Blog Archive

Monday, August 30, 2021

அந்தக் காலத்துல தூர தேசம் போகும் போது எடுத்துச் செல்லும் நீண்ட நாள் கெட்...

வறுத்த தேங்காய்த் தொகையல்

12 comments:

கோமதி அரசு said...

இவர்கள் செய்யும் தேங்காய் வறுத்து அரைத்த துவையல் வித்தியாசமாக இருக்கிறது.

தேங்காய், மிளகாய் , புளி பெருங்காயம் வறுத்து நற நற என்று அரைத்து கொண்டு கடைசியில் உளுந்து கடுகு தாளித்தவைகளை வைத்து ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து வைத்து கொண்டு ரயில் பயணத்திற்கு கொண்டு போவார்கள்.

கோமதி அரசு said...

இவர்கள் மாதிரி பூண்டு வைத்து அரைத்துப் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
இவர்கள் செய்யும் விதத்தில் பூண்டில்லாமல் நானும்
செய்து இருக்கிறேன்.

பூண்டு பச்சையாக அரைத்தால் நன்றாக இருக்குமோ
என்று கடுகு தாளித்து வதக்குகிறார்கள் போல இருக்கிறது.

நீங்களும் செய்திருக்கிறீர்கள் என்பதுதான் மகிழ்ச்சி.

இது போல அரைத்து, தோசை,இட்லி எடுத்துக் கொண்டு
பயணம் போக ஆவல்!!!

ஸ்ரீராம். said...

சுவையான வாழ்க்கை!  கிராமங்களில் பூண்டு இல்லாமல் சட்னி, ரசம், குழம்பு இருக்காது.  ஒவொன்றின் பயனையும் நன்கு அறிந்தவர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Geetha Sambasivam said...

மோர் சாதத்துக்குத் தொட்டுக்க நல்லதொரு துணை. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

முற்றும் அறிந்த அதிரா said...

வல்லிம்மா நலம்தானே??... நீண்ட நாளின் பின்பு எட்டிப்பார்ப்போம் என வந்தேன்... நாட்டில் இப்போ குளிர் கொஞ்சமாக ஆரம்பித்திருக்கிறது.

நலம் விசாரிக்க வந்த இடத்தில அருமையான துவையலும் செய்முறை பார்த்துக் கொண்டேன், இப்பவே செய்யோணும் போல ஆசையாக வருது...

மாதேவி said...

சுவையான துவையல்.

நாங்கள் தேங்காய்,உழுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் ,சீரகம் வறுத்து இடித்த பொடிதான் தோசைக்கு,இட்லிக்கு கட்டிக் கொண்டு போவோம். வீட்டில் ஒருவாரம் வைத்தும் எடுக்கலாம். இது துவையல் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.,

இயற்கையாகவே அவர்கள் உடல் உழைப்புக்கு
எல்லா வித ஜீரண சக்தியும் வேண்டும்.
இன்று கூட ஒரு ஓமம் சட்டினி வகையறா பார்த்தேன்.

ஸ்ரீஜயந்திக்கு அடுத்த நாள் ஓமத்துக்குக்
கண்டிப்பாய் தேவை இருக்கும்.:)

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன். நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக அன்பு கீதாமா,
அதேதான்.
மோர்சாதத்துக்கு என்று படைக்கப் பட்டது தேங்காய்த் துகையல்.

அம்மியில் அரைப்பது போன்ற மணம் எங்கு கிடைக்கும்.
அந்த அம்மாவுக்கு என்னை விட வயது குறைவாகத்
தான் இருக்கும். இருந்தாலும் பழங்கதை பேசுகிறார்:)
கிராமங்கள் இப்படித்தான் போலிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஹாய்ய்ய்ய்ய்ய். அன்பின் அதிரா!!
எனப்பா காணவே இல்லையே.
வலையில் ஈயாடுகிறதே நீங்களும் அஞ்சுவும் இல்லாமல்.

நலமாக இருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.
வேலைப்பளு அதிகமோ.

எ ப்ளாகில் எழுதுங்கள் மா.
நான் நலமே .வெய்யில் இங்கு அதிகம்.
அங்கே பத்திரமாக இருங்கள்.