Blog Archive

Thursday, November 09, 2023

உயிர் மேல் ஆசை...



வல்லிசிம்ஹன்

 மருத்துவமனையில்  இந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்து

அறையை விட்டு வெளியே வராமல் யாரையும் 
பார்க்காமல் இருக்க வைத்தார்கள். 

ஒரு வாரம் கழித்து, அவளது சகோதரனுடன்
பேசலாம் என்று அனுமதி தர,
அவள் பேச மறுத்துவிட்டாள்.
அவளைப் பொறுத்தவரை அனைவரும் அவளுக்கு எதிராகச் செயல் படுபவர்கள்.
இது ஒரு விதமான மன நோய்.
தன் தாயையே மனம் போனபடிப் பேசி நோக வைத்திருக்கிறாள்.
இந்த நிலமை மாற மாதங்கள் ஆகும் என்றும்,
அவளை  24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளை அவளுடன் இருக்க அனுமதிப்பது உசிதம் இல்லை.
தகப்பனாருடன் இருக்கட்டும் என்று 
உத்தரவிடப் பட்டிருக்கிறது.

இந்த மன சஞ்சலமும் வெறுப்பும் வெகு வருடங்களாக
அவளிடம் வளர்ந்து, கணவனைப் பிரியக் காரணமாக
இருந்திருக்கின்றன.

நவராத்திரியை ஒட்டிக் கோவிலுக்குப் போயிருந்தபோது
இந்தப் பெண்ணின் கணவனும் குழந்தைகளும் 
வந்திருந்தார்கள்.

மனம் அத்தனை வேதனைப் பட்டது.
இறைவன் தான் இந்தக் குழந்தைகளுக்கு 
ஆதரவாக இருக்க வேண்டும். பெரிய பெண்ணின் 
முகத்தில் சலனமே இல்லை.

அவர்களுக்கும் கௌன்சலிங்க் நடக்கிறது.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.



Wednesday, November 08, 2023

உயிர்




வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

வாழும் வரை. நிறை வாழ்வு அனைவருக்கும். கிடைக்குமா என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களாகக். காதில் விழுந்த
செய்திகள் அலைக்கழித்து விட்டன.

யார் வழியாக வந்தது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.
கணவனிடம். சண்டை. குழந்தை களிடம்  மறைத்து
அளவில்லாத தூக்க மாத்திரைகளை விழுங்கி 
மயக்கம் வரும் அவசரப் போலீசை. அழைத்து   நினைவு இழந்து

   விழுந்திருக்கிறாள்.

 அவர்களுக்குக் குழந்தைகள் மூன்று. ஆம்புலன்சில் வந்த போலீஸ்
குழந்தைகளைத் தெரிந்தவர்கள்
வீட்டில் அழைத்துச் சொல்லி இருக்கிறார்கள் . அனைவருக்கும் அதிர்ச்சி.
24 மணி நேரம் தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாக
உறுதி கொடுத்ததும் போலீஸ் குழந்தைகளை அவர்கள் பொறுப்பில் 
விட்டது.
 
அந்தப் பெண்மணியின் கணவருக்கு  ரெஸ்டிரைனிங்க் ஆர்டர். குழந்தைகள் 
பக்கத்தில் வரக்கூடாது என்று.
 அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு
ஒரு வாரம் சிகித்சை எடுத்த பிறகு
மன நல மருத்துவர் முழு அனுமதி கொடுத்த பிறகு
வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
அவளுக்குக் காவலாக அவளது 70 வயது தாயும் ,
உடல் நிலை சரியில்லாத தந்தையும்.

எல்லாவற்றுக்கும் அந்தப் பெண் சொல்லும் ஒரே
பதில் என் வளர்ச்சியை, முன்னேற்றத்தை 
யாருமே விரும்பவில்லை என்பது தான்.

அந்தப் பெண்ணின் தொழில் சைக்கியாட்டிரிஸ்ட்.

இனி அவளால் அந்தத் தொழிலைத் தொடரமுடியுமா என்பது சந்தேகம்.
   தொடரும்.