Blog Archive

Saturday, March 31, 2018

என் அருமை ரங்கன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  என் அருமை ரங்கன்.

அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
 கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.

பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
 குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ப்ளை செய்வான்.

1967இல் முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
   ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//

தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும் இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட டங்க மாமா.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நான் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான். வாழ்க வளமுடன்

Friday, March 30, 2018

மாசி மாத வற்றல்,வடாம் கதையின் ..........11 the part

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முருகனோடு நலம் விசாரித்தார் ஜயம்மா.  வீட்டில
பாப்பா எப்படி இருக்கா, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தியா
என்று துவங்கினாள்.
அல்லாம் தாடிக்கார ஸ்கூலுக்குப் போகுதுங்க. அங்கயும்
யூனிஃபார்ம் எடுக்கச் சொல்றாங்க. பொஸ்தகம்
வாங்கச் சொல்றாங்க..
மதியம் சாப்பாடு கிடைக்குது. ஒரு வேளை ஓடிப்போகுது. என்றான் முருகன்.

தாடிக்கார பள்ளி என்பது மந்தைவெளி சாயிபாபா கோவிலை ஒட்டி
நடத்தப்பட்ட ஸ்கூல்.

கவலைப் படாதே ,ஏதாவது வேண்டுமானா வீட்டுக்கு வா. என்னால் முடிந்த உபகாரம்
செய்யறேன் என்றபடி இறங்கினார்.
அவனும் ,
//விளாமரத்து வீட்டு மருமவ, அவங்க பிள்ளைங்களோட துணி மணிகளக்
கொடுத்திச்சு. நம்ம குழந்தைகள் ஈடுதான் அந்தக் குழந்தைகளும்.
  அய்யரு வீட்டு உதவி எல்லாம் இருக்கையல
எனக்குக் கவலை இல்லம்மா என்றான்.
 அவனுக்கு உண்டான பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள்
சென்றார்கள்.

செங்கமலம், வேதா,சீனு,மாது எல்லோரும்
மாடியிலிருந்து ,பாதி காய்ந்த வடாம், வற்றல்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வீடு முழுவதும் பரவியது ஈர வாடை.
என்ன  வேலை முடிஞ்சதா. பாட்டி சரி என்று ஒத்துக் கொண்டாரா
என்று கேட்டபடி சீனு வேஷ்டிகளை மூடி வைத்தார்.

ஆஹா, பாட்டியும் அவரது மருமகளின் அருமையைச் சொல்லி முடியாது.
பாவம் அந்த மாமாவுக்கு இப்படித் திடீரென்று ஆகி இருக்க வேண்டாம்
என்று வருத்தப்பட்டார் ஜயம்மா. கண் படுகிற மாதிரி
பெரிய குடும்பம். இப்போது பங்கஜம்மா பிள்ளையும் இங்கேயே
வந்துவிட்டார். மூன்று குழந்தைகளும் அத்தனை சமத்துகள்.
இரண்டு பாட்டிகளிடமும் ஒட்டிக் கொண்டு வளர்கின்றன. அவர்களுக்கு
இது பெரிய  சமாதானம் இல்லையோ.
ஆமாம் பகவான் எதையும் பொருள் இல்லாமல் செய்வதில்லை.

அது இருக்கட்டும் இருவரும் சாப்பிட்டீர்களா என்றார்.
பசியே இல்லை. இதோ இந்த டப்பாக்களில் புளியோதரை
இருக்கிறது , பசங்களா நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் கொஞ்சம் படுத்துக் கொள்கிறேன் என்று ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டார் ஜயம்மா.

இரண்டு பெண்களும், இலைகளில் சமமாகப் பங்கிட்டு, மாதுவிடம் கொடுத்துவிட்டுத் தாங்களும் சாப்பிட்டார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் நம் எடுத்துக் கொண்ட அளவு
வத்தல்கள் தேறிவிடும்.
நாளை மீண்டும் ஒரு ஈடு ,போட்டுவிட்டால்  பத்து வீடுகளுக்கும் கொடுத்துவிடலாம்.

பிறகு பட்சணக் கடை ஆரம்பிக்க வேண்டும்.
என்ற  ஜயம்மாவைப்  பார்த்து, இரு இரு
அவசரமே இல்லை.
இந்த வேலை முடியட்டும்.
 மாதுவுக்கும் ஒரு காலேஜ் சீட் கிடைக்கட்டும்.
பிறகு  நாம் மூவரும் பத்ரி போக திருவல்லிக்கேணி
சம்பத்திடம்  ஏற்பாடு செய்திருக்கிறேன்.
20 நாட்கள் லீவு தான். இனிமேல் ஜூலை தான் நம் வேலை ஆரம்பம்.

என்னது இப்படி திடீர்னு சொல்கிறீர்களே.
குழந்தை எங்கே   இருப்பான்.
அங்கெல்லாம் பனியாக இருக்குமே, நாம் எல்லாம் குளிர் தாங்குவோமா.
கேள்விகளை அடுக்கினாள். அசதி எல்லாம் எங்கோ போய்விட்டது.

கீதுவின் முகம் மலர்ந்தது.
நெடு நாட்கள் கழித்து மனம் நெகிழ்ந்தது.
மாது ஆச்சரியத்தோடு பார்த்தான்.

சாப்பிட்டுக் கைகள் கழுவி வந்த அக்கா தங்கைகள், மாமி
நாங்கள் நாளை எப்போ வரணும் என்று கேட்டார்கள்.

ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்  ,அடுத்த நாள் ஜவ்வரிசி கூழ்தான். அதை நாங்களே
செய்துவிடுவோம். நீங்கள் வந்து  மாடிக்கு ,எடுத்துப் போய் வத்தல் இட்டால் போதும்.
எங்களுக்குப் பெரிய வேலை வைத்திருக்கிறார் லஸ் பாட்டி. பணியாரம் செய்யச் சொல்லி இருக்கிறார்.

சரி, நாங்கள் அன்றைக்கு வருகிறோம். நீங்கள் ஊருக்குப் போவதை
அப்பாவிடம் சொல்கிறேன்.
அவர்களும் உங்களுடன் வர ஆசைப் படுவார்கள்
 என்று சிரித்தாள் பெரியவள் செங்கமலம்.
 அம்மா அப்பா இல்லாமல் தனியாக இருப்பீர்களா என்று அதிசயப்
பட்ட ஜயம்மாவிடம்,
அதான் எங்கள் அத்தை அடுத்த போர்ஷனில் தானே இருக்கிறார்கள்.
வேண்டுமானால் உங்கள் மாது கூட அங்கே வந்து இருக்கலாம்.
 வசதி குறைச்சல் என்றாலும் பாதுகாப்பாப் பார்த்துக் கொள்ளுவாள் அத்தை,
என்று குறும்புடன் சொல்லி விட்டுக் கிளம்பின பெண்களைப் பார்த்து மகிழ்ந்து
போனாள் ஜயம்மா.

பாத்தியோ இந்தப் பொண்ணை .  பட்டு பட்டுன்னு பேசறதே.
எல்லாம் இந்த ஊர்ப் பொண்களுக்குச் சொல்லியா தரணும்.
பிழைத்துக் கொள்வார்கள் என்று மனசாரப் பாராட்டினாள் கீது.

 சரி சரி நீ வாடா மாது, நாம் ஜட்ஜ் வீட்டுக்குப் போய் விட்டு
அப்படியே திருவல்லிக்கேணி போய் வரலாம் என்று கிளம்பினார்
சீனு. மாது தொடர்ந்தான்.








Wednesday, March 28, 2018

தம்பி முரளியும் அவன் வெள்ளை சட்டையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 திருமங்கலம் 1956.

நானும் தம்பி முரளியும் முறையே மூன்றாம், இரண்டாம்
வகுப்பில் ,கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.

சலவைத் தொழிலாளி வீட்டுக்கு வந்து அப்பாவின் வேட்டிகள்,சட்டைகள், படுக்கை விரிப்புகளை மட்டும் எடுத்துப் போவார். ஒரே ஒரு தடவை தம்பியின்
வெள்ளை சட்டையை ,ஏதோ கறை நீக்க அவ்ரிடம் அம்மா
கொடுத்துவிட்டார்.
தம்பிக்கு மிகப் பிடித்த சட்டை.
சட்டை வந்துடுத்தாம்மான்னு கேட்டுக் கொண்டே இருப்பான்.

ஒரு வாரத்தில் கொடுப்பார்.அதில அழகா ஓரமா புள்ளி வச்சிருக்கும் பாரு
என்று சமாதானப் படுத்துவார் அம்மா.
அடுத்த நாள், அவனுடைய தோழனே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டுவந்தான்.
அவ்வளவுதான் இவனுக்கு ஒரே கலக்கம். என் சட்டையைக் கொடு  என்று அவன் பின்னாலியே சுத்தவும், பள்ளியை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டான் அவன்.
அவன் ஓட ,இவன் ஓட, இவன் பின்னால் நான் ஓட
 ஒரே குழப்பம். முரளி அந்தப் பையனை விடுவதாக இல்லை.
இரண்டு பர்லாங்க் போயிருப்போம். அங்கே போய் நின்ற பையனின்
வீட்டிலிருந்து வெளியே வந்தார் நம் சலவை செய்பவர்.
என்ன சாமி இங்க வந்திருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டவர்
தன் மகனையும் பார்த்தார். புரிந்துவிட்டது.

அடிக்கப் போனவரிடம் ,மனைவி வந்து தடுத்தார்.
நான் தான் போட்டுவிட்டேன். நீ அவனை அடிக்காதே.
என்றதும் அவர்,
என்னிடம்  நீங்க போங்க சாமி, நான் சட்டையைத் தோய்ச்சுக் கொண்டு வரேன்,
என்றார்.
இவனோ நகர மாட்டேன் என்கிறான். நல்ல வேளையக அங்கே எங்கள் தெருவிற்குத் தேங்காய் மிட்டாய்  கொண்டு வருபவர்
பஞ்சு மிட்டாய்க் கொண்டு வரவும்,
அம்மா கொடுத்த பத்து பைசா..என்னிடம் இருந்ததனால் ,ஒரு குச்சி வாங்கி இவன் கையில்
கொடுத்துக் கவனத்தைத் திருப்பி
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அம்மாவுக்கு ஒரே பெருமையும் சிரிப்பும்.
எனக்கு கோபம். அப்படியே ஓடறான் மா தெருவில. மாட்டு வண்டி வந்தால் என்ன செய்யறது.
பஞ்சு மிட்டாயை அவனுக்குக் கொடுத்துட்டேன்.
எனக்கும் வேணும்மா என்றதும் அம்மா சமாதானப் படுத்தினார்.
 மிகவும் மன்னிப்புக் கேட்டபடி வந்த சலவைக்காரரிடம்
சட்டையை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
முரளிக்கு வேற ஒரு வெள்ளை புஷ் ஷர்ட் வாங்கினது இன்னோரு கதை.

அப்பா எனக்கும் அவனுக்கும் ட்ராக்கர்ஸ் என்று பெயர் வைத்தார்.

1992 ல  42 வயதில் அவன் பைபாஸ் செய்து கொண்ட போது அவனை சிரிக்க வைக்க நான்
 சொன்ன சம்பவங்களில் இதுவும் ஒன்று.
Add caption

Sunday, March 25, 2018

மாசி மாதமும் கைத்தொழில்களும் 10

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஜயம்மாவும் கீதுவும் லஸ் வீட்டில் நுழையும் போது, பாட்டியும் அவரது மருமகளும் வரவேற்றார்கள்.
மழை வருமோ  என்று நினைத்தேன். கரண்ட் போயிடுத்துன்னால் கிச்சனில் கண்ணே தெரியாது
என்றபடி பாட்டி சமயலறையை நோக்கி நகர்ந்தார். எண்பது வயதில்
பாட்டிக்கு இருக்கும் உற்சாகத்தைப் பார்த்து வியந்தபடி தொடர்ந்தனர்.

மனோரப் பணியாரம் இன்னொரு நாள் வந்து செய்ய வேண்டும் நீங்கள்.
பேத்தியை நேற்றே மாவெல்லாம் சலிக்கச் சொல்லிவிட்டேன்.
 பம்பாயிலிருந்தும், பங்களூரிலிருந்தும்
பேரன் பேத்திகள் வருகிறார்கள்.
 அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு வேண்டாம்.

நொறுக்குத் தீனி போதும்.
இதோ முறுக்கு மாவு, அரைக்கிலோ வெண்ணெய்,
சீடை உருட்டிப்போட வேஷ்டி, தட்டைக்கு ஊற வைத்த கடலைப் பருப்பு,
பெருங்காயம் ஊற வைத்த ஜலம் எல்லாம் இருக்கு.
இரண்டு ஜனதா ஸ்டவ்விலும் கெரசின் ரொப்பி வைத்து விட்டேன்.
 வாசல்ல வரவன் ரொம்ப பிகு பண்ணிண்டான். தட்டுப்பாடு வரப் போகிறதாமே
 என்றபடி நகர்ந்தார் பாட்டி. சமையல் அறையை ஒட்டி இருந்த
பூஜை அறையை எட்டிப் பார்த்து,கைகூப்பி நமஸ்காரம் செய்துவிட்டு,
இருவரும் வேலையை ஆரம்பித்தார்கள்.
பாட்டியோட நறுவிசு நமக்கெல்லாம் வருமோ என்னவோ. என்று
கேட்டுக் கொண்டே , சமையல் செய்யும் திருமலை வந்தார்.

இவர்களை விட வயதில் பெரியவர்.
பாட்டி குணுக்கு செய்து தரச் சொன்னார். நான் ஒரு பக்கமாத் தொந்த்ரவில்லாமல்
செய்து கொள்கிறேன் என்றபடி  ,அடுத்தமூலையில்
இருந்த காஸ் அடுப்பு பக்கத்தில் வைத்திருந்த,
மைதா,அரிசிமாவைக் கலந்து,
தயிர் வெண்ணெய் சேர்த்து,
பச்சை மிளகாய் ,கொத்தமல்லியுடன் மணக்க மணக்க குணுக்கு செய்த்து பாட்டியிடம் வெள்ளிக் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தார்.
அதற்குள் பாட்டியின் மருமகள்,
இப்பதான் அடையாரிலிருந்த பால் வந்தது.
இதோ சூடாகச் சாப்பிடுங்கோ என்று ஆதரவாகக் கொடுத்துவிட்டுப் போனார்.
ஏ, திருமலை அவர்களுக்குக் குணுக்கு எடுத்து வை என்று குரல் கொடுத்தார்
பாட்டி.
இருவரும் பசிக்களைப்போடு இருக்கக் கூடாது என்று அவருக்குக் கவலை.
ஜயம்மா முறுக்குகளைச் சுற்ற, கீது எண்ணெயில் பொரித்து எடுத்தார்.

பாட்டியின் மருமகள் பங்கஜம்மா ,பாட்டிக்கு வாயில் கரையும்படி
மெத்தென்று இருக்கும் முறுக்குகளைத் தனியாக வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரம் சீடை, தட்டை என்று இருவரும் விறுவிறுப்பாக
இரண்டு அடுப்பிலும் செய்து முடிக்கவும் மணி இரண்டாகவும் சரியாக இருந்தது.

பொன்னிறத்தில் வந்திருக்கும் பட்சணங்களைப் பார்த்து இருவருக்கும்
பெருமையாக இருந்தது.
Add caption
Add caption

தயாராக இருந்த பெரிய பெரிய எவர்சில்வர் சம்புடங்களில்
ஆறின தட்டைகளையும், சீடையும் ,முறுக்குகளையும்
எடுத்து வைத்தார்கள்.
ஸ்டவ்வை அணைத்து ,வேலை நடந்ததே  தெரியாமல்
சமையலறையைப் பெருக்கித் துடைத்தனர்.
 மணி இரண்டரை ஆகி இருந்தது.
அப்பாடி எத்தனை சுறுசுறுப்பா வேலை செய்து விட்டீர்கள். என்றபடி இருவரையும்
சாப்பிட அழைத்தார்.
ஜயம்மா,கீதுவுக்கும் பசியே  தெரியவில்லை.
 அவர்கள் தயங்குவதைப் பார்த்ததும், புரிகிறது.
பட்சண எண்ணெயில், உஷ்ணம் ஏறி இருக்கும்.
கொஞ்சமா நான் பட்டிருக்கிறேன். என்று பெரு மூச்சு விட்டார்.
 சரி ,உங்களுக்கு  புளியோதரையும், உருளைக் கிழங்கு கறியும்
டப்பாவில் போட்டுக் கொடுக்கிறேன்.
பசிக்கும்போது சாப்பிடுங்கள்
என்று சொல்லி,தன் மருமகளை அழைத்துச் சொன்னார்.
அந்தப் பெண்ணும் இன்னும் இரண்டு டப்பாக்களில் வாழையிலையில் பொதிந்து வைத்துக்
கொடுத்தாள்.
இதோ இந்தப் பையில் போட்டுக் கொள்ளுங்கள்
என்றவளைப் பார்த்து இருவருக்கும் தாம்பூலம் கொடும்மா
என்று உள்ளே சென்றார்.
பாட்டி தயாராக வைத்திருந்த பணத்தை,  ஒரு கவரில் வைத்துக்
கொண்டு வந்து கொடுத்தார் .
 முனியம்மாவை அழைத்து சைக்கிள் ரிக்ஷாவை அழைத்து வரச் சொன்னார்.
இருவரும் பாட்டியையும்,பங்கஜம்மாவையும் வணங்கிவிட்டு,
 ஜாதிப்பூவை எடுத்துக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினர்.
இந்த ஒன் வே வந்ததிலிருந்து சுத்தி வேறப் போக வேண்டிரிக்கு என்று
அலுத்தபடி மிதிக்க ஆரம்பித்தான்  ரிக்ஷா முருகன்.

Saturday, March 24, 2018

letters from past 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   Raghavan Narayanan
5/29/15
to me
Yes, we usually travel to Madurai and stay there, and tale a travel car to go SRivilliputtur. It takes about 90 minutes. Last time we could take food in one of the mess-type hotels near the temple (our type of food) and return to Madurai by about 3 pm to 4 pm depending upon the time at the temple. Koil is open till about 12.30 pm in morning and opens by 5 in the evening..Murali.
++++++++++++++++++++++++++++++++++++++++++

rain water inside temple
Inbox
x

revathi narasimhan
5/19/15
to Raghavan

Dear  Murali  one more May 20th.

10years have passed by.

and  I thought I could not live without amma.  Irony.

rev.
++
Raghavan Narayanan
5/20/15
to me
Yes Rev,  as years pass by us and we see the quality of people around us in the society, the parents, the children, and others, we realise more and more how great noble souls our parents have been, sacrificing everything they had without a thought or expectation from us. And true to our (at least I) selfish nature, we only looked at our interests and did not show any gratitude or kindness to them (Krithagyan, I think is the right word).  I guess,  at the least we should try and follow their values, renounce self interest completely and develop the same qualities in our children, and their's..affly..Murali 

++++++++++++++++++++++++++in april 2015

To my dear sister, wishing you Many Many more Happy Returns of the Day. May Lord Sriman Narayana shower you with his Blessings, peace of mind, Happiness and Good Health. Above all may he also bless you Happy union with all your siblings, sons, daughter, daughters-in-law, and Grand children. They are the ones who make you happy and I am sure they will wish you the very best of life too.

Affly
From Vasanthi and me, Sajjan & Suja, and Chittu

Letters from the past.2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அருமைத்தம்பியின் நினைவுகளைச்  சேர்த்துப் பொக்கிஷமாக
வைக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
என் மன நிம்மதிக்காக எடுத்து வைக்கிறேன்.
இன்னும் ஒரு மாதத்தில் அவன் இறை பாதங்களை அடைந்து
ஒரு வருடமாகிவிடும்.

அனைவரும் வாழ்க வளமுடன்.


 Dear Murali,
 first time I am hearing a grand daughter calling her Raghavan thaththa  , a magical Raamar.
 god bless.
affly,
rev.
gathered from our facetime chat with Chittu and others.


Raghavan Narayanan
10/2/16
to me
Hi rev
Yes I too came to know about it from Hari. I do not know where she got the idea about me, but it is very flattering!! Shows that there are many hidden facets in a child's thoughts !!
Affly..Murali
++++++++++++++++++++
3,Rev
I beleive we have to recognise the fact that age could be a  barrier in always being in the loop. For me, I do not want to be in any loop since I want to be insulated from talks and comments that I do not need to be concerned with. Like Appa, I am perfectly fine being in the dark. I do speak out on matters of conduct, temperament when it becomes necessary. I am trying not to react to specific events or incidents but will convey my opinion in a general sort of way when we are all together

Take care,

Affly..Murali
++++++++++++++++++++ 4, Dear Rev
I read the blog too, makes wonderful reading, indeed THOSE WERE the days to recall and rejoice. Life was much simpler or is it simply that our parents took all the hardship and made us enjoy these things?
 I am not sure that we are made the same way. Lesson to learn...give more and ask for less, learn to bear any discomfort it is going to satisfy someone else. Do not complain. We are among the more fortunate ones to have reasonable comforts in life (unlike our parents!!)...
With those kind words, thanks for the posts, it was very enjoyable,,,affly..Murali
++++++++++++++++++++++++++++++++
Rev
I remember having dropped by my class friend Shahjahan's home on the way home from school, and playing in the room that was filled with groundnuts (floor to ceiling). This place was near the tank bund..murali .
reply

Yes his sister Asiya    was my classmate and I remember the  mats(பாய்)
hanging from the ceiling   for  womens  privacy. Really  nice place Thirumangalam. everyting in our life we  owe to our  Parents  simplicity  and  honesty.
and Amma  made  all the  activities  so interesting.
Viju remembers her everyday, as they had additional fun  during Kalpakkam  days  Hari  remembers  Thaththa  more.
Srinath goes  silent if I begin to talk  abt them.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Please do send in  your  memories  to refresh  my mind. Thanks  for  reading.my lines,.
Goodday,
rev.

Friday, March 23, 2018

மாசி மாத வெய்யிலும் இன்ன பிறவும் 9

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 ஒரு மணி நேரம் கிடைத்ததும் ஜயம்மாவும், கீது,சீனு
ரவா உப்புமா செய்து சாப்பிட்டு முடித்தனர்.
சுற்றம், உற்றாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாது தன் பள்ளித்தோழன் திருச்சியிலிருந்து வந்திருப்பதாக 
வெளியே சென்றான்,

கீது பெருமூச்செறிந்தாள்.
ஏன் மன்னி இவர் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினார். இவனோட எதிர்காலத்துக்கு நான்
என்ன செய்வேன். கல்லூரியில் கால் வைத்ததும் அவர் இல்லை என்றாகி விட்டது.
 என்று கண் கலங்கினாள்.
சீனு தங்கையின் அருகில் அமர்ந்தார். நீ வந்து கொஞ்ச நாட்கள் ஆகட்டும் என்றிருந்தேன்
கீது. மாதுவுக்கு நல்ல எதிர்காலம் செய்து கொடுக்கலாம்.

நாம் வடகம் சப்ளை செய்யும் நல்ல மனிதர்களில்  ஜஸ்டிஸ் மீனாட்சி சுந்தரமும் ஒருவர். ரிடயரானாலும் அவருக்கு, காலேஜ் வட்டாரங்களில்
நல்ல மதிப்பிருக்கிறது. நான் விசாரிக்கிறேன்.
அவன் எடுத்துக் கொண்டிருக்கிருக்கும் காமர்ஸ் க்ரூப்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வயது 20 ஆகிறது. 22 வயதில் அவன் பட்டம் பெற்று விடுவான்.
எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் அவனையும்
சந்தோஷமாகப் பார்த்துக் கொள்.
எங்களுக்கும் வேறு யார் சொல் என்று தேற்றினார்.

சரி நாங்கள் கிளம்புகிறோம். லஸ் பாட்டி படுத்து எழுந்திருப்பார்.
   நல்ல சூடான காப்பியுடன் காத்திருப்பார் என்று சிரித்தபடி 
கிளம்பினார்கள். அதுக்குள்ளயா காப்பி குடிப்பார் மன்னி என்று கேட்டாள்கீது.
ஆமாம், அவருக்கு எல்லாம் அப்படித்தான் வழக்கம்.
அவருக்கு அடுத்த பசி வருவதற்குள் நாம் முறுக்கெல்லாம் பிழிந்து வைக்க வேண்டும்//
என்று முகம் கைகால் அலம்பிக் கொண்டு  கிளம்பத்தயார் ஆனார்கள்.
நீங்கள் போய் அந்தக் குழந்தைகளைக் கீழே வரச்சொல்லி சாப்பிட்டு, நீங்களும் சாப்பிடுங்கள்

நாங்கள் மூன்று மணி வாக்கில் வந்துவிடுவோம் என்று வெளியே சென்றனர்.
மனம் நிறைய சிந்தனையோடு சீனு மாடிக்குச் சென்றார்.
கையில் படிப்புப் புத்தகங்களோடு இரு பெண்களும் இரு மூலையில் உட்கார்ந்து 
வடகங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மணி 12 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
சீனு அவர்களைக் கீழே போய் சாப்பிட்டு வரச் சொன்னார்.
மாது வந்ததும் தான் கீழே வருவதாகச் சொல்லி அனுப்பினர்.
அந்தப் பெண்களும் அவர் சொல்படி சாப்பிடச் சென்றனர்.

அவர்கள் கீழே வரவும் வாசல் மணி அடிக்கவும் சரியாக
இருந்தது. மாது உள்ளே வந்து ,கைகால் கழுவிக்கொண்டு
 மாடியை நோக்கிச் சென்று விட்டான்.
இந்த இரண்டு பெண்களுக்கும் அவனது அடக்கம் பிடித்திருந்தது.
மீண்டும்  பார்க்கலாம்.

Thursday, March 22, 2018

1330 ,Letter from the past

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
the boy in the left is My sweet Brother Murali
Dear Sis
Keep up the good work!! If you continue to exercise the patience that u hv so magnaminously exhibited so far, we will all host u a Mega treat!! 
Affly ever
Murali  
when I announced to the family I am going to start a blog.

Monday, March 19, 2018

இடும்பை கூர் வயிறும் அம்மாவும்,நானும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  1958  திருமங்கலம்.
 காலையில் அம்மா தைத்து வைத்திருந்த புத்தாடை அணிந்து ,பத்து என்கிற பத்மா
வீட்டுக்குப் போய்
என் அருமை அம்மா அப்பா.
இன்று நான்.
காண்பித்து விட்டு
பக்கத்து வீட்டில் இட்லி விற்கிற மாமாவிடம் எல்லோருக்கும் இட்லி ,சட்டினி எல்லாம் வாங்கிக் கொண்டு
 அவர்களின் கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொல்லி வந்ததும்
வீட்டுக்கு வந்ததுதான் தெரியும்.
பசியில் நான் கு  இட்டிலி உள்ளே தள்ளியாச்சு.
புது சாட்டின் பாவாடையோடு தட்டாமாலை  சுற்றும்போது வயிறு ஆட்டம் கண்டது.
என்ன ஆட்டம் போடுகிறாய் நீ என்று கடிந்து கொண்ட அம்மாவிடம்
பதில் சொல்ல முடியாமல் வந்தது வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.
அம்மா நடுங்கி விட்டார்.
ஊர்க்கண்ணே பட்டுவிட்டது போல என்னைப் படுக்க வைத்து ஏதோ கை வைத்தியம் செய்தும் நிற்கவில்லை.

ஒவ்வொரு தடவை வாந்தி வரும்போதும் தரையைத் துடைத்த வண்ணம்,
எனக்குக் குடிக்க ஏதோ கொடுத்த வண்ணம் இருந்தார்.
அப்பாவுக்குச் சொல்லி அனுப்பி அப்பாவும் அவசரமாக வந்து
  நாலு வீடு தள்ளி இருந்த டாக்டர் வீட்டுக்கு
அழைத்துப் போனார்.
வைத்தியரைப் பார்த்ததும் பாதி உடல் நலம் திரும்பிவிட்டது.
 என்ன நேத்திக்கு என்ன சாப்பிட்ட. வேர்க்கடலையா, பக்கோடாவா
என்று கேட்ட வண்ணம் வயிற்றை அழுத்திப் பார்த்து
ஒண்ணுமே இல்லையே.

ஆமாம் எல்லாம் வெளில வந்தாச்சு.டாக்டர்,, என்று சொன்னேன்.
மூணு நாளுக்கு அம்மா  கொடுக்கறதை மட்டும்  சாப்பிடு.

ஸ்கூலுக்குப் போக வேண்டாமே என்று கேட்டுக் கொண்டேன்.
அப்பா முகத்தில் புன்னகை.
 நாளைக்கு மட்டும் லீவு.
இன்னிக்கு புதன் கிழமை.
வெள்ளிக்கிழமை ஸ்கூலுக்குப் போகலாம்.
சரியா என்று இளம் சிவப்பு மிக்சர் டானிக் ஒன்றைக் கொடுத்தார்.
வீட்டுக்கு வந்ததும் கடையில் வாங்கி வந்த ப்ரெட் ,
பாலைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டதும்  மீண்டும்

பசி வந்தது போலத் தோன்றியது.
அம்மா அசைந்து கொடுக்க வில்லை.
தம்பிகள் பள்ளியிலிருந்து வந்ததும்
ஏன் நீ ஸ்கூலுக்கு வரவில்லை .பெரிய டீச்சர் கேட்டார்.
என்றான் பெரிய தம்பி.
உடம்பே சரியில்லைடா ,எட்டு தடவை வாமிட் பண்ணேன் என்று அலுத்துக் கொண்டேன்.
உடனே கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டாகிவிட்டது.
ஆண்டாளுக்கு என்னம்மா,ஜுரமா என்றதும்
இல்லைடா ஏதோ வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாத வஸ்து சாப்பிட்டு இருக்கா.
ஓ. அம்மா ,நேத்திக்கு ஆனந்த பவன் உ.கிழங்கு மசாலா வாங்கி வந்தோமே
அதுவா மா என்றான்.
அப்பாவோட போயி வாங்கினோமே .அதும்மா
என்றதும் அம்மா,அப்பாவைப் பார்க்க
நேத்திக்கு ஆபீசிற்கு வந்தார்கள் மூன்று பேரும். வாங்கிக் கொடுத்தேன் மா
அப்பா ,அம்மா முகத்தைப் பார்க்காமல் சொன்னார்.
அம்மா சிரித்துவிட்டார்.
இந்த ராணிம்மாவுக்கு  இளவரசி போல் எதையும் தாங்காத
வயிறு. கண்டிப்பாக இருக்கணும் என்றதும் அன்றைய
பெரிய சம்பவம் முடிந்தது.
அம்மா நினைவு அதிகமாக வருவது பங்குனி மாதத்தில் தான்.
எத்தனை சிரமப்பட்டாளோ என்னுடன்.
தாயில் சிறந்த கோவில் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

Saturday, March 17, 2018

மாசி மாத வற்றல் கோலாஹலம். 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்கு முன்னால்
கீதூவும், ஜெயம்மாவும் மாடிக்குச் சென்று விட்டார்கள் .
பின்னாலேயே   சீனுவும்  மாதுவும் ஒவ்வொரு அண்டாவாக எடுத்து வந்தார்கள்.
மாசிக்காற்று  இதமாக வீசிக்கொண்டிருந்தது.
 காதில் காற்றுப் போய்விடப் போகிறது , பிறகு சளித்தொல்லை  வந்துவிடும் என்றவாறு
சீனு கீழே   சென்று  மப்ளர் எடுத்து வந்து கொடுத்தார்.
ஜெயம்மாவும் தலை கழுத்தைச் சுற்றிப்  போட்டுக் கொண்டார்.
இந்த தம்பதிகளின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்தாள்  கீது.

கூழ் நன்றாக வந்திருக்கு மன்னி, நேற்றே சாப்பிட்டுப் பார்த்தேன்
என்ற நாத்தனாரை வாஞ்சையுடன் பார்த்தாள். ஜயம்மா. நன்றாக இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள் அம்மா.
 இந்தக் கூழையும் சாப்பிட்டுச் சொல் என்று கேட்டுக் கொண்டார்.
சூரியன் மேலே வரும் நேரம் ஜவ்வரிசிக் கூழ்  முடிந்து விட்டது.
நாலைந்து கிலோ வத்தல் தேறுமா என்றுக் கணக்குப் போட்டார்
சீனு. கட்டாயம் ஆறு கிலோ வரும் கணக்கு அதுதானே என்ற ஜயம்மா

அடுத்த பாயை விரித்து ஓமப்பொடி வடாம் பிழிய ஆரம்பித்தார்.
இன்னோரு அச்சை எடுத்துக் கொண்டு
நாடா வத்தல் பிழிய ரெடியானாள் கீது.
மாமி வரலாமா என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்த ஜயம்மா முன்னால் சூடான
காப்பி ,ஒரு சொம்பு கொண்டு வைத்தார்கள் செங்கமலமும் வேதாவும்.

என்ன அருமையான குழந்தைகள் என்று வியந்தபடி எப்போ வந்தேள்
குழந்தைகளா என்று வரவேற்றாள்.
 மாமா கீழே  வந்த போதே, நாங்கள் வந்துவிட்டோம்.
அப்பா கொண்டு வந்து விட்டார்.  அம்மா தேங்காய்த் தொகயல்
அரைத்துக் கொடுத்தா. அதையும் கொண்டு வந்தோம்.
கூட்டும், குழம்பும் பண்ணியாச்சு.
 சாதம் எவ்வளவு வைக்கணும்னு நினைத்த போது பால் வந்தது.

உங்களைக் கேட்காமல் காப்பி போட்டுவிட்டோம் என்ற பெரிய பெண்ணைப் பார்த்து அகமகிழ்ந்து போனாள் ஜயம்மா.
நீங்க காப்பி எடுத்துக் கொண்டீர்களா என்றாதும்,
 நாங்கள் கீழே போய்ச் சாப்பிடுகிறோம். நீங்கள் அளவு
மட்டும் சொல்லுங்கள் என்றது சின்னப் பெண்.
 நீங்களும் மாமாவும் மாது வும் தான். மூணு டம்ப்ளர் அரிசி எடுத்துக் கொண்டு குக்கர் வைத்துவிடுங்கள். இன்னும்  ஒரு மணி நேர வேலை இங்கே இருக்கு.
அதற்குப் பின் நீங்கள் மேலே காவலுக்கு வரலாம்.
என்றபடி களைப்புதீரக் காபி குடித்தார்கள் அனைவரும்.
 ரேடியோல மழை பற்றிச் சொன்னார்களா என்று சீனுவை விசாரித்தார்.

இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யலாம் என்றார் அவர்.
 அப்போ கட்டாயம் மழை வராது. நிம்மதி என்றபடி வேலையைத் தொடர்ந்தார்கள்.
9 மணி ஆகும் நேரம்  நான்கு பாய்களும் இரண்டு வேட்டீகளும்   வடாம்,வத்தல்களால் நிரம்பின.
 முதுகை நிமிர்த்தி சுவற்றின் மீது சாய்ந்து கொண்ட ஜயம்மாவைக் கவலையோடு பார்த்தார் சீனு.
ஏம்மா அங்க வேற போகணுமே, என்றவரைப் பார்த்து ஜயம்மா இன்னும் ஒரு மணி நேரம்
 இருக்கு. ஒரு டிபன் பண்ணி சாப்பிட்டுவிட்டுப் போகிறொம்.
கொஞ்சம் படுத்துக் கொண்டால் களைப்புத் தெரியாது என்று எழுந்துவிட்டார்.

மாது மாடியில் இருக்க ,மூவரும் கீழே வந்தனர்.
 பொண்களா உட்கார்ந்து கொள்ளுங்கள்.
நாங்கள் உப்புமா செய்து கொள்கிறோம்.
நீங்களும் சாப்பிட்டுவிட்டு மாடிக்குப் போகலாம் என்றார்.
தொடரலாம் நாமும்.

Thursday, March 15, 2018

எலியும் பூனையும் ,மின் கடியும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  2007 செப்டம்பர்.

 இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து
 ஸ்விஸ், துபாய் டேரா போட்டு ,
சென்னை வர 10 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த இடைக்காலத்தில்
 எங்க வீட்டில   ஒரு எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.


அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,



இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))



வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.





எ னக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.



மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் . இப்போது எல்லாவற்றையும்  சரி செய்தாச்சு.


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை...
 அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும்


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)
அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது ச்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))

Tuesday, March 13, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும்.7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 லிஸ்ட் போட்டு முடிந்ததும், 

அரைத்த மாவை வழித்து வைக்கும் அக்கா,தங்கையைப் பார்த்தார்

ஜயம்மா. இந்தத் தடவை கூழ் கிளறத் தானும் கீதுவும் போதும் 

என்று தீர்மானித்தவராய்,

அவர்களை அழைத்து ஆளுக்கு ஒரு டம்ப்ளர் பால் சாப்பிட்டுவிட்டு 

வீட்டுக்குப் போங்கோ.மேகம் கூடறது.

கார்த்தால விடிஞ்சு வாங்கோ. மழைக்கு முன்னால கிளம்புங்கோன்னு

 முடிக்கு முன்னால் இடி ஒலி கேட்டதும்,

பாலைக் குடித்துவிட்டு சகோதரிகள் விரைந்தனர்,.

பாண்டியன் சைக்கிள் ரிக்ஷா வாசலில் இருக்கு. சீக்கிரம் போய் இறங்கிக்கோங்கோ. 

பஸ்ஸிற்குக் காக்க வேண்டாம் என்று அனுப்பினார்.

நான் அவனுக்குப் பணம் கொடுத்துக்கறேன். வாசலுக்கு வந்து 

,பாண்டியனிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.

சர சரவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

சரி,மாடித் தரை எல்லாம் படு சுத்தம் ஆகிடும்.

 நாம  கூழ் கிளற ஆரம்பிக்கலாம் என்று கீதுவை அழைத்தாள். 

காஸ் அடுப்பைக் கீழே இறக்கி  பெரிய பித்தளை அடுக்குகளை அடுப்பில் ஏற்றிப் போது மான தண்ணீரையும்  விட்டாள்.

மழை சத்தம் அதிகமாகியது. 

சட்டென்று நினைவு வர சீனு அந்த அரை ட்ரம் இரண்டையும் மழைஜலம் பிடிக்க வையப்பா. திடீர்னு கார்ப்பரேஷன் ஜலம் வரலைன்னால், பாத்திரம் தேய்க்க உதவும் என்று சொன்னதும் சீனுவும் செய்தான்.

சரியான அஷ்டாவதனி உங்க மன்னி என்று சீனு கேலி காட்டினார்.


சொல்ல மாட்டேளா, என் வேலை,பொறுப்பு எனக்கு.  நீங்க

உங்க பணக்கணக்கைப் பாருங்கோ. லஸ் பிள்ளையாருக்குத்

 தேங்காய் உடைக்க வேண்டிக்கிறேன்.,

என்றபடி முடிச்சுப் போட்டுக் கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் , கூழ் கிளறி முடித்தாச்சு. ஆறட்டும்.

 மோர், பெருங்காயம்,உப்பு, பச்சை மிளகாய் அரைத்து போட்டுக் 

கலக்கி வைத்துவிட்டால் சீக்கிரம் படுத்துக் கொள்ளலாம்.

 மணி எட்டாறது. சாப்பிடலாமா என்ற படி , 

சரகு இலைகளை எடுத்து வைத்தாள்.

முகம் ,கை கால் அலம்பிக்கொண்டு அனைவரும் உட்கார

சுற்றி உட்கார்ந்து காலையில் சகோதரிகள் தயாரித்த 

வத்தல் குழம்பு,கீரை மசியல், காய்ச்சின அப்பளம்

போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆளுக்கொரு டம்ப்ளர் மோருடன்

சாப்பாடு முடிந்தது.

9 மணிவாக்கில் கிளறிய கூழுடன், அரைத்த பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் 

உடன் கணிசமான அளவு கெட்டி மோரையும் சேர்த்தார் ஜயம்மா. 

இது அவர் செய்யும் முறை.

 நாளைக்கு காய்கறி இருக்கோ. அந்தக் குழந்தைகளுக்கு லகு வா சமைக்கிற மாதிரி

சீரா ரசமும், அவரைக்காய் கூட்டும்  செய்து கொள்ளட்டும் என்றபடி

பாயை விரித்துக் கொண்டார். மழ நிக்கட்டும் பிள்ளையாரப்பா என்று சொன்னவர் 

அடுத்த நிமிடம் தூங்கியாச்சு. எல்லாம் சாத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு

சீனுவும்,மாதுவும் படுத்துக் கொண்டார்கள்.

பனிரண்டு மணி வாக்கில் மழையும் நின்றது....தொடரும்.

Add caption

வாழ்வின் பாடங்கள் பலவிதம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   அன்பு, மரியாதை,பாசம் என்ற எல்லாமே நாம் வளரும் இடத்தில் தான்
கிடைக்கப் பெறுகின்றன.
செடி ,நாற்றாக இருக்கும் போது அதற்குக் கிடைக்கும் ஊட்டமே
பிற்காலத்தில் புயலோ மழையோ வெயிலோ
எதையும் சமாளிக்க உரம் கிடைக்கிறது
 நம்மில் அனேகமாக அனைவருக்கும், அம்மா,அப்பா,பாட்டிகள் ,தாத்தாகளின்
அன்பும் ,கண்டிப்பும் சேர்த்தே கிடைத்திருக்கிறது.
நியாயங்கள் மனதில் பதியும் படி சொல்லப் பட்டிருக்கின்றன.
நன்மை  தீமை அறியும் விதமாக கதைகள்  வழியாக
காதுகளுக்குள் புகுந்து புத்தியிலும் பதிக்கப் பட்டிருக்கின்றன.
விடுமுறை நாட்கள் என்று மதுரைக்குச் சென்றாலும்,
தாத்தா அத்தனை வாய்ப்பாடுகளையும் சொல்ல வைப்பார்.
பாட்டி  மாவரைக்கக் கூப்பிடும்போது
அரைத்துக் கொண்டே பழைய நினைவுகளை,
பரம்பரையாக நடந்த சம்பவங்களைப் பதிவார்.
கீரை ஆய்ந்து கொண்டே கேட்ட செய்திகள் அனைத்திலும் உழைப்பே
மேலுறுத்தப்படும்.
அப்போதே பாட்டியும்,தாத்தாவும் அனுபவிக்காத
துன்பங்கள் இல்லை.
மகன், மகள் இருவரையும் இழந்தும்,
மன வலிமையை இழக்காமல்
தெய்வ பக்தியை விடாமல் வாழ்க்கையை நடத்தினர்.

அம்மாவுடைய அம்மாவும், அப்பாவுடைய அம்மாவும்
கூடப் பிறந்த சகோதரிகளிடம் வைத்திருந்த பாசம்
சொல்லிமுடியாது.
நல்ல கட்டுக் கோப்பு.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்,
நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
 நாம் தான் உதாரணம். 
நாம் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ,அவர்களின் எதிர்கால
நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும்..
எங்கள் தலைமுறை வரை அப்படித்தான் இருந்தது.
இந்தத் தலைமுறை மக்களும் மரியாதை மீறி
ஒன்றும் செய்வதில்லை.
பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும்
சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்.

அவ்வாறு கடத்தினால் நம் மேலேயே என்றாவது திரும்பும்.
இப்போதுள்ள குழந்தைகளுக்கு கற்றறிவு , சூழ்னிலையைக் கிரஹிக்கும் தன்மை
அதிகமாகவே இருக்கிறது.
பெற்றோர்களுக்குள் இருக்கும் வேறுபாடோ,
அன்பு குறைபாடோ அவர்கள் மனதை உறுத்தும்.
இதமாகப் பேசித்தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

கல்லூரிக் காலமும் வந்துவிட்டால் சுதந்திரம் ஜாஸ்தியாகும்.
கூடா நட்பு ,ஏற்படக் கூடாது.
இந்த ஊரில் விதவிதமான வேடிக்கைகளைப் பார்க்கிறேன்.
நம் இந்தியக் குழந்தைகள் நிறைய வழி மாறிப் போவதில்லை.
பெற்றோரிடம் அடங்கியே
இருக்கிறார்கள்.  எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை.

தெரிந்த வரை சொல்லிவிட்டேன்.
 நம் மூக்கு நுனி அளவே நம் வாய்ச்சொற்களுக்கு சுதந்திரம்.
அதற்கு மேல் போனால் கேட்டுக் கொள்ள இளைய தலைமுறைக்கோ,
அவர்கள் பெற்றோர்களுக்கோ பொறுமை இல்லை.
காலம் மாறியதால் என்னைப் போன்றிருப்பவர்களும் மாறித்தான் ஆக வேண்டும்.
உட்கார் என்று சொன்னால் உட்காரவோ,
நில் என்றால் நிற்கவோ மனம் ஏற்க மறுக்கிறது.
அதனால் நம்மால் முடிந்தது, குழ்னிலைக் கேற்ப பக்குவமாக நடப்பதும்,
கடவுளை இடைவிடாது பிரார்த்திப்பதிலும் தான்.

வாழ்க வளமுடன்.
அம்மாவின் தம்பிகள் 

Sunday, March 11, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும். 6

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
வடாத்துக் கூழ் மகிமை.
+++++++++++++++++++++++++++++++
எல்லோருக்கும் வற்றல் வடாம் பொரித்துச் சாப்பிடுவது எவ்வளவு பிடிக்குமோ அத்தனை
அந்தக் கூழும் பிடிக்கும்.

எங்கள் வீட்டில்  கூழ் கிளறும்போதே, சாப்பிட என்று தனியாக எடுத்து வைப்போம்.
சாயந்திர வேளை டிஃபனுக்கு உதவும்.

ஜவ்வரிசியைக் கிளறி முடித்த பெண்கள், வெந்த பதம் போதுமா என்று கேட்க,
அருகில் வந்து ,கூழின் வண்ணத்தைப் பார்த்தே சரி என்று சொன்னார் ஜயம்மா,.

அடுத்தாற்போல அரைக்க வேண்டியது புழுங்கலரிசி.
சௌபாக்யா க்ரைண்டர் இரண்டு வைத்திருந்தார் ஜயம்மா.
இரண்டு கிலோ அரிசியையும் தனிதனியாக அரைக்க,
செங்கமலம் வேதாவைக் கேட்டுக்கொண்டார்.
இருவருக்கும் கீது நல்ல மசாலா டீ போட்டுக் கொடுத்தார்.
அந்தப் பெண்களும் ஆற அமர உட்கார்ந்து டீயைக் குடித்தனர்.
அரை டஜன் வேஷ்டிகளோடு வந்து சேர்ந்தான் மாது.
பிள்ளைக்கும் டீ கொடுத்த கீது ,வேட்டி கிழியாமல் வந்திருக்கிறதா என்று சோதித்தாள்.

அடுத்த நாளுக்கான வேலைகள் பட்டியலிடப்பட்டன.
1, காலை நான்கு மணிக்கு எழுந்ததும்,
  ஏழெட்டு எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து,
பச்சை மிளகாய் அரைத்து,உப்பு,பெருங்காய ஜலத்துடன்
கலந்து ஜவ்வரிசிக் கூழுடன் கலக்கவேண்டும்.

2,சீனுவும் மாதுவும் தயாராக இருக்கும்
கூழ்களை எடுத்துக் கொண்டு மாடிக்குக் கொண்டுபோகவேண்டும்.

3,செங்கமலம் ,வேதா வந்ததும் அன்றைக்கான சாப்பாட்டு தயாரிப்பு வேலைகளில்
 இறங்க வேண்டும்.
4, சமையல் வேலை முடிந்ததும் மாடிக்கு வந்து மிச்ச வடாம் வகையறாவை பிழிந்து விட்டு
 நிழலில் உட்கார்ந்து  காவல் இருக்க வேண்டும்.
அங்கே சுற்றி மாமரங்கள் ,தென்னை இருப்பதால்
காகம்,அணில் தொந்தரவு நிறைய. கறுப்புத் துணிக்கோ, குடைக்கோ அவைகள் அஞ்சுவதில்லை.
5, பத்துமணி வாக்கில் ,ஜயம்மா,கீது இருவரும் லஸ் சர்ச் ரோடு வீட்டுக்குச் சென்றால்
வேலை முடிய மதியம் ஒரு மணி ஆகும்.
அந்த மாமி அழகாக இலை போட்டு சாதம் பரிமாறும் அழகை நினைத்தே ஜயம்மாவுக்கு
சந்தோஷமாக இருந்தது.
அவர்களிடமே சமையல்காரர்  இருந்தார்.
செய்து பரிமாறிவிட்டுப் போய்விடுவார்.

6, மதியம் வீடு திரும்பி சிரம பரிகாரம்.
மாடியிலிருந்து வேஷ்டிகள்,வற்றல் கனத்தோடு இருப்பதால் இருவர் இருவராகக்
கொண்டு வந்து  அலங்காமல் மடித்து வைக்க வேண்டும். அடுத்த நாள்
 குழம்பு வடாம் செய்ய வேண்டியதுதான்.
எழுதி விட்டு நிமிர்ந்த ஜயம்மா,சீனுவைப் பார்த்து, லஸ் வீட்டிலிருந்து
 ஓலைப் பாய்களை எடுத்து வரமுடியுமா என்றாள்.
ஒரு ஃபோன் இருந்தால் நானே மாமியைக் கேட்பேன்.
என்றதும், சீனு உடனே கிளம்பினார். அரைமணி நேரத்தில் சைக்கிள் ரிஷாவில் ஓலைப் பாய்கள்
வந்திறங்கின.  தொடரும்.


Add caption

Friday, March 09, 2018

அனுசரணை,மதிப்பு,அன்பு வாழ்க்கை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  விலங்கும் இல்லை பூமாலையும் இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த மன நிலைக்கு வர குழப்பங்கள் வந்து, தீர்ந்து
பெற்ற செல்வங்கள் ஒரு நிலையில் பொருந்தி
அவர்களது குடும்பங்களை ஆரம்பிக்கும் போது

அவர்களுக்குஇன்ப துன்பங்களில் நாம் பங்கேற்குபோது,
நாம் அனுபவித்த  பிரச்சினைகள் எங்கேயோ ஓடி இருக்கும்.
தம்பதிகளின் பொற்காலம் இது என்றே சொல்வேன்.

கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி இருக்கும். மனைவியும் கணவரும்
75 சதவிகிதமாவது புரிந்து கொண்டிருப்பார்கள்.

முன்பு  புத்திமதிகள் சொல்லி நம் எண்ணங்களை ஆக்கிரமித்தவர்கள் முன்னால்,
நம்மீது கொஞ்சமாவது மதிப்பு ஏறி இருக்கும்.

இனி நம் கவலை அவர்களைப் பற்றி இல்லை. வரப் போகும் புது செல்வங்களைப் பற்றி.
 முன் பதிவில் நான் எழுதியது இதைப் பற்றிதான்
//கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,
அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை.  //ஒரு தலைமுறை தாண்டி இன்னோரு தலைமுறையும் தலை எடுத்தாகிவிட்டது.
முன்பு அடிக்கடி காதில் விழுவது, நாங்கள்ளாம் எப்படிக் கஷ்டப் பட்டோம் தெரியுமா.
 இந்த வார்த்தைகளை , நம்மைவிடச் சிறியவர்களிடம், பலவீனமான நேரத்தில் கூடச் சொல்லக் கூடாது.
இவர்கள் சிந்தனைகள் வேறு.
நிற்க நேரமில்லாமல் ஓடுபவர்கள்.
முழு சுற்று வந்துவிட்டது வாழ்க்கை.

நாம் அனுபவிக்காத பலவித அனுபவங்கள் அவர்களுக்குக்
கிடைத்திருக்கிறது.
அவரவர் நிலையில் வலிமை,புத்தி கூர்மை எல்லாம் இருக்கிறது.
நாம் புத்தி சொல்லும் நிலைமையில் அவர்கள் இல்லை.
அவர்கள் நம்மை மதிக்கும் போது நாமும் அவர்களை உண்மையிலேயே மதிக்க வேண்டும்.
உடலால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
நம் நட்புவட்டங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இனிய வார்த்தைகள் செய்யும் மருத்துவம் வேறு ஒன்றும் செய்யாது.
அவர்களின் வயதின் வேகத்தில் சில வார்த்தைகள் கேட்க நேரிடலாம்.
உடனே பதில் சொல்லாமல்
மெதுவே சொல்லலாம். வயது வித்தியாசம் இருக்கிறதே.
அம்மா சொல்வது நினைவுக்கு வருகிறது. நீதானே பெரியவ. தம்பிகள்
  விஷயத்தில் அனுசரித்துப் போகணும்னு சொன்னது என் எட்டு வயதில்.
 அனுசரித்துப் போகலாம். நமக்கு வேண்டும் என்கிற பொறுமையை பகவான் கொடுக்கட்டும்.
நிறைய விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறது மீண்டும் இது பற்றிப் பேசலாம்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்...முற்றும்.

Wednesday, March 07, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும் 5...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாசி மாதமும் வடாம் பிழிதலும் 5
++++++++++++++++++++++++++++++++++++++++++ ஆட்டோவில் எலுமிச்சம்பழமும் வந்து சேர்ந்தது.
ஊற வைத்த ஜவ்வரிசியைப் பெரிய அடுக்கில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு மரக்கரண்டியையும் போட்டார் ஜயம்மா. ஒரு கிலோ வேக எத்தனை நேரம் ஆகும் என்று தெரிந்தவராகையால்
ஒரு பக்கம் புழுங்கலரிசியை நன்றாக அலம்பி ஊறவைத்தார்.
செங்கமலமும்,வேதாவும் ஜவ்வரிசியைக் கவனிக்க,

கீதுவின் மகனை வண்ணான் துறைக்கு அனுப்பித் தான் கொடுத்திருந்த வேட்டிகளை சலவை செய்திருந்தால் வாங்கி வரச் சொன்னார். அங்கு பழக்கமான சலவைக்காரர் கிருஷ்ணன்
மிகச் சிறப்பாகச் செய்து கொடுப்பார்.

கீது ,நாலு மணி ஆகப் போகிறது. மாடியைப் பெருக்கித் தூசியில்லாமல் செய்து வரலாம்.
மழை வராமல் இருக்கணும் பகவானே என்று
சொல்லியபடியே பெருக்கும் துடைப்பங்களை எடுத்துக் கொண்டு
மாடிக்குச் சென்றார்கள்.
மன்னி, ஒரே ஒரு கட்டில் தானே இருக்கு. போட வேண்டிய அளவோ
பிரம்மாண்டமா இருக்கும் போல இருக்கே என்ற படி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.

ப்ளாஸ்டிக் துண்டுகளைக் கீழே விரித்து ,மேலே வேஷ்டிகளை விரித்துக் கல்லும் வைத்து விடலாம்.
அழுக்குப் படாமல் இருக்கும்.,பழைய பாய்கள் கிடைத்தால் கூட நன்றாக இருக்கும்.
பார்த்தியா இப்ப தான் நினைவுக்கு வரது, நாளைக்கு முறுக்குப் பண்ணப் போகிறோமே, அந்த மாமி
வீட்டில் முன்பு தென்னம் கீற்றுகள் பின்னிய ஓலையில், வடாம்
பிழிவார்களாம். மாமியிடம் இருந்தால் வாங்கிக்கொள்ளலாமே என்றார் ஜயம்மா.
நல்ல யோசனை தான். அவர்கள் இந்தச் சின்ன வீட்டுக்கு வந்து 7 வருஷம் இருக்குமே.
இன்னமுமா வைத்திருப்பார்கள் என்று விசாரப் பட்டாள் கீது.
அந்தப் பாட்டி எதையும் தூக்கிப் போட மாட்டார். கேட்கலாம். கிடைத்தால் லாபம் தானே.
 உண்மைதான். வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய ரஜாய் பெட்டி இருக்குமே. அதில் பார்த்திருக்கிறேன் என்றாள் கீது.  அடுத்த நாளும் வந்தது. தொடரும்.

Monday, March 05, 2018

குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.

பல் காரணங்கள்.
1,
சர்க்கரை அளவு ..அதிகமாக இருப்பதோ ,குறைவாக இருப்பதோ.
2,
இரத்த அழுத்தம்  அதிகம் ,அல்லது குறைவு,
3
முந்தின நாள் ஜீரணம் சரியாக இல்லாமல், இழந்த நீர்ச்சத்து,
4,
தூக்க மருந்து உட் கொள்பவர்களின் தூக்கம் தடை படும்போது.

5, இருமலுக்கான ஸிரப் அதிக அளவில் உட்கொண்டு
ஒருவித மயக்கத்தில் இருப்பது.

6,கடைசி எல்லோருக்கும் பொருந்தாது.
Aneurism...முன்பே தலையில் அடிபட்டவர்கள், வேறு விதமான
சங்கடங்களால் ,உடலில், ரத்தத்தில் உலவும் விபரீதமான
இரத்தக் கட்டி.
    இனி விளைவுகளைப் பார்க்கலாம்.
இவை எல்லாமே மயக்கத்தில் கொண்டு விடுவதில்லை.
பகலில் விழுந்துவிட்டால் ,சத்தம் கேட்டு வந்து காப்பாற்றப் படும் சாத்தியம்.

இரவாக இருந்தால் விழுந்தபிறகு எங்கிருக்கிறொம் என்று தெரியாத நிலை.
இறைவன் அருளில் எனக்கு பத்து நிமிடங்களில் விழிப்பு வந்ததாக நினைக்கிறேன்
உடல் அசைக்க முடியவில்லை.  என் வாழ்க்கையில் இரது வரைக் காண்பிக்காத தைரியம் எங்கிருந்தோ வந்து ,குளியலறையின் வாசலுக்குக் கொண்டுவிட்டது.

வைத்தியர் சொன்ன அறிவுரை.
எப்பவும் அலர்டாக இருக்க ஆக்சிஜன் தேவை. நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
கழிப்பறை வேலை முடிந்ததும் உடனே எழும்பவேண்டாம். ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு,
பக்கத்தில் இருக்கும் நகராத பொருட்களைப் பிடித்து எழுந்து நின்று,
 தீர்க்கமாக மூச்சு விடவேண்டும்.
பிறகு மெதுவே நடந்து வெளியே வரலாம்.

பாத்டப் எங்காயாவது தலையில் இடித்திருந்தால் ரத்தக் காயம் நிச்சயம். உடனே
உதவி தேவை.
அடுத்த ஸ்டெப் எமெர்ஜென்ஸி போவதுதான். எங்கே அடிப்பட்டிருக்கிறது, எலும்பு முறிவு இருக்கிறதா,. ஸ்கான் அவசியமா என்றேல்லாம் வைத்தியர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வயதானவர்களின் குளியறையில் த்ண்ணீர் தேங்கக் கூடாது. இந்த ஊரில் அந்தப்பிரச்சினை இல்லை.
நம் ஊரில் உண்டு.
டாய்லெட் இருக்குமிடத்தைச் சுற்றி என் மகன் கம்பி போட்டு வைத்து இருக்கிறான் ..சென்னையில்.
குளிக்கும் இடத்திலும் அவ்வாறே.
கீழே வழுக்காத தரை.

தினம் மூச்சுப் பயிற்சி.
நிதானமான அழுத்தமான நடை,
அடிக்கடி நீர் பருகுதல். படுக்கும் முன் இதமான பால்.

அதிக வருத்தம் ,கவலை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு,கடவுள் பிரார்த்தனை.
என்னக்குத்தெரிந்ததைச் சொல்லி இருக்கிறேன். மருத்துவர்கள் இன்னும் அழகாகச் சொல்வார்கள். நலமே வாழ்க..


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என் அன்புக் கணவருக்கு,
எங்கள் குழந்தைகளின் அருமைத் தந்தைக்கு.

என்றுமே மறக்க முடியாத நினைவுகளையும்,
அன்பையும், அருமையையும் தந்து
 இதயத்தில் நிற்கும் நல்ல மனிதர், என்றும் எங்களைக் காப்பார்.

Friday, March 02, 2018

திருமணம் மாலையான பூவிலங்கு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


திருமணம் மாலையான பூவிலங்கு
+++++++++++++++++++++++++++++++++++++++
 வேறெந்த குடும்பத்தை எடுப்பானேன்.
எங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் பல தீர்மானங்களை அவர்தான் எடுப்பார்.
வீடு, வாகனம் ,பொருட்செலவு,பள்ளிகள்
என்றூ.
அந்த முடிவுகளில் எனக்கும் உடன் பாடே.
பத்து வருடங்கள் தனிக் குடித்தனம் முடிந்த
பிறகு சென்னைக்கு வந்தோம்.
பெரிய குடும்பம்,.
குழந்தைகளின்,எங்களின் சுதந்திரம் குறைந்தது.

பெரியவர்களுடன் இருப்பதால் ஆதரவும் உண்டு.
அதற்கேற்றார்ப் போல வருவோரும் போவோரும். நமக்கென்று தனி நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது.
அதனால் வரும் friction எல்லாம் தான்.
லாபம்,நஷ்டம் இரண்டும் உண்டு.
பெரியவர்களை எதிர்த்து வார்த்தை சொல்லாத காலம்.

அதற்குப் பிறகு பெரியவர்கள் மறைந்து ,உலகை நான் பார்க்கும் போது
மிக மாறி இருந்தது.
பெண்களின் எண்ணங்கள் வெவ்வேறு வழியாகப் பயணித்தன.
புதிதாக வந்த மருமகள்கள்,வெளீயூரில் குடித்தனம் வைத்துக்
கொண்டு அவ்வப்போது மாமியார் மாமனாருடன்
வருடத்தில் ஒரு மாதம் வசந்தமாகக் கழித்துவிட்டுப் போனார்கள்.

80 களில் கதை முற்றிலும் மாறியது. நிறையக் காதல் திருமணங்கள்.
அதை விரும்பி ஏற்றுக் கொண்ட பெற்றோர்.
எங்கள் சுற்றத்தாரின் மாப்பிள்ளைகளும் மருமகள்களும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அப்படி வந்தவர்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறார்கள்.
மாறாகபெற்றோர் பார்த்து செய்துவைத்த பல திருமணங்கள் அப்படி இல்லை..
என் சமனிலைப் பெற்றோர்களின் மகன்,மகள்கள் விவாகரத்து வரை சென்றார்கள்.
மறு மணமும் செய்தார்கள்.
இப்போது இரண்டாயிரம் ஆண்டும் வந்து 18 வருடங்களும் ஆன நிலையில்
 நல்ல திருமணங்களும் நடக்கின்றன.
நாங்கள் ஒத்துவாழ்ந்து பார்க்கிறோம். முடிந்தால் திருமணம்
இல்லையெனில் முறிவு.
சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.
பொருளாதார சுதந்திரம், நிறைய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது.
இன்னும் எங்களைப் போல வாழ்க்கை நடத்தும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
இறை நம்பிக்கை, குழந்தைகளிடம் கவனம், பெண்டாட்டி மேல் கரிசனம்
எல்லாமே அழகாக இருக்கிறது பார்க்க.

கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை.  தொடரும்
Brother Murali,his wife and YOUNGER BROTHERS DAUGHTER  ON HER MARRIAGE FUNCTION. 2015
Mama Ambi and Jaya Manni. 1957
Maamanaar and Maamiyaar 1930
Us in 1966 Pudukottai
Ambi,Manni  sadhabishekam 
The best Maamiyaar Kamalamma.

Thursday, March 01, 2018

பூசணிக்காய் வடாம், குழம்பில் போடுவது.......கிளைக்கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   பூசணிக்காய் வடாம், குழம்பில் போடுவது
......................................................................................................
பாட்டியும் அம்மாவும் செய்யும் முறை. அதற்காகத்தான் , மாசி மாச
வடாம் பதிவில்  உ. பருப்பு சேர்த்திருந்தேன்.
வெய்யில் கொளுத்தும்போது இந்த வடாம் காயப் போட்டு விடவேண்டும்.
காய நேரம் பிடிக்கும்.
சாம்பல் பூசணிக்காயைப் பார்த்ததும் பாட்டி இந்த வடாம் போட்டுவிடுவார்.

தேவையான பொருட்கள்.
வெள்ளைப் பூசணிச் சாறு தேவையான அளவு.
உ.பருப்பு அரைக்கிலோ
க.பருப்பு கால்கிலோ,
பெருங்காயம் நிறைய,
உப்பு, மிளகாய் அவரவர் இஷ்டம்.
இதிலியே முருங்கை இலை,கறிவேப்பிலை நான் சேர்ப்பேன்.
வெங்காயம் சேர்ப்பாள் என் தோழி.

இந்த ஊறவைத்த பொருட்களை கொற கொறன்னு அரைத்துக் கொண்டு
 கெட்டியான பதத்தில் எடுத்துக் கொண்டு
,
பூசணியைத் துருவியும் போடலாம்.
சாறும் விடலாம்.
 மாவு தளர்வாக இருக்கக் கூடாது.

 காலையில் அரைக்க வேண்டும் . பத்து மணிக்கு  மொட்டை மாடி வெய்யிலுக்கு ப்ளாஸ்டிக் விரிப்பில்
குணுக்கு குணுக்காகக் கிள்ளி வைத்துவிட வேண்டும்.
நல்ல வெய்யிலில்  இரண்டு நாட்களில் காய்ந்துவிடும்.
சாயந்திரம் வீட்டுக்குள் நிழல் உணர்த்தல்..
மூன்று நாட்கள் ஆனாலும்  சரி, ஈரத்தோடு
டப்பாவில் போடக் கூடாது.
பூஞ்சக் காளான் பிடித்துக் கொள்ளும்.
 இத்தோடு, வெண்டைக்காய், கொத்தவரங்காய்,,கத்திரிக்காய்
 எல்லாம் வற்றலாகக் காய வைப்பது உண்டு.
குழம்பு, அதுவும் மிளகு, பொரித்த குழம்பில் வறுத்துப் போட்டால்
அமிர்தம் தான். பொரிச்சகூட்டு இன்னும் சுவை.