![]() |
| Add caption |
| Add caption |
அன்பு
துளசி,
இந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும்,
அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.
அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.
இரண்டாவது, நல்ல வார்த்தைகள் நிறைந்த பின்னூட்டங்கள் அளித்து ஆயிரம் பதிவர்களுக்கு நூறு பதிவுகளாவது எழுத உற்சாகம் அளித்தது.(நானும் அதில் ஒன்று)
மூன்றாவது வரலாறொ, கோவில்களோ, பயணங்களாகவோ இருக்கட்டும். முன் ஏற்பாடாகவே எல்லா இடங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்து , ஒரு சின்ன தவறு கூட இல்லாமல், ஒரு பதிவைப் போட எடுத்துக் கொள்ளும் கண்ணியம்.
தனக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்குப் பதில் அளிக்கும்போது காட்டும் மரியாதை,வரவேற்பு... இதெல்லாம் படித்து அதையே பின்பற்ற என்னைப் போன்றவர்களை , வழிநடத்திய பாங்கு. , எழுத்துப் பிழை,சொல்பிழை எது இருந்தாலும் எடுத்துக்காட்டும் அன்போடு எடுத்துக் காட்டித் திருத்தும் ஆசிரியை..
இதெல்லாம் தான் நான் அறிந்த துளசி கோபால். நியூசிலண்டின் வரலாற்றுப் பக்கங்களிலும் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண். அங்கே 13 வருடங்கள் சமூக சேவையில் ஒரு தன்னார்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஒரு நல்ல குடும்பத்தலைவி. கனிவு உள்ளம் காரணமாகவே அநாதையாக்கப் பட்ட பூனைகளையும் நாய்களையும் அடைக்கலம் கொடுத்துப் பேணிய நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர். .
இன்னும் எழுதலாம். எல்லாம் உண்மையாகவே இருக்கும் .
ஆனால் மிகையாகப் புகழ்ந்த மாதிரி துளசி எடுத்துக் கொண்டுவிட்டால், நன்றாக இருக்காது.
அதனால் அன்புத் துளசி, உங்கள் உழைப்புக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். அதற்குத் துணையிருக்கும் திரு.கோபாலுக்கும் ,அவரது பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
இவ்வளவு உயரத்துக்குத் துளசி வரவும்,இன்னும் சிகரங்களைத் தொடவும் அவர் ஒரு ஊக்கியாகச் செயல் படுவார். தம்பதிகளுக்கு வாழ்த்து. தளத்துக்கு வாழ்த்து. ஒரு நல்ல பெண்மணிக்கு வாழ்த்து. இப்படிக்கு,

