Showing posts with label உலகம் சிறியது. Show all posts
Showing posts with label உலகம் சிறியது. Show all posts

Wednesday, March 07, 2012

பூக்களின் மொழி

வெள்ளை மனம் அதனுள் இன்பத்தேன்
அழகும்  அடக்கமும்
பட்டாம்பூச்சிப்  பூ

என்ன வேண்டும் எனக்கு
அன்பெனும் ஒளி

இந்த  வண்ணப் பூந்தோட்டத்துக்குப் போய் வந்து ஐந்து வருடங்கள்
ஓடிவிட்டன.
எப்பொழுதும் பற்றிக் கொள்ளும் அவசரம்.
காணச் சென்றவர்கள் நானும் பெண்ணும் கணவரும் குட்டிப்பாப்பாவும்.
அதுவும் மலர்களோடு மலராக   தள்ளுவண்டியில் வந்தது.
சிங்கத்துக்கு அங்கிருக்கும் எல்லா வண்ணங்களையும் அள்ள ஆசை.
எனக்கு எல்லாவற்றையும் காமிராவில் அடைக்க அவசரம்.
பெண்ணுக்குப் பிள்ளையின் பசி  பற்றிய அவசரம்.

கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு அமைதியும்
கொடுத்த மலர்களை மீண்டும்
புரட்டிப் பார்க்கிறேன்.

வாழ்க்கையையும் இப்படித்தான் கடந்து வைத்திருக்கிறேன்.

சோகங்களை   நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.
போர்வைக்குள்  ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.
வெய்யில் சுரீர்  என்று   உறைத்தால்
புலன்கள் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போது
மற்றவர்களின்    வாழ்விலும் துன்பம் வரும்போது

கூட்டிலிருந்து  வெளிவருகிறது  அழுக்கு நீங்கிய  பட்டாம்பூச்சி..
அனைவருக்கும் ஆரோக்கியம் கொடு தேவா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, July 24, 2008

கிளம்பியாச்சு எக்ஸ்ப்ரஸ்:)

இது ஸ்விஸ்.





இது துபாய். இது சென்னை.
துபாயை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்தாச்சு.
பாப்பாவை விட்டு விட்டு ஊருக்குப் போகணுமே என்கிற வருத்தம்.
என்னவோ நானே பெற்ற பெண்ணென்று நினைப்பு. அவளுடைய(பேத்தி)
அம்மாவிடம் ஏகப்பட்ட புத்திமதி சொல்லி விட்டு பொட்டிகள் நாலையும் கைப்பெட்டிகள் ரெண்டையும் தூக்கிப் போட்டுக் கொண்டு,
விமான நிலையத்துக்கு விரைந்தோம். பெரியவன் முடிந்தவரை அறிவுரைகள் சொல்லியபடி வந்தான். எங்க நடந்தாலும் பார்த்து நடம்மா. ஸ்பெஷலா இந்த எலிவேட்டெர், ஓடற வேகத்தில பொட்டி தடுக்கி விழ வாய்ப்பு இருக்கு....இப்படி அவன் சொல்லச் சொல்ல தூக்கக் கலக்கத்தில் மண்டையை
சரி சரி என்று ஆட்டியபடியே வந்துவிட்டேன்.
இமிக்ரேஷன் வந்தாச்சு தலை ஆட்டறதை நிறுத்திட்டு, அவனுக்கு பைபை சொல்லு என்று சிங்கத்தின் குரல் கேட்டது. அடப்பாவமே தகாப்பன் சாஅமி ரோல் எடுத்துண்டவனுக்கு வரேன்பா ன்னு கூட சொல்லலீயே என்றூ வேகமாக யாரையோ பார்த்து கையசைத்து விட்டு,
ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் ஏரியா வந்ததும் கால்கள் தாமாக நின்றன. இவர் தனக்கு வ்வேண்டும் எகிறதை வாங்குவதாகச் சொல்லி எங்கேயும் பார்த்துக் கூட்டத்தில தொலைஞ்சுடாதேனு அருமைய சொல்லி விட்டு அடுத்த கடைக்குப் ஓனார். நானும் தங்கம் விற்கும் கடை பக்கம் கண்ணால் மேய்ந்தூவிட்டுத் திரும்பும்போது வேகமாக ஓடின ஜப்பான்காராரோட பெட்டியும் என் பெட்டியும் சந்தித்துக் கொள்ள, ஒரே இடத்தில தயாரான பாசமோ என்னவோ!!
அடுத்த வினாடி நான் கீழே.அடச்சே என்று ஆகி விட்டது.
இப்படிக்கூடவா ஒரு முழங்கால் சதி செய்யும்???
பத்தாயிரம் பேர் நடமாடுகிற இடத்தில் ஒரு வயசான அம்மா விழுந்தால் என்ன நடக்குமோ அத்தனையும் நடந்தது.:)
அடி ஒண்ணும் இல்லை கோபம்தான் எனக்கு, அந்த ஆளை நாலு நல்ல வார்த்தையினால் திட்டலாம் என்றால் அவன் ஜாக்கிச்சான் ரேஞ்சில் படிகளி நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
இந்தக் கூத்து போறாது என்று ,அடுத்த கடையில் சிங்கத்தையும் காணவில்லை.
பகீர்னு பயம். வலி கூடத்தெரியவில்லை. ஸ்விஸ் ஏர் போர்டிங் அனௌன்ஸ்மெந்த் வர ஆரம்பித்தது.
சிங்கத்தை மொபைலில் கூப்பிடலாம் என்றால் என்னிடம் மொபைல் இல்லை.
வழியோடு போய்க்கொண்டிருந்த ஒரு சமர்த்தாகத் தெரிந்த பையனிடம் அப்பா
என் பையனிடம் பேச வேண்டும், உன் கைபேசி கொடுக்கிறாயா என்று கேட்டதுக்கு அவன் பயந்து ஓடி விட்டான்.
இப்படியும் நடக்குமா கடவுளே, ஆஸ்போர்ட் டிக்கட் எல்லாம் அவர் கையில் இருக்கு எங்அ போனார்னு தெரியலையே, ஆஞ்சனேயா என் ராமனை நீதான் தேடணுமென்று புலம்பிய படி
மேலே போகும் எஸ்கலேட்டரில் ஏறி அங்க டிபார்ச்சர் கேட்டில் என்னைத் தேடுகிறாரோ என்று போஒனேன்பா.
அங்க சத்தமாக ,அம்மாவைக் காணோம்பா. ஐ லாஸ்ட் ஹெர், ஒரே டென்ஷன்'' என்று சிங்கத்தின் குரல் கேட்டது.
நான் கையை ஒரு நரைத்த தலை தெரிந்த திக்கில் ஆட்டினாலும் அவர் என்னைப் பார்த்தால் தானே.
பேர் சொல்லிக் கூப்பிடவும் கூச்சம்.:)
திரிசூலம் கேஆர் விஜயா மாதிரி அழக் கூடத் தோன்றவில்லை.
என்னன்ங்கனு சொல்லப் பழக்கமும் இல்லை:)
சட்டென்று திருப்பிப் பார்த்து விட்டார்.
சட படன்னு கையையும் பொட்டியையும் இழுத்துக் கொண்டு கேட்டை நோக்கி விரைந்தார்.
பரிதாபமாக இருந்தது.
எப்படியொ ஸ்பெஷல் வாயில் வழியாக அந்த ஸ்விஸ் செக்யூரிடி எங்களை பிளேன் வரை போஒகும் பஸ்ஸில் ஏற்றீ விட்டார்.
ஏற்கனவே வந்து விட்டவர்கள் எங்களைக் கொஞ்சம் வினோதமாகப் பார்க்க,
நாங்களும் எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்.
இனிமே என் கண்ணை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகாதே என்று ஒரு கச்சிதமா சொல்லிவிட்டு இவர் ஆழ்னிலைத் தியனத்தில் இறங்கி விட்டார்.
அப்புறம் பார்த்தால் இன்னும் பத்துப் பேர்கள் எங்களை விட தாமதமாக வந்து கோண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் என்னைத் தடுக்கியவர்:)




முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...