வல்லிசிம்ஹன்
வண்டியில் ஏறி உட்கார்ந்த தம்பி சேகரிடம்,
''உன்னிடம் எத்தனை தடவைடா சொல்வது. அம்மாவுக்கு எப்பொழுதும் உன் கவலை தான்.
அப்பா வேற இல்லை, அவளுக்கு ஆறுதல் சொல்ல.
இந்தப் புகையை நிறுத்தக் கூடாதா. நம் வீட்டில் யாருக்கும் இந்தப்
பழக்கம் இல்லையே"
உனக்கு ஏதாவது என்றால் அம்மா தாங்க மாட்டாள்.
நீங்கள் இருவரும் இல்லை என்றால்
எனக்கு மட்டும் என்ன இருக்கிறது.
அண்ணாவாவது இருந்தானா. அவனும் ஒரே நாள்
வலியில் இறைவனடி சேர்ந்தான்.'' என்று சொல்லியபடி வண்டியை
நிறுத்தினாள்.
எங்கே இங்க பார்க்கில் நிறுத்தறே, மருந்து வாங்க வேண்டாமா.
அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு நான்
சென்னைக்கு வெளியே அரசாங்க விஷயமாய் செல்ல வேண்டும்.
போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவன் சேகர்.
நல்ல பதவி.
ஆளும் உயரமும் பெருமனுமாக விசால நெற்றியும்,
சிரிக்கும் கண்களுமாக நன்றாக இருப்பான்.
இந்த உத்யோகம் தான் அவனை
இந்தப் பழக்கத்தில் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம்
வரும் லேகாவுக்கு.
மெதுவாக டாக்டர் சொன்ன செய்தியைச் சொன்னாள். உடனே கண்கலங்கி விட்டது
அவனுக்கு.
அவன் மனைவியும் நல்ல படிப்பும் உத்தியோகமும் கொண்டவள் தான்.
இரு மகன்கள் , வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள்.
அம்மா, அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதே
லேகாவுக்குப் பிடிக்கவில்லை.
இப்பொழுது வைத்தியரும் இப்படிச் சொன்னதில்
அவள் மனம் நொந்தது.
தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றால்
வயதான மாமியாருக்கு ஒரு அறை, தங்களுக்கு, மகள்கள் இருவருக்கும் ஒரு அறை
என்று இருக்கிறவர்கள்.
மாமியாரைக் கவனித்துக் கொள்வதே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.
டயபெடிஸ் நோயினால் கண்ணை இழந்தவர்.
வருகிறவர் போகிறவர் நிறைய.
நினைக்க நினைக்க லேகாவுக்குக் கண் நிறைந்து வழிந்தது.
அவள் அழுவதைப் பொறுக்காத தம்பி,
யேய் வருத்தப் படாதடி.
நான் விமலாவிடம் பேசி இந்தச் சோதனையிலிருந்து விடுபட வழி சொல்கிறேன்.
இப்ப வீட்டுக்குப் போகலாம் வா. அம்மா சந்தேகப் படுவார்.
மருந்து கிடைக்கவில்லை.
நுங்கம்பாக்கம் கல்யாணி ஃபார்மசி போய்த் தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடலாம்,
என்றான்.
வண்டியைத் திருப்பி, வீடு வந்து சேர்ந்த போது,
அம்மாவும், மாமியாரும் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததைக்
கண்டார்கள்.
இருவரும் மன நிலையை மாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வருவதைக் கண்ட
தேவகி அம்மா, ''பெரிய மீட்டிங்க் போல இருக்கே!
30 நிமிடங்கள் ஆகிவிட்டதே'' என்று குறும்பாகச் சிரித்தார்.
லேகாவின் மாமியாரும்,'' என்ன இருந்தாலும் வயதான நம்மைப் பற்றிப்
பேசி முடிவெடுக்க வேண்டாமா''
என்று சிரிக்காமல் சொன்னார்.
லேகாவும், சேகரும் திகைத்து நின்றனர்.
''அம்மா நான் தான் தனம், இது ஜயலக்ஷ்மி,டாக்டர் அனுப்பினார்''
என்று குரல்கள் கேட்ட பக்கம் திரும்பி இன்னும் திகைத்தனர்
இருவரும்
வண்டியில் ஏறி உட்கார்ந்த தம்பி சேகரிடம்,
''உன்னிடம் எத்தனை தடவைடா சொல்வது. அம்மாவுக்கு எப்பொழுதும் உன் கவலை தான்.
அப்பா வேற இல்லை, அவளுக்கு ஆறுதல் சொல்ல.
இந்தப் புகையை நிறுத்தக் கூடாதா. நம் வீட்டில் யாருக்கும் இந்தப்
பழக்கம் இல்லையே"
உனக்கு ஏதாவது என்றால் அம்மா தாங்க மாட்டாள்.
நீங்கள் இருவரும் இல்லை என்றால்
எனக்கு மட்டும் என்ன இருக்கிறது.
அண்ணாவாவது இருந்தானா. அவனும் ஒரே நாள்
வலியில் இறைவனடி சேர்ந்தான்.'' என்று சொல்லியபடி வண்டியை
நிறுத்தினாள்.
எங்கே இங்க பார்க்கில் நிறுத்தறே, மருந்து வாங்க வேண்டாமா.
அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு நான்
சென்னைக்கு வெளியே அரசாங்க விஷயமாய் செல்ல வேண்டும்.
போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவன் சேகர்.
நல்ல பதவி.
ஆளும் உயரமும் பெருமனுமாக விசால நெற்றியும்,
சிரிக்கும் கண்களுமாக நன்றாக இருப்பான்.
இந்த உத்யோகம் தான் அவனை
இந்தப் பழக்கத்தில் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம்
வரும் லேகாவுக்கு.
மெதுவாக டாக்டர் சொன்ன செய்தியைச் சொன்னாள். உடனே கண்கலங்கி விட்டது
அவனுக்கு.
அவன் மனைவியும் நல்ல படிப்பும் உத்தியோகமும் கொண்டவள் தான்.
இரு மகன்கள் , வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள்.
அம்மா, அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதே
லேகாவுக்குப் பிடிக்கவில்லை.
இப்பொழுது வைத்தியரும் இப்படிச் சொன்னதில்
அவள் மனம் நொந்தது.
தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றால்
வயதான மாமியாருக்கு ஒரு அறை, தங்களுக்கு, மகள்கள் இருவருக்கும் ஒரு அறை
என்று இருக்கிறவர்கள்.
மாமியாரைக் கவனித்துக் கொள்வதே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.
டயபெடிஸ் நோயினால் கண்ணை இழந்தவர்.
வருகிறவர் போகிறவர் நிறைய.
நினைக்க நினைக்க லேகாவுக்குக் கண் நிறைந்து வழிந்தது.
அவள் அழுவதைப் பொறுக்காத தம்பி,
யேய் வருத்தப் படாதடி.
நான் விமலாவிடம் பேசி இந்தச் சோதனையிலிருந்து விடுபட வழி சொல்கிறேன்.
இப்ப வீட்டுக்குப் போகலாம் வா. அம்மா சந்தேகப் படுவார்.
மருந்து கிடைக்கவில்லை.
நுங்கம்பாக்கம் கல்யாணி ஃபார்மசி போய்த் தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடலாம்,
என்றான்.
வண்டியைத் திருப்பி, வீடு வந்து சேர்ந்த போது,
அம்மாவும், மாமியாரும் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததைக்
கண்டார்கள்.
இருவரும் மன நிலையை மாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வருவதைக் கண்ட
தேவகி அம்மா, ''பெரிய மீட்டிங்க் போல இருக்கே!
30 நிமிடங்கள் ஆகிவிட்டதே'' என்று குறும்பாகச் சிரித்தார்.
லேகாவின் மாமியாரும்,'' என்ன இருந்தாலும் வயதான நம்மைப் பற்றிப்
பேசி முடிவெடுக்க வேண்டாமா''
என்று சிரிக்காமல் சொன்னார்.
லேகாவும், சேகரும் திகைத்து நின்றனர்.
''அம்மா நான் தான் தனம், இது ஜயலக்ஷ்மி,டாக்டர் அனுப்பினார்''
என்று குரல்கள் கேட்ட பக்கம் திரும்பி இன்னும் திகைத்தனர்
இருவரும்