாய் என்றும் ஊரிலிருந்து வரும். எல்லாம் புரட்டாசி வெய்யிலில்  போட்டு எடுத்து உள்ளே வைக்க வேண்டும். மார்கழி மாசத்துக்குப் பிரயோசனப்படும் என்று  பாட்டி வழி காட்ட நான் செய்து முடித்து அது அதற்கான ஜாடிகளில் போட்டு வைப்போம். இதற்காகவே வரும் பெண் வயிற்றுப் பேரன், "ஆஜி, ஊறுகாயெல்லாம் போட்டியா" நான் பாட்டில் கொண்டு வந்திருக்கேன்  என்று எடுத்துப் போவார். பெரிய குடும்பம் அப்படி எல்லோரும் எடுத்துக் கொண்டது  போக நமக்கு இன்னோரு தடவை  போடுவோம்:) இது தவிர, சுண்டைக்காய் போட்டு சாம்பார், வத்தக் குழம்பு எல்லாம் திகட்டிப் போகும் அளவுக்கு செய்யப்படும். இதெல்லாம் எங்கள் மதுரை சுண்டைக்காய்க்கு ஈடாகாது என்று மனதில் முனகிக் கொள்வேன். மலை சுண்டைக்காயை ,அப்பா டவுன் சந்தைக்குப் போகும்போது வாங்கி வருவார்,. நல்ல பெரிதாகக் கசப்பில்ல...

தைவான் நாட்டின் காட்சிகள் உபயம் சி போ லின்

Image
வல்லிசிம்ஹன் Turtle Island இரண்டு மாதங்களுக்கு முன் ரசித்த நெட்ஃப்ளிக்ஸ்  தொடர் 'ஒன் தௌசண்ட் குட் நைட்ஸ்.' அதிலிருந்து சில தைவான் நாட்டு காட்சிகள். சி போ லின் எடுத்த படங்கள்.

சந்திரபாபுவும் சபாஷ் மீனாவும்!

Image
வல்லிசிம்ஹன்

Madras or Chennai? Why celebrate it? | History Times with Historian V Sr...

Image

உருளைக் கிழங்கின் உலகம்

Image
வல்லிசிம்ஹன் உருளைக் கிழங்கு பெயர் சொன்னாலே போதும்.  சிங்கம் இரண்டு மடங்கு சாப்பிட்டு விடுவார். ஆனால் இங்கே பதிந்திருக்கும்  வித வித உ.கி வகையறா ஒத்துக் கொள்ளாது. பொடிசு பொடிசா நறுக்கி  இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெயில் வதக்கின,( வறுத்ததில்லை) ப்ரௌன் வண்ணத்தில் நல்ல பதத்தில் செய்தால் உள்ளே இறங்கும்.  இதே உ.கியை பொடிமாஸ்செய்து விட்டால்., எல்லாம் சின்னவயசில சாப்பிட்டாச்சுமா. இனிமேல் வேண்டாம்:) இது வழக்கமான பதில் .அதனால் இப்போது இந்தப் பொரியல் வகைகளைச் செய்து பார்க்கிறேன். அதுவும் நிறைய சாப்பிட முடியாது. வாயு வந்து நம்மில் மையம் கொள்வார். கொஞ்சம் இஞ்சித் துகையலையும்  கூடவே  சாப்பிட வேண்டும். இங்கே நல்ல இஞ்சி பெரிது பெரிதாகக் கிடைக்கிறது. தோலுரித்து, சின்னத் துண்டுகளாக்கி, மெந்தியம், பெருங்காயம், கடலைப் பருப்பு, உ.பருப்பு, சிவப்பு மிளகாய் என்று வறுத்துக் கொண்டு, இஞ்சித் துண்டுகளையும் வதக்கி, உப்பும் சேர்த்து  அரைத்தால் சுவையான இஞ்சித் துகையல் தயார்.

ஒரு மழைக்கால வேண்டுதல்.

வல்லிசிம்ஹன் கருணையோடு மழைதர வரும் கரியவாய கருமேகங்காள் அரியதாய திருப் பாசுரங்கள்  அறிய எண்ணும் ஓர் மாலையில்   படிக்க எண்ணிப் பிரபந்தம் பிரிக்கக் கொடும் இடி கொண்டு கூர்மழை பெய்தால் அடிமை நான் அரியை அறிவது எக்கணம்? கடுமழையால் எம்மை வாட்டாமல் அரி அவன் புகழ் நான் பாட அருள் கூர்ந்து இக்கணம் கடுகிச் செல்கவே வேறெங்கிலும். இது மழை நிற்கப் பாடியது.கவிதை என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

| தக்காளி ஊறுகாய்/கிராமத்து சமையல்

Image
    இந்தப் பெரியம்மாவின் வெள்ளை சிரிப்பும், அவரைப் படம் எடுத்து இணையத்தில் வெளியிடும்  பெண்ணின் மரியாதையும் , திரு நெல்வேலிக்காற்றும், பசுமையும் என்னைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன. அசைவ சமையலை விட்டு விட்டு மற்ற   சமையல்களை வெகு நேர்த்தியாகச் செய்யும் விதம் மிக இனிமை. இதற்காக வயல் வெளியில் ஒரு  செட் போட்டு, சிமெண்ட் தளம் அமைத்து அவர்கள் செய்யும் நேர்த்தியும் அதற்குப் பயன்படுத்தும் அம்மி, கல்லுரல், மாவு அரைக்கும்  உரல் எல்லாமே பழக்கப் பட்டவைகளாகத் தோன்றுகின்றன. வீடியோ எடுப்பவரும் சுற்றுப்புறத்தை அழகாகக் காமிராவில் பதிகிறார். பறவைகள் வித விதமாக மரக்கிளைகளில் உட்கார்ந்து சமையலைப் பார்க்கும் அழகும் தேங்காயைக் கொறிக்கும் அருமையும் சிறப்பு.

மான் என்று.......

Image
வல்லிசிம்ஹன்  வேட்டையாடும் சீசன் என்று செப்டம்பர் மாதம்  சில தேதிகள் குறிக்கப் பட்டிருந்தன. ஏன் இப்படி என்று மனம் கலங்கியது. இந்த ஊரில் குளிர்காலம் கொடுமையானது. எலும்பும் ரத்தமும் உறையும் குளிர். எங்கெங்கோ மலைகளில் வாழும் மக்கள் குளி வரும் முன்னாலயே வேட்டையாடி  மிருகங்களின் உடலைப் பதம் படுத்தி வைப்பார்களாம்.  பனியில், குளிரில் சென்று உணவு தேட முடியாத  போது இந்த இறைச்சியை மூன்று நான்கு மாதங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வார்களாம். பழைய கதைகளில் படித்திருக்கிறேன். அப்போது எனக்கும் இப்போது இங்கே நடமாடும் மான் களுக்கும் சம்பந்தம் இல்லாமல்  இருந்தது.  இப்போது வழிதவறி வந்துவிடும் சில மான்களின் மருட்சி மனதை மிரட்டுகிறது. இவைகள் காக்கப் பட்ட காடுகளில் வாழும் மான்கள். கொஞ்சம் தொலைவில் ஹண்டிங்க் க்ரௌண்ட்  இருக்கும் இடங்களில் நம் காதுகளில் சத்தம் விழாத தூரங்களில் வேட்டை நடக்கலாம். நாங்கள் இருக்கும் இடத்தில் இது கிடையாது. ஆனால் 30 மைல் தொலைவில் ,நகரத்தில்  மனிதர்களே வேட்டையாடப் படுகிறார்கள். தினம் இரவு ,உறங்கப் போகும் முன்னால் சில நாட்கள் நகர செய்திகளைப்...

பயணங்கள் வீட்டிலிருந்து கொண்டே...

Image
வல்லிசிம்ஹன்  ரயில், விமானம், பேருந்து என்று  பயணங்கள் மிக மும்முரமாக நடந்த காலம், குழந்தைகள் உடன் தான். அவர்களுடைய பள்ளி விடுமுறையை ஒட்டி   சென்ற இடங்கள் மறக்க முடியாதவை. 1974இல் சொந்தமாக நாலு சக்கர வண்டி வந்ததும் ரயிலில் போவது கூட நின்று போனது. பிறகு பாஸ்போர்ட் எடுக்கும் வேலை. விசா வாங்கும் நேரம்.அப்படிச் சென்ற  காலங்களில்  ஆறு மாதம் வெளியூர், ஆறு மாதங்கள் உள்ளூர் என்று ஆனது. சிங்கம் இருக்கும் வரை மோட்டார் பைக்கில் தொடர்ந்து, அதன் பிறகு அவர்கள் வெளியூர் சென்ற போது விமானப் பயணங்களாக தொடர்ந்தது. இப்போது மும்முரமாக பழைய பயணங்களை மனதில் நிறுத்தி, இணையத்தில் பார்க்கும் வேலை. அவற்றில் சில இங்கே பதிகிறேன்.

பாட்டிம்மா.தாத்தா நினைவுகள்

Image
  எத்தனையோ நல்ல குறும்படங்கள்  இணையத்தில்  இருப்பதை, வேறு எதையோ தேடும்போது பார்க்கக் கிடைத்தன. நான் கண்டு மகிழ்ந்ததை  இங்கே பகிர்கிறேன். எளிமையான இனிமையான கருத்துகள். நல்ல நடிகர்கள். இத்தனை அருமையாக நடிக்க வைத்த இயக்குனர்கள், கதை எழுதியவர்கள் எல்லோரையும்  மனம் நிறைய அன்பு கொண்ட மனிதர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சி. வயதானவர்கள் என்றும் ரசிக்கப் பட வேண்டியவர்கள். அவர்களைத் தனிமை அண்டாத படி கவனிக்க வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு இருக்கிறது. அதேபோல் இளைய தலைமுறையை மதித்து சீராட்டுவதும் முதியோர் கடமை. சின்ன வயதில் அம்மா வீட்டில் இருப்பதைக்  கண்டு சற்றே பொருமல். அம்மா ஆனபிறகு வீட்டிலிருக்கும் பாட்டி மாமியாரைக் கண்டு ஆச்சரியப் படுதல், இப்போது அப்பாடி நாமும் கடைசி கட்டத்துக்கு வந்து விட்டோம் என்ற நிம்மதி. அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.

நம்பிக்கை தரும் எண்ணங்கள்.

Image
வல்லிசிம்ஹன்  இங்கே எல்லோரும் அவரவர் மாமியார், அம்மா என்று கண்டு வருவதற்காக  இந்தியா சென்றிருக்கிறார்கள்.   மகளின் நட்புகள் செல்லப் , பின் தங்கி இருப்பவர்கள் கணவர்கள். எல்லோருக்கும் சமைக்கத் தெரியும். இருந்தாலும் மகளும் மற்றவர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்களுக்கு  நிறைய குழம்பு,கூட்டு,ரசம் என்று  செய்து வீட்டு வாசலில் வைத்து விடுகிறார்கள். நேற்று அதுபோல நோய் வாய்ப்பட்டுத் தெளிந்து வரும் ஒரு குடும்பத்துக்கும் கொண்டு போய்க் கொடுத்தோம். கடவுள் நம் சோதனையை எல்லாம் தீர்த்து நல் வழிக்கு' அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை அந்தக் குடும்பத்தில் பார்த்தேன். +++++++++++++++++++++++++++++++++++++++  ஒவ்வொரு குடும்பங்களிலும் தாய் தந்தை மகன் மகள் என்று  எல்லோரும் வேலைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய நாள் வந்துவிட்டது. இத்தனை நாட்கள் அடங்கி இருந்த தொற்றும் வேறு வடிவம் கொண்டு வெளியே வருகிறது. முகக் கவசம் போடு என்று அரசு சொன்னாலும் போட மாட்டேன் என்று சொல்பவர்களும்.  தடுப்பூசி கெடுதி என்று பிரச்சாரம் செய்பவர்களும்  இருக்கிறார்கள். இதற்கும் இறைவனே கதி என்று ...

யாராக இருக்க விரும்புகிறோம்?

Image
வல்லிசிம்ஹன் சுதந்திரம் என்பதை நாம் எப்படித் தீர்மானிக்கிறோம்.? எல்லாச் சலுகையும் கொடுத்து எங்கும் போகக் கூடாது என்பது சுதந்திரமா. என்னுடையை சுதந்திரம் எனக்கு மட்டும் என்று எந்த இன்னல் வந்தாலும்  தாங்கித் தனித்து நிற்கத் தைரியமா. or..... உறுதியாகக் கட்டப் பட்ட நான்கு  சுவர்களுக்குள் எல்லா சுகங்களும் கொடுக்கப் பட்டு பாதுகாப்போடு இருந்து நம் சுதந்திரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கலாமா? இவை சுதந்திர நாள் சிந்தனை ஓட்டங்கள். உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் | ஜெயகாந்தன் | சிறுகதை | பாரதி பாஸ்கர் குரலில் |...

Image
ஆங்கிலக் காவியம் ஒன்றில்  'ஆயிரம் கப்பல்களைக் கடலில் இறக்கிய முகம்' என்ற பாராட்டு ஒரு கதா நாயகிக்கு உண்டு. ஹெலன் ஆஃப் டிராய். நம் ஹீரோ ஜயகாந்தன் சார் பல மனங்களை பல்வேறு   திசையில் செலுத்தினார். அவர் எழுதிய பல சிறுகதைகளை விகடன் தளத்தில் அறுபது வருடங்களுக்கு முன் படித்ததை இப்போது திருமதி பாரதி பாஸ்கர் கதையாகப்  படிக்க மீண்டும் அறியும் அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது. இப்போது நிறைய யூடியூப் இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது. ஆகச் சிறந்த கதை சொல்லிகளாக திரு.பவா செல்லத்துரையும், திருமதி பாரதி பாஸ்கரும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கையிலெடுக்கும் எழுத்தாளர்களும் வல்லமை கொண்டவர்கள். மிக அனுபவித்துக் கேட்ட கதை ஹீரோ சீதாராமனின் கதை. எத்தனையோ குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் இந்தக் கதையில் வரும் மதுரம் ஏமாற்றீய தன் கணவனை விலக்கும் விதம். முதலில் படிக்கும் பொழுதும் அதிர வைத்து மகிழ்ச்சி கொடுத்தது. இப்போதும் அதே உணர்ச்சி. இந்த உள்ளக் கோலங்களை எங்கிருந்து  கற்றாரோ நம்  ஜெயகாந்தன்.  என் சகோதரிகளில் ஒருவர் ஜெகேயிடம் கொண்டிருக்கும...

Heritage of Chennai - GEMINI by Sriram. V

Image

Historian V Sriram-Podhigai TV - Namvirundhinar - 25-Aug-2017

Image

ஆஸ்டிரோ ஃபோபியா.....

Image
வல்லிசிம்ஹன் அத்தனை மழையிலும் தளராமல் நின்ற இந்தப் பூக்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு .இதுவும் கடவுள் கருணைதான். இவை யோசிக்குமா. இடிக்கிறதே என்று ஓட முடியுமா.  நின்றுதானே சமாளிக்கின்றன என்ற எண்ணங்கள் ஓட , நேற்று நட்ட  கருவேப்பிலை செடியையும் பார்த்தேன்.தொட்டியோடு கவிழப் போகிறதே என்று  கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். அதுவும்  சமாளித்துக் கொண்டு இலைகளை அசைத்துக் கொண்டிருந்தது. உள்ளே இருந்ததை விட வெளியே அதற்கு செழிப்பு கூடி இருந்தது என்றே சொல்ல வேண்டும். இன்னும் ஒருமாதம் தான் குளிர் வந்துவிட்டால் வீட்டுக்குள் வந்துவிட வேண்டிய செடி. வினோதமான ஊர். விபரீதக் காற்று.!! இவைகளை அந்த சூறாவளி தீண்டாமல் விட்டதே என்று நிம்மதி. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஆஸ்டிரோ ஃபோபியா..... இதுதான் அந்த பயத்தின் பெயர். எப்போது இந்த பயம் ஆரம்பித்தது என்று தெரியாது. முன்பு பட்டாசு வெடிக்கும் போது உடமபு  அதிர்ந்து ஜுரமே வந்து விட்டதாக அம்மா சொல்வார். உலகமே எல்லாவற்றையும் ஆனந்தமாக அனுபவிக்கும்  ஒரு சமாசாரம்., நமக்கு திகிலாகப்  போவது எதனால். ?...

Sherlock Holmes 1 | Arthur Conan Doyle | Bharathy Baskar | Pattimandram ...

Image
வாழ்க வளமுடன் பாரதி பாஸ்கர்.  சீக்கிரம்  நலம் பெறுக.

அந்த காலத்தில் Poes Gardenனின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் | History Time...

Image

முன்னம் ஒரு காலத்திலே..6.

Image
வல்லிசிம்ஹன் முந்திய அத்தியாயத்தில் சாரதாவும்,கோபாலன் சாரும் கிளம்பிச் சென்றதைச் சொல்லி இருந்தேன். எங்களுக்கு  இது அதிர்ச்சி என்றால், திரு வில்லியம்ஸ் முகத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. ஒரு நொடியில் முக பாவத்தைச் சரி செய்து கொண்டார்.''எல்லோரும் வந்து கௌரவித்ததற்கு மிக நன்றி. இறைவன் என்றும் நம்முடன் இருப்பார். மணி 12 ஐ நெருங்குகிறது. மீண்டும் புது வருடத்துக்குச் சந்திக்கலாம்.'' என்று கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று விட்டார். அறையின் கலகலப்புச் சட்டென்று ஓய்ந்தது. எலிசபெத் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா என்று கவனித்தாள். '' அவர்கள் தான் முக்கியமா, நாங்கள் முக்கியம்  இல்லையா'' என்று முகம் சுளித்தாள் டாக்டர் சுசீலா. மற்ற நண்பர்கள் திரு வில்லியம்சின் கறார் நடவடிக்கைகளுக்குப்  பழகியவர்கள். இதற்கு மேலும் போதை ஏறினால் தங்கியிருக்கும் இடத்துக்குப் போவது தடுமாறிவிடும் என்ற யோசனையில் மகிழ்ச்சியுடனே கிளம்பினார்கள். அதுதான் புது வருடத்துக்கு வருவோமே ,அப்போது பேசிக்கொள்ளலாம் என்று புறப்பட்டார்கள். சிலர் காலையில் கோவை செல்ல முடிவ...

பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா.

Image
 பத்மினி சிவாஜி படங்களில் பாடல்கள் எப்பொழுதுமே அபிநயம், நாட்டியம் என்று புன்னகைக்க வைக்கும். அதாவது சீரியஸாக இல்லாத படங்கள். பேசும் தெய்வம் கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு, பின் அழுகை என்று மாறி வந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கும். என் தம்பி ரங்கன் சொல்லிச் சொல்லி நான் சிவாஜியின் இளமைக் கால படங்களை நுண்ணிப்புடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டேன். அவன் அளவு எனக்கு சிவாஜி பைத்தியம்  இல்லாவிடினும் பாராட்டத் தெரிகிறது:) அதுவும் இங்கே கொடுத்திருக்கும் பாடல் உண்மையிலேயே கணவன் மனைவி புரிதலுக்கு உகந்த உகப்பு இருக்கும். தங்கப் பதுமை படமும் அது போலத்தான். கண்ணகி கதை திரும்பி வந்தது போல ஒரு படம். அந்தப் படத்தில் பத்மினியின்  பாத்திரத்துக்கு  ஏகப்பட்ட  நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படியே அல்வா சாப்பிடுவது போல நடித்துத் தள்ளி விடுவார். சோகக் காட்சிகளைப் பதிவிட வில்லை:) கை கொடுத்த தெய்வம் இன்னோரு படம். இரண்டு சிகரங்கள்  மோதுவது போல நடிப்பின் இலக்கணங்கள் சிவாஜியும் சாவித்திரியும். இங்கேயும் சிவாஜி அடக்கி வாசிப்பார். சாவித்ரிக்கே முக்கிய வ...

முன்னம் ஒரு காலத்துலே 5

Image
வல்லிசிம்ஹன் இங்கே வில்லியம்ஸ் தம்பதிகளைப் பற்றி சொல்லியாக வேண்டும்.  அவளாவது பல வித  விஷயங்களுக்கு ஆசைப் படுவாள். அவருக்கு  சுடச் சுட சுவையான உணவு, வீட்டு சுத்தம், காப்பி ,டீ எஸ்டேட்  வளப்பம், குழந்தைகள் நலம் இதுதான் குறிக்கோளே. மிக மிக ஏழைகளிடமும்  கனிவோடு தான்  பழகுவார். அவர்கள் சென்னை வரும்போது கூடப்  பார்த்திருக்கிறேன்.  ஊனமுற்றவர்களுக்கு  பிறர் அறியாமல் உதவி செய்வார். நண்பர்களிடம் மிகப் பாசம் வைப்பார். படிக்கும் பைபிள் வாசகங்களுக்கு மீறி நடந்ததில்லை.  எலிசபெத் வில்லியம்சுக்கு கணவரின் பல்வேறு நண்பர்களைப் பற்றி எப்போதுமே குறை இருந்தது.  அவரும் பணம் , கம்பீரம்,ஆளுமை எல்லாம் கொண்டிருந்ததால் அவளுக்குத் தானும் அவரோடு எல்லா இடங்களுக்கும்  செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அவருக்கு நண்பர்களே உலகம். அவரது வியாபாரத்துக்கும் ,புதிதாக அவர் ஆரம்பித்திருந்த இரண்டு பஸ் சர்வீஸ்கள்  வளர்வதற்கும் அவர்கள் உதவியாக இருந்ததால் பல வேறு நகரங்களுக்கு அவர் செல்லும்போது அந்த நட்புகளின்  தோழமை அவருக்கு உறு துணையாக  இருந்தது. அ...

Sita Kalyanam - Tribute to Lord Rama | Dontheneni Sisters | Photriyavenky

Image

முன்னம் ஒரு காலத்திலே 4

Image
வல்லிசிம்ஹன் கிருஸ்துமஸ் நாள் நல்ல மூடுபனியுடன்,  குளிர் சூழ லேசான சூரிய வெளிச்சத்துடன் மலர்ந்தது. குழந்தைகளுக்கு மகா உத்சாகம். ஜன்னல்களைத் தொட்டுச் சில்ல்ல் என்று சப்தம் எழுப்பினார்கள். அவரவர்களுக்கான பால், காப்பி கொடுத்ததும் கொண்டு வந்திருந்த நல்ல் உடைகளையும் காலுறைகளையும் மாட்டி ஷூ போட்டுக் கொண்டு  சமர்த்துக் குடங்களாக வண்டியில் ஏறிக் கொண்டார்கள். நாங்கள் வில்லியம்ஸ் அவர்களின் வீட்டு வாசலில் இறங்கி சுற்றியுள்ள பெரிய தோட்டத்தைப் பார்த்தோம். மலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் படிப் படியாக அமைந்த நிலத்தில் ரோஜாச் செடிகள்,பலவகை பெயர் தெரியாத ஃபெர்ன்ஸ், குரோட்டன்ஸ், மாதுளை மரங்கள், ஆரஞ்சு மரங்கள் என்று வண்ணமயமாக   இருந்தது அந்த எஸ்டேட். குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்கள், என்று விதவிதமான அமைப்புகள் தம்பதிகளின் ரசனையைக் காட்டியது.சுற்றி வரும்போது பெரிய பெரிய  kennels  கண்ணில் தென்பட்டது. நாங்கள் அருகே வந்த போது அத்தனை 11 நாய்ச்செல்லங்களும் குரைக்க ஆரம்பித்தன:) தாங்க முடியாமல் விரைந்து வீட்டு முகப்புக்கு வந்து விட்டோம்!!! இத்தனை ஜீவராசிகளுக்கும் சாப்பாட...

முன்னம் ஒரு காலத்திலே 3

Image
வல்லிசிம்ஹன் 1972 ஆம் வருடம் மிகச் சிறந்த நினைவுகளைக் கொண்டது. ஊட்டி எங்களுக்கு மிகப் பிடித்த இடமானது. அதுவும் குன்னூர், கோத்தகிரி என்று பல இடங்களுக்கு பைக்கில் சென்று மாலை திரும்பி விடுவோம். அப்போதிருந்த ஊட்டி ,மிக வளப்பமானது. இத்தனை வீடுகள், ,மர முறிப்பு செய்த,  வெற்று மலைச் சரிவுகள் இவை கிடையாது. யூகலிப்டஸ் மரங்களின் வாசனை ஊட்டி மலை சாலைகளில் நிரம்பி இருக்கும். வண்டி செல்லும்போது சூரிய ஒளி மரங்களோடு கண்ணாமூச்சி விளையாடுவது ரசிக்குமாறு கூடவே வரும். இப்போது போல ஏசி வண்டிகள் இல்லை. வண்டியின் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு செல்லும்போது அத்தனை மகிழ்ச்சி குழந்தைகளுக்கு. சாரதாவின் மடியில் சின்னவன் சுகமாகத் தூங்க, பெரியவன் அப்பாவின் தோளில் கைவைத்துக் கொண்டு நின்று  கொண்டு வந்தான்  . . அவனைப் பிடித்துக் கொள்ள கோபாலன் சார். மகள் மூக்கருகே யூகலிப்டஸ் பாட்டிலை வைத்தபடி நான். ஒவ்வொரு வளைவிலும்  ஒரு அலறல், ஒரு சிரிப்பு என்று கூனூர் வந்து சேர்ந்தோம் சிங்கம் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய இடத்தைப் பார்த்து அசந்து விட்டேன். ''ஜன்னலை மூடுமா. எதிர்த்தாற்போல் என்ன வருகிறத...

விரதம்?

வல்லிசிம்ஹன் நன்றி தம்பி முகுந்தன், மதுரை. Humorous read....hare krishna.....    எட்டுதான் ஆகியிருந்ததது அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது. "என்னங்க கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.   "காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா? நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான் குமார் எரிச்சலுடன். "உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது.  எல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப...