Monday, March 05, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என் அன்புக் கணவருக்கு,
எங்கள் குழந்தைகளின் அருமைத் தந்தைக்கு.

என்றுமே மறக்க முடியாத நினைவுகளையும்,
அன்பையும், அருமையையும் தந்து
 இதயத்தில் நிற்கும் நல்ல மனிதர், என்றும் எங்களைக் காப்பார்.

20 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்... அவர் என்றும் உங்களுக்குத் துணை இருப்பார்.

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

KILLERGEE Devakottai said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
- கில்லர்ஜி

கோமதி அரசு said...

சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
என்றும் குடும்பத்தை காப்பார்.
என்றும் உங்களுடன் தான் இருக்கிறார்.
குடும்பபடம் அழகு.

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

ராஜி said...

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்

ஜீவி said...

நினைவுகள் அழிவதில்லை.. என்பது தான் எவ்வளவு உண்மை?..

ஸ்ரீராம். said...

ஓ... அவர் பிறந்த நாளா இன்று. எங்கள் நமஸ்காரங்கள்.

நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துகள். 'நினைவு' என்பதுதான் எவ்வளவு உன்னதமானது. என் குழந்தைகளின் (சின்ன வயது) டிரெஸ் நான் தொடும்போது (இங்கு ஏதாவது இருக்கும்) அவர்களைத் தொடுவது போன்ற உணர்வு வரும். கம்பீரமான அவரது படம், இளமையான குடும்பப் படம்.. இரண்டும் ரசிக்கும்படி இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் அப்படியே நம்புகிறேன்.
சொல்லாமல் போனவர் சொல்வதற்காகக் காத்து நிற்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
உங்கள் எல்லோரின் இதமான வார்த்தைகளே
எனக்குத் துணை.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு, நாகேந்திர பாரதி. நலமா. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கில்லர்ஜி,
என்றும் நலமுடன் வாழ ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. அவர் என்னுடன் இருக்கிறார்,
என்ற நம்பிக்கை தான் நான் வாழ வழி. நன்றி மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,

பல பேர், நான் பித்தம் பிடித்துப் பேசுவது போலப்
பார்ப்பதை உணர்கிறேன்.
நல்ல வேளை எனக்கு நல்ல நண்பர்களும்
இருக்கிறார்கள். மிக நன்றி

வல்லிசிம்ஹன் said...

எங்கள் இல்லாமல் பிறந்த நாள்
எப்படி நடக்கும். அன்பு ஸ்ரீராம் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த, உண்மைதான். எங்கள் குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்துவிட்டார்களோ என்று நினைப்பேன்.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கும் நாட்கள் வரவேண்டும்.
கனிவான வார்த்தைகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
எங்கள் இருவரின் ஆசிகளும் உங்களுக்கு உண்டு.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா கொஞ்சம் லேட்டூஊஊஊ.

சிங்கம்" அவர்களின் பிறந்தநாள்....எங்களின் வணக்கங்கள்! நல்ல நினைவுகள் அழியாதவை...கூடவே சில சமயங்களில் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்றும் தோன்ற வைக்கும்...

படங்கள் அருமை...சிங்கம்! சரியான பெயர்தான் வல்லிம்மா!! கம்பீரம் அப்பா!

துளசி இந்த மாதக் கடைசியில் ரிட்டையர் ஆகிறார். எனவே பல ஃபார்மாலிட்டிஸ் கம்ப்ளீட் செய்வது அது இது என்று தளங்களுக்கு வர இயலவில்லை...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. ஆமாம் எப்பவுமே அப்பா கம்பீரம் தான். முகம் பூரா சிரிப்பு.
கண்களூம் சிரிக்கும் .அதனாலயே சிங்கம் என்று சொல்வேன்.
துளசி ரிடையராகப் போகிறாரா .அட.....

நேரம் கிடைக்கும்போது படிக்கட்டும்மா.

களியோ களி.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும்  ################################...