Wednesday, February 12, 2025

ஞாபக மறதி

வல்லிசிம்ஹன்



ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!!
ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை.
மறதி வந்தால் நினைப்பதில்லை.
இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்?


வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் 
பாதிக்கின்றன. 
அல்லாதன மனதில் தங்குவது  அதிகம். 
நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ
என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத 
ஆரம்பித்தேன்...........

பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள்
என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள்
வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான்   வேண்டும்:)

பிறகு அவர்களின் திருமணங்கள்.
இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது.

பிறகுதான்  நினைவுகள் தடம் மாறுகின்றன.
தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான்
மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு 
முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துகளும் கணேஷ், செல்வம் , ஆனந்தி , விஜி என்று நிரம்பும்போது. யாருடைய fரண்ட் யார், என்பதில் எனக்குக் குழப்பம் வரும்:)  இவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்த பிறகு இன்னும் அதிகம்.  என்னுடைய மறதியைப் பார்த்து அவர்களே நான் தான் மா விஜய் வந்திருக்கேன். மும்பைல இருக்கேன். இன்னோரு விஜய் லண்டனுக்குப் போயிட்டான் என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்:)இது சுய புராணம்!!!

நினைப்பதும் சில வேண்டாத நிகழ்ச்சிகளை மறப்பதும் மெண்டல் ஹெல்த்துக்கு. மிக நல்லதாம்.  அல்லாத நிகழ்ச்சிகளை. மூளை ஏதோ ஒரு மூலையில் சேர்த்து வைத்து விடுமாம். மன நலம் கெடாமல் இருக்க வேண்டி மறைத்து வைக்குமாம். அப்படி இருப்பதால் தான் நம்மால் பல இழப்புகளிலிருந்து மீள முடிகிறது. 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி  என்றும் இல்லை"

கண்ண தாசன் சொன்ன படி வாழ்க்கையில் எத்தனை நினைவுகளை
மனம் விழுங்கி விடுகிறது! பல  மகிழ் நினைவுகள் உடலையும் மனத்தையும் வளப்படுத்துகின்றன.   நினைவும் மறதியும் என்றும் தேவை. 










இந்தத் தனிமை அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததும்
மறைந்தது.
தன் உயிர் மூச்சே அவர்கள்தான் என்று சொல்லும்படி அளவில்லாத
அக்கறையோடு அவர்களை வளர்த்தாள்.




 

14 comments:

நெல்லைத்தமிழன் said...

மறதி வரம். ஆனால் அளவுக்கு மீறும்போது அது சாபம். நெருங்கிய வயதான உறவினர், தன் மகன் மகளுடைய மசங்களையே நினைவில் கொண்டுவரச் சிரம்ப்படும்போது, தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியாதபோது, அது சாபம்தான்.

ஸ்ரீராம். said...

பொதுக்கருத்தாக நிறைய சொல்லி சம்பவக்கதையை இரண்டே வரிகளில் அடக்கி தொடரும் போட்டு விட்டீர்களே...!!

ஸ்ரீராம். said...

மறதி ஒரு வரம்தான். 

நல்ல நினைவுகளே சமயங்களில் துன்ப நினைவுகளாகி விடுவதுண்டு...  

ஸ்ரீராம். said...

ரொம்ப மறதி நோயால் கஷ்டப்படும் சிலர் இப்படி பாடலாம்...!!

"மறக்கத்தெரிந்த  மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா? 
விலகத்தெரிந்த நினைவே உனக்கு
இருக்க முடியாதா?  நினைவே
இருக்க முடியாதா?"

:))

கோமதி அரசு said...

பாடலும் , நினைவு பகிர்வும் அருமை அக்கா.

நினைவும் வேண்டும், சில நேரம் மறதியும் வேண்டும் தான் அக்கா.
மனதை தளர விடாமல் ஏதாவது மனதுக்கு பிடித்தவைகளை செய்யுங்கள் அக்கா.

நல்ல பாடல்களை பகிருங்கள், சாருக்கு பிடித்தது, உங்களுக்கு பிடித்தது என்று.
மனது லேசாகும்.

வெங்கட் நாகராஜ் said...

மறதி பல சமயங்களில் தேவையானதும் கூட.

எனது பெரியம்மா தனது 7-ஆம் வயதில் நடந்ததை எல்லாம் நினைவில் வைத்து கூறுவார்கள். ஆனால் பல நாட்கள் இன்னிக்கு அமாவாசை, பௌர்ணமி என்று எதையோ கணக்கு வைத்து சொல்லி, தலைக்கு குளிப்பார் - முதல் நாளும் இதையே சொல்லியிருப்பார். அவருக்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

எல்லாம் நல்லதற்கே என்று மனதில் முடிவு எடுத்துக் கொள்கிறேன் நான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா, நலமுடன் இருங்கள். நீங்கள் சொல்வது
உண்மைதான்.
அது போல இரண்டு வயது முதிர்ந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். மனம் அவ்வளவு வேதனைப் பட்டது.
இன்னோரு பாட்டி, தன்னை மறந்த நிலையில் வீட்டை
விட்டு வெளியே போய்
வேறு யாராவது பார்த்தால் வீட்டுக்கு அழைத்து
வருவார்கள். ரொம்ப ரொம்ப சங்க்கடம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

ஏற்கனவே எழுத ஆரம்பித்த டிராஃப்டில் இதை எழுதி விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல நினைவுகளே துன்பமாவது நடப்பதுதான்.
நம் கையில் தான் அந்த மாற்றம் நிகழாமல்
தடுப்பது இருக்கிறது. டிமென்ஷியா போன்ற நிலையில் எதையும் மாற்ற முடியாமல் போகும். இறைவன் காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல பாட்டே எழுதிவிட்டீர்களே ஸ்ரீராம்.
விலகத் தெரிந்த மனமே
உனக்கு பழகத் தெரியாதா:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
நல்ல நினைவுகளை மனதில் நிறுத்தி அல்லாததை மறக்கத்தான்
வேண்டும்.

யாருமே அருகில் இல்லாதது போன்ற உணர்வுதான் அனைத்து
துன்பங்களுக்கும் காரணம்.

உங்களைப் போன்ற அன்புத் தங்கை கிருக்கும் போது
நினைவுகளைப் பேசியாவது அகற்றலாம்.

ஆமாம் நல்ல பாடல்கள் கேட்கிறேன்.
அதைப் பதிவில் ஏற்றுவது நல்ல யோசனை. நன்றி மா.
என்றும் வளமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,
என்றும் நலமுடன் இருங்கள்.

''மறதி பல சமயங்களில் தேவையானதும் கூட.

எனது பெரியம்மா தனது 7-ஆம் வயதில் நடந்ததை எல்லாம் நினைவில் வைத்து கூறுவார்கள்''

மிக உண்மை. கஷ்டங்களே அறியாத காலத்து நினைவுகள்
மனத்தில் நிலைக்கின்றன.
என் உறவுப் பெண்மணி,
கணவர் கடைக்குப் போயிருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். கண்முன்
அவர் கணவர் இறந்த நிகழ்வை அவர் மனம் ஏற்கவில்லை.
மிகப் பரிதாபம்.
இறைவன் சோதனைகளில் இதுவும் ஒன்று.
வயோதிகம் சில சமயம் கொடுமை.
அன்பு வெங்கட் பெற்றோரின் அருமை உணர்ந்தவர் நீங்கள்.
எல்லாம் நலமாக இருக்கட்டும்.

Anonymous said...

அம்மா, மறதி தேவைதான். சிலவற்றிற்கு. தேவைஅல்லாததை எதற்கு மண்டைக்குள் போட்டுக் குழப்பி....நலல்துமட்டும் வேண்டும்.

நீங்க சொல்றாப்ல எழுதத் தொடங்கி வாசிக்கத் தொடங்கினால் ஃபோக்கஸ்டாக ஒரு வேலை செய்யறப்ப, வேண்டாதவை வருவதில்லை. மனம் பாசிட்டிவாக இருக்கும். இது என் அனுபவமும் கூட

ஆனா பாருங்க எனக்கு எங்கள் வீட்டில் உள்ளவங்களுடைய பிறந்த நாள் கல்யாண நாள் எல்லாம் தெரிந்திருந்தாலும் அன்றைய தினத்தில் வாழ்த்த மறந்துவிடுவேன். அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை.

ஆனால் என்னால் பல சமயங்களில் நினைவாக இருக்க முடியவில்லை. மனம் பல வேலைகளில் மூழ்கிப் போவதால்.....தேதி கூடப் பார்க்காமல் கடந்து செல்வதாலும் இருக்கலாம்!

கீதா

Sethu Subramanian said...

Memory lapse (ஞாபக மறதி) is a natural consequence of getting old. But the lapse is very specific to certain events in life and also with respect to the importance we attach to them. As for time-dependent memory lapse, we have in our brain areas called RAM and ROM (familiar cyber terms). The first time you went to a particular temple in your childhood is still fresh in your memory (it is stored in ROM area). What is the name of the mountain you visited last year in Maine (Cadillac mountain) escaped me when I was narrating that visit to my wife(it was in the RAM area). After several hours that RAM released that name randomly without any prodding or google search, Stange is the behavior of the brain.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...