Blog Archive

Tuesday, August 31, 2021

செல்வி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்

வல்லிசிம்ஹன்






நளினமும், பக்தியும் அருமையாகக் கலந்த
குரலும் தோற்றமும்.
வளமுடன் வாழ வாழ்த்துகள்.
மைலாப்பூர்க்காரர் என்பது கூடும் பெருமை.அனபுத் தோழி. கோமதி அரசுவின் வலைத்தளத்தில் பார்த்து இவரைத் தேடினேன். நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.

Monday, August 30, 2021

அந்தக் காலத்துல தூர தேசம் போகும் போது எடுத்துச் செல்லும் நீண்ட நாள் கெட்...

வறுத்த தேங்காய்த் தொகையல்

சர்வம் கிருஷ்ணார்பபணம்.!



கண்ணன் எப்பொழுது நினைத்தாலும் வந்து விடுவான்.
நாம் தான் 
நினைக்க மறக்கிறோமோ என்று தோன்றுகிறது:)அனைவருக்கும் கண்ணன் வந்த நாள் வாழ்த்துகள். எப்போதும்அ வனைக் கொண்டாடு வோம்.
வல்லிசிம்ஹன்

Sunday, August 29, 2021

காலிஃப்ளவர் பொரியல் கிராமத்து சமையல்

ஜில்லென்ற காற்று வந்ததோ...








ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தாரோ , சிறப்பாக்ச் சண்டை 
போட்டாரோ தெரியாது.
ஆனால் அவர் படங்கள் வெற்றி கண்டன.
நல்ல மனிதர் என்று பெயர்  வாங்கினார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்களில் வலம் வந்தார்.

யார் அவரைப் பற்றிப் பேசினாலும் 
நல்ல விதமாகவே சொன்னார்கள்.

பஞ்சவர்ணக்கிளி படத்தில் அவர் '
இரட்டை வேடத்தில் ,ஒரு வில்லனாக 
வந்த போதுகூட நம்ப முடியவில்லை:)

பூவா தலையா படத்தில் அவர் நடித்த 
பாத்திரம்  மிகச் சிறப்பானது.

தமிழ் உலகின் அந்த நாளைய கதா நாயகிகள் 
அனைவருடனும் நடித்திருக்கிறார்.
பின்னாட்களில் ரஜினிகாந்த்,கமலஹாசன் இவர்களோடும்
நல்ல பாத்திரங்களில்  படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

இவ்வளவு சுருக்க, கலை வாழ்வில்  ஜொலித்தவர்
61 வயதில் காலமானது மிக வருத்தம்.பிற்காலத்தில் அரசியலில் புகுந்த ஜெயலலிதா
அம்மாவுடன் இவர் நடித்த ஆரம்ப காலப் படங்கள் வெகுவாகப்
பேசப்பட்டன.

அவரது தாராள் குணம், கொடை மனப்பான்மை,
இன்னும் அவரது மகன் செய்யும் 
மருத்துவ சேவைகளில் வெளிப்படுகிறது.
சிங்கமும் இவரும் யேற்காடு படப் பிடிப்புகளில்
சந்தித்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் நிறைய வில்லன் வேடங்களில் நடித்தார்.
அவ்வளவாக எங்களால் ஏற்க முடியவில்லை.

பன்முக நடிப்புக்குச் சொந்தமான ஜெய்சங்கர் பாடல்களில் சிலவற்றைப்
பதிகிறேன்.

Friday, August 27, 2021

சாம்பல் பூசணி இலை பக்கோடா புதுவிதம்.


பூசணிக்காய் உபயோகம் தான் எனக்குத் தெரியும்
இங்க்வ் கொடுத்திருப்பது போல
அதன் இலையும் சமையல் ஆகும் 
என்று இப்போதுதான் பார்க்கிறேன்.

இன்னோரு பதிவில் இந்தப் பூசணி இலைகளைப் பறித்துக்
கீரை மாதிரி மசித்துச் சாப்பிட்டார்கள். 
குழம்பும் அதுதான். பொரியலும் அதுதான். 

கிராமங்களில் அப்படித்தானே சாப்பிடுகிறார்கள்!!

பார்க்க நன்றாக இருந்தது.

Thursday, August 26, 2021

குறும்படம்


வல்லிசிம்ஹன்
இப்படிக் கூட ஒரு தோழமை தொடங்குமா,
ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப்
பட வைத்த படம்
ஆனால் இயல்பாக இருந்தது.

இருவரும் இள வயதுக்காரர்கள். இருவரும் ஏதோ ஒரு துறையில்
உயர்ந்து இருப்பவர்கள்.
பேசத்தெரிந்தவர்கள். 
படத்தின் நாயக, நாயகி இருவரும் பார்க்கவும் அழகாக,
கம்பீரமாக இருப்பதும்(அதனால் தானே அவர்கள் ஹீரோ ,ஹீரோயின்!!)
ஒருவர் பால் ஒருவர் கவர்ந்திழுக்கப் படுவதின் 
காரணம். இதுவே அவனோ அவளோ
அந்தச் சூழலில் இருந்து மாறுபட்டிருந்தால்
என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்:)

பூனே  மும்பை சாலையில் நடக்கும் சந்திப்பு.
தன் வண்டி திடீரெனப் பழுது படுவதால்
நாயகன், பொதுப் பேருந்தில் ஏற, அங்கு ஏற்கனவே
பயணித்துக் கொண்டிருக்கும், பன்முக ஆய்வாளினி
ரெயினாவைச் சந்திக்கிறான்.  உதயன்.
விவாதத்தில் ஆரம்பிக்கும் சந்திப்பு
நட்பு+ காதலாக மலர்கிறது.
KHAMAKHA   என்றால் Agree and Disagree or Strange Arguement
என்று பார்த்தேன். ஏதோ ஸ்வரம் பாடுவது போல 
இருந்தது எனக்கு. கமகம்...
நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Wednesday, August 25, 2021

Robotics. கண்டுபிடிப்புகள் பிபிசி வழியே..






வல்லிசிம்ஹன்

விட்டல விட்டல பாண்டு ரங்கா. 2400

திருமங்கலத்தில் இருக்கும் போது
கோவில்,பஜனைமடம் எல்லாமே
அந்த இளவயதுக்கு மிக இனிமையான நினைவுகளில்.
ஹரே ராம ஹரே கிருஷ்ண பாடல்களும் அங்கே கற்றதுதான்.
நெருக்கமான வீடுகள்,
நெருக்கமான மனிதர்கள். ஆன்மீகம்,நற்செயல் 
என்று பேதங்கள் இல்லாத ஒரு சமூக வாழ்வு.

இப்போது மாறி விட்டதாகச் சொல்கிறார்கள்.
இரு வழி,நால்வழிப்பாதைகள் 
திரு நெல்வேலி வரை செல்கிறது.

பலவித மனிதர்களும்,வியாபாரங்களும்
கலக்கும் போது வேறு வேறு ஊர்கள் கலந்து விடுகின்றன.
கிராமங்கள் நகரமாகிப் பழைய அடையாள்ங்கள்
மறைகின்றன்.
ஆனால் பக்தி மாறாது என்றே நினைக்கிறேன்.
கண்ணன் கழலே காக்கும்.

Tuesday, August 24, 2021

சுண்டைக்காயும் சுமை கூலியும்

வல்லிசிம்ஹன்
சுண்டைக்காய் மாடவீதியில் இறைபடுமே,
இங்கே கிடைக்கவில்லையே என்று ஒரே விசாரம்:)

என்னவோ அப்போதெல்லாம் வாங்கி வாங்கி
அனுபவித்தது போல.:)
இதெல்லாம் ஆவணியில் விற்கும் போது.

சுண்டைக்காய்,மணத்தக்காளி, அரி நெல்லிக்காய்
என்றும் ,மாங்காய் இஞ்சி, தஞ்சாவூர்க் குடமிளகாய் என்றும்
ஊரிலிருந்து வரும்.

எல்லாம் புரட்டாசி வெய்யிலில் 
போட்டு எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.
மார்கழி மாசத்துக்குப் பிரயோசனப்படும் என்று 
பாட்டி வழி காட்ட நான் செய்து
முடித்து அது அதற்கான ஜாடிகளில்
போட்டு வைப்போம்.

இதற்காகவே வரும் பெண் வயிற்றுப் பேரன்,
"ஆஜி, ஊறுகாயெல்லாம் போட்டியா"
நான் பாட்டில் கொண்டு வந்திருக்கேன் 
என்று எடுத்துப் போவார்.
பெரிய குடும்பம் அப்படி எல்லோரும் எடுத்துக் கொண்டது 
போக நமக்கு இன்னோரு தடவை 
போடுவோம்:)
இது தவிர, சுண்டைக்காய் போட்டு சாம்பார், வத்தக் குழம்பு
எல்லாம்
திகட்டிப் போகும் அளவுக்கு செய்யப்படும்.

இதெல்லாம் எங்கள் மதுரை சுண்டைக்காய்க்கு ஈடாகாது
என்று மனதில் முனகிக் கொள்வேன்.
மலை சுண்டைக்காயை ,அப்பா டவுன் சந்தைக்குப் போகும்போது வாங்கி வருவார்,.

நல்ல பெரிதாகக் கசப்பில்லாமல் இருக்கும்.
அதை நன்றாக அலம்பி,
உரலில் போட்டு இடித்துக் கொடுப்பேன்.

பருப்புப் போட்டு சாம்பார்ப்பொடியும் , புளியும்
கொதிக்கும் போது,
இந்த இடித்த சுண்டைக்காயை நல்லெண்ணெயில் வதக்கி
சேர்த்தால் நிமிஷத்தில் வெந்துவிடும்
சிறந்த வாசனையுடன்  அன்று சாதம் இன்னோரு கைப்பிடி 
சாப்பிடலாம்.

இங்கே சுண்டைக்காய் விற்கப்படுவதில்லை.
விளைவதுமில்லை. அதான் அணிலார், முயலார் எல்லாம் வந்து வேரோடு
கெல்லிப் போட்டு சாப்பிட்டு விட்டுப் போகிறார்களே.:(

அட்லாண்டாவில் மகளுடைய நாத்தனார் இருக்கிறார்.
அவருக்கு சுண்டைக்காயைக் கடையில் பார்த்ததும்,
அண்ணா மனைவி நினைவுவர
''வாங்கி வைக்கிறேன்,
நீ ஃபெடெக்ஸ் வழியா எடுத்துக்கோ ''என்றார்.
அத்தேரிமாக்கு என்று ஃபெடெக்ஸுக்குத் தொலைபேசி
கேட்டால் 35 டாலர் ஆகும் என்றார்கள்,
அதாவது அங்கிருந்து இங்கே கொண்டுவர!!!
சுண்டைக்காய் கொள் பணம் 6 டாலர்.
பார்சல் பணம் 35 .
சரியாப் போச்சா:))
வந்த உடன் உப்பில் ஊறப் போட்டு,
ஒரு வாரமாக வறுத்து
தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு தீர்ந்தும் 
போய் விட்டது. 
ஆமாம் 300 கிராம் சுண்டைக்காய் எவ்வளவு நாள் வரும்!!!!!!










Monday, August 23, 2021

தைவான் நாட்டின் காட்சிகள் உபயம் சி போ லின்

வல்லிசிம்ஹன்
Turtle Island






இரண்டு மாதங்களுக்கு முன் ரசித்த நெட்ஃப்ளிக்ஸ்
 தொடர் 'ஒன் தௌசண்ட் குட் நைட்ஸ்.'

அதிலிருந்து சில தைவான் நாட்டு காட்சிகள்.
சி போ லின் எடுத்த படங்கள்.



சந்திரபாபுவும் சபாஷ் மீனாவும்!




வல்லிசிம்ஹன்

Madras or Chennai? Why celebrate it? | History Times with Historian V Sr...

Sunday, August 22, 2021

உருளைக் கிழங்கின் உலகம்




வல்லிசிம்ஹன்

உருளைக் கிழங்கு பெயர் சொன்னாலே போதும். 
சிங்கம் இரண்டு மடங்கு சாப்பிட்டு விடுவார்.
ஆனால் இங்கே பதிந்திருக்கும் 
வித வித உ.கி வகையறா ஒத்துக் கொள்ளாது.
பொடிசு பொடிசா நறுக்கி 
இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெயில் வதக்கின,( வறுத்ததில்லை)
ப்ரௌன் வண்ணத்தில் நல்ல பதத்தில்
செய்தால் உள்ளே இறங்கும். 
இதே உ.கியை பொடிமாஸ்செய்து விட்டால்.,

எல்லாம் சின்னவயசில சாப்பிட்டாச்சுமா.
இனிமேல் வேண்டாம்:) இது வழக்கமான பதில் .அதனால் இப்போது
இந்தப் பொரியல் வகைகளைச் செய்து பார்க்கிறேன்.
அதுவும் நிறைய சாப்பிட முடியாது.
வாயு வந்து நம்மில் மையம் கொள்வார்.
கொஞ்சம் இஞ்சித் துகையலையும் 
கூடவே  சாப்பிட வேண்டும்.
இங்கே நல்ல இஞ்சி பெரிது பெரிதாகக் கிடைக்கிறது.
தோலுரித்து, சின்னத் துண்டுகளாக்கி,
மெந்தியம், பெருங்காயம், கடலைப் பருப்பு, உ.பருப்பு,
சிவப்பு மிளகாய் என்று
வறுத்துக் கொண்டு,
இஞ்சித் துண்டுகளையும் வதக்கி, உப்பும் சேர்த்து 
அரைத்தால் சுவையான இஞ்சித் துகையல்
தயார்.

Saturday, August 21, 2021

ஒரு மழைக்கால வேண்டுதல்.

வல்லிசிம்ஹன்

கருணையோடு மழைதர வரும்
கரியவாய கருமேகங்காள்
அரியதாய திருப் பாசுரங்கள் 
அறிய எண்ணும் ஓர் மாலையில்
 
படிக்க எண்ணிப் பிரபந்தம் பிரிக்கக்
கொடும் இடி கொண்டு கூர்மழை பெய்தால்
அடிமை நான் அரியை அறிவது எக்கணம்?
கடுமழையால் எம்மை வாட்டாமல்
அரி அவன் புகழ் நான் பாட
அருள் கூர்ந்து இக்கணம்

கடுகிச் செல்கவே வேறெங்கிலும்.

இது மழை நிற்கப் பாடியது.கவிதை என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

Friday, August 20, 2021

| தக்காளி ஊறுகாய்/கிராமத்து சமையல்

    இந்தப் பெரியம்மாவின் வெள்ளை சிரிப்பும், அவரைப்
படம் எடுத்து இணையத்தில் வெளியிடும் 
பெண்ணின் மரியாதையும் , திரு நெல்வேலிக்காற்றும், பசுமையும் என்னைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
அசைவ சமையலை விட்டு விட்டு மற்ற 
 சமையல்களை வெகு நேர்த்தியாகச் செய்யும்
விதம் மிக இனிமை. இதற்காக வயல் வெளியில் ஒரு 
செட் போட்டு, சிமெண்ட் தளம் அமைத்து
அவர்கள் செய்யும் நேர்த்தியும்
அதற்குப் பயன்படுத்தும் அம்மி, கல்லுரல், மாவு அரைக்கும் 
உரல் எல்லாமே பழக்கப் பட்டவைகளாகத் தோன்றுகின்றன.

வீடியோ எடுப்பவரும் சுற்றுப்புறத்தை
அழகாகக் காமிராவில் பதிகிறார்.
பறவைகள் வித விதமாக மரக்கிளைகளில்
உட்கார்ந்து சமையலைப் பார்க்கும் அழகும்

தேங்காயைக் கொறிக்கும் அருமையும் சிறப்பு.

Thursday, August 19, 2021

மான் என்று.......





வல்லிசிம்ஹன்
 வேட்டையாடும் சீசன் என்று செப்டம்பர் மாதம் 
சில தேதிகள் குறிக்கப் பட்டிருந்தன.

ஏன் இப்படி என்று மனம் கலங்கியது.
இந்த ஊரில் குளிர்காலம் கொடுமையானது. எலும்பும் ரத்தமும் உறையும் குளிர்.
எங்கெங்கோ மலைகளில் வாழும் மக்கள்
குளி வரும் முன்னாலயே வேட்டையாடி 
மிருகங்களின் உடலைப் பதம் படுத்தி வைப்பார்களாம்.
 பனியில், குளிரில் சென்று உணவு தேட முடியாத 
போது இந்த இறைச்சியை மூன்று நான்கு
மாதங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வார்களாம்.
பழைய கதைகளில் படித்திருக்கிறேன்.
அப்போது எனக்கும் இப்போது இங்கே நடமாடும்
மான் களுக்கும் சம்பந்தம் இல்லாமல் 
இருந்தது. 
இப்போது வழிதவறி வந்துவிடும் சில மான்களின்
மருட்சி மனதை மிரட்டுகிறது.
இவைகள் காக்கப் பட்ட காடுகளில் வாழும் மான்கள்.

கொஞ்சம் தொலைவில் ஹண்டிங்க் க்ரௌண்ட் 
இருக்கும் இடங்களில் நம் காதுகளில்
சத்தம் விழாத தூரங்களில் வேட்டை நடக்கலாம்.

நாங்கள் இருக்கும் இடத்தில் இது கிடையாது.
ஆனால் 30 மைல் தொலைவில் ,நகரத்தில் 
மனிதர்களே வேட்டையாடப் படுகிறார்கள்.
தினம் இரவு ,உறங்கப் போகும் முன்னால்
சில நாட்கள் நகர செய்திகளைப் பார்க்க நேருகிறது.

ஏண்டா சாமி:( என்றே தோன்றும். அதை எழுதி 
இந்தப் பக்கங்களைக் கெடுக்க மனம் இல்லை.
பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை 
யாருமே பாதுகாப்புடன் இருக்க முடியாத 
ஒரு neighbour hood அங்கே இருக்கிறது.
மனிதர்களை நோக வைத்து மனிதர்கள் வாழ முடியுமா
என்று யோசிக்க வைக்கிறது.

மீண்டும் ஒரு வள்ளலார் இங்கே தோன்ற மாட்டாரா
என்று நினைக்க, ஆசைப்படும் நேரம்.
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.




பயணங்கள் வீட்டிலிருந்து கொண்டே...



வல்லிசிம்ஹன்


 ரயில், விமானம், பேருந்து என்று 
பயணங்கள் மிக மும்முரமாக
நடந்த காலம், குழந்தைகள் உடன் தான்.
அவர்களுடைய பள்ளி விடுமுறையை ஒட்டி 
 சென்ற இடங்கள் மறக்க முடியாதவை.
1974இல் சொந்தமாக நாலு சக்கர வண்டி வந்ததும்

ரயிலில் போவது கூட நின்று போனது.
பிறகு பாஸ்போர்ட் எடுக்கும் வேலை.
விசா வாங்கும் நேரம்.அப்படிச் சென்ற  காலங்களில் 
ஆறு மாதம் வெளியூர்,
ஆறு மாதங்கள் உள்ளூர் என்று ஆனது.

சிங்கம் இருக்கும் வரை மோட்டார் பைக்கில் தொடர்ந்து,
அதன் பிறகு
அவர்கள் வெளியூர் சென்ற போது
விமானப் பயணங்களாக தொடர்ந்தது.
இப்போது மும்முரமாக பழைய பயணங்களை
மனதில் நிறுத்தி, இணையத்தில் பார்க்கும் வேலை.

அவற்றில் சில இங்கே பதிகிறேன்.

Wednesday, August 18, 2021

பாட்டிம்மா.தாத்தா நினைவுகள்


  எத்தனையோ நல்ல குறும்படங்கள் 
இணையத்தில்  இருப்பதை, வேறு எதையோ
தேடும்போது பார்க்கக் கிடைத்தன.
நான் கண்டு மகிழ்ந்ததை 
இங்கே பகிர்கிறேன்.

எளிமையான இனிமையான கருத்துகள்.
நல்ல நடிகர்கள். இத்தனை அருமையாக நடிக்க வைத்த இயக்குனர்கள்,
கதை எழுதியவர்கள் எல்லோரையும் 
மனம் நிறைய அன்பு கொண்ட மனிதர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சி.

வயதானவர்கள் என்றும் ரசிக்கப் பட வேண்டியவர்கள்.
அவர்களைத் தனிமை அண்டாத படி
கவனிக்க வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு இருக்கிறது.
அதேபோல் இளைய தலைமுறையை
மதித்து சீராட்டுவதும் முதியோர் கடமை.
சின்ன வயதில் அம்மா வீட்டில் இருப்பதைக் 
கண்டு சற்றே பொருமல்.
அம்மா ஆனபிறகு வீட்டிலிருக்கும் பாட்டி மாமியாரைக்
கண்டு ஆச்சரியப் படுதல்,
இப்போது அப்பாடி நாமும் கடைசி கட்டத்துக்கு வந்து விட்டோம்
என்ற நிம்மதி.
அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.



Monday, August 16, 2021

நம்பிக்கை தரும் எண்ணங்கள்.

வல்லிசிம்ஹன்
 இங்கே எல்லோரும் அவரவர் மாமியார், அம்மா
என்று கண்டு வருவதற்காக 
இந்தியா சென்றிருக்கிறார்கள்.
 
மகளின் நட்புகள் செல்லப் ,
பின் தங்கி இருப்பவர்கள் கணவர்கள்.
எல்லோருக்கும் சமைக்கத் தெரியும்.

இருந்தாலும் மகளும் மற்றவர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள்
அவர்களுக்கு 

நிறைய குழம்பு,கூட்டு,ரசம் என்று 
செய்து வீட்டு வாசலில் வைத்து விடுகிறார்கள்.
நேற்று அதுபோல நோய் வாய்ப்பட்டுத்
தெளிந்து வரும் ஒரு குடும்பத்துக்கும்
கொண்டு போய்க் கொடுத்தோம்.

கடவுள் நம் சோதனையை எல்லாம் தீர்த்து நல் வழிக்கு'
அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை
அந்தக் குடும்பத்தில் பார்த்தேன்.


+++++++++++++++++++++++++++++++++++++++ 
ஒவ்வொரு குடும்பங்களிலும் தாய் தந்தை மகன் மகள் என்று 
எல்லோரும் வேலைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய
நாள் வந்துவிட்டது.
இத்தனை நாட்கள் அடங்கி இருந்த தொற்றும் வேறு வடிவம் கொண்டு
வெளியே வருகிறது.
முகக் கவசம் போடு என்று அரசு சொன்னாலும்

போட மாட்டேன் என்று சொல்பவர்களும். 
தடுப்பூசி கெடுதி என்று பிரச்சாரம் செய்பவர்களும் 
இருக்கிறார்கள்.
இதற்கும் இறைவனே கதி என்று தான்
டவுனுக்கும் வீட்டுக்கும் ரயில் பயணம் செய்கிறார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2012 இல் ஆகஸ்டில் நடந்த தமிழ்ப் பதிவாளர்கள்
சந்திப்பில் கலந்து கொண்டபோது எடுத்த 
புகைப்படங்கள், அப்போது வலைப்பதிவர்களியே
இருந்த பாசத்தைக் காண்பித்தது.
அதற்குப் பிறகும் இப்போதும் நம்முடன் 
அதே அன்போடு இருப்பவர்களின் தொடர்பு 
புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெளியில் வரும் சூடு உடல் உறுப்புகளைப் 
பாதிக்கிறது. தலை, வயிறு இவற்றில்
வலி அதிகமானால் எந்த விஷயத்திலும்
ஈடுபட முடியவில்லை.
இதையும் கடக்கலாம்.
அனைவரும் உடல் ,மன ஆரோக்கியத்துடன் இருக்க
இறைவன் அருள வேண்டும்.

Sunday, August 15, 2021

யாராக இருக்க விரும்புகிறோம்?


வல்லிசிம்ஹன்

சுதந்திரம் என்பதை நாம் எப்படித் தீர்மானிக்கிறோம்.?

எல்லாச் சலுகையும் கொடுத்து எங்கும் போகக் கூடாது
என்பது சுதந்திரமா.

என்னுடையை சுதந்திரம் எனக்கு மட்டும்
என்று எந்த இன்னல் வந்தாலும் 
தாங்கித் தனித்து நிற்கத் தைரியமா.

or.....
உறுதியாகக் கட்டப் பட்ட நான்கு  சுவர்களுக்குள்
எல்லா சுகங்களும் கொடுக்கப் பட்டு
பாதுகாப்போடு இருந்து
நம் சுதந்திரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கலாமா?

இவை சுதந்திர நாள் சிந்தனை ஓட்டங்கள்.
உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.


Saturday, August 14, 2021

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் | ஜெயகாந்தன் | சிறுகதை | பாரதி பாஸ்கர் குரலில் |...

ஆங்கிலக் காவியம் ஒன்றில் 
'ஆயிரம் கப்பல்களைக் கடலில் இறக்கிய முகம்'
என்ற பாராட்டு ஒரு கதா நாயகிக்கு உண்டு.
ஹெலன் ஆஃப் டிராய்.

நம் ஹீரோ ஜயகாந்தன் சார் பல மனங்களை
பல்வேறு   திசையில் செலுத்தினார்.

அவர் எழுதிய பல சிறுகதைகளை விகடன் தளத்தில்
அறுபது வருடங்களுக்கு முன் படித்ததை
இப்போது திருமதி பாரதி பாஸ்கர் கதையாகப் 
படிக்க மீண்டும் அறியும் அனுபவிக்கும்
காலம் வந்திருக்கிறது.

இப்போது நிறைய யூடியூப் இணைய தளத்தில்
காணக் கிடைக்கிறது.
ஆகச் சிறந்த கதை சொல்லிகளாக திரு.பவா செல்லத்துரையும்,
திருமதி பாரதி பாஸ்கரும் கோலோச்சுகிறார்கள்.
அவர்கள் கையிலெடுக்கும் எழுத்தாளர்களும்
வல்லமை கொண்டவர்கள்.

மிக அனுபவித்துக் கேட்ட கதை ஹீரோ சீதாராமனின் கதை.

எத்தனையோ குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனாலும் இந்தக் கதையில் வரும் மதுரம்
ஏமாற்றீய தன் கணவனை விலக்கும் விதம்.
முதலில் படிக்கும் பொழுதும் அதிர வைத்து மகிழ்ச்சி கொடுத்தது.

இப்போதும் அதே உணர்ச்சி. இந்த உள்ளக் கோலங்களை எங்கிருந்து 
கற்றாரோ நம்  ஜெயகாந்தன். 
என் சகோதரிகளில் ஒருவர் ஜெகேயிடம் கொண்டிருக்கும் ஈடுபாடு சொல்லி முடியாது.
அதே மூச்சில் தி.ஜா வையும் படிப்பாள்.

அவளோடு விவாதம் புரிந்த நாட்கள் பசுமை.
நன்றி அன்பு சுபா.

இங்கே ஜெகே அவர்களின் முத்திரைக் கதையைப்
பதிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

Wednesday, August 11, 2021

ஆஸ்டிரோ ஃபோபியா.....

வல்லிசிம்ஹன்

அத்தனை மழையிலும் தளராமல் நின்ற இந்தப் பூக்களைக்
கண்டு மகிழும் வாய்ப்பு .இதுவும் கடவுள் கருணைதான்.
இவை யோசிக்குமா. இடிக்கிறதே என்று ஓட முடியுமா. 
நின்றுதானே சமாளிக்கின்றன
என்ற எண்ணங்கள் ஓட ,
நேற்று நட்ட 
கருவேப்பிலை செடியையும் பார்த்தேன்.தொட்டியோடு கவிழப் போகிறதே என்று 
கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் 
சமாளித்துக் கொண்டு இலைகளை அசைத்துக்
கொண்டிருந்தது. உள்ளே இருந்ததை விட வெளியே
அதற்கு செழிப்பு கூடி இருந்தது என்றே சொல்ல
வேண்டும். இன்னும் ஒருமாதம் தான் குளிர் வந்துவிட்டால்
வீட்டுக்குள் வந்துவிட வேண்டிய செடி.
வினோதமான ஊர். விபரீதக் காற்று.!!

இவைகளை அந்த சூறாவளி தீண்டாமல் விட்டதே என்று நிம்மதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆஸ்டிரோ ஃபோபியா..... இதுதான் அந்த பயத்தின் பெயர்.
எப்போது இந்த பயம் ஆரம்பித்தது என்று தெரியாது.

முன்பு பட்டாசு வெடிக்கும் போது உடமபு 
அதிர்ந்து ஜுரமே வந்து விட்டதாக அம்மா சொல்வார்.
உலகமே எல்லாவற்றையும் ஆனந்தமாக அனுபவிக்கும் 
ஒரு சமாசாரம்., நமக்கு திகிலாகப் 
போவது எதனால். ?
 இதோ நேற்று வந்த சூறாவளி வார்னிங்க் 7 மணி நேரம் நீடித்தது.

இந்த ஊரின் மேல் பகுதியில்  சுற்றி அடித்து நொறுக்கி விட்டு
இந்த ஊரின் கீழ்ப் பகுதியில் 
ஆடிக் கொண்டிருந்த போது
உறங்கச் சென்றேன்.
எப்போதும் தூங்கும் பழகிய அறையில் 
தூங்காமல் பேரனின் அடக்கமான சின்ன  அறையில்
உறங்கினேன். பாவம் அந்தப் பிள்ளை 
நீ படுத்துக்கோ பாட்டி என்று சொல்லி
என் அறையில் உட்கார்ந்து
படித்துக் கொண்டிருந்தது. 

பெண்ணுக்கு என் முகத்தில் காணப்பட்ட பீதி 
இன்னும் சங்கடத்தைக் கொடுத்தது.

https://youtu.be/hXNpkH6MNps

அதாவது அதிக சத்தம் கேட்டால் வரும் பயத்துக்கு மறு பெயர்.:)
உலகில் எதற்கெல்லாம் ஃபோபியா இருக்கிறதோ
தெரியாது.
எல்லோரும் நிதானமாக இருக்க நான் மட்டும் இந்த
இடி மின்னலுக்குப் பயப்பட வேண்டும்?
இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடிக் கொண்டிருந்தேன்.

என்னைப் போலவே நிறைய ஜீவன்கள்
இந்த ஃபோபியாவுடன் உறவு கொண்டிருக்கிறார்கள்
என்று தெரிந்தது.
இந்த பயத்துக்கான எத்தனையோ அறிகுறிகளில்
அல்லது ஃபிசிகல் பாதிப்புகளில் இரண்டு எனக்கு 
ஒத்து வந்தன.
1, இடி சத்தம் கேட்டதும் பாதுகாப்பான மூலையில் சென்று
காதுகளை மூடிக் கொள்வது.
அனேகமாகக் குழந்தைகளும் ,நாய்ச் செல்லங்களும்
இந்த மாதிரி செய்யுமாம். என் போலக் கிழங்களுக்கும் 
அது நீடிக்கின்றதால்  கொஞ்சம் பலமான பயம்தான்.:)

2, இது போல நேரங்களில் இதயத் துடிப்பு அதிகரித்து,
மூச்சு விடுவதும் சிரமப்படுமாம்.
படபடப்பு உண்டு. மூச்சு சிரமம் எல்லாம் இல்லை.
எனக்கு மின்னல் கண்ணில் படாமல்,
சத்தம் காதில் விழாமல் இருந்தால்
போதும்.!!
சென்னையில் அனேகமாக மாடிப்படி வளைவில்
நல்ல ஜமக்காளம் போட்டுக் கொண்டு,
கம்பளியையும் போர்த்திக் கொண்டு
காதில் பஞ்சும் வைத்துக் கொண்டு விடுவேன்.

இந்தப் பயத்துக்கு நிவாரணம் கிடையாது.
வேண்டுமானால் சைக்கியாட்டரிஸ்ட் கிட்டப் 
போய் , கௌன்சலிங்க் எடுத்துகலாம்.
அவரும் ஒரு சிமுலேஷன் போல ஒரு அறையில்
 நம்மை உட்கார வைத்து
இடி ,மின்னல் முழங்க வைப்பாராம்.
இரண்டு மூன்று தடவை கேட்டால்
பாதி சரியாக ஹேது உண்டாம்!!
தெரியாமல் தான் கேட்கிறேன்.  அது பொய்யான
சத்தம் நிஜமில்லை என்று தெரிந்த உடனே நமக்கு

அந்த சூழ்னிலைக்கான பயம் போய்விடுமே.
இந்த ஊர் ரேடியோ, டிவி, மொபைல் ஃபோன் மாதிரி

Your area is under threat of Tornado watch. 
please be safe. gO to your basement and stay away from windows
என்று தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தால்
நான் என்ன,, ஆனானப் பட்ட சிங்கமே
அதிருவார் என்றே நினைக்கிறேன்.

எப்படித் தான் இந்த ஊர் மக்கள்
பழைய நாட்களில் குதிரை மேல் பயணித்தார்களோ.?
பழைய கதைகளில் பாறைக்குப் பின்னால் ஒண்டிக் கொண்டிருக்கும்
கதா நாயகர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்:)
அவர்களுக்கு எல்லாம் வெதர் ரேடியோ இல்லையே.
சுற்றுமுற்றும் உணர்ந்து தங்களைக் காப்பாற்றி கொண்டிருப்பார்கள்.

இவ்வளவு ஆனபிறகும் சுவர்க்கோழியின் ரீங்காரம்
கேட்டுக் கொண்டே இருந்தது.
நேற்று மதியம் தென்பட்ட அணில்கள்,
பறவைகள் எல்லாம் மீண்டும் இன்று காலைதான்
வெளியே வந்தன,.
இன்று மாலையும் காற்றும் மழையும் உண்டு என்று நேற்றைக்கே
புண்ணியவான் சொல்லிவிட்டார்.

முன்பெல்லாம் நிறைய ஊர்க்காரர்கள்
அவதிப்பட்டதால் இப்பொழுது இந்த அதி நவீன எச்சரிக்கைகளைக்
கொண்டு வந்திருக்கிறார்கள்.
நம்மூர் மாதிரி பகல் இரண்டு மணி செய்தியில், 
இன்று மாலை மழையோ இடியுடன் கூடிய பலத்த மழையோ
இருக்கலாம் என்று சொல்லும் காலம் 
இல்லை. 
இந்த சூறாவளியின் போதும்
சாலையில் விரையும் வாகனங்களும்
சைக்கிள்களும் ஓயவில்லை.
அவரவர் வேலையை வேறு யார் செய்யமுடியும்.
மொத்தத்தில் ஒரு நொடி கூட
அஜாக்கிரதையாக இருக்க முடியாத மணி
நேரங்கள் மூளையில் பதிவாகி விடுகின்றன.
எல்லோரும் நலமுடன் இருப்போம்.







Sunday, August 08, 2021

முன்னம் ஒரு காலத்திலே..6.

வல்லிசிம்ஹன்

முந்திய அத்தியாயத்தில் சாரதாவும்,கோபாலன் சாரும் கிளம்பிச் சென்றதைச் சொல்லி இருந்தேன்.
எங்களுக்கு  இது அதிர்ச்சி என்றால்,
திரு வில்லியம்ஸ் முகத்தைக் கண்ணால்
பார்க்க முடியவில்லை.
ஒரு நொடியில் முக பாவத்தைச் சரி செய்து கொண்டார்.''எல்லோரும்
வந்து கௌரவித்ததற்கு மிக நன்றி.
இறைவன் என்றும் நம்முடன் இருப்பார்.

மணி 12 ஐ நெருங்குகிறது. மீண்டும் புது வருடத்துக்குச் சந்திக்கலாம்.''
என்று கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுத் தன்
அறைக்குள் சென்று விட்டார்.
அறையின் கலகலப்புச் சட்டென்று ஓய்ந்தது.
எலிசபெத் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா என்று
கவனித்தாள்.
'' அவர்கள் தான் முக்கியமா, நாங்கள் முக்கியம் 
இல்லையா'' என்று முகம் சுளித்தாள் டாக்டர் சுசீலா.

மற்ற நண்பர்கள் திரு வில்லியம்சின் கறார் நடவடிக்கைகளுக்குப் 
பழகியவர்கள். இதற்கு மேலும் போதை ஏறினால்
தங்கியிருக்கும் இடத்துக்குப் போவது தடுமாறிவிடும்
என்ற யோசனையில் மகிழ்ச்சியுடனே கிளம்பினார்கள்.

அதுதான் புது வருடத்துக்கு வருவோமே ,அப்போது பேசிக்கொள்ளலாம்
என்று புறப்பட்டார்கள்.
சிலர் காலையில் கோவை செல்ல முடிவெடுத்து மற்ற
தோழர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.
இண்டர்காம் அழைப்பு கேட்டு 
கணவனின் அறைக்குச் சென்றாள் எலிசபெத்.
''உன் அத்தை பெண்ணைப் புறப்படச் சொல். இனி இங்கே
அவள் வரக்கூடாது'' என்ற சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார்.

மெல்ல வெளியே வந்த எலிசபெத் எங்களைக் கண்டதும்
பக்கம் வந்து'' நீங்களும் ஊருக்குக் கிளம்ப வேண்டுமா?''
என்று கேட்க நாங்களும் தலையசைத்தோம்.

''ஒரு நிமிடம் ,!!!ஐய்யர் வந்து விட்டாரா பார்க்கிறேன்" என்ற படி வெளி
போர்டிகோ அருகில் சென்றாள்.
அதற்குள் இண்டர்காம் ஒலிக்க சிங்கம் எடுத்தார்.
''டேய் சிம்மு, நீங்கள் இன்று இரவு தங்கி விடுங்கள்.
காலையில் பலகாரம் சாப்பிட்டுக் கிளம்பலாம்"
என்று வில்லியம்சின் குரல் கேட்டது.
அந்த மனுஷனுக்குப் பாம்புச் செவியோ
என்று நான் வியந்தேன்.

நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து 60 கஜ தூரம்
இருக்கும் அவரது அறை.கதவும் மூடி இருக்கிறது.:))

உள்ளே வந்த எலிசபெத்திடம், செய்தியைச் சொன்னார்
சிங்கம்.
"ஓ நல்லதாச்சு , குழந்தைகள் தூங்குகிறார்கள்.அதை ஒட்டி இன்னோரு அறை
இருக்கிறது.நீங்கள் உறங்கிக் கொள்ளலாம் "
என்றாள்.
எனக்கோ காலையிலிருந்து உடை மாற்றாமல் 
சங்கடம்.ஆனால் குளிர் என்னைப் பேச விடவில்லை.
இரவு வணக்கம் சொல்லிவிட்டு அந்த பச்சை வண்ண
அறைக்குள் சென்றோம்.
ஆமாம் அந்த வீட்டில் ஏழு வண்ணங்களுக்கும் அறைகள் இருந்தன,
பச்சை வண்ண அறையில் திரைச்சீலைகள் இளம்பச்சை.
உட்காரும் சோஃபா, கட்டில்கள் ஆழ்ந்த  பச்சை நிறம்,.
கட்டிலின் மேல் மெத்தை விரிப்புகள் ஆலிவ் பச்சை.

குழந்தைகளைத் தொந்தரவு செய்யாமல்
நாங்களும் உறங்கிவிட்டோம்.
வீட்டின் சத்தங்களுக்கு நடுவே வாசல் கதவுகள்
அடைக்கப் படும் சத்தமும்,
நாய்கள் அவிழ்த்து விடப்படும் சத்தமும் கேட்டது.
உறங்கி எழுந்திருக்கும் போது சிங்கமும் குழந்தைகளும்
குளியலறையில் சிரிக்கும் சப்தம் கேட்டது.


நான் எழுந்து அறையை ஒட்டிய ஃப்ரென்ச் விண்டோஸ்
வழியாகத் தோட்டத்தை ரசித்துக் 
கொண்டிருந்தேன்,.
''அம்மா!! என்ற குரல் கேட்டது.திரும்பினால்
த்ரேசா கைகளில் பெரிய தட்டில் 
காப்பி, பிஸ்கட்,பால் என்று வைத்து
நின்று கொண்டிருந்தாள்.
"உள்ள வாம்மா" என்றதும் ''அம்மா உங்களை சாப்பாட்டு மேஜைக்கு வரச் சொன்னார்''
என்று வெளியே சென்றாள்.

ஒரு 36 மணி நேரத்துக்குள் என்னவெல்லாம் அனுபவம்
என்று வியந்து கொண்டு,
சிங்கத்தையும் குழந்தைகளையும்
அழைத்தேன்,
நானும் முகம் கழுவி சுத்தம் செய்து கொண்ட பின்னர்
குடும்பம் சாப்பாட்டு அறைக்கு நகர்ந்தது.
''என்னடா எல்லோரும் தூங்கினீர்களா?'' என்ற 
பெரிய குரல் கேட்க , ஆமாம் பில் என்றார் சிங்கம்.
''ஹவ் அபௌட் யூ மிஸஸ் சிம்மு.? சௌகரியமாக
இருந்ததா?'' என்ற விசாரிப்புடன்

குழந்தைகளையும் உட்காரச் சொன்னார்.

எலிசபெத் புத்தம் புதிய புன்னகையுடன் 
அழகாக உடை உடுத்த் இருந்த பெண்களுடன் வந்தார். 
உலகத்திலேயே மிருதுவான இட்டிலி, சட்டினி மிளகாய்ப் 
பொடி எல்லாம் சத்தம் இல்லாமல் 
பரிமாறப் பட்டன.
சின்னவனைப் பார்த்து ''நெய் ,சர்க்கரை வேண்டுமாடா
உனக்கு ?''என்று கேட்டதும் மேலும் கீழும் தலையாட்டினான்.
""
குழந்தைகளுக்கு நிறைய நெய்யும் சர்க்கரையும் வை வெள்ளைச்சாமி"
என்று அந்த சமையல்காரரிடம் சொல்ல அவரும்
பணிவாகக் கொண்டு வைத்தார்.

''நாங்கள் கிளம்பலாமா பில். ? கோவையில் வேலை இருக்கிறது''
என்றார் சிங்கம்.
"ஆல் இன் குட் டைம்:)"" இப்பவே சனிக் கிழமை மதியம் ஆகப் 
போகிறது. ஒரு நாள் உன் வொர்க்ஷாப் நஷ்டப்பட்டு விடுமா?
என்னோடு எஸ்டேட் சுற்றிப் பார்க்கக் குழந்தைகளோடு வா.
பிறகு ஊருக்குப் போவதைப் பார்க்கலாம்" என்றார்.

பசங்களும், சிங்கம், திரு வில்லியம்ஸ் பெரிய ஜீப்பில் ஏறிக் கொண்டு
வெளியே சென்றார்கள்.

என்னுடன் நீ வா என்று எலிசபெத் அழைக்க
வெளியில் சென்று படிகளில் உட்கார்ந்தோம்.
''இரவு  என்ன நடந்தது என்று தெரிய வேண்டாமா?"
என்றாள்.'' அவசியமானால் சொல்லுங்கள்.''
என்றேன்.
அந்தப் பெண் சாரதா அழுததும் நான் என் தவறை உணர்ந்து விட்டேன்.
என் கணவர் அப்படிப்பட்ட மனிதரே அல்ல.
கோபம் பெரிதாக வருமே தவிர நல்ல குணவான்.
தவறிழைத்திருக்க மாட்டார். அதுவும் கோபாலன் மாதிரி சாதுவான
மனிதனுக்கு அவர் வேறு விதமாகத் தீங்கிழைக்க
இறைவன் சாட்சியாக  நினைக்க மாட்டார்.
நேற்று இரவு  வெகு நேரம் பேசினோம்.
பைபிள் படித்தே படுக்கச் சென்றோம்.
இனி எங்கள் வாழ்வில் சாத்தானுக்கு இடம் இல்லை"

அதனால் நீ நிம்மதியாகப் புறப்படு. உங்க வீட்டுக்காரரை அனேகமாக
எங்க வீட்டுக்காருடன் தான் பார்க்கப்
போகிறாய்.எங்க வீட்டுக்காரருக்கு உலகமே குடும்பமாக இருந்தால்
சந்தோஷமாக இருப்பார்.''

என்று முடித்தவளை மகிழ்ச்சியுடன் பார்த்தேன்.
உள்ளே சென்றோம் அங்கே எங்களுக்குக் 
கொடுக்கப் பட்டிருந்த அறையில் மிகக் கச்சிதமாக
பைகள் வைக்கப் பட்டிருந்தன.
எங்களுடைய க்ருஸ்துமஸ் பரிசு உன் குடும்பத்துக்கு.
மகிழ்ச்சியுடன் அணிந்து கொள் என்று என் கையில் ஒரு பையைக்
கொடுத்தாள்.
அழகான சந்தேரி காட்டன் புடவை அரக்கு வர்ணத்தில்
நீலப் பூக்களுடன் அமைதியாக அவள் கையில்
உட்கார்ந்திருந்தது.
மற்ற பைகளில் பெரிய கேக், ஃப்ரூட் பன், ஆரஞ்சுப் பழங்கள்,
மாதுளம்பழங்கள், ஒரு பெரிய பாக்கெட் காப்பிப் பொடி, டீத்தூள்
எல்லாம் இருந்தன,
எனக்கு மிகத் திகைப்பாக இருந்தது.

அன்று இரவு,
நில்கிரி ரயிலில் ஏற்றி விட்டார் வில்லியம்ஸ்... 70 நிமிடங்களில் 
கோவை வந்து விட்டோம்.
ரயில் நிலையத்திலிருந்த டாக்சி எடுத்துக் கொண்டு
வீடு வருவதற்குள்
குழந்தைகள் தூங்கி விட்டார்கள்.

அடுத்த வீட்டை நோக்கினேன். இருளில் ஆழ்ந்திருந்தது.

அடுத்த ஒரு வாரத்துக்கு அங்கு ஆரவாரமே இல்லை.
பிறகு ஒரு நாள் சாரதா நம் வீட்டிற்கு வந்தார்.

அந்த மதிய வேளையில் அவரின் அழகு
இன்னும் அதீதமாகத் தெரிந்தது.
''குருவாயூர் போய் வந்தோம் ரேவதி.
நான் நம்பிக் கொண்டிருந்த நிகழ்ச்சியும் இன்னும்
எட்டு மாதங்களில் நடக்கப் போகிறது''
என்ற வார்த்தையைக் கேட்டதும்
எனக்கு வந்த ஆனந்தத்தைச் சொல்லி முடியாது.
அப்படியே அவரை அணைத்துக் கொண்டேன்.

  ''நீயும் போன வார நிகழ்ச்சிகளை மறந்து விடு.
இதோ நாளை புது வருடம்.
இன்னும் கொஞ்ச நாட்களில் திருச்சூர் சென்று விடுவோம்.
அம்மா வீடும் குருவாயூரப்பனும் பக்கம்."
இனிமேல் திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன் எங்களுக்கு
சம்பந்தம் இல்லை.
எங்க வீட்டுக்காரருக்கு வருத்தம் தான்.
வரப் போகும் பையன் எல்லாவற்றையும் 
மாற்றி விடுவான்" என்றார்.

அவர்கள் செல்வது  வருத்தம் தான். எதிர்வீட்டில் புதிதாகச் 
செட்டியார் குடும்பம் வந்திருந்தது, அவர்கள் வீட்டிலும் மூன்று 
பெண் குழந்தைகள்.
மாறிக் கொண்டே இருப்பதுதானே வாழ்க்கை.!!!
சாரதா கோபாலனுக்கு மகிழ்ச்
சியுடன் விடை கொடுத்தோம்.

திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன்  மாதம் ஒரு முறையாவது
வந்து விட்டுப் போவார்கள்.
சிங்கத்துக்கு மேன்மையான தோழர் கிடைத்தார்.
எனக்கும் தான்!!!! உயர்ந்த தோழி கிடைத்தாள்.
70களில் நடந்த இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்ததில்
இந்த ஆறு நாட்களும் உதகையில் இருந்த உணர்வு எனக்கு.

மிகைப்பட சொல்லவில்லை. இருந்தும் மிக நீளம் தான்.
எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.   நட்புகளுக்கு
மிக மிகநன்றி . நல்ல நட்பு கொஞ்சம் சிதைந்தாலும் 
கோபாலன் திரு வில்லியம்ஸ் இருவருக்கும் 
நட்பைப் புதுப்பித்துக் கொள்ள
மீண்டும் ஒரு கட்டிடம் காரணமாக இருந்தது.
சென்னையில் வீடு கட்ட விழைந்த போது
அழைத்த கம்பெனியின்  பங்குதாரராகக்
கோபாலன் வந்த போது மீண்டும் நட்பு துளிர்த்தது.
மீண்டும் அந்த நால்வரும் சேர்ந்தனர்.
முன் போல இல்லாவிடினும் கசப்பு இல்லை.
சுபம் மங்களம்.


OOTY LAKE.







Saturday, August 07, 2021

பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா.

 பத்மினி சிவாஜி படங்களில் பாடல்கள்

எப்பொழுதுமே அபிநயம், நாட்டியம் என்று புன்னகைக்க
வைக்கும். அதாவது சீரியஸாக இல்லாத படங்கள்.

பேசும் தெய்வம் கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு, பின் அழுகை
என்று மாறி வந்தாலும் ரசிக்கும் படியாக
இருக்கும்.

என் தம்பி ரங்கன் சொல்லிச் சொல்லி
நான் சிவாஜியின் இளமைக் கால படங்களை
நுண்ணிப்புடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டேன்.
அவன் அளவு எனக்கு சிவாஜி பைத்தியம் 
இல்லாவிடினும் பாராட்டத் தெரிகிறது:)
அதுவும் இங்கே கொடுத்திருக்கும் பாடல்
உண்மையிலேயே கணவன் மனைவி புரிதலுக்கு
உகந்த உகப்பு இருக்கும்.

தங்கப் பதுமை படமும் அது போலத்தான்.
கண்ணகி கதை திரும்பி வந்தது போல
ஒரு படம்.
அந்தப் படத்தில் பத்மினியின் 
பாத்திரத்துக்கு  ஏகப்பட்ட  நடிப்புத் திறனை
வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள்
உண்டு.
அப்படியே அல்வா சாப்பிடுவது போல
நடித்துத் தள்ளி விடுவார்.
சோகக் காட்சிகளைப் பதிவிட வில்லை:)


கை கொடுத்த தெய்வம் இன்னோரு படம்.
இரண்டு சிகரங்கள்  மோதுவது போல
நடிப்பின் இலக்கணங்கள் சிவாஜியும் சாவித்திரியும்.

இங்கேயும் சிவாஜி அடக்கி வாசிப்பார்.
சாவித்ரிக்கே முக்கிய வெளிச்சம். மிக ரசித்த
கே எஸ்.கோபால கிருஷ்ணனின் படம்.

முன்னம் ஒரு காலத்துலே 5




வல்லிசிம்ஹன்

இங்கே வில்லியம்ஸ் தம்பதிகளைப் பற்றி
சொல்லியாக வேண்டும். 
அவளாவது பல வித  விஷயங்களுக்கு ஆசைப் படுவாள்.
அவருக்கு  சுடச் சுட சுவையான உணவு,
வீட்டு சுத்தம், காப்பி ,டீ எஸ்டேட்  வளப்பம்,
குழந்தைகள் நலம் இதுதான் குறிக்கோளே.

மிக மிக ஏழைகளிடமும்  கனிவோடு தான் 
பழகுவார். அவர்கள் சென்னை வரும்போது கூடப் 
பார்த்திருக்கிறேன். 
ஊனமுற்றவர்களுக்கு  பிறர் அறியாமல் உதவி செய்வார்.

நண்பர்களிடம் மிகப் பாசம் வைப்பார்.
படிக்கும் பைபிள் வாசகங்களுக்கு மீறி நடந்ததில்லை.



 எலிசபெத் வில்லியம்சுக்கு கணவரின் பல்வேறு
நண்பர்களைப் பற்றி எப்போதுமே
குறை இருந்தது.
 அவரும் பணம் , கம்பீரம்,ஆளுமை எல்லாம் கொண்டிருந்ததால்
அவளுக்குத் தானும் அவரோடு எல்லா இடங்களுக்கும் 
செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.

அவருக்கு நண்பர்களே உலகம்.
அவரது வியாபாரத்துக்கும் ,புதிதாக அவர் ஆரம்பித்திருந்த இரண்டு
பஸ் சர்வீஸ்கள்  வளர்வதற்கும்
அவர்கள் உதவியாக
இருந்ததால் பல வேறு நகரங்களுக்கு

அவர் செல்லும்போது அந்த நட்புகளின் 
தோழமை அவருக்கு உறு துணையாக  இருந்தது.
அந்த விதத்தில் கோபாலனும் சிங்கமும்
இன்னோரு வக்கீல் நண்பரும்
அவருடன் செல்வார்கள்.(வேலை என்று  ஒன்று இல்லாவிட்டால்  சிங்கம்
முழு நேர உதவியும்  செய்திருப்பார்:))00))

இந்த நண்பர்களை எலிசபெத்துக்கும் தெரியும்.
அவர்களது மனைவிகளும்
வந்து போவதுண்டு. 
கோபாலன் கூனூருக்கு வந்து போவார். சாரதாம்மா
வந்ததில்லை.

முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த டாக்டரம்மா
 எலிசபெத்தின் அம்மா வழி உறவினர்.
அவர் சொல்லி தான் ,இந்த கோபாலன் தம்பதியினர் மேல்
அவளுக்கு  வேற்றுமை உணர்வு வந்திருக்கிறது.

இந்த சங்கடத்தில் பழைய நிகழ்வு ஒன்று அடங்கி
இருந்தது. கோவையைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் குடும்பமும்
திரு வில்லியம்ஸின் குடும்பமும் வெகு நாட்களாக
நட்பு கொண்டு இருந்தவர்கள். 17வருடங்களுக்கு முன்
டாக்டர் சுசீலா விக்டருக்கு ,வில்லியம்சை மணம் முடிக்க 
அவளின் பெற்றோர் நினைத்திருந்த போது,

 எலிசபெத்தின் குடும்பத்தை 

வில்லியம்சின் பெற்றோர் சந்தித்துப் பேசி ,  திருமணத்தை
முடித்துவிட்டனர்.


இது  சுசீலாவைப்  பொறுத்தவரை மிகப் பெரிய ஏமாற்றம்.
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான சுசீலா
அதற்குப் பின் படித்து முடித்து ,தனக்கான தனி க்ளினிக்கையும்
ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தாள்.
மணம் முடிக்கவில்லை.
மக்கட்பேறு வைத்தியராக இருந்ததால்
சாரதாவும், கோபாலனும் அவளிடம் சென்று வைத்தியம் 
செய்து கொண்டவர்கள்.
அவர்கள் வீட்டுக்கு திரு வில்லியம்ஸ் வருவதும்
அவளுக்குத் தெரியும். 
கோபாலனும் திரு வில்லியம்சும் கல்லூரிகாலத்திலிருந்தே
நண்பர்கள்.சாரதா கோபாலன் திருமணம் கூடப்
பிறகு நடந்ததுதான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.09  Friday  Breaking News...மாலை. பெரிய மழை வருவதாக தொலைக்காட்சி செய்தி.
அது வருவதற்கு முன் எழுதி முடிக்கப் 
பார்க்கிறேன். முடியவில்லை என்றால் 
சனிக்கிழமை காலை , இந்திய நேரம் மாலைதான்
முடியும்:)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாரதாவின் அழகும், குணமும் கோபாலின்
நற்குணமும்
டாக்டர் சுசீலாவுக்குத் தெரியவில்லை.
அந்தத் தம்பதியினரின் ஒற்றுமையும்,
திரு வில்லியம்சின் நேர்மையும்
அவளுக்குப் பிடிபடவில்லை.

தப்பு என்று அவளுக்கு மனதில் பட்டதை
எலிசபெத்திடம் சொல்லி கலக்கி இருந்தாள். 
கையில் கோப்பையுடன் அவளை நாடிப் போனாள்.
கூடவே அவளுக்குத் துணையாக இன்னொரு பெண்
அவள் சொல்வதை அங்கீகரிக்க.

அந்த வீட்டில் உண்டு களித்து,அங்கேயே மன வேறுபாட்டை விதைப்பது
அவளைப் பொறுத்தவரையில் தவறாகப்
படவில்லை.
சாராதாவை ஏற்கனவே சீண்டி அவளைக் காயப் படுத்தியது 
போதாதென்று என்னை நோக்கிப் பேசத் திரும்பியவளை  வழி மறித்து

''நீங்கள் உணவு விடுதி நடத்தி வந்ததாகக்
கேள்விப்பட்டேன்,. உங்கள் குடும்பம் பாலக்காட்டில்
அதற்கு பெயர் பெற்றதாமே?'' ''கணவனின் தோழர்கள் உனக்கும் தோழர்களா?""
இதுதான்  அவள் பேசிய வார்த்தைகளின் சுருக்கம்.

ஏற்கனவே  சஞ்சலத்தில் இருந்த சாரதாவால்
பதில் சொல்ல முடியவில்லை.
என்ன கேட்கிறாள் என்று அவளுக்குப் புரியவில்லை.
அவள் தந்தை ,, குருவாயூரப்பன் பெயரில் ஒரு 
உணவு விடுதிதான் நடத்தி வந்தார்.
அவரிடம் இருந்து  பல கேரள உணவு வகைகளைக்
கற்றுக் கொண்டிருந்தாள்.
சுபாவத்திலேயே இனிமையான பெண்ணாக 
இருந்ததால் வேறுபாடு பார்க்காமல் 
திரு வில்லியம்ஸ் அவர்கள் வரும் நாட்களில்

நல்ல மனதுடன் தான் செய்து கொடுப்பாள்.

22 வயதிலிருந்து இந்த பத்து வருடங்களாகக்
கோவையில் சாயி பாபா காலனியில் 
இதே வீட்டில் இருந்து வருகிறாள்.
ஒரு சோகமும் கிடையாது. இருவரிடமும் தேக 
ஆரோக்கியத்திலும் குறை இல்லை.
கோபாலன்  குடும்பத்தில் தாமதமாகத் தான்
குழந்தை பாக்கியம் உண்டு என்றும் தெரியும்.

கோபாலனின் அண்ணாவுக்குத் திருமணமாகி 12 
வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது.
அவளுடைய பிறந்த வீட்டில் அவளையும்  சேர்த்து
ஐந்து குழந்தைகள். 2 அக்கா, 2 தம்பிகள்.
அதனால் தன் குடும்பத்தைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை.
இங்கு வந்த இடத்தில் இந்த டாக்டர் சுசீலா 
தன்னை ஏதோ தாங்கலாகப் பேசுகிறாள்
என்று தெரிந்தது. காரணம் தான் புரியவில்லை.

அந்த இடத்தைவிட்டு நகரவே முயன்றாள்.
நானும் அவள் அருகில் நின்று கொண்டேன்.
காதோடு'' இனிமேல் அந்த பானத்தைத் தொடாதீர்கள்''
என்றதும் தலை அசைத்துவிட்டு
''இவர்களுக்கு என் மேல் என்ன கோபம்?''
என்று கேட்க, எனக்குத் தெரிந்ததைச் சொல்லி
''அவளுக்கு வெறும் பொறாமை''

''அவர்கள் வீட்டுக்கு திரு வில்லியம்ஸ் வருவதில்லை.
உங்கள் வீட்டுக்கு வருகிறார்" என்று முடித்தேன்.

சட்டென்று புரிந்தவளாகத் திரும்பிய சாரதாவின்
கோபத்தைக் கண்டு பயந்தேன்.

'' உங்கள் இருவரையும் போல ஈன குணம்
எங்களுக்குக் கிடையாது. மனிதர்களையும்,
பரஸ்பர நேசத்தையும் புரிந்து கொள்ளுங்கள்"
என்று தணிந்த குரலில் சொல்லி விட்டுக்
கணவரைத் தேடினாள். அருகிலேயே
கோபாலன் நிற்பதைக் கண்டு ,ஒரு நொடி
தயங்கினவள் '' எனக்கு  உடல் நலம் சரியில்லை.
நாம் கிளம்பலாம்'' என்றாள்.

மனைவியின் கண்களில் நீர் கண்டு பதைத்தவர்
வேறொன்றும் சொல்லாமல் , திரு வில்லியம்ஸை
நோக்கிக் கண்ணாலெயே  விடை பெற்றார்.

வீட்டின் முன்புறத்துக்கு வந்தவர்களை
மலைக்குளிர் தாக்கியது.
'' சார் ,ஐயா உங்களை வுட்லாண்ட்ஸ்  ஹோட்டலில் இறக்கி விடச் சொன்னார்.''
என்ற சுந்தரம் ஐய்யர் குரல் கேட்க

வேறு வழி யோசிக்க முடியாமல்
இருவரும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

செல்லும் நண்பனைக் கண்டு திகைத்தவராய் வில்லியம்ஸ் 
நிற்க நானும் சிங்கமும்
அவரை நோக்கியபடி நின்றோம்....தொடரும்














இசை கேட்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த சங்கம் திரைப்படப் பாடல்.




 

Thursday, August 05, 2021

முன்னம் ஒரு காலத்திலே 4

வல்லிசிம்ஹன்

கிருஸ்துமஸ் நாள் நல்ல மூடுபனியுடன், 
குளிர் சூழ லேசான சூரிய வெளிச்சத்துடன் மலர்ந்தது.
குழந்தைகளுக்கு மகா உத்சாகம். ஜன்னல்களைத் தொட்டுச்
சில்ல்ல் என்று சப்தம் எழுப்பினார்கள்.

அவரவர்களுக்கான பால், காப்பி கொடுத்ததும்
கொண்டு வந்திருந்த நல்ல் உடைகளையும் காலுறைகளையும்
மாட்டி ஷூ போட்டுக் கொண்டு 
சமர்த்துக் குடங்களாக வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

நாங்கள் வில்லியம்ஸ் அவர்களின் வீட்டு வாசலில் இறங்கி சுற்றியுள்ள
பெரிய தோட்டத்தைப் பார்த்தோம்.
மலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் படிப் படியாக
அமைந்த நிலத்தில்
ரோஜாச் செடிகள்,பலவகை பெயர் தெரியாத ஃபெர்ன்ஸ்,
குரோட்டன்ஸ், மாதுளை மரங்கள், ஆரஞ்சு மரங்கள்
என்று வண்ணமயமாக   இருந்தது அந்த எஸ்டேட்.

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்கள்,
என்று விதவிதமான அமைப்புகள் தம்பதிகளின் ரசனையைக் காட்டியது.சுற்றி வரும்போது பெரிய பெரிய  kennels 
கண்ணில் தென்பட்டது.
நாங்கள் அருகே வந்த போது அத்தனை 11 நாய்ச்செல்லங்களும்
குரைக்க ஆரம்பித்தன:)

தாங்க முடியாமல் விரைந்து வீட்டு முகப்புக்கு வந்து விட்டோம்!!!
இத்தனை ஜீவராசிகளுக்கும் சாப்பாடு?
கூட வந்த  சுந்தரம், ''அவைகளுக்கு சமைக்கத்
தனி ஆள் இருக்கிறான். அவன் வர நேரம் தான்.
ஐய்யா நீங்கள் உள்ளே போய் உட்காருங்கள்''

''கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள்.  இவைகளை அவிழ்த்துவிட்டால்
இஷ்டத்துக்கு ஓடும்'' என்றார்.



இந்தப்படம்..............................,  அன்று மதியம்  சாப்பாட்டுக்குப் பின் பார்த்து ரசித்தோம்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்கள் வீட்டில் அசைவம்
கிடையாது.
அவர்கள் பழக்க வழக்கங்கள் என்னை ,என் சிந்தனைப் போக்கை மாற்றியது.

பிடிக்காதது ஒன்றே ஒன்று. ஆனால் மலை வாசஸ்தலத்தில் இருப்பவர்கள் 
எல்லோருக்கும்  அந்தப் பழக்கம்  இருந்தது தெரியும்.

மாலை கிளம்ப இருந்த எங்களை கோபாலன் தம்பதியினர்
வற்புறுத்தி இருக்க வைத்தார்கள்.

கூனூர், சுற்றிப் பார்த்துவிட்டு உதகமண்டலமும் போய் வந்த
போது மாலை 8 மணி ஆகியிருந்தது.
எங்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்கள் இருவரும்
உள்ளே இருந்த சின்ன சாப்பாட்டு அறையில் 
தோசை சாப்பிடச் சென்றார்கள்.

முதல் நாள் மாதிரியே ஷெர்ரி என்ற  வைன் மற்றும் சற்று அதிக
ஆல்கஹால் உடைய விஸ்கி  கலந்து
பேசின வண்ணம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்களைத் தவிர இன்னும்  சில சினேகிதர்கள்

கோவையிலிருந்து வந்திருந்தார்கள்.
 நிதானமாக ஆரம்பித்தது, எடுத்ததற்கெல்லாம்
சிரிப்பு என்று சென்று கொண்டிருந்தது.

சமையல் பேச்சு வரும்போது திரு வில்லியம்ஸ்
சாரதாவின் சைவ சமையலை வெகுவாகப் பாராட்டினார்.

அவர் ஒரு உணவுப் பிரியர் என்பது இரண்டு நாட்களாக 
நான் பார்த்ததில் தெரிந்தது.
அவர்கள் வீட்டில் எலிசபெத் அவர்களைத் தவிர இரண்டு
 சமையல்காரர்களும் இருந்தார்கள்.
எல்லோருமே சமையல் செய்வதில் தேர்ந்தவர்கள்.

இந்தப் பேச்சில் எலிசபெத் குறுக்கிட்டு,
''நம் வீட்டு சமையலை விட அவர்கள் வீட்டு உணவு 
உங்களுக்குப் பிடித்துவிட்டது'' என்று புன்னகைத்தபடி சொன்னாலும்
அதில் ஒரு கசப்பு இருந்தது தெரிந்தது.

வந்திருந்த இன்னோரு டாக்டர் தோழி,
''சாரதாவுக்குப் பிள்ளையா குட்டியா
சமைப்பதைத் தவிர  வேறு பொழுது போக்கு இல்லை.
கொடுத்துவைத்தவள்'' என்று குறிப்பிட
சாரதாவின் முகம் சிவந்தது.

எனக்கே கலக்கமாக இருந்தது.இந்த  கூட்டத்தில் கலந்து பேச
எனக்கு விஷயம் இல்லை.

சட்டென்று  எழுந்து போக இருந்த சாரதாவை , கோபாலன் 
தடுத்து நிறுத்தினார்.

எல்லோருக்கும் தோசையும் ,தயிர் சாதமும் ஏற்பாடு செய்ய
எலிசபெத்  சமையலறைய நோக்கி நடக்க
நானும் பின் தொடர்ந்தேன்.
'' நீங்கள் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடா ? "
என்று அவள் கேட்டதும் தலை அசைத்தேன்.
''இரண்டு வருடங்களாகத் தெரியும் ''என்றேன்.
உடனே அவள்
''எங்க வீட்டுக்காரர் வெள்ளிக்கிழமை தோறும்
அங்கே தான் சாப்பிடுகிறார். நன்றாகப் பிடித்திருக்கிறது
போல...''

''எங்கள் வீட்டுக்காரரும் அவர்கள் வீட்டுக்குப் போவார்.
நல்ல நண்பர்கள் எல்லோரும்.'' என்று பொதுவாகச் சொன்னேன்.

''நீயும் கொஞ்சம் ஷெர்ரி எடுத்துக் கொள்கிறாயா. குளிருக்கும் இதம்"
  என்றாள். 

வழக்கம் இல்லை. 

குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் வந்து விட்டது
என்று சொன்னேன்.
 சமையலறையில் தயாராக இருந்த பணியாட்களிடம்
இரண்டு மூன்று தோசைக் கல்லைப் போட்டு சீராகத் 
தோசை வார்த்துக் கொண்டு வருமாறு
பணித்துவிட்டுப்
பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 
குழந்தைகளிடம்  சீக்கிரம் அவரவர் அறைக்குப்
போகச் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறோம்
என்று சொன்ன பெண்களிடம் , அடுத்த நாளும் கோயிலுக்குச் 
செல்ல வேண்டும் என்பதை  ஞாபகப் படுத்தி
அனுப்ப, அவர்களும் பக்கத்தில் வந்து கன்னத்தில் முத்தமிட்டு,

செல்லும் போதே என்னையும் குழந்தைகளையும் அணைத்து
பை பை என்று சொல்லிச் சென்றனர்.

பொருந்தாத சூழ்னிலையில் மாட்டிக் கொண்ட
கலவரம் என்ன்னைச் சூழ்ந்தது.
சிங்கத்தைத் தேடினேன். 
அவர் இன்னோரு சினேகிதருடன் மும்முரமாகப்
புதிதாக வந்த வண்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

தோசைகள் வருவதும் எல்லோரும் சாப்பிடுவதுமாக நேரம்
கடந்தது.
நானும் உள்ளே சென்று குழந்தைகளை, இன்னோரு படுக்கை அறையில்
படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
ஹாலில்
பேச்சு சத்தம் கொஞ்சம் அதிகமானது. சிரிப்பும்
உற்சாகமும் அதிகரித்தன.
எலிசபெத்  எல்லோரையும் உபசரித்த வண்ணம்
இருந்தாள். புன்னகை மாறாமல், அடக்கம் கலையாமல்
பழகுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சாரதாவின் முகம் மட்டும் இறுகி ,அழுவதற்குத் தயாராவதை
யூகிக்க முடிந்தது. கோபாலனும் , திரு வில்லியம்ஸும்
அவளை அடிக்கடி நோக்கிய வண்ணம் இருந்தனர்.

முன்னம் கிண்டல் செய்த அதே டாக்டரும், 
இன்னோரு மில் சொந்தக்காரரின் மனைவியும்
ஏதோ தகாத வார்த்தை சொல்ல
ஒரு பூகம்பம் வரப் போவது போல எனக்கு அச்சம்
தோன்றியது. ...................................

மீண்டும் பார்க்கலாம்










முன்னம் ஒரு காலத்திலே 3

வல்லிசிம்ஹன்




1972 ஆம் வருடம் மிகச் சிறந்த நினைவுகளைக் கொண்டது.
ஊட்டி எங்களுக்கு மிகப் பிடித்த இடமானது. அதுவும் குன்னூர், கோத்தகிரி
என்று பல இடங்களுக்கு
பைக்கில் சென்று மாலை திரும்பி விடுவோம்.

அப்போதிருந்த ஊட்டி ,மிக வளப்பமானது. இத்தனை வீடுகள்,
,மர முறிப்பு செய்த,  வெற்று மலைச் சரிவுகள்
இவை கிடையாது. யூகலிப்டஸ் மரங்களின்
வாசனை ஊட்டி மலை சாலைகளில் நிரம்பி இருக்கும்.
வண்டி செல்லும்போது சூரிய ஒளி
மரங்களோடு கண்ணாமூச்சி
விளையாடுவது ரசிக்குமாறு கூடவே வரும்.

இப்போது போல ஏசி வண்டிகள் இல்லை.
வண்டியின் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்
கொண்டு செல்லும்போது அத்தனை மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு.
சாரதாவின் மடியில் சின்னவன் சுகமாகத் தூங்க,
பெரியவன் அப்பாவின் தோளில் கைவைத்துக் கொண்டு நின்று 
கொண்டு வந்தான்  . . அவனைப் பிடித்துக் கொள்ள கோபாலன் சார்.

மகள் மூக்கருகே யூகலிப்டஸ் பாட்டிலை வைத்தபடி நான்.

ஒவ்வொரு வளைவிலும் 
ஒரு அலறல், ஒரு சிரிப்பு என்று கூனூர் வந்து சேர்ந்தோம்
சிங்கம் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய
இடத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
''ஜன்னலை மூடுமா. எதிர்த்தாற்போல் என்ன வருகிறது பார்'' என்றார்.

அவ்வளவு பெரிய நாயை
என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

Great Dane!!!! அதன் உயரம் வண்டிக்கு மேல் இருந்தது.
அதன் பற்களையும் நாக்கையும் 
பார்த்து பெரியவனும் மகளும் அலறி விட்டனர்!
'' ஹே லியோ!! கட் தட்!!'' என்றபடி திரு வில்லியம்ஸ்
வந்தார்.
அட இவ்வளவு உயர்ந்த மனிதரா என்று நினைத்தேன்.
அச்சு அசல் ரங்காராவ் மாதிரி இருந்தவரைப் 
பார்த்ததும் பிடித்துவிட்டது.
அன்பான இன்னோரு அப்பா போல இருந்தார்.
Doberman


அவர் வண்டியின் பக்கத்தில் வந்து ''இவன் ஒரு நல்ல
பையன். ரொம்ப ஃப்ரண்ட்லி ''என்று சிரிக்க,
அதுவும் பல்லைக் காட்டியது.:)

அதைப் பிடிச்சுக்கோப்பா. நாங்க இறங்குகிறோம் என்றார் கோபாலன்.
வாங்க வாங்க வீட்டுக்குள் போகலாம் என்றபடி 
அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் படிகளில் ஏறினார் திரு வில்லியம்ஸ்.
படிகளின் மேல்படியில் நின்று எல்லோரையும் வரவேற்றார்
எலிசபெத் வில்லியம்ஸ்.
அசந்து போக வைக்கும் அழகு. பாந்தமான ஹேண்ட்லூ



ம்
புடவை. குவித்த கைகள். 'தோத்திரம்'  என்று உச்சரித்த உதடுகள்.
உள்ளேயிருந்து வந்த சாம்பிராணி வாசனை...
என்று எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.!

ஒரு பத்துப்படிகள் ஏறி வீட்டின் வரவேற்பறைக்குள்
 நுழைந்தோம். இள நீல திரைச்சீலைகள். வெள்ளைப் பெயிண்ட் அடித்த
சுகமான ஆசனங்கள். அந்த வீட்டைப் பற்றித் தனியாகப்
பதிவு போடவேண்டும்.
இப்போது மேற்கொண்டு பார்க்கலாம்.

உள்ளே சென்றதும்
 குழந்தைகளுக்கு உபயோகிக்க குளியலறையைக் 
காண்பித்துக் கொடுத்தார் மிஸஸ் வில்லியம்ஸ்.

நானும் குழந்தைகளும் வெளியே வந்தபோது ஆண்கள் 
அன்றைய விசேஷ்மான நிகழ்வுக்குக் கையில்
வைன் கிண்ணம் ஏந்தி  இருந்தார்கள்.
''இட்ஸ் ஹார்ம்லெஸ்'' என்றபடி பெண்களும் (சாரதா உட்பட)
ருசி பார்க்க, 
நான் அவரது பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

நான் சற்றும் கண்டிராத சாரதாவை அங்கே பார்த்தேன்.
வெகு சகஜமாக எல்லோருடனும்
பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே இருந்து பலவித இனிப்புகளைக் கொண்டுவந்து 
பரிமாறிக் கொண்டிருந்தார்கள் வேலை யாட்கள்.
மாலை எட்டு மணி ... குழந்தைகள் தூங்க வேண்டிய நேரம்.

சாரதாவும் கோபாலனும் அங்கேயே தங்குவார்கள் 
என்று  தெரிந்தது.
சீட்டுக்கட்டு விளையாட்டுத் தொடங்கி நடந்து கொண்டிருந்தது.
போகலாமா என்று கேட்டபடி வந்த சிங்கத்திடம்
உடனே சரி என்று சொல்லி விட்டேன்.

 சாரதா, கோபாலன், வில்லியம்ஸ் தம்பதிகளுடன் 
கிளம்பும்போது.
'ஐய்யர்' !! என்று சத்தமான குரலில் அழைத்தார் வில்லியம்ஸ்.
உடனே உள்ளிருந்த வந்தார்"ஐய்யர்"   அவர்களின் காரோட்டி.

''இவர்களை பங்களோவில விட்டு விட்டு வா. ''என்றவர் மனைவியிடம் அவர்கள் உணவு தயாரா என்று கேட்க,
அவளும் உள்ளே இருந்து சூடான இட்லிகள் நிரம்பிய
பெரிய தூக்கையும், சட்டினி நிறைந்த டப்பாவையும்
கொண்டுவந்து கொடுத்தார்.

இந்த அன்பைக் கண்டு மனம் நிறைந்தது.
''மிஸஸ் சிம்மு, எங்க வீடு கூட பார்ப்பனர்கள் வீடு மாதிரி சுத்தம் தான்"
என்று பெரிதாகச் சிரித்தார் வில்லியம்ஸ்.
எனக்கு வெட்கமாகிவிட்டது.
இரவு வணக்கம் சொல்லி விட்டு
குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறி
அவர்களது  விருந்தினர் விடுதிக்கு வந்தோம்.

க்றிஸ்மஸ் விளக்குகள் பொருத்திய வீடுகளும்,
வீதிகளுமாக கூனூர் ஜ்வலித்தது.
இட்லி சாப்பிட்டு, அங்கிருந்த சுகமான 
கட்டிலில் நடுக்கும் குளிருக்கு இதமாக கனமான
ரஜாய் போர்வைகளுக்குள் நுழைந்தது தான் 
தெரியும்.
மறு நாள் காலை ஏழு மணிக்குக் கதவு தட்டப் படும் சத்தம்.
திறந்தால் காரோட்டி  சுந்தரம் ஐய்யர் நின்று கொண்டிருந்தார்.
இரண்டு பெரிய ஃப்ளாஸ்க் நிறைய காப்பியும் பாலும்
என்று கொடுத்தார்.

''குளித்துவிட்டு வாருங்கள் எல்லோரும் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்''
என்றார்....தொடரும்.







Wednesday, August 04, 2021

விரதம்?

வல்லிசிம்ஹன்

நன்றி தம்பி முகுந்தன், மதுரை.

Humorous read....hare krishna.....   

எட்டுதான் ஆகியிருந்ததது அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.

"என்னங்க கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.  

"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா? நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான் குமார் எரிச்சலுடன்.

"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது. 

எல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான். 

வழக்கமாக விடுமுறை நாளன்று காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை 6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்தபோதும் தன் காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.

"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க" என்று லதா சொன்னபோதும் மறுத்து விட்டான். 

இப்போது 8 மணிக்கு மறுபடி காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம் ஏற்படுத்துகிறாள்!

9 மணிக்கு"கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் குமார். 

தெருவில் நடந்து செல்லும்போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும் சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.

கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம் கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான். ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம்! அதனால் கோவிலில் பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை. 

கோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.

சர்வரிடம் "ஒரு காப்பி" என்றான். "இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு சார்!" என்றான் சர்வர். "காப்பி மட்டும் கொண்டு வா, போதும்" என்றான் குமார் எரிந்து விழாத குறையாக. 

'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று நினைத்துக் கொண்டான்.

சுமார் பதினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.

"நீங்க சாப்பிடலியா" என்று நண்பர் கேட்டதும் "உங்களுக்கும் காப்பி கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 

"சரி" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி விட்டோமா என்று நினைத்த குமார், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக் கொண்டான். 

1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து "நீங்களும் சாப்பிடறீங்களா?" என்றாள்.

"உனக்கு மட்டும்தானே சமைச்சிருப்பே?" என்றான் குமார்.

"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா? நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா?"

"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே!" என்றான் குமார் எரிச்சலுடன்.

"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும் சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம இருக்கலாம்."

பசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்த நிலையில், "சரி" என்றான் குமார் அவசரமாக. "முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க  விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்" என்றான்.

"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க? கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம் நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க" என்றாள் லதா.

தன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச் சாப்பிட்டான் குமார்.

பிற்பகலில் காப்பி போடும்போது, "என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா? ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க? இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல?" என்றாள் லதா.

குமார் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். "பிஸ்கட் ஏதாவது வேணுமா?" என்றாள்.

இவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார், "வேண்டாம்" என்றான். 

மாலை லதா கடைக்குப்போய் விட்டாள். மத்தியானம் வயிறு நிறையச் சாப்பிட்டும் சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட் வேணுமா?' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.

சமையலறை ஷெல்ஃபில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.

டிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.

கடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், "ராத்திரி உங்களுக்காக வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும் பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை" என்றாள்.

உள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்து விட்டு வந்தவள் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள். "போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க. சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.

இரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குதான் இரவு வரும். 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. 

"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன். ராத்திரி சாப்பிட வேண்டாம்" என்றான்.

மனைவி கொடுத்த நான்கு வாழைப்பழங்களைத் தின்றபின் வயிறு முழுமையாக நிறைந்திருந்தது.

இரவு 9 மணிக்கு "என்னங்க பால் கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 'சரி" என்றான் குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

"இல்லை, கொஞ்சம் உப்மா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா?"

"உப்மா செஞ்சிருக்கியா என்ன?'

"எனக்கு ரவா உப்மா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்" என்றாள் லதா.

உப்புமாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. 'சரி " என்றான்.

சூடான உப்புமாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.

இரவு படுக்கப்போகும்போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது. 

துறவறவியல் அதிகாரம் 27      
தவம்   குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்:  
ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்கே உரித்தான இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.

Unknown author......

Tuesday, August 03, 2021

முன்னம் ஒரு காலத்திலே 2

வல்லிசிம்ஹன்


வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் 
எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில்
இந்துக்கள் இருந்திருக்கிறார்கள்
பிறகு மதம் மாறி இருக்கலாம்  என்பது சம்பந்தப் பட்ட
தோழி சொன்னது.

எலிசபெத்தின் குடும்பம் குடகு மலையில் ஏதோ
அரச குடும்பத்தின் திவானாக இருந்தவரிலிருந்து தோன்றியது
என்று அதே தோழி சொன்னாள்.
இந்தத் தோழி சாரதா ,கோவையில் எங்கள் வீட்டுக்குப் 
பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளும், அவள் கணவர்
கோபாலனும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கட்டிடக் கலையில்
தேர்ந்தவர் கோபாலன். கோவையிலும் ,மேட்டுப் பாளையத்திலும் இருந்த
வில்லியம்ஸின் வீடுகளை
அமைத்துக் கொடுத்தவர் அவர்தான். 
குழந்தைகள் இல்லை. நம் கதையின் நாயகர் வில்லியம்சுக்கு
உற்ற தோழர்.

வெள்ளிக்கிழமையானால் அவருக்கு இவர்கள் வீட்டில் தான் சாப்பாடு.

சைவ சமையலில் வில்லியம்சுக்கு அவ்வளவு ஈடுபாடாம்.
சாரதாவும் நன்றாகச் சமைப்பார். 

நம் வீட்டின் வேலியைத் தாண்டினால் சாரதாவின் வீடு.
அந்த வீட்டின் பெரிய ஜன்னல் வழியே 
எங்கள் குழந்தைகள் விளையாடுவதைப் 
பார்த்துக் கொண்டிருப்பார்கள் அந்தத் தம்பதியினர்.

திடீர் என்று ஒரு நாள், ஒரு கூடை நிறைய 
சாக்கலேட் டப்பாக்களும், உயர் ரக பிஸ்கெட்களும்
சாரதா கொண்டு வந்து கொடுத்தார்.
ஏன் என்று நான் கேட்டதற்கு,
''வில்லியம்ஸ் சாருக்கு குழந்தைகள்
மிகப் பிடிக்கும். இந்தக் குழந்தைகளைப் 
பார்த்ததும் கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்''
என்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

''அவர் அப்படித்தான் ரேவதி. நிறைய கொடுக்கத் தெரிந்தவர்.
இதோ இந்த டிசம்பர் மாதம் எங்களையும்
கூனூருக்கு வரச் சொல்லி இருக்கிறார்.''
என்றவள் உங்க வீட்டுக்காரருக்குக் கூட அவரைத் தெரியுமாமே
என்று கேட்டாள்.

அது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை எனக்கு.
கோவைத் தொழிற்சாலையில் வராத வண்டிகளே
கிடையாது. அந்த ஊரே பணக்காரர்கள் ஊர்.
அதில் இவரும்  ஒருவராக இருக்கலாம்.
கொஞ்சம் கிட்ட நெருங்கி விட்டதால்,
இனிமேல் திரு வில்லியம்ஸ் என்று சொல்கிறேன்:)
திரு வில்லியம்ஸ் வரும் வண்டியே செவர்லே 
வண்டி என்று பார்த்திருக்கிறேன்.
இது போல அன்னிய நாட்டு வண்டிகளைப்
பழுது பார்ப்பதில் சிங்கத்துக்கு நிகரே கிடையாது.

அன்று இரவு குழந்தைகளின் கும்மாளத்தைப் பார்த்து சிங்கம்
சிந்தாமணி மார்க்கெட் போய் வந்தாயா என்ன
இத்தனை டப்பாக்கள் இருக்கிறதே என்று கேட்டார்.
என்னவோ இந்த மூன்றையும் அழைத்துக் கொண்டு நான் தனியே
போகப் பழகினவள் மாதிரி:)))
அந்த 22
ஸாரதா  கோபாலன் இப்படித்தான் இருப்பார்.


 எலிசபெத் வில்லியம்ஸ்.

அந்த 22 வயதிலும் தனியே வெளியே
போகத்தெரியாத
கிணற்றுத் தவளை நான்!!!

திரு வில்லியம்ஸ், சாரதா கோபாலன் என்று நான் கதை சொன்னதும்
அவரைப் பற்றி
மிகவும் சிலாகித்துப் பேசினார் சிங்கம்.
'ரொம்ப எளிமையான மனிதர்.பழக இனிமையானவர்.
வண்டிகள் பழுது பார்த்து எடுத்துக் கொண்டு போகும்போது
பணத்தைச் சரியாகக் கட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வார்'
என்றெல்லாம் கதை பறந்தது.
சிங்கத்துக்குக் கஸ்டமர்களே கண் கண்ட தெய்வம்:)

 டிசம்பர் மாதம் கோவையின் இளம் குளிர் இதமாக இருக்கும்.
எனக்கு  குழந்தைகளோட நர்சரிப் பள்ளி,
அவ்வப்போது வரும் சளி காய்ச்சல் என்று
இரவெது பகலெது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் திரு வில்லியம்ஸ் தம்பதிகளின் 
அழைப்பு வந்தது.

சிங்கம் வந்து சொன்னார். பக்கத்து வீட்டு
சாரதா கோபால் தம்பதியினரும்,
நாமும் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஊட்டிக்குப்
போகிறோம். அங்கே டிராவலர்ஸ் பங்களோவில் ஒரு இரவு தங்கி
அடுத்த நாள் வந்துவிடலாம் என்றார்,.

காலையில் சந்தித்த சாரதாவும் இதையே சொல்ல
எனக்கு தெரியாத ஒருவர் வீட்டுக்குப் 
போகும் கூச்சம். மலை வளைவுகளில், வயிறு ஒத்துக் கொள்ளாமல்
வாந்தி எடுக்கும் மகள் நினைவு.
வேண்டாம் என்று சொல்லவும் தயக்கம்.

சில விஷயங்களில் சிங்கம் பேச்சை மீற முடியாது.

டிசம்பர் 24 ஆம் தேதி ,  ரிப்பேருக்கு வந்திருந்த
திரு வில்லியம்ஸ் அவர்களின் பெரிய வண்டியை
ஊட்டியில் ஒப்படைக்க வேண்டி இருந்ததால்
அதிலேயே சாரதா,கோபாலன்,நான் குழந்தைகள்
என்று ஏறிக் கொள்ள, சிங்கம் ஓட்ட
பாட்டும் பேச்சுமாகக் கிளம்பினோம்.