Blog Archive

Sunday, December 31, 2017

Wishes for a very happy Newyear

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கடந்த ஆண்டு  என்னை இன்னும் கொஞ்சம் பதப் படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
வரவு,இழப்பு மிகுந்தாலும் அதைத்தாங்கும் பக்குவத்தை இறை
அளித்தது.
இனியும் எண்ணங்களை இனிது செய்து, வார்த்தைகளையும் செயல்களையும்
வகைப்படுத்த அவனே துணை இருக்க வேண்டும்.
ஒரு நல்வார்த்தை, பசுவுக்கு ஒரு கைப்புல், இயலாதவர்க்கு கைகொடுத்தல் இத்தனையும்
எல்லோராலும் முடியும் என்பதை என் இனிய தோழி Jayalakshmi varadharajan
சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
எல்லா நலன்களும் வளங்களும் பெற்று,
நோயில்லாத வாழ்வு பெற வாழ்த்துகள்.
HAPPY NEWYEAR 2018 FRIENDS.

Saturday, December 30, 2017

Ambi, Manni, and I அம்பி மாமா 3.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
++++++++++++++++++++
அம்பி மாமாவும் ராமு மாமாவும் என் ஆத்மார்த்த தோழர்கள்.
என்ன வேண்டுமானாலும் அவர்களுடன் விவாதிக்கலாம்.
இருவரும் தங்கள் மனைவியின் பால் வைத்திருந்த அபரிமிதமான
அன்புக்கு  எல்லையே இல்லை.
அவர்களின் துணைவிகள் அது போல் அந்த நேசத்தை என்னிடம் காட்டியதுதான் இன்னும் விசேஷம்.
ஏதோ, சின்னப் பெண் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை அவர்கள்.

அம்பி,மன்னி திருமணம் குண்டூர் ,ஆந்திர மாநிலத்தில் நடந்தது.
மன்னியின் அப்பா. ஆழ்வார் மாமா,எங்கள் அனைவருக்கும்
குண்டூர் செல்ல ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தார்.
மாமாவின் தோழர்கள் குண்டூரு போகலாமடா மாப்பிள்ளே என்று அவரைக் 
கலாட்டா செய்து பாடியது நினைவுக்கு வருகிறது
ஒரு இருபது ,முப்பது நபர்கள் போனது போல நினைவு.
மன்னியின் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகளும் 
நான்கு சகோதரிகளும்.
அருமையான  குடும்பம்.
ஒரு விதத்தில் நெருங்கிய உறவினரும் கூட.
நல்ல வேலையில் இருந்த ஆழ்வார் மாமா, செயல் வீரரும் கூட. எப்பொழுதும் 
சிரித்த முகம். கும்பகோணத்து மிராஸ்தார் போல இருப்பார்.
அவர் மனவியோ பொறுமையின் பூஷணம் அசரவே மாட்டார்.
மிக மென்மையான குரலில் அத்தனை மனிதர்களையும் அணைக்கும் குரலில்
அவர் பேசுவது ஒரு தனித்தன்மை.

அம்பி மாமாவை மென்மையாக்கினது மன்னிதான்.
வாய்க்கு ருசியான பண்டங்கள். இதமான வரவேற்பு.
நிறைய படித்து, அதைத் தன் வாழ்வு முறையிலும்
கொண்டு வந்த அழகி என் மன்னி.

அவர்களின் தில்லி வீட்டுக்கு வந்தவர்களின் கணக்கு
எண்ணிக்கையில் அடங்காது.
வந்தவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பார்கள் வேலைக்குப் போவார்கள். 
வாழ்வில் முன்னேறிய பிறகு தான் 
அவர்களை மாமா வெளியே அனுப்புவார்.
பின்னாட்களில் உதவியாக இருந்தவர்களும் அவர்களே.
பாட்டி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தில்லி சென்றுவிட்டு
 வெகு நாட்கள் கழித்தே திரும்புவார்.
அந்த தில்லி உறை குளிரிலும் அசராமல் உழைத்த குடும்பம்.
மன்னி வாயிலிருந்து கஷ்டம் என்ற சொல்லே வந்ததில்லை.
தொடரும்.
பானக நரசிம்மர் மங்களகிரி ,குண்டூர் பக்கத்தில்.

Friday, December 29, 2017

அம்பி மாமா 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அம்பி மாமா 2
+++++++++++++++++++++++++
1954 அம்மாவுக்கு அல்சர் வந்து மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
வரும் நேரம் கூட வந்த துணை அம்பி மாமா.
தாத்தா மறைந்த நிலையில் குடும்பத்தைத் தோளில் நிற்க வைத்தது
நிலைமை.
 இன்னோரு தம்பி அப்போது படித்து முடித்த நிலைமையில்
விசாகப் பட்டணம் நகருக்குப் பயிற்சி பெற பி அண்ட் டி
போஸ்ட்ஸ் ஆண்ட் டெலகிராப் ஆபீஸில் பயிற்சி.

அப்போது மற்ற மாமாக்கள் வயதில் சிறியவர்கள்.
இல்லை என்ற சொல்லே இல்லாமல்
குடும்பம் நடக்கும்.எப்போதும் வளம்.
அவர்கள் குடியிருந்த குடியிருப்பில்
அத்தனை பேருக்கும் இந்த வாலிபர்களின் மேல் அத்தனை மரியாதை.
அப்பா இல்லாமல் வளரும் விதம் கண்டு அதிசயிப்பார்கள்.
எனக்குத் தெரிந்து க்ளாக்ஸோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து
டைப்பிங்க் ,ஷார்ட் ஹாண்ட் என்று எல்லாவிதத்தில் முதன்மையாக
 வெற்றி பெற்றவர்.
பிற்காலத்தில் டெல்லி செல்லும்போது
அவர் தட்டச்சு செய்யும் வேகம் கண்டு
அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் 147 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வலிமை படைத்தவர்.
கடின உழைப்பால் முன்னேறி தன் டிபார்ட்மெண்ட் தலைமைப் பொறுப்பை
 ஏற்று ,ஒரு மதராஸி என்ற வகையில் அவர்
முன்னேறியது அனைவருக்கும் அதிசயமே.
எந்த நிலையிலும் அசரவே மாட்டார்.
1957இல் அவருக்கு வாய்த்த மனை நலம் மிக்க நல்ல பெண்ணாக
ஜெயலக்ஷ்மி என்னும் என் ஜெயா மன்னி
குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டவனையும் காத்தவர்.
என் பாட்டியின் அன்புக்குரிய மருமகள்.
சந்தோஷக் காலங்கள் தொடர்ந்தன.
அவர்கள் சென்னை வரும் நாளில்
நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு
ஒரு மணி நேரம் முன்னதாகவே போய்விடுவோம்.
வாய் கொள்ளாத சிரிப்புடன் தம்பதியரும் குழந்தைகள் இருவரும் இறங்குவது
இன்னும் நினைவில் இருக்கிறது.
ஒரு டெல்லி மண் கூஜா, நிறைய பாதுஷா, பிஸ்கட்,தேன் குழல்
என்று பெரிய டாக்சி நிறைய பொருட்கள் வரும்.
பரந்த மனம் கொண்ட தம்பதியரின்
குடும்பம் சிறிய வருமானம் கொண்டததுதான்.
இருந்தும் வள்ளல்கள்
போல நடந்து கொள்ளும் பெருந்தன்மை. தொடரும்.

Wednesday, December 27, 2017

1932 /2017 ஒரு சகாப்தம் கே.வி.வி.ராஜன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

என் அன்புள்ள மாமா  ,அம்பி என்னும் கீழநத்தம் வீரராகவ அய்யங்கார்  அவர்களின் மகன் வரதராஜன்

Add caption
புதன் காலை 9.30 மணி அளவில் இறைவன் திரு நாட்டுக்கு   ஏளினார் .
 அவரது பெண்கள் இருவருக்கும்  இதைத் தாங்கும் பக்குவத்தை பகவான் கொடுக்கட்டும் .
அன்னைக்கு அன்னையாய்  என்னைத் தூக்கி வளர்த்த அருமை மனிதர்.
வாழ்வின் கடைசிப்படிகளில்  மனைவி,மகன்,மகள்  இம்மூவரையும் இழந்தார். இந்த மார்கழி வளர்பிறை அவரை அழைத்துக் கொண்ட ஸ்ரீ வேணுகோபாலன் அவர்
ஆத்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிடுவான்.

அம்பி எத்தனையோ காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு  உண்மையான இரும்புக்கரங்கள் கொண்டு அரவணைத்தாய். என் இன்னொரு தாயே உனக்கு கோடி நமஸ்காரங்கள்.

எங்கள் சிங்கம் திடீரென மறைந்த பொது  ஆண்டாள் உன்னை எப்படி இனிமே பார்ப்பேன்னு கதறினாய் நான் உன்னை சமாதானப் படுத்த வேண்டி வந்தது.
எல்லோரும்  ஸ்ரீவைகுண்டத்தில் சுகமாக இருங்கள்.🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, December 22, 2017

கடிகைப் பெருமான். ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோக நரசிம்மன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அவ்வப் பொழுது என்னை மறந்து விடுகிறாய்.
உன்னை ஒழுங்காக வைத்திருப்பவன் நான்
அல்லவா. நொடி நேரத்தில் உன் கவலை
போக்கியவன் நான் இல்லையா.
அடிக்கு அடி  எடுத்து வைத்து வந்து  தரிசனம் செய்து விட்டுப் போனது 1987இல்  .
அப்புறம் துன்பம் நேர்கையில் யாழெடுத்து  என்ற பாடலுக்கு ஏற்ற மாதிரி தம்பியின் பைபாஸ் அறுவைக்கும்,
 அம்மாவின் இருதய வலிக்கும்,
வீட்டுக்காரரின் சளி இருமலுக்கும்
 இன்னும் ஏதேதோ சம்பவங்களுக்காக மட்டுமே என்னை நினைத்தாய்.
பிறகு மீண்டும் சம்சாரம்,பேரன் ,பேத்திகள் என்று மஞ்சள் துணியில் முடித்து வைக்க தெரிந்த உனக்கு,
மேலே ஏறி வந்து  உன் பிரார்த்தனை செலுத்த முடியவில்லை. என்னைத் தரிசி க்க வந்தவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டாய் .

மனதிலாவது தக்க வைத்துக் கொள்  என்றும் உன்னைக் காக்க நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் நரசிம்ம சாமி. மீண்டும்  அப்ளிகேஷன் வைக்கிறேன். ஞாபகப் படுத்தியவர்கள் துளசி கோபால், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்.
ந்ருஸிம்ஹன் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மார்கழிப் பாவை 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழி  பாசுரம்  8
+++++++++++++++++++++++


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்
கூவுவான் வம்து நின்றோம்** கோதுகலமுடைய
பாவாய்! எழும்திராய், பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 

Thursday, December 21, 2017

கனவுகள் 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கடந்து வந்த பாதையில்
மலர்களும் முட்களும்.
பல நேரங்களில் நினைவுகளை மலர்கள்
ஆக்கிரமிக்கின்றன .
இரவின் நடு நிசியில் முட்கள்
உறுத்தும் போது  ,கண்ணன் நாமம் கைகொடுக்க விடிகிறது மார்கழி 6ஆம் நாள்.
கசக்கும் நினைவுகளை  மேல் எழாமல் தடுப்பதும் அவனே.
Add caption

Wednesday, December 20, 2017

மார்கழிப் பாசுரம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாயனை மன்னு வட   மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
 ஆயர் குல த்தினுள் தோன்றும் அணிவிளக்கைத்
 தாயைக்  குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
 போய பிழையும் புகுதறுவான் நினறனவும்
 தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   சின்னவன் கண்களைச் சுருக்கி விரித்து
ஹோம்வொர்க் ஒண்ணும் இல்லை பாட்டி
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டுமான்னு கேட்டால் ஏதோ
இருக்குன்னு அர்த்தம்.
கொஞ்சம் உன்னுடைய ஃபோல்டரை செக் பண்ணுடா. ஏதாவது பேப்பர்
இருக்கும் என்பேன்.
நீ யேன் என்னை டிரஸ்ட் பண்ண மாட்டேங்கறே.
ஓகே. உனக்காகப் பாக்கறேன்.
முதல்ல விளையாடணும் என்பான்.
பாவமா இருக்கும்.
15 நிமிஷம் 45 நிமிஷம் ஆகும்.
டேய் பையா. பாத்துடு. இல்லைன்னால் 11 மணி வரை நீதான் முழிச்சு வேலை செய்யணும் என்று கொஞ்சம் கடுமை காட்டுவேன்.
உன் அம்மா அப்பா  உன்னை இப்படி மிரட்டுவார்களா என்பான்.
நானே வேலை முடிச்சுட்டு தான் விளையாடப் போவேன்
என்பேன்.
பட் உனக்கு இந்த மாதிரி இருட்டு விண்டர் டேய்ஸ் கிடையாது.
என்ன வேணா விளையாடலாம் என்று என்னைப் பேசவைத்துவிடுவான்.
திரும்பிப் பார்க்கும் முன் கராத்தே வகுப்பு நேரம் அம்மா வந்ததும்
சுணங்குவான்.
அம்மா I have lots of home work.
give me a break from karate maa.
இத்தனை நேரம் என்னடா பண்ணினே.
பாட்டி ரொம்ப விஷயம் சொன்னாம்மா.
#கிருஷ்ணசேட்டை

Tuesday, December 19, 2017

மார்கழிப் பாசுரம் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


மார்கழிப் பாசுரம் 4
+++++++++++++++++++++++++
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியன் தோளுடைய பத்மனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே  சரணம்.
Add caption

Sunday, December 17, 2017

இரயில் தண்டவாளங்கள் போல....ராதைகேசவன் வாழ்வு...இறுதி பாகம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நீண்ட பதிவு.
தீக்குறளை சென்றோதோம்.
இந்த வார்த்தை கேசவனுக்குத் தான் பொருத்தம்.
அவனுக்குத் தான் பெற்ற குழந்தைகளை ஒழுங்காகக் கரை சேர்க்கணும். கடமை தவற   கூடாது.
ராதையின்  வீட்டில்   இன்னொரு   பூகம்பமே ஆயிற்று.
வெகு நாட்கள்  கழித்து  
சுய நினைவுக்கு  வந்தனர். அடுத்தடுத்து  வீட்டில் நடந்த 
சம்பவங்கள் அவர்களை இப்பொழுதுதான் விழிப்பு நிலைக்குத் தள்ளின.
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த தங்கள் மக்களிடம் வெறுப்பு தோன்ற ராதை 
மகளிர் விடுதியில் தோழியுடன் போய் இருந்து 
கொண்டால். முக்கிய காரணம் நவீன் சென்னையை விட்டுக் கிளம்பியதுதான் .
ராதைக்கு அது பெரிய நஷ்டம். அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்னை விட்டு அவன் பிரிவான என்று அவளுக்குத் தோன்றியதே இல்லை.
ராதையின் பெற்றோர்கள் சொன்ன இழி வார்த்தைகள் அவனைத் துரத்திவிட்டன .
இந்த நிலையில் கேசவன் அவளை சந்தித்தான்.
இருவர் மனமும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்பதை இருவரும் உணர்ந்தனர்.
ராதையின் மனதில் வேறு யாருக்கும் இடம் இல்லை.
ஆன்மிகத்தில்   பற்று வைத்த கேசவனுக்கு 
ராதையிடம் நாட்டம் இல்லை. 
தன்  அம்மா தன்னோடு தான் இருப்பாள் என்று சொன்ன அவனுடைய  உறுதி  வேறு அவளை மனம் சுளிக்க வைத்தது.
ஒரு வார யோசனைக்குப் பிறகு 
அவனுடன் குடும்பம்  நடத்த ஒத்துக்க கொண்டாள் 
தாம்பத்தியம் என்ற வார்த்தைக்கு 
அங்கே இடமில்லை. அவளிடம் பணம் இல்லை. இருக்க ஒரு இடம் தேவை. அது எங்கிருந்தாலும் பரவாயில்லை.
சுதந்திரம் கொடுத்தால் போதும்.
இதைக் கேட்ட கோதை  ,என் இந்தத் தலைவலியை இழுத்து வீட்டுக் கொள்கிறாய்.    அவள் மீண்டும் அதே வழிக்குப் 
போகமாட்டாள்  என்று என்ன நிச்சயம் . வக்கீலிடம் சென்று பிரிவு வாங்கிக்கொள். குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் என்று சொல்லிப் பார்த்தாள் .
எதற்கும் கேசவன் சம்மதிக்கவில்லை.
குழந்தைகள் இன்னும் அவளை வெறுக்கவில்லை.
அம்மா என்று பிம்பமாக அவள் இருந்தால் போதும்.
எனக்கு  தில்லிக்கு மாற்றல் கேட்டிருக்கிறேன்.
நீயும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று 
வேண்டிக்கொண்டான்.
நீ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்கிறாயா என்று தாய் கேட்டதற்கு, நான் அவ்வளவு பெரிய மகான் இல்லைம்மா.
எனக்குத் தீராத வருத்தம் தான்.
ஆனால் அது என்னைப்  பாதிக்க நான் விடப்  போவதில்லை. தில்லி பல்கலைக் கழகத்தில் பிலாசபி  மேஜர் செய்யப் போகிறேன்.
அடுத்தாற்போல் என்னை குடுமி சகிதம் உபன்யாசம் செய்யும் பௌராணிகராக     நீ  பார்க்கலாம் என்று லேசாகச் சிரித்தான்.
கோதைக்குச் சிரிப்பு வரவில்லை.
இவனுக்கே இவ்வளவு பக்குவம் என்றால் எனக்கு இதற்கு மேலும்   வைராக்கியம் வேண்டும்.
அப்படியே ஆகட்டும்  என்ற படி  57 வயதில் மற்றோரு  புது குடித்தனம் செய்ய மகன்,மருமகள்,பேரன் பேத்திகளோடு கிளம்பினாள்.
வாசிப்பவர்கள், இந்த சம்பவங்களில் என் எழுத்தில்  ஏதாவது 
அசம்பாவிதமாகத் தோன்றினால் மன்னிக்கணும்.
நடந்ததை ஒப்பிக்கும் மாணவியாகத்தான் 
இருந்திருக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



மார்கழிப் பாசுரம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வையத்து  வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்  நாட்காலே நீராடி ,
மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன  செய்யோம் தீக்குறளை சென்றோதோம்.
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அம்மா  உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏

Saturday, December 16, 2017

மறுகதை மீண்டும் தொடரலாம்.9 .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அந்த வாரம் குழந்தைகள் ராதையைப் பார்க்க வரவில்லை.
கேசவன் தன் அப்பாவின் பெரிய தமையனாரைப் போய்ப் பார்த்து

தன் கவலைகளையும், அதற்கான தீர்வுகளையும் 
விவாதித்தான்.

அவர் பலவித நிகழ்வுகளையும் பார்த்தவர். குடும்பம்
என்னும் கூடு இனியாவது  சேரட்டும் என்று,
பலவித கோணங்களில்
ஆராய்ந்து அவனைப் பதம் செய்யப் பார்த்தார்.

அவனுக்கு உடலே கசந்தது. இந்தக் கொடுமைக்கு
தான் எப்படி ஆளானோம். எந்தக் கர்மாவுக்கு இது பலனாகக்
கிடைத்திருக்கிறது என்று யோசித்தான்.
பெரியப்பா வைத்த தீர்வுகள் 1, ராதையைச் சந்தித்து
குடும்பத்தோடு சேர்ந்து இருக்கக் கேட்பது.
2, இருக்கும் இடத்தை மாற்றி வேறு இடம் போவது,
3,மனம் தெளிவாக   பரிஹாரமாகப் பல
கோவில்கள் தரிசனம்.
4,கேசவனே தன் மனதைப் பண்படுத்திக் கொள்ள 
வேண்டியது மிக அவசியம்.
இதெல்லாம் கேட்கவே  கேசவனுக்குப்
பாகல்காயாகக் கசந்தது.
அவன் மனம் இறைவன் வசம் திரும்பி
வருடங்கள் ஆகிவிட்டன.
பெரியப்பா மீண்டும் கேசவனைக் கேட்டார்.
நீ மறுமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வாயா.
அதுவும் ஒரு வழி என்றதும் கேசவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. 
என்ன பெரியப்பா எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை.
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அது ஒன்றே என் தீர்வு. நீங்கள் சொல்படி செய்கிறேன்
என்று வீட்டுக்கு வந்து கோதையிடமும், ,கோவிந்தனிடமும்
குனிந்த தலை நிமிராமல் பெரியப்பாவின்
அறிவுரைகளைக் கொண்டு சேர்த்தான்.
கோதைக்கு இனி கண்ணீர் வடிக்க  தெம்பில்லை.
எப்படி எப்படியோ  கோடித்து வளர்த்த குழந்தையின்
எதிர்காலம்  இப்படி ஆனது வெகுவாக நோக வைத்தது.
இனி வெகு காலம் தான் இருக்க மாட்டோம் என்று தோன்றிக்
கொண்டே இருந்தது.
தங்கள் குல ஆச்சார்யரிடம் சரண் அடைந்து குல வழக்கப்படி 
பரண்யாசம் எல்லாம் செய்து கொண்டார்.
கோவிந்தனின் குழந்தைகளை
வளர்ப்பதிலும் இறைவனிடம் பக்தி செய்வதிலும்
காலம் கழிக்க ஆரம்பித்தார்.
மாலாவிடம் கேட்டு அவளது ஆசையான பாட்டுத் துறையில்
சேர்த்துவிட்டார்.
கேசவனும் ராதையும் பேச்சுகள் நடத்துவதே கடினமாக
இருந்தது.    முடிவை நோக்கி  தொடரும் 

மனம் இனிக்கும் மார்கழி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழியை நினைக்கையில் மனம் முழுவதும்
உருகும். நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் திருப்பாவை பாட்டே துயில் எழுப்பும்.
எங்கும் கோவில்கள் இருக்கும்.
எம் எல் வி அம்மாவின் மார்கழித்திங்கள் 
குரல் அனைவரையும் 4 மணிக்கே எழுப்பும்.
பாட்டை கேட்டபடி  பரீட்சைக்குப் படிப்பதோ, வாசல் தெளித்துக் கோலம் 
போடுவதோ நிகழும்.
பிறகு கோவிலும் சுடச்சுட பொங்கலும்.
சிறிய வயதில் திருப்பாவை பக்திக் குழுவுடன் 
அதிகாலைக் குளிரில் பாடல்களும்  உண்டு. அவர்களுடன் பாடல்கள் 
பாடியபடிக் கோவிலை அடைந்த நேரங்கள் இனிமையானவை.
எல்லாம் அந்தக் கோதை நாச்சியாரின் மகிமை,கருணை.
அரங்கனும் ஆண்டாளும் என்றும் நம்மைப் பாதுகாக்கட்டும்.

மாறும் காலம் 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

     வண்டியை விட்டு இறங்கிய ராதை வீட்டுக்குள் பாடியபடி விரைந்தாள். பின்னாலயே வந்த
நவீன், கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து போனான்.

அடுத்த அரை மணி நேரம் வீடு அமளிதுமளிப் பட்டது.
ராதை மட்டும் அமைதியாக இருந்தாள்.

அவளின் அம்மா ,அப்பா  அதிர்ச்சியுடன் அவர்கள் பேசுவதைப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள், நவீன் ஏதோ அவர்கள் மொழியில் கெஞ்சுவது
தெரிந்தது.
ராதையைக் கேட்டால் மௌனம் சாதித்தாள்.
அவளுக்கும் இந்த விஷயம் தெரியும் என்று உணர்ந்தனர்.

பெண்ணைப் பெற்றவர், அவரிடம் வந்து நாங்கள்
இதை எதிர் பார்க்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்
 கல்யாணம் ஆயிற்று.
  என் மகள் கர்ப்பம் தரித்து ,,இரண்டு மாதங்களில்
இங்கே வேலை கிடைத்து வந்தான்.

இது போல அனியாயம் நாங்கள் கண்டதில்லை.
 வருடம் ஒரு முறை வந்தானே.
ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லையே.
 உங்கள் பெண்ணும் மணமானவள் ஆமே. இந்த
உறவை எப்படி அனுமதித்தீர்கள்.
நாங்கள் தென்னாட்டுக்காரர்கள் பண்பாடு மிக்கவர்களாகத்தான் எங்கள்
ஊரில் பார்த்திருக்கிறோம்.
 இந்த அவமானம் எங்களால் தாங்க முடியாது.
இந்த மாப்பிள்ளையும் எங்களுக்கு வேண்டாம்
என்று வெளியே நடந்தார்.
அவரது மனைவி ராதையைப் பார்த்து அவர்கள் மொழியில்
அழுதுகொண்டே  ,கதறினாள்.
பின் கணவனைப் பின் பற்றினாள்.
நவீன் ,ராதையைப் பார்க்க அவள் தன் அறைக்குள்
புகுந்தாள் .அவனும் பின் தொடர
அதற்குப் பின் நடந்த ரசாபாசம் ,அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்யும் அம்மா
 மூலம்
பாட்டிக்கு வந்தது.  தொடரும்.

Friday, December 15, 2017

ராதையின் நாட்கள்.....7 ஆம் பாகம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


அப்பா, huggingனால்  என்ன அர்த்தம், சின்னப் பையன்  மாதவ்
கேட்டதும்  அவனை அணைத்துக் கொண்டான் கேசவன்.
இதுதான் கண்ணா. நீ பாட்டியை ஓடிப்போய்க் கட்டிக்கிறியே அதுதான்.
ஏன் பாடம் எதிலாவது வந்திருக்கா என்றான்.
இல்லை என்று திணறும் குழந்தையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது
அப்பாவின் மனம்.
 சரி .சொல்ல வேண்டாம். ஹக்கிங்க் இஸ் குட்
பையா. கண் களில் சந்தேகத்தோடு பார்க்கும் 7 வயசுக் குழந்தையைப் பார்த்து
வேறு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அணைத்துக் கொண்டான்.
மனதில் கண்ணீர் நிரம்பியது.
 சென்னை வந்த ஆறு மாதங்களில் குழந்தைகளை இங்கும்
ராதையுடனும் இருந்தன. பள்ளிக்கூடத்துக்கு இங்கிருந்தே சென்றன.

 வந்த ஒரு வாரத்தில் ராதையின் கட்டுப்பாடுகளை ஒத்துக் கொண்டே குழந்தைகளை அழைத்து வந்தான்.
பெரியவர்கள் அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவன்  மனமும் இறுகிக்கொண்டது.குழந்தைகளுக்கு
மட்டும் திறந்து கொண்டது. இதோ 3 வருடங்களும் ஓடி விட்டன.

ராதையின் வீட்டில் எல்லாமே வழக்கப்படியே நடந்தது.
நவீன் கிருஷ்ணா அவளுடைய உயிராக நடந்து கொண்டான்.
ஒரே ரசனை, புத்தக வாசிப்பு, பாடல்,நடனம் எல்லா
விருப்பங்களும் ஒத்துப் போயின. அந்த ஒரு நாள் வரும் வரை.

வாசலில் நின்ற வயதானவர்களைப் பார்த்து ராதையின் தந்தை
ஆங்கிலத்தில் யாரென்று கேட்டார்.
நவீன் கிருஷ்ணா இங்கே இருக்கிறானா என்று கேட்டார் அந்த பெங்காலி மனிதர்.
  இருக்கிறார். நீங்கள் யார் என்றதும், தன் மனைவியைப் பார்த்துவிட்டு அங்கேயே நின்ற
அந்த மனிதர் நாங்கள் அவனுடைய மாமனாரும் மாமியாரும்,
என்றதும் ஒரு தடவை உடல் நடுங்கியது ஸ்ரீனிவாசனுக்கு.
அதாவது ராதையின் அப்பாவுக்கு.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அவன் கல்யாணமானவனா என்றார்.
ஆமாம் 5 வருடங்கள் ஆகிறது ஒரு பையன் கூட இருக்கிறான்.
அவன் ஒரு வருடமாக கல்கத்தாவுக்கு வரவில்லை.
கடிதங்களுக்குப் பதில் இல்லை. கவலையாகிவிட்டது.
அதுதான் நேரே வந்தோம்.
 அவன் வேலை செய்யும் கம்பெனியில் விசாரித்தபோது
அவன் இந்த விலாசத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவனை அழைக்க முடியுமா.
அவன் குழந்தையும் மனைவியும் டாக்சியில் இருக்கிறார்கள்.
என்று சொன்னவரைப் பார்த்து வெறிக்க மட்டுமே
முடிந்தது.
அதே சமயம் வெளி கேட்டைத் திறந்து உள்ளுக்குள் நுழைந்தது
ராதை ஓட்டிய ஹெரால்ட் வண்டி. பக்கத்திலிருந்து உத்சாகமாக இறங்கினான்
நவீன்.   தொடரும்.
Add caption

Thursday, December 14, 2017

கேசவன் என்னாவது...6ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ஆறாம் மாத திதிகள் வந்தன. ராதை வருவாள் என எதிர்பார்த்த
கோதை ஏமாந்தார்.

 தொலைபேசியில் விசாரித்த போது உடல் நலம் சரியில்லை என்று ராதையின் அம்மா
சொல்லிவிட்டார்.
கேசவனைப் பார்த்துக் கலங்கத்தான் முடிந்தது கோதையால்.
நான் உன்னுடன் வரட்டுமாடா என்று கேட்டதற்கும் சரியான சொல்லவில்லை.
இயல்பை விடக் கறுத்து இளைத்துக் காணும் மக்னைக் கண்டு கண்ணீர் வந்தது.
 நான் அங்கே
போய்க் கேட்பேன்.
ஒரு வருடத்துக்குள் போவது நல்லதில்லை என்று இருக்கிறேன்.

 என்றவளைப் பார்த்து ,அலுப்புடன் சொன்னான். அம்மா,நான் அவளுடன் நேரம் செலவழிப்பதில்லையாம்,.
பாம்பே வரும் எண்ணம் இல்லையாம்.
முடிந்தால் இந்த ஊருக்கு மாற்றி வரச் சொல்கிறாள்.

என்னால் முடியாத காரியம் அது.
இந்த ஊர்க் கொண்டாட்டம் அவளுக்குப் பிடித்திருக்கிறது.
என்னுடன் முடியுமானால் நீ வா. அங்கேயே
அப்பாவின்  மற்றத்திதிகளையும் கொடுக்கலாம் என்றான்.

விசேஷங்களுக்கு வந்திருந்த அம்மாவின் தங்கை
தனியாகப் பேசுவதைக் கவனித்தான்.
இனம் புரியாத சினம் வந்தது.
என்ன சித்தி,புதிதா ஏதாவது வம்பா என்ற கேட்ட கேசவனை அதிர்ச்சியுடன்
பார்த்தாள் சித்தி.
யாரைப் பத்தியும் இல்லடா கேசவா. உன் பெண்டாட்டி ராதையின்
பட்டணப் பிரவேசத்தைச் சொல்கிறேன்.
எப்போது பார்த்தாலும் ஒரு கல்கத்தாப் பையன் அவள் வீட்டில்
இருக்கிறான். வேலை முடிந்து இரவு வருகிறான்.
காலயில் செல்கிறான்.
அவள் அம்மா அப்பா கண்டு கொள்வதாகக் காணோம்.
நீயாவது கேட்கக் கூடாதோடின்னு
இவளைக் கேட்க வந்தேன்.
ஊரே  பேச ஆரம்பித்தாச்சு.
முற்ற விடாதே .குழந்தைகளையாவது உன்னோடு அழைத்துப் போ என்றாள்.
இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டான் கேசவன்.
 நான் அங்கே போய்ப்  பார்த்ததைத் தான் சொல்கிறேன்.
ஒரே அறையில் அடைந்து கிடக்கிறார்கள்.
 சனி ஞாயிறு, காரில் ஊர்வலம்.

ராதை அம்மாவிடம் கேட்டால் என்னவோ நடனத்துக்காக வந்தவன். நல்ல சினேதன்.
அவ கணவன் சரியாக இருந்தால் இவள்  மாறி இருக்க மாட்டாள்
என்று பெண்ணை சப்போர்ட் பண்றா.
இது என்ன குடும்பம் என்று எரிச்சல் வந்து நேரே இங்கே வந்தேன் என்றாள்.
மயான அமைதி வீட்டில் நிரம்பியது.. அடுத்த இரு மாதங்களில் கேசவன் சென்னையோடு வந்து சேர்ந்தான்.

அடுத்து இரு பகுதிகளில் முடித்துவிடுகிறேன் நண்பர்களே.

Tuesday, December 12, 2017

ராதையின் நெஞ்சம் கேசவனிடமா 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

  கோதையின் மனம் சமாதானம் அடைய மறுத்தது.
இரண்டு நாட்களில் 14 வயது முதல் தன்னுடன்
வாழ்க்கை நடத்திய கணவர் ஏன் இப்படிச் சட்டென்று
 உலகைவிட்டுக் கிளம்பினார்.
அவரைவிட்டு இன்னும் எத்தனை வருடங்கள் நான் இங்கே இருப்பேன்.

என்னென்னவோ எண்ணங்கள் அவர் உள்ளத்தில்
அலைமோதின. அவரது பிறந்தக மனிதர்கள் எல்லோரும் நன்றாகவே
இருக்கிறார்கள்.
எல்லோரும் எழுபது எண்பது தொண்ணூறு என்று
ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
கோதையின் அம்மா 70 வயதில் ,மகளின் வீட்டு
வேலைகளைப் பார்த்துக் கொண்டு துணைக்கு இருக்க வந்திருக்கிறார்.

இருக்கும் கவலை போதாது போல இந்த ராதை வேறு
இங்கு வந்து இருக்க மறுக்கிறாள்.
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ தெரியவில்லை.
அவனுடனும் போகவில்லை.
குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை. என்ன விவகாரமோ தெரியவில்லையே
  என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.
கோவிந்தனைக் கூப்பிட்டு விசாரித்தால்
கேசவன் ரொம்ப மூடியா இருக்காம்மா. பழைய படி இல்லை. நான் விசாரிக்கிறேன். நீ வருத்தப்படாதே என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தான்.
அடுத்து வருவது ஆறாம்  மாதம். ஒரு வார லீவில் கேசவன் வரவேண்டும்.
அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டியது
அவசியம் என்று நினைத்தான் கோவிந்தன்.
அடுத்த நாள் ராதையைப் பார்க்க அவனும் மாலாவும் சென்றார்கள்.
வீடே கலகலப்பாக இருந்தது.
 நிறைய நட்புகளுடன் உட்கார்ந்திருந்த ராதா
இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து அடுத்த கூடத்துள் அழைத்துச் சென்றாள்.
ஏதாவது அவசர விஷயமா,இருவருமாக வந்திருக்கிறீர்களே
என்று வினவியபடி
உட்கார்ந்தாள்.
குழந்தைகளைக் காணோமே  என்ற மாலாவிடம் இருவரும்
 தனி ஆசிரியரிடம் பாடங்கள் கற்றுக் கொள்வதாகச் சொன்னவளைத் தயக்கத்துடன்
பார்த்தான் கோவிந்தன். கேசவன் ஆறாம் மாத  திதிகள் கொடுக்க
வருவதாகவும்
அம்மா குழந்தைகளை அப்போது அழைத்து வரச் சொன்னதாகவும்
அவளிடம் தெரிவித்தான்.
குழந்தைகளுக்கு அந்தப் புகையும், சூழ்னிலையும்
 அவர்களைப் பயப்படுத்துகிறது. அவர்களுக்கு ஒன்றும் புரியவும் இல்லை.
இன்னோரு சமயம் பார்க்கலாமே .
 என்னுடைய நடனக் குழு காத்திருக்கிறது.
அம்மாவுக்கு என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.
என்று எழுந்தவளைப் பார்த்துப் பிரமிக்கத்தான்
முடிந்தது மாலாவுக்கும் கோவிந்தனுக்கும்.
நீங்கள் பாம்பே போவது எப்போது  என்று கேட்டபோது,
இப்போதைக்கு இல்லை ,அவரிடம் சொல்லிவிட்டேனே என்றாள்.
அதற்கு மேல் நிற முடியாமல் இருவரும் வாசல் நோக்கி நடந்தனர்.
வழியில் வித விதமான வேடங்களில் ஆண்களும்
பெண்களும்  சிரித்து உரையாடிக் கொண்டிருக்க ,ஒரு இளைஞன்
மட்டும் ராதையின் கைகளைக்  கோர்த்துக் கொள்வதைப்
பார்த்து வியர்த்து விட்டது மாலாவுக்கு. என்ன இது என்று தொண்டை வரை வந்த
கேள்வியை விழுங்கியபடிக் கணவனைப் பார்த்தாள்....தொடரும்.

Sunday, December 10, 2017

கேசவன் ராதை 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இப்பொழுது நாம் கேசவன்,ராதையின்  வளர்ப்பு முறைகளைக் காணலாம்.
கோதையும் , வீட்டுக்காரரும் நிறைய பழையக் கலாசாரத்தில் மூழ்கியவர்கள்.
எந்த நிலையிலும் ஆசார அனுஷ்டானங்களை வீட்டுக் கொடுக்காதவர்கள்.

கேசவன், கோவிந்தன் இருவருமே   ....... பெற்றோர் சொல் தப்பாத பிள்ளைகளாகவே வளர்ந்தார்கள்.
அதிகம் பெண்களுடன் பழகியதில்லை.

மகன்களின்  நடத்தையில் பூரித்துப் போனவள் கோதைதான்.தன் பிசினஸில் குறியாக இருந்த
கோபாலன் ,இவர்கள் விஷயத்தில் தலையிட்டதில்லை.
முழுவதும் அம்மாவைப் பார்த்தே வளர்ந்த பிள்ளைகளிடம் நளினம்,மென்மையும், அதீத உணர்ச்சிகளுக்கு ஆளாகாத குணமும் இருந்தன.
அந்த சுபாவமே  அவர்களது கம்பீரத்துக்குக் காரண்மாக இருந்தது.

ராதையின் பெற்றோர் சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தவர்கள்.
கட்டுப்பாடும் ,சுதந்திரமும் சேர்த்துக் கொடுத்தே பெண்ணை வளர்த்தார்கள்.
அவளூம்  கல்லூரிக்காலத்தில் கூட சொல் மீறியவள் இல்லை.
பிடித்த பரதக் கலையில் நல்ல தேர்ச்சியும்,
அனேகரின் பாராட்டுகளில் மிக லயித்தவளாகவே இருந்து
விட்டாள். கேசவனையும் அவர்களது குடும்பமும்
பிடித்திருந்ததாலேயே திருமணத்துக்குச் சம்மதித்தாள்.

தனது கலையையும் அதன் கூடவே கிடைக்கும் கவனிப்பும் ,பாராட்டுகளும் அவளுக்கு
மிகத்தேவையாக இருந்தது.
 அதன் விளைவே  மும்பையில் அவள் எடுத்த முடிவு.
கேசவன் குணம் தான்,தன் குடும்பம்,வேலை,பெற்றோர்
இவர்களோடு அடங்கியது.

மனைவி மேடையில் ஆடுவது என்பது அவன் எதிர்பாராத நிகழ்வு.
குழந்தைகளைப் பிரிந்திருப்பதையும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவனால் முடிந்த வரை ராதையிடம் பேசிப்பார்த்தான்.
அவள் தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இதன் நடுவே  அவன் தந்தைக்கு வந்த மாரடைப்பு பேரிடியாகக் குடும்பத்தை நொறுக்கியது.

குடும்பத்தோடு சென்னை வந்த கேசவனால் ,அடுத்து வந்த
அவர் மறைவைத் தாங்கவே முடியவில்லை.
நிலை குலைந்த தாயைப் பார்க்கவே மனம் பதைத்தது.
கோவிந்தனுடன் சேர்ந்து அப்பாவின் பிரசுர நிலைய வேலைகளைச் சீர் செய்தான்.

குழந்தைகளை அவர்களுடைய அம்மம்மா வீட்டில் இருக்கச் சொல்லி இருந்தார்கள்.
ராதை அவன் கூட இருந்து அப்பாவுக்கான பிதுர்க் காரியங்களில் ஈடுபட்டாலும்
மனம் ஏனோ பொருந்தவில்லை.
கோவிந்தனுக்குப் புதிதாகப் பிறந்திருந்த ஆண் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு
வெறித்த நோக்கோடு உட்கார்ந்திருந்த
தாயைப் பார்க்கச் சகோதரர்கள் இருவர் கண்ணிலும் நீர்.
எப்படி ஆச்சு இந்த நிகழ்வு. இன்னும் அறுபதுக்கு அறுபது கூட
நடக்கவில்லையே, மாதா மாதம்
கேசவன் சென்னை வந்து அப்பாவின் மாதாந்திரக்
காரியங்களைச் செய்வதாக முடிவெடுத்து அவன் கிளம்பத் தயாரானான்.
தான் சென்னையில் இருந்து கொள்வதாகவும்
பிறகு மும்பை வருவதாகவும் சொன்ன ராதையைக் கட்டாயப்படுத்த அவனுக்கு மனதில்
வலு இல்லை..தொடரும்.

Saturday, December 09, 2017

ராதையும் கேசவனும் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

குடும்பம்  இனிதாகச் சென்றது. மூன்று வருடங்களில் ஆண்  ஒன்று பெண் ஒன்றாக குழந்தைகள் பிறந்தன.

சென்னையில்  அம்மா அப்பாவுடன்  தங்கி பிரசவம் பார்த்துக் கொண்ட ராதா  திரும்பி வரும்போதுத் துணைக்கு ஒரு பெண்ணையும் அழைத்து வந்தாள் .

கேசவன் உடன் பிறப்பு கோவிந்தனுக்கும்
நல்ல குடும்பத்தில்  பெண் பார்த்து  கோதை அருமையாகத்
திருமணம்  செய்து வைத்தாள் .
 கோவிந்தன்  மனைவி  மாலா.
சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவள்.
 பாட்டு, நாட்டியம் ஒன்றும் தெரியாது.
முதலில் கோவிந்தனுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஆனால் அவளுடைய அடக்கமும் ,அம்மாவிடம் அவள் காட்டிய மரியாதையும்
அவன் மனதை முழுவதும் மாற்றி விட்டது.

வாரக்கடைசி சுற்றலுக்கு  எல்லாம் ஈடு கொடுத்து
வீட்டு நிர்வாகத்திலும்  மாமியாருக்கு உதவியாக இருந்தாள் .
இருவரும் மும்பைக்கும் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வந்தார்கள் .

இரண்டு குழந்தைகளோடு ராதைக்கு நேரம் சரியாக இருந்தது.
துணையாக வந்த சரஸ்வதி  ,குழந்தைகளை பார்த்துக் கொள்ள நால்வரும் மும்பையில் எல்லா இடங்களையும்
 பார்த்து மகிழ்ந்தார்கள்.
மச்சினன் ஓரப்படி சுதந்திரமாக வலம் வருவது ராதைக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான்.

சிறு சிறு  தாபங்கள்  அவளுள் வளர்ந்தன.
தன்  நாட்டியத்தைத் தொடர   முடியவில்லை.
கணவனுடன் ஊர் சுற்ற முடியவில்லை. அவனோ, அலுவலகம் வீடு,குழந்தைகள் என்று இருந்தான்.
வேலையின் பளு  குழந்தைகளோடு இருக்கையில் குறைவதாக  உணர்ந்தான்.
இவர்கள் வளரட்டும் மா. நாம் எல்லா இடங்களும் போகலாம்  என்று அவளுக்கு சமாதானம் சொல்லுவான்.

ஒரு வருட டிசம்பர் மாத  இசை விழாவுக்குப்  போய் வந்தவளுக்கு  தன தோழிகள் ஆடிய கச்சேரிகளைப  பார்த்து மனம்  மிக வருந்தியது. தன்  வாழ்க்கையே
 வீணாகப்  போவதாகத் தோன்றியது.

மாதுங்காவிலும் சபாக்கள் இருந்தன.
 கேசவனை வீட்டில் விட்டு விட்டு, சபாக்களுக்குப் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் .

அங்கேயே தன நடனத்தைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு ஆசிரியரையும் அடையாளம் கண்டு, அந்த வகுப்புகளுக்குப்
போக ஆரம்பித்தாள். குழந்தைகள் சரஸ்வதியோடு  நெருங்கி சமாதானம் அடைந்தன.

இந்த இடைக்கால வசந்தம்  தடைப்பட்டது.
சரஸ்வதிக்குத் திருமணம் நிச்சயம் செய்வதாகக் கடிதம் வந்த போது .

ராதைக்கு  வந்த கோபம் சொல்லி முடியாது.
அடுத்து அவள் எடுத்த முடிவு  கேசவனுக்கு
அளவில்லாத வருத்தம் கொடுத்தது.
குழந்தைகளைத் தன்  அம்மா வீட்டில்   விடப்  போவதில்
 உறுதியாக இருந்தாள் .

சென்னையில் படிப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
வீட்டு வண்டியில்  போய் இறங்கித் திரும்பி வரலாம்.
நல்ல கான்வெண்டுகள்  இருக்கின்றன.
தன்னைப் போலவே  பெண்ணையும் அம்மா  வளர்த்து விடுவாள்.
பையனுக்கும்  டான் பாஸ்க்கோவில்  இடம் கிடைத்து விடும்.
என்று அவள் திட்டங்கள்  வளர்ந்தன.

கேசவனுக்குத் தன்  உலகமே  இருளுவது போல்  தோன்றியது .
 குழந்தைகள் இல்லாமல் என்ன குடும்பம் இருக்க முடியும் என்று  கலக்கம்  ஏற்பட்டது.   தொடரும்.






Thursday, December 07, 2017

கேசவன் ராதையின் குடும்பம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


https://youtu.be/e3RiMIAZ1vY

1960 களில் மும்பையில் அழகான குடித்தனமாக ஆரம்பித்தது
கேசவன் ராதையின் குடும்பம்.
28 வயது கேசவன் 20 வயது ராதையைப் பெண் பார்த்து
மனம் ஒப்பி சரி சொன்னதும் திருமணம் நடைபெற்றது
அவர்களது மாம்பலம் பங்களாவில்.
மூன்று நாள் கல்யாணம். அப்போது ஒரு நாள் கச்சேரிக்கு எம்.எல்.வசந்தகுமாரி.
மறு நாள் நாட்டியக் கச்சேரி ராதா வசந்தி பிரபல நாட்டியக் கலைஞர்கள்.
மூன்றாம் நாள்  அனந்தராம தீக்ஷிதரின் சுந்தர காண்டம் பிரவசனம்.
திருமண ஜோடியைப் பார்த்து வியக்காதவர்களே  இல்லை.
அவ்வளவு பொருத்தம்.
பெயருக்கேற்ற மாதிரி கேசவன் களையான முகம் . ஆண்மையோடு கலந்த கம்பீரம்.
மா நிறம். எப்போதும் சிரித்த முகம்.ராதை பால்வண்ணம். .படித்த களை, நாட்டியம்
கற்றுக்கொண்டு மெருகேறிய உடல் வாகு என்று அழகாக இருப்பாள்.
கேசவனுக்கு மும்பையில்  ஆங்கிலேயர்கள் கம்பெனி ஒன்றில்
சேல்ஸ் மானேஜர் வேலை. தினம் தன்னுடைய ஃபியட் வண்டியில் சர்ச்கேட்
போய்வருவான். காலை எட்டு மணி மாலை 5 மணி அவனுடைய வேலை நேரம்.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கேசவனின்  அம்மா கோதை மணமக்களுடன்
மும்பை வந்தாள்.
   இவர்களை மாடுங்காவில்
குடி வைத்துவிட்டு,கோவில்,கடை கண்ணி எல்லாம் சுற்றி
ராதைக்குத் தன வழியில், சில உறவினர்களையும் அடையாளம்,அறிமுகம்
செய்து வைத்தார்.
ரத்தன்BAAG  என்ற பெயருக்கேற்ற அழகான் மூன்றடுக்கு மாடிகள்
கொண்ட கட்டிடத்தில் பெரிய விசாலமான அபார்ட்மெண்ட்.
நான்கு  பெரிய பெரிய அறைகள். காற்றோட்டமான பால்கனி, சமையலறை ஒரே ஒரு வேளை,
உதவிக்கு வரும் தாயி என்று அமைப்பாக ஆரம்பமானது வாழ்க்கை.



கேசவனுடைய  இரட்டையான கோவிந்தனுக்கு  வெள்ளைக்காரனைப் போல
ஒரு வண்ணம். சரியான அரட்டை மன்னன்.
அவன் சென்னையில் அப்பாவுடன் தங்கி
அவருடைய புத்தகக் கம்பெனியில்  , விளம்பரங்கள்,விற்பனை,
ஆசிரியர்களைச் சந்திப்பது போன்ற சுற்று வேலைகளைக் கவனித்துக் கொண்டான்..
அவனுக்கும் திருமணத்திற்காகப் பெண் தேடும் படலம் தொடங்க வேண்டும்.

ஒரு மாதம் இருந்த கோதை ,,
இருவரின் ஒற்றுமையும் குடும்பம் நடத்தும் பாங்கும் கண்டு
மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினாள். புது வருடம் பிறந்து தைமாத ஆரம்பத்தில்
கோவிந்தனுக்கு ஜாதகம் எடுத்துப் பெண் பார்க்கும் வேலை
ஆரம்பிக்க வேண்டும் ,. இப்போது புரட்டாசி ஆரம்பம்.
வீட்டைப் புதுப்பிக்கும் வேலை நடக்கிறது.
ஐந்து மாத இடைவெளியில் உறவுகளில்  சொல்லி வைத்து
நல்லதொரு பெண் தேட வேண்டியது.
 கோவில், நவராத்திரி சமயம் என்று கண்ணில் படும்
பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து,
தையில் ஆரம்பித்தால் சித்திரையில்  திருமணம்
நடத்தலாம் என்று  சிந்தனைகளோடு சென்னை வீட்டிற்கு
வந்து சேர்ந்தாள் கோதை.........தொடரும்.

Wednesday, December 06, 2017

ராதையை மன்னித்த கேசவன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  1960
+++++++++++++++++++++++++++++++++++++ 
எங்கள் ப்ளாகில் ராமனை மன்னித்த சீதை தொடர்
பல மாதங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. வித விதமான நவீன
சீதைகள்,நவீன ராமன்கள்.

அப்படிப் பார்க்கப் போனால் ,இந்தக் கால சீதைகள் தவறே
இழைப்பதில்லையா.

என் பழைய கதைகளில் ராஜி ,சந்திரன் என்ற இரு பாத்திரங்கள் வருவார்கள். சமீபத்தில் கேள்விப்பட்டது இருவருமே இப்போது உலகில்   இல்லை.

எதுவுமே நிலை இல்லை என்கிற போது ஏன் இந்த மன்னிப்பு
வருகிறது. மன்னிக்காவிடில் வாழ்வு இல்லை. தம்பதிகள்
பொருமிக் கொண்டே குடித்தனம் என்ற ஒன்றை நடத்த முடியுமா.
 குழந்தைகள் பாடு என்னாவது. காலத்துக்கும் இறுகிக் கிடக்கும் பெற்றோரைப்
பார்த்துக் குழந்தைகளும் இறுகி விடாதா.
ஒரு குழந்தை இறுகினால், மறு குழந்தை வீட்டை விட்டுப் போனால் போதும்
என்று கிடைத்த வாழ்வைப் படித்துக் கொண்டு துன்பமோ
இல்லை நல்வாழ்வோ வாழ்ந்து சாதிக்கத் துடிக்கும்.
ஆண் பிள்ளையாக இருந்தால் அவனும் வாழ்வில்
தவறிப் போக வழி இருக்கிறது.

  எல்லோருமே அலங்காரத்தை அங்கீகரித்த கோதண்டபாணி ஆக முடியுமா.
தி.ஜானகிராமன் கதையில் முடியும்
  வாழ்வில் அது போல மனைவியை மன்னித்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
நல்ல வேளை யாரும் இப்போது இல்லை.
   அவர்களெல்லாம் ராமனாக இருந்தவர்கள் தான்.
 மனைவியை மன்னிக்கும் மாண்பு இருந்தது.  மும்பையில்
நடந்த சம்பவம்  தில்லியில் நற்குடும்பமாகச் செயல் பட ஆரம்பித்தது.
 // வாய்மை எனப்படுவது யாதெனில்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.//
வள்ளுவர் வாக்கு. அதற்கு  ஏற்றபடி இந்தக் கதையை எழுதலாமா
வேண்டாமா என்னும் முடிவை  என் நண்பர்களிடம் விடுகிறேன்.



Monday, December 04, 2017

ஆகாயத்தில் ஆரம்பம்.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 எங்கள் ப்ளாக் வலைப்பூவில் இந்தக் கதை அனுப்ப ஆசை.

நம்ம ஏரியாவில்  வெளியாகிவிட்டதாக  இன்று காலை தகவல் கொடுத்துவிட்டார்  ஸ்ரீராம். வாழ்க வளமுடன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
க க க  போ  5  நம்ம ஏரியா க்கு ஒரு கதை.
++++++++++++++++++++++++++++++++++++++++
 விமானத்தில்
Sutton, London
ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled by Love
Thames shore

  BA  பிசினஸ் வகுப்பில் சேவை... சர்விஸ்மிக நன்றாக இருக்கும்.
அதான் பாட்டியுடைய மகன்  இந்தியாவுக்கு இந்த
வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான்.
தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர்,
இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மை.
அழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான். ஆனால்
விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும்  எங்கள் ப்ளாக்   குழுமத்துக்கு.
++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி கதை.
 ஞானம் , பெட்டியைத் தயார் செய்கையிலியே, சென்னையிலிருக்கும்
பேரன், பேத்திக்கு  வாங்கிய உடைகள், மருமகளுக்கு  வாங்கிய  பச்சை ப்ரேஸ்லெட், மகனுக்கு வாங்கிய புது ஐபாட் என்று அழகாகக், கலர் வண்ணத்தாள்களில்
 சுற்றி  மென்மையான கைகளால் அடுக்கிவைத்தார்.
பின்னால் வந்து பார்த்த சின்ன மகன் மகேஷ், போதுமாமா,
இன்னும் குக்கீஸ்,  சாக்கலேட் என்று வாங்கிக் கொள்கிறாயா.
   தார்ண்டன் சாக்லேட் யம்மியாக  இருக்கும். மாகிண்டாஷ் வாங்கிண்டு போறியா.//
என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தான்.
மகனை அன்புடன் அணைத்த ஞானம் , டேய் போறுண்டா.
ஒழுங்கா சாப்பிடு. சில்லுனு குளிர் ஆரம்பித்தாச்சு.
ஹீட்டர் சரியா வேலை செய்யலைன்னு நினைவு வச்சிக்கோ. லாண்ட்லார்ட்
கிட்டே உடனே பேசு. லண்டன் குளிர் மோசமானது. அனாவசியமா சளித்தொல்லை வரவழைத்துக் கொள்ளாதே.

 இன்ன பிற பலகாரங்கள்,  எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாச்சு.

அம்மா உனக்கு எப்ப வரணும்னு சொல்லு திரும்பி வந்துடு என்னும் மகனை ஆழ்ந்து பார்த்தாள் ஞானம்.
உனக்கு ஒரு மனைவி வரட்டும்டா. அப்புறம் வரேன்.
தனியா உன்னை விட்டுப் போவதில்
ரொம்ப வருத்தமாக இருக்குடா.
யாரை வேணுனாலும் திருமணம் செய்துக்கோ.
எனக்கு  மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்.//
அம்மா என்று அணைத்துக் கொண்டவன் கண்ணிலும் நீர்.

அடுத்த நாள் ஹீத்ரோ , பகல் 12 மணிக்கு  வந்தாச்சு. ஞானம் இரவு
விழித்து மகனுக்குப் பிடித்த உணவுகளைத் தயார் செய்து Fridjedair
வைத்திருந்தாள்
செக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள். அம்மாவுக்குப் பிடித்த
நல்ல காப்பியை வாங்கிக் கொடுத்தான்.
அம்மாவிடம் எல்லா உணவுப்பொட்டலங்களுக்கும் நன்றி சொன்னான்.

கையசைத்து பிசினஸ் வகுப்பு பயணிகளுடன் சேர்ந்து கொண்டாள்.
விமானம் கிளம்பியதும் ஆயாசம் மனதைக் கவ்வியது.

சென்னையில் முடிந்திருக்க வேண்டிய மகேஷின் திருமணத்தை நினைத்தாள்.
எல்லாப் பொருத்தமும் இருந்து நிச்சயம் செய்யும்  நாள் வரும்போது
அந்தப் பெண் லண்டன் வர மறுத்துவிட்டது. மென்மையான 
மகேஷ் சஞ்சலம் அடைந்துவிட்டான். அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து வந்துவிட்டான்..  முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே அதிசயமாகிவிட்டது.....

 ஏதாவது சூடான பானம் வேண்டுமா என்று கேட்ட
பெண்குரல் அவளை எழுப்பியது.
 என்ன அழகான  பெண். எத்தனை மரியாதை. .இன்னும் ஊன்று கவனித்தாள்,
இந்தியக் களை தெரிகிறதே. நிலம் பெயர்ந்து குடியேறிய வம்சமோ
  என்று புன்னகையோடு அவளது உபசரிப்பை ஏற்றுக் கொண்டாள்.
கையில் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்தவுடன் ,
மகன் நினைவுதான். திரும்பிப் போயிருப்பான்  தன் வீட்டுக்கு.
  மீண்டும்  சாப்பாடு பற்றிய குறிப்புகளோடு வந்த பெண்ணின் பெயரைக் கவனித்தாள்
பரிபூர்ணா அனந்தன்.
 தனக்கு வேண்டும் மெனுவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் வேலையில்
சென்னைக்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துக் கொண்டாள்.
சாப்பிட்டுப் படுத்ததுதான் தெரியும்
திடீரென்று ப்ளேன்  ஏர் பாக்கெட்டில் விழுந்து எழுந்ததில் விழித்தாள்.
 அந்தப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்லி, அட்லாண்டிக்
காற்று வேகம் அதிகம் அம்மா.  பொறுத்துக் கொள்ளூங்கள்
என்று சொல்லும்போதே விமானம் மீண்டும் குலுங்கியது.
நிலை குலைந்த ஞானம் பக்கத்து தடுப்பில் மோதியதில் தலையில்
சிறிய அடியும் கீறலும்.
பதறிப் போன  பூர்ணா, உடனே பக்கத்தில் உட்கார்ந்து,
ஞானத்தை அணைத்துக் கொண்டு முதல் சிகித்சை செய்தாள்.

ஏன் மா இவ்வளவு அக்கறையோடு செயல் படுகிறாயே
  அடிக்கடி இது போல ஆகுமா என்றவளுக்கு
முதல் தடவையாக,
 தமிழில் பதில் சொன்னாள் அந்தப்
பெண்.  என் அம்மா உங்களை மாதிரியே இருப்பார் மேம்.
 எனக்குதான் கொடுத்து வைக்கவில்லை.
 மனம் கசிந்தது ஞானத்துக்கு.
சென்னை இறங்கும் நேரமும் வந்தது.
 தலையில் அடிபட்ட வலியில் , உடல் தன் வசமில்லாதது போல உணர்ந்த
ஞானம் தனக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டாள்.
 சட் சடென்று ஏற்பாடுகள் நடக்க பூர்ணாவின் துணையோடு சென்னை நிலையத்தில் தன் மகன்
சங்கரிடம் வந்து சேர்ந்தாள்.
 விடைபெற வந்த பூர்ணாவிடம் லண்டன் முகவரி வாங்கிக் கொண்டாள்.
தன் மகன் மகேஷின் ஈமெயில் ஐடியும் கொடுத்து
 தன்னுடைய  மீள் வருகையின் போது  வந்து பார்ப்பதாகச் சொல்லி
விடை பெற்றாள்.
வீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சி, மருமகள் சமையலை அனுபவித்து
அயர்ந்து உறங்கி விட்டாள். மகேஷ் நினைவு வந்ததும் ,
ஃபேஸ் டைமில் அவனை அழைத்து தன் பிரயாண விவரத்தை
சொல்லும்போது பூரணா நினைவு வர , அந்த அன்பை மிக மெச்சி அவனிடம்
சொன்னாள்.
   அது அவர்கள் கடமை  அம்மா. அந்தப் பெண்ணுக்கு எழுது
என்று வேறு பேச்சு ஆரம்பித்தான்.
  ஞானம் மனம் சுறுப்பாகச் செயல் பட்டது.
இது நிறைவேறினால் முதல்  காணிக்கை லண்டன் வினாயகருக்குத் தான் என்று முடி
போட்டாள்.
 அவர் காதில் விழுந்து விட்டது போலிருக்கிறது.
மகனிடம் இருந்து ஃபோன் கால். அம்மா ப்ரிடிஷ் ஏர்வெசில் நீ
   நழுவவிட்ட பார்சல் ,எனக்கு அனுப்பப் படுவதாக
ஒரு பெண் சொன்னார்.
நீ அதைப் பார்க்கவில்லையா என்றான்.
 ஆஹா ,கைப்பயில் வைத்திருந்த பச்சை ப்ரேஸ்லெட் டா அது.
நான் திண்டாடிக் கொண்டிருந்தேன்.
கவலைப் படதேம்மா பத்திரமாக வந்துவிடும்.
 ப்ரேஸ்லெட்டும், அதைக் கொண்டு வந்து கொடுத்த தமிழ்ப் பெண்ணும்
மகேஷுக்குப் பிடித்தது  இன்னோரு விஷயம்.
 அவன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போனது அடுத்த நடப்பு.
சென்னை வந்த ஒரே மாதத்தில், ஞானம் லண்டனுக்குக் கிளம்பினாள்.
அதே ப்ரிடிஷ் ஏர்வேய்ஸ்.
  பயணம் இனிதாக அமைந்தது.
வரவேற்க வந்திருந்த பரிபூரணாவையும், மகேஷ்  மற்றும் சம்பந்தி ஆகப் போகும்
  அனந்தன். கண்களால் அணைத்துக் கொண்டாள்.
 எளிதாக இனிதாக வினாயகர் முன்னிலையில்
திருமணம் நடந்தேறியது. வாழ்வின் இன்னோரு கடமையை முடித்த ஞானம்
சென்னை திரும்பினாள். சுபம்.