Showing posts with label short story 2021. Show all posts
Showing posts with label short story 2021. Show all posts

Tuesday, October 12, 2021

லிஸா மார்ட்டின் கதை 3

வல்லிசிம்ஹன்,

   தானும் லிஸாவும் சேர்ந்து இசைத் தட்டுகளை ரசித்த காலங்கள்
நினைவில் வர  வைத்த பாடல் கார் ரேடியோவில் ஒலித்தபடி ஏரிக்கரையோரம்

மார்ட்டின் வண்டியை விரட்டினான். 
மனம் முழுவதும் நிறைய நினைவுகள் விரட்ட,
மனதில் நின்ற ஒரே வார்த்தை"  ஏன்?"






Yesterday once more.
எங்கே தவறு  நிகழ்ந்தது? ஏன் எனக்குத் தெரிவிக்கப் 
படவில்லை. யார் இதற்குக் காரணம்.

வண்டியைத் திருப்பி லிஸாவை நேருக்கு நேர் சென்று 
அவளைக் கேள்விகளால் உலுக்கி எடுத்துப்
பதிலை வாங்க வேண்டும் என்ற வேகம்
அவனுள் எழுந்தது.


எங்கள் இளமைக் காலத்தை அழித்தது யார். 
இப்போது என்னை விரோதி போலப் 
பார்க்கும் இந்தப் பெண்குழந்தைக்கு எப்படி என் சாயல் வந்தது.
லிஸா எப்படி அந்த    எவெரார்ட் ஐத்    திருமணம்
செய்தாள்? 

லிஸாவின் கணவனை நினைத்த போதே 
மார்ட்டினுக்குக் கசந்தது.

அவன் ஐந்து வருடத் திருமண வாழ்வில் மறைந்தது
இவனுக்கு இன்னும் கோபம் வந்தது!!

இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னால் யார்?
மனதில் லிஸாவின் தந்தை உருவம் தான் தோன்றியது.


அப்போது நடந்த நிகழ்வுகள்,  பள்ளி இறுதி நாட்களில்
உறுதிப்பட்ட தங்கள் காதல்,

உள்ளங்கள் சேர்ந்ததால் உணர்வுகளும் கூடிய மாலை 
நேரங்களில் ஏரிக்கரையின் காற்று துணைவர 
தங்களின் எதிர்கால வீடு, குழந்தைகள் 
என்று திட்டம் போட்ட  காலம்.
அந்தக் கோடையின் முடிவில் லிஸாவின் குடும்பம்
காணாமல் போனது.  தான் எங்கு தேட வேண்டும் என்ற
ஒரு திட்டம் இல்லாமல் 
நாட்டின் ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் அலைந்தது
என்று எல்லாவற்றையும் நினைக்கக் கண்கள் 
கலங்கின.

அவன் வீட்டுக்குள் திரும்பின வேளை மழை பெய்ய ஆரம்பித்தது.

அதுவரை காத்திருந்த வீட்டின் ஹௌஸ்கீப்பர்,
சமைத்து வைத்திருந்த பண்டங்களை
சாப்பிடும் மேஜை மேல் வைத்து விட்டு
விடை பெற்றாள்.

கையில் பானம் ஒன்றை ஏந்தியபடி பெரிய பெரிய  ஜன்னல் வழியே தெரிந்த 
ஏரியின் தண்ணீரை வெறித்தான்.
'Yesterday once more"  என்று முணுமுணுத்தபடி
அடுத்து வரும் நாட்களுக்கான  திட்டத்தை யோசிக்கும் போதே
தெளிவு வந்தது. என் லிஸாவையும் என் மகளையும் 
இந்தத் தடவை விட மாட்டேன்.

சமூகத்துக்குப் பயந்து ஓட மாட்டேன்.
எந்த ஏரி எங்களை இணைத்ததோ
அங்கேயே எங்கள் திருமணமும் நடக்கும் என்று
தீர்மானித்ததும் மனம் நிம்மதி பெற ,
சாப்பிட்டு விட்டு லிஸாவின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினான்.

தான் பெற்ற மகளின் சம்மதத்தைப் பெறுவது
ஒரு சவால் என்பதை அந்தத் தந்தையான காதலன்
உணர்ந்திருக்கவில்லை...............................தொடரும்.

Wednesday, May 26, 2021

அத்தை......1

வல்லிசிம்ஹன்



 எங்கள் ப்ளாகில் வெளியிட்ட கௌதமன் ஜி க்கும்  ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.
அங்கு வந்து பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும்
மீண்டும் நன்றி. வாழ்வு நிறைவது அன்பு நட்புகளின் 
துணையுடன் தான். சங்கடங்கள் தீர்ந்து 
நல் வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1980 களில் ஒரு சம்பவம்.

''அக்கா, !!
என்ன மாலா?

அந்த அத்தை நம் வீட்டுக்கு வருகிறாளாம். எதுக்கு அண்ணா நகரிலிருந்து இங்க மைலாப்பூர் வரணும்.
அப்பாவுக்குபெரியப்பாவின்  பெண் என்றால் அந்தக் காலத்தோடு
போச்சு. இங்க வந்து நம் நேரமும் வீணாக்கி,
நம் மீது அதீத அன்பைக் கொட்டணும்னு 
என்ன அவசியம்?''
"பெற்ற பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி
வெளியூர் போயாச்சு. பொழுது போக இங்கே வர வேணுமா?''
கோபத்துடன் பொரிந்த  தங்கையை
அன்புடன் கண்டித்தாள் பெரிய அக்கா லக்ஷ்மி.
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா.
அவர்கள் எல்லாம் கசின்ஸ் ஆக இருந்தாலும்
நல்ல பாசத்தோடு இருந்தவர்கள்.
நம் அம்மா திடீரென்று இப்படி காலமானது அவர்களுக்கு அதிர்ச்சி.
அதுதான் வந்து நம்மைப் பார்த்து விட்டுப் 
போகிறார்.

''கசின்ஸ் நா, அந்தக் காலத்தோட போச்சு''
நம் வாழ்க்கையில் இப்போ வந்து குறுக்கிட என்ன அவசியம்?
சரியான busybody" என்று கரித்துக் கொட்டின
தங்கையைப் பார்த்து வியந்தாள் அக்கா.
அவர்கள் மூவரும் பதின்ம வயதுப் பெண்கள்.
இரண்டு மூன்று மாதங்கள் முன் தான்
அவர்களின் தாயார், தீராத வியாதிக்குப் 
பலியானார்.

அப்போது ஆரம்பித்த பாசம், ,கவனிப்பு இந்த அத்தையோடது.
தன் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும்
பெரியப்பா மகன்,
அவன் பெற்ற  பெண் குழந்தைகள்
மீது கவலை கொண்டு , கிடைத்த பலகாரங்களைப்
பையில் அடைத்துக் கொண்டு வந்து 
தந்து சில மணி நேரம் இருந்து பேசிச் செல்வாள்
சுந்தரி அத்தை.
சின்ன லீலா,கடைசிப் பெண்ணுக்கு சுந்தரி அத்தையைப் பிடித்திருந்தது.
14 வயதே ஆகி இருந்தது அந்தப் பெண்ணுக்கு.
அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாத சூழ்னிலையில்
இந்த அத்தை வருவது
அந்தக் குழந்தைக்கு மிக இதமாக இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் தான் சென்னை வந்தார்கள். அதுவும் 
அவர்கள் அம்மாவின் உடல் நலம்  சரியில்லாமல் போனதும்
வைத்தியத்துகாகச் சென்னைக்கு வந்தனர்.

இந்த ஐந்து வருடங்களும் அம்மாவின் நோயோடு 
போராடிக் களைத்து விட்டனர்
கணபதியும் குழந்தைகளும்.
சுந்தரி அவர்கள் சென்னை வந்த நாளிலிருந்து
தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள்.

பெரிய மகள் அந்த வருடம் கல்லூரியில்
சேர்ந்திருந்தாள். நடுவில் பிறந்த மாலா
பள்ளி இறுதி வகுப்பை எட்டி இருந்தாள்.
கடைக்குட்டி லீலா ,ஒன்பதாம் வகுப்பு.

இவர்களுக்கு உதவியாகக் கூடவே இருக்கும் 
பங்காரு சொந்த ஊரிலிருந்து
இங்கே வந்திருந்தாள்.
நூற்பாலை சம்பந்தமான இயந்திரங்களை
இறக்குமதி செய்து விற்பனை செய்யும்
வியாபாரத்தில் இருந்த கணபதிக்கு
கடந்த வருடங்களில் சரியாகக் கவனம் 
செலுத்த முடியாமல் போனது.கோயம்பத்தூருக்கும்
சென்னைக்கும் அலைய வேண்டிய
தொழில்.

சுந்தரி அடிக்கடி வந்து போவது அவனுக்கு 
நிம்மதி.
தனியாக இருக்கும் பெண்குழந்தைகளைப் 
பற்றி அவனுக்கு எப்பொழுதுமே கவலை.முதல் பெண் லக்ஷ்மிக்கு, கணபதியின் மனைவி
தன் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாள்.

அவனும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்.

எல்லாமே சற்று ஏறுக்கு மாறாக நடந்தாலும்
கணபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன் கோவைக்குப்
போயிருந்த ஒரு மாலை,
சுந்தரி அத்தைக்குப் பங்காரு ஃபோன் செய்திருந்தாள்.
தனக்கு மாலாவின் போக்கு பிடிபடவில்லை என்றும்.
பள்ளிக்குச் செல்லும் போது 
இன்னோரு வாலிபனுடன் தெரு முனையில்
நின்று பேசி வருவதாகவும்,
அவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கூடச் சென்று வந்ததாகத்
தன் கணவன் சொல்கிறான் என்றும் 
செய்தி சொன்னாள்.
பங்காருவின் கணவன் அந்த வீட்டுக்கு வாட்ச்மேன்.

இந்த செய்தி வந்ததிலிருந்து
சுந்தரிக்கு அந்தப் பெண்களைத் தனியே விடுவதில் 
விருப்பம் இல்லை. 
கணபதிக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட
6 வயது வித்தியாசம். 
அவனைச் சிறுவனாகவே பார்த்து, தம்பியாகவே 
பழகி வந்திருக்கிறாள்.
இப்பொழுது மனைவியும் இல்லாத வேளையில் அந்தக் 
குடும்பம் சீரழிவதில் அவளுக்கு வேதனை. அதனாலயே 
ஏதாவது ஒரு காரணம் காட்டி 
மைலாப்பூருக்கு வர ஆரம்பித்தாள்.

இது நீடித்தால் கணபதியுடன் பேச வேண்டிய தேவை
வரும் என்று யோசனை வந்தது.
இந்த நேரத்தில் தான் நம் கதை ஆரம்பித்தது.
சுந்தரி தன் மதிய சாப்பாட்டை முடித்துக் 
கொண்டு மயிலை வந்தடைந்தாள்.
மந்தைவெளியில் இறங்கி சிறிது நடந்தால்
அந்தத் தனி வீடு வரும்.
அவள் தொலைவில் வருவதைப் பார்த்த
பங்காரு,  அவசரமாக வெளியே வந்தாள்.
''சுந்தரி அம்மா, அந்தப் பையன் வீட்டுக்கே வந்து விட்டான்"
ஐய்யா இன்னும் வரவில்லை. லக்ஷ்மிப் பொண்ணும்
வரப் போகிற மாப்பிள்ளை வீட்டுக்குப் 
போயிருக்கு. சின்னப் பாப்பா டென்னிஸ் விளையாடப் போயிருக்கு"
என்று படபடத்தாள்.

 சுந்தரி சற்றே நிதானித்தாள்.
அவளுக்கு மாலாவின்  கோப குணம் தெரியும்.
இருந்தாலும் இப்போது அதை எல்லாம் 
பார்க்கும் நிலைமை இல்லை.

என்னதான் 80கள் என்றாலும்  பண்பாடு மீறி நடப்பது 
எப்பொழுதும் சரியில்லையே.!!

பங்காருவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நிதானமாக 
நுழைந்தாள்.
வாசல் கதவு சாத்தியிருந்தது.
உள்ளே வானொலி சத்தமும் சிரிப்பும் கேட்டன.
காலிங்க் பெல் அடித்ததும் சத்தம் நின்றதும்

கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு திறந்து மாலாவின் முகம்
தெரிந்தது.
கதவைத் திறந்து விட்டு உள்ளே தன் அறைக்குள் 
போய்விட்டாள்.
''என்னம்மா.லக்ஷ்மி எங்கே? ''
என்று சுந்தரியும் விடாமல் கேட்டாள்.
வெளில போயிருக்கா. சாயந்திரம் ஆகும் என்றபடி அறைக்கதவை
மூடிக்கொண்டாள்.

தொடரும்.

Wednesday, February 10, 2021

அவர்க்கும் எனக்கும் உறவு......சிறுகதை ......1

வல்லிசிம்ஹன்

" இலையிலிருந்து எடுக்காதே!! சத்தமாகச் சொன்னாள் விசாலம்.

என்னக்கா>? நான் தங்கை தானே .உன் ரத்த சம்பந்தம்..வெறும் வடை விள்ளலுக்கா இந்த சத்தம்?


என்று சிரிக்கிற தங்கை கமலத்தைப்
பார்த்துக் கடு கடுத்தாள் அக்கா.

எனக்குக் கல்யாணம் ஆயாச்சு. நான் வேற்று அகத்து 
மனுஷி. இன்னோருத்தர் பொண்டாட்டி.

எனக்கும் அவருக்கும் தான் இந்த உணவு பந்தம்.
அதுவும் இன்னிக்கு இங்கே 
விசேஷம் நடக்கும் போது 
இது என்ன ஆகாத்தியம் ;''? என்று கடுகடுத்தாள். 

ஐய்ய , கோச்சுக்காதே.
என்னமோ பெரிய தப்பு நடந்த மாதிரி கத்தாதே!
உங்க அகத்துக்காரரை நன்றாக முடித்து வைத்துக்கோ"
என்று சொன்னபடி ஓடிய தங்கையை
கவலையுடன் பார்த்தவளுக்குப் பசி கூட போய்விட்டது.

விசாலத்துக்கு எப்பொழுதுமே, தன் உணவிலோ,
உடையிலோ யாரும் தொட்டு எடுத்தால்
மிக மிகக் கோபம் வரும்.
அவளை விட  நாலு வயது குறைவான தங்கைக்கு
அவளை சீண்டுவதே பழக்கம். அதில் ஒரு மகிழ்ச்சி.

திருமணமாகி முதல் முறையாக இந்த வீட்டு விழா ஒன்றில்
பங்கெடுக்க விசாலத்தின் பெற்றோரும் தங்கையும்
வந்திருந்தனர்.
அப்போது நடந்த விருந்தில் தான் இந்த நாடகம்.
அதற்கு மேல் சாப்பிடப் பிடிக்காமல்
இலைகளை எடுத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்
விசாலம்.

பெற்றோர் புறப்பட்டு சொந்த ஊர் சென்றபிறகு
ஒரே மாதிரி நடையில் வாழ்க்கை சென்றது.
1960 களின் ஆரம்பகாலத்தில் கல்விமுறை
எஸெஸெல் சியிலிருந்து 11 வகுப்புகள் 
கொண்ட தேர்வு முறையானது.
அப்போது இந்த விசாலம் எனக்கு சீனியர்.
அவள் தங்கை எனக்கு ஒரு வருடம்
சிறியவள்.
எல்லோரும் ஒரே தெருவில் குடியிருந்ததால் 
பள்ளிக்குச் சேர்ந்து வருவோம் போவோம்.

விசாலத்துக்குப் பள்ளிப் படிப்பு முடித்த கையோடு திருமணம்.
மாப்பிள்ளைவீடு மதுரை.
திண்டுக்கல்லில்  வீட்டிலேயே  திருமணம்
நடந்தது.
ஜவுளிக்கடை  நடேசன் ,விசாலத்தின் தந்தை.
நல்ல வசதியுள்ள குடும்பம்.
சற்றே மா நிறமாக இருந்தாலும்
முக அழகும், தீர்க்க நாசியுமாக வடிவழகியாக இருப்பாள்.
அதற்கு நேர்மாறாக தங்கை. நல்ல உயரம். கண்ணில் குறும்பு.
தந்தை கடைக்கே சென்று 
நல்ல வர்ணங்களைத் தேர்ந்தெடுத்து டெய்லரிடம் தைத்துக் கொள்வாள்.
ஆடையழகி.!!

அக்கா உடைகளையும் எடுத்துக் கையாண்டதில் 
அக்கா தன் அலமாரியைப் பூட்டி  வைத்துக் கொண்டாள்.அக்காவின் திருமணத்தின் போது,
கமலத்துக்குத் தான் நிறைய வரவேற்பு.
சகலருடனும் அரட்டை.
வரவேற்பிலிருந்து ஆரம்பித்து,
கட்டு சாதக் கூடை வரை எடுக்கப் பட்ட எல்லாப் 
படங்களிலும் அவள் இருந்தாள்.

அன்றே அவளுக்கும் திருமணம் நிச்சயமாகி விடுமோ
என்று தோன்றியது எனக்கு.
அவளுக்கு வயது 14 என்றால், அவளைச் சுற்றி வந்த 
காளைகளுக்கு(பசங்க) இருபதுக்குள் இருக்கும்.

சிரித்துப் பேசினாலும் படிப்பை முடித்து
மதுரையில் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டும் என்றே 
ஆசை அவளுக்கு,...........தலைவலி ஆரம்பித்தது விசாலத்துக்குத் தான்.

தொடரும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...