நாங்கள் மலையேறி ய இடம்
மலை அடிவாரம் கிரிஸ்டல் மௌண்டன் |
மலைமேல் காப்பிக்கடை. |
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
சியாட்டிலின் இரண்டாம் நாள்
ரெயினியர் மலைச் சிகரம்.
![]() |
Add caption |
சிகாகோவிலிருந்து சியாட்டில் வந்து சேரும்போது
Add caption |
Cable cars or Gondolos to the top.
செல்லும் வழியில் முழுவதும் பசுமையான நெடு நெடுவென்று வளர்ந்த மரங்கள். எதோ வனத்துல வந்து விட்டோமோ என்று திகைக்க வைத்தன . மாடுகள் மட்டும் இருந்திருந்தால் ஸ்விட்சர்லாந்து என்று நினைக்கலாம். வெய்யில் நிறைய இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகம்
மலை முகட்டில் நின்று செலஃபி எடுக்கும் கும்பல். தடுப்பு சுவரின் மீது விளையாடும் கன்னியர் காளையர்.
Crystal mountain என்று அழைக்கப் படும் இந்த மலையிலிருந்து சுற்றி இருக்கும் ஐந்து சிகரங்களைக் காணலாம்.
சில்லென்று காற்று அடித்தாலும் சூரியனின் உஷ்ணமும் தெரிந்தது.
எங்களுக்கு ரெயினர் போகும் அவசரம் .
கீழே இறங்கி வந்ததும் காப்பி குடிக்க விரைந்தோம்.
அங்கே வந்த வானொலி அறிக்கை. சில இடங்களில் காட்டுத்தீ
அதிகமாக இருந்தததால் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும் படி செய்தி வாசிக்கப் பட்டது. அப்பொழுதே மணி மூன்றாகி இருந்தது,.
ரெயினியர் போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். திரும்பிப் போகும் நேரம் மூன்று மணி நேரக் காட்டு வழி.
இருட்டில் எங்கேயாவது அகப்பட்டுக் கொண்டால் சிரமம்.
மான்கள் ஏதாவது வண்டியில் அகப்பட்டால் அதுவேற
வேதனை .
அங்கிருந்து கிளம்பினாள் போதும் என்கிற அவசரம் சிறு சலனமாகப் பரவியது.
அதை எல்லாம் மீறி ஆட்டம் பாட்டம் எல்லாம் அங்கே நடந்து கொண்டிருந்தன.
சுற்றி இருந்த மரங்களூடே மினுமினுப்பாக பங்களாக்களில்
விளக்குகளும் மெல்லிய இசையும் ஆரம்பித்தன.
அவர்களுக்கு இந்த எச்சரிக்கை எல்லாம் பழக்கம் போல.
பேரனுக்கும் அவனுடைய வேலைக்கு அடுத்த நாள்
போக வேண்டும்.
அதனால், ரெயினியர் மலை அடிவாரத்துக்குப் போகும்
எண்ணத்தைக் கைவிட்டு சியாட்டிலுக்குத் திரும்பும் சாலையில் புகுந்தோம்.
வழி நெடுக்கப் படங்கள் எடுத்துக் கொண்டே வந்தான் சின்னவன்.
அதில்தான் சில படங்களைப் பதிவிட்டிருக்கிறேன்.
இத்துடன் இந்தப் பயணக்கட்டுரை இனிதே முடிந்தது.
. |