பாப்பா பாப்பா அழுதியா
ஏன்னு ஏன்னு சொல்லுவியா.
அம்மா மம்மம் கொடுக்கணுமா
பாட்டி கொடுத்தா பரவாயில்லையா
பாலுக்கு அழுதியோ பழத்துக்கு அழுதியொ....
பாப்பா சொல்லும் பதில்
பல்லு வரலியே கடிக்கறது எப்போ
நிக்க முடியலியே, எட்டி எடுத்துக்
கவுக்கறது எப்பொ
இந்தக் கவலை பத்தாதுனு
குக்கர் சத்தம் படுத்தது.
மிக்ஸி ரொம்ப அலறுது.
சத்தமில்லாமப் பழகிட்டேன்
சென்னை சத்தம்னு சொன்னா
பாப்பா என்ன செய்வேன்.
தூங்கப்போகயிலே கீரக்காரன் கத்துவான்
சாப்பிடயிலே பாத்திரக்காரன் கூவுவான்
அதுவும் இல்லன்னால் பக்கெட்டும் பாத்திரமும்
மினிம்மா கையில சண்டைபோடும்.
சுத்தம் சத்தம் பாக்கும் அம்மாவே
சத்தமே போடாத அப்பாவே
எதுக்குப்பா வந்தோம்
ஸ்விஸூக்கு.
சென்னைச் சத்தம் வேணும் மத்தச்
சின்னவங்க சத்தம் வேணும்
அழுற குழந்தயும்
கத்துற நாயும்
சுத்துற ப்ஃபானும்
பாக்கணும்,..
Showing posts with label குழந்தை பாட்டு. Show all posts
Showing posts with label குழந்தை பாட்டு. Show all posts
Tuesday, June 26, 2007
Subscribe to:
Posts (Atom)
முதுமையில் வேண்டும் இனிமை
வல்லிசிம்ஹன் முதுமை சிறப்பு .3 Vallisimhan எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...