Blog Archive

Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Tuesday, February 05, 2008

துளசிதளம்


துளசி இலைகளின் பெருமைகளை உறவினர் எடுத்துச் சொல்ல கேள்விப்பட்ட விஷயங்கள்.
தினம் இரண்டு இலை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம்.
குழந்தைகளின் நுரையீரல் சுத்திகரிக்க,கபம் கட்டினால் அதைப்
போக்க,
வாய்,பற்கள் சுத்தத்திற்கு என்று பலவிதமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
அவர் துளசியைப்பற்றி இவ்வளவு விவரம் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது.
அதுவும் இன்று போன் செய்து எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, 'துளசி வீட்டில இருக்கோ?' என்றும் கேட்டார்.
நானும் அம்மா பாட்டி காலம் தொட்டு துளசி மாடம் வைக்கிறதும் கோலம் போடுவது விளக்கேற்றுவதும்
வழக்கம்தான் என்று சொன்னேன்.
அவருக்குத் தெரியுமா நம்ம வீட்டில பல வகைத் துளசிச் செடி சேகரிப்போம் என்று:))
இப்பவும் திருப்பதி திருமலை போய் வரும் போதும் கிருஷ்ணதுளசிச் செடி வாங்கி வந்தோம்... அதெல்லாம் அவரிடம் சொல்லவில்லை.
புத்திமதி சொல்ல வருபவரிடம்,பெருமை பீற்றிக் கொள்ள முடியுமா:)
இல்லை, இந்த அம்மா துளசி,கிருஷ்ண துளசி போலவே கோபால் துளசி ஒருத்தரை எங்களுக்குத் தெரியும்னோ,
சொல்லலை.
இங்கே இப்போது சொல்கிறேன்
அவரும் இன்று இந்த ஃபெப்ருவரி ஐந்தாம் தேதி பிறந்து....இத்தனை வருடங்களாகத் தமிழில் ,நல்ல தமிழில் நல்ல விஷயங்களை இணையத்தில் சொல்பவர்.
நகைச்சுவை நாயகி,
பின்னூட்ட அரசி நம்ம துளசிக்கு இன்னிக்குப் பிறந்தநாள்.
அவரும், அவரது மறுபாதியும் ,மகளும் ஜிகேயும் அவரது நண்பர்களான நாமும் நீண்ட நெடுங்காலம் நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஹேப்பி பர்த்டே துளசி.
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

Saturday, November 03, 2007

பிரிந்தோம் சந்தித்தோம்...2

முந்தைய பதிவில் கணினி உடல் நலம் இல்லாமல் போனதை எழுதினேன்.
இவ்வளவு சங்கடப் பட வேண்டிய அவசியம் என்ன.
நிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய மருத்துவத்தைச் செய்தால் போச்சு.
இத்தனை பதட்டம் இருந்தால் மூளை செயல் பாடு குறையும்னு தான் தெரியுமே.
அதான் டாக்டர் ஷ்ஆலினி தினம் சின்ன மூளை, பெரிய மூளை, எப்படி எமோஷன்ஸ் கட்டுப்படுத்தறது எல்லாம் சொல்றாங்களெ
இதைத்தவிர வேளுக்குடி திரு .கிருஷ்ணனின் பகவத் கீதா சாரம் வேற கேட்டாகிறது.
அப்போது கூட ஒரு டிடாச்மெண்ட் வரலை என்றால் வயசாகி என்ன பயன்.

த்சோ த்சொ(இந்த வார்த்தைகள் கூட மத்தவங்க எழுத்திலிருந்து எடுத்ததுதான்:))) )
என்று தலையைத் தட்டி யோசித்தேன்
இந்த உணர்ச்சி பூர்வமான பந்தம்,வருவதற்குக் காரணம் உண்டு.
''எம்ப்டி நெஸ்ட் சிண்ட்றோம்'' கேள்விப் பட்டு இருப்பிர்கள்.
அந்த மாதிரி ஒரு நாள் ,,
நம்மோடு அதுவரை இருந்த குழந்தைகள் அவரவர் பொறுப்புகளைக் கவனிக்க வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.
எனக்கென்று தனிப்பட்ட வேலை ஒன்றும் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் உடல் நலம்
காரணமாக
விட்டாச்சு:))
நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன??
யோசிக்கையில் சின்ன மகனுக்குத் தோன்றியதுதான் இந்தக் கணினி வாங்கும் யோசனை,.
இப்போது புரிந்திருக்கும் எனக்கும் இந்த அழகான அற்புதமான கணிப்பொறிக்கும் உண்டான நட்பு.
இது எனக்கும் வெளி உலகத்துக்கும் என் உறவுகளுக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தது.
இதுவரை கேள்விப் பட்டிராத இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
கடந்த மூன்று வருடங்களாகத் தமிழையும் கொடுத்திருக்கிறது.
சொந்தக் கதை முடிந்து இப்போது வெள்ளிக்கிழமை விவகாரத்துக்கு வருவோம்.
காப்பி குடித்த கையோடு மேஜையருகில் வந்து மீண்டும் ஒரு தடவை ஆரம்பித்தேன்.
திடீரென கணினி பின்புறம் இருக்கும் ஒயர்களை ஒழுங்கு படுத்தலாமே,
ஒரு வேளை ரிப்பேர் செய்பவர் வந்தாலும் இடம் சுத்தமாக இருக்கணுமே:((
மேஜையைத் திருப்பி யுபிஎஸ் ப்ளக்கை எடுத்து விட்டு , தூசியெல்லாம் தட்டி மீண்டும் ப்ளக்கைப் பொருத்திக்
கணினி முன்புறம் வந்தால்...ஆஆஹா!!!
மானிட்டர் ஆன் ஆகிவிட்டது.
All it needed was a complete restart !
கதை முடிஞ்சுதுப்பா.
அதுக்கப்புறம் உடனே போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டேன் படங்களை.
கொஞ்ச நேரம் பிடித்தது.
ஆனால் மறுபடி கீபோர்ட்,நான் ,மானிட்டர்,தமிழ்.
போதும்.
செலவேதும் வைக்காமல் ஒரு குட்டிப் பிரச்சினை, பெரிதாகாமல் தீர்ந்தது.
நன்றி என் கணினிக்கு.
என் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)
நான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??
ஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.
என்ன செய்வது.
கணினி என் சாஃப்ட் கார்னர்:))))

பன்னிரண்டு மணி நேரம் பிரிவு

மன அலைபாயாம இருக்க எத்தனையோ விதமான ஸ்ட்ரெஸ்மேனேஜ்மெண்ட் வழிகள் வந்துவிட்ட நிலையில்,
வயசான காலத்தில் கிருஷ்ணா,ராமானு இருக்காமல்,
இமெயிலில் ஆரம்பித்து, பேரனோட முகம் பார்ப்பதற்காகக் கணினி வாங்கி, பீச்சோரமா இருக்கிற அப்போதைய விஎஸென் எல் லில் கணக்கு ஆரம்பித்து, மாசம் மாசம் பணம் கட்டி ஈமெயில் அனுப்பறத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருந்து(ஏனெனில் மோடம் வேகம் எடுக்க அத்தனை நேரம் ஆகும்):)),

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மோடத்தை நிறுத்தி விட்டு, மத்தவர்கள் யாராவது வீட்டுக்குப்போன் செய்தால் போன் எடுக்கணும் இல்லையா, அதற்காக
இமெயில் +கணினியை நிறுத்தி வேற வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுத் திருப்பி ஒரு மணி நேரம் லாகின் செய்து, பாஸ்வேர்ட் மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டு,(ஒரு எழுத்து மாறினால் கூட படு சிரமம்)
இந்தப் பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றம்.

சின்னக் கணினி,கறுப்பு வெள்ளை திரை மாறி பெரிய ஸ்க்ரீன்,கலர் கலராக வந்த போது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம்.
பிறகு வந்தது விண்டோஸ் எx பி& ஏடிஎஸெல்.
தமிழ்மணம்,தேன்கூடு,இ-கலப்பை,இணையம் தமிழில்.
நண்பர்கள்.
இந்தச் சரித்திரத்தில் சில சமயங்கள் தடங்கல்கள் வந்திருக்கின்றன.
நிபுணர்கள்(!!!) வந்து 6,7 மணிநேரம் உட்கார்ந்து சரிசெய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.அது அந்தக் காலம். விண்டோஸ் 95 போய் 98 வந்தது. இன்னோரு தடவை
சங்கடம் வந்த போது இப்போதைய எக்ஸ் பி நிறுவியாகி
விட்டது.

சரிப்பா முன்னுரை முடிந்துவிட்டது. இப்ப, தலைப்புக்கு வரலாம்:))
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த கணினி வண்டி, திடீர் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
பத்துமாதம் வெளியூர் சுற்றிவிட்டு வந்து , on செய்ததும் உடனே இயங்க ஆரம்பித்த என் உயிர்த் தோழி,
...என்ன பேரு வைக்கலாம்:))
இப்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு(நான்) மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தால் கணினி மானிட்டர் திரை(?) திறக்கவில்லை. அதல பாதாளத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு..

பதிவு போடாட்டாலும் போகிறது. பின்னூட்டமாவது போடலாமே. யார் என்ன எழுதினார்கள் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)

மாலை ஏழு மணியிலிருந்து ஸ்விட்ச் ஆன் செய்யறதும் ,காத்திருந்து ஸ்க்ரீன் வராமல் ஆஃப் செய்யறதும்,
லஸ் பிள்ளையார்,அதுதான் கம்யூட்டர் மானிட்டர் மேலே படத்தில இருக்காரே
அவர்கிட்ட சொல்றதும், பசங்க பேசும்போது சுரத்தில்லாமல் இருக்கிறதும்,
அம்மாக்கு உடம்பு முடியலையானு அவங்க மீண்டும் கேக்கறதும்,
உடனே சிங்கம்,
''கம்ப்யுட்டர்ல ஏதோ கோளாறுப்பா, அம்மா கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கிறா''
அப்படினு மெசஜ் கொடுக்க,
''ப்பூ இவ்வளவுதானா. காலைல யூ கான் கால் சம்படி அண்ட் ரிபேர் இட்'' ணு
அவங்க போனை வச்சாச்சு.
பத்து மணி வரைக்கும் இருபது தடவை இதே ரொடீன்.
படுக்கப் போகும்போதும் எப்படியாவது காலையுஇல் சரியாகிவிடும். ஒரு வேளை மின்சக்தி பிரச்சினையா இருக்கலாம். யு பி எஸ் தகறாரோ என்னமோ.
எப்படியிருந்தாலும் கணினி ரிப்பேர் சர்வீஸைக் கூப்பிட்டுச் சரி செய்துடலாம்.
என்ன பரவாயில்லை. ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.
கோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,
மெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.
ஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.
இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு சமாதானம் சொல்வது போல மனசுக்குள் சொல்லியபடியே தூங்கியாச்சு.
சரியா காலை நாலரைக்கு முழிப்பு வந்ததும்முதல் நினைவு ஐயோ கம்ப்யூட்டர் வராதே என்பதுதான்:)))
தேவையா இந்த நிலைமை.???


பின்குறிப்பு...
அடுத்த ''ஃபாலோ அப் '' பதிவைப் பத்தே வரிகளில் முடித்துவிடுகிறேன்.:))