Showing posts with label புகைப்பட போட்டி. Show all posts
Showing posts with label புகைப்பட போட்டி. Show all posts

Wednesday, April 08, 2009

ஏப்ரில் உணர்வுகள்


நாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் இரண்டு மூன்று சிறு பயணங்கள் மேற்கொண்டோம்.


அதில் ஒன்று மிஸ்ஸௌரி மாகாணத்திலிருக்கும் செயிண்ட் லூயிஸ் நகரம்.


அங்கிருக்கும் ஜெஃபர்ஸன் ஆர்ச் பார்த்துவிட்டுத் திரும்பும்போது,

குதிரைகள் இழுத்துவரும் சுற்றுலா வண்டிகளைப் பார்க்க நேர்ந்ததது. இரண்டு குதிரைகள் உள்ள வண்டியும், ஒரு குதிரை மட்டுமே இழுக்கும் வண்டியையும் பார்த்தோம்.

அதில் ஒரே ஒரு குதிரை, ஈக்கள் அதன் முதுகு மேலே உட்கார, நொந்தது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றது.

நான் அதன் அருகில் போய் அதைத் தடவிக் கொடுக்கலாமா என்று கேட்டதுக்கு மகள் மறுத்துவிட்டாள். சரி தூரத்திலிருந்தே அதனுடன் ஒபேசிப் படம் எடுக்கலாம் என்று காமிராவை அதன் மேல் ஃபோகஸ் செய்ய,

தேர்ந்த கலைஞன் போல உயிரோட்டம் உள்ள ஒரு பார்வை பார்த்தது.

அங்கு எடுத்த படங்களில் இதுவும் ஒன்று.

ஒரு களைத்த குதிரை.:(


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...