Blog Archive

Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Monday, January 24, 2011

காதல் என்பது காதல் மட்டுமா

நேற்று ஒரு நல்ல  படம் பார்க்க  வாய்ப்பு   கிடைத்தது.  முழுவதும் துபாயில் எடுக்கப் பட்ட படம் என்று   முன்பு    கேள்விப்பட்ட  நினைவு.  பாடல் களின் இனிமையால்  மக்களை மகிழ்வித்த ஆர்.டி. பர்மனின்   நினைவுக்குச் சம்ர்ப்பண்மாக எடுக்கப் பட்ட   படம். அவர்கள் பாடல்களை  வைத்தே  கதையை நகர்த்திச் சென்ற     அழகு   என்னை வெகுவாகக் கவர்ந்தது.
   ஒரு குத்துப்பாடல் இல்லை. ஒரு  அளவுக்கு மீறின  படுக்கை அறைக் காட்சி இல்லை.    நெளியாமல் நகராமல்  பார்க்க முடிந்தது:)

இந்தப் படம்  பார்த்ததின்  தாக்கம்   இணையத்தில்  பழைய பாடல்களைத் தேடிக் கேட்டதில்  மனதுக்கு ஒரு    நிம்மதி.
என் வயது   ஒத்தவர்கள், அநேகமாக வானொலி, ரேடியோ சிலோன்,பிற்பட்ட நாட்களில் சென்னை அலை வரிசையின்  வர்த்தக ஒலிபரப்பு கேட்டே வளர்ந்தோம்.
பாட்டின் இசை,இனிமை மட்டும் மனதில் தங்கிவிடும்.
பிறகு வந்தது தொலைக் காட்சி.
  பிடித்த தமிழ்ப் படத்தை வரிசைப் படுத்த ஆரம்பித்தால் அது   அநேகமாக  முடிவில்லாமல்   போகும்.
அதனால்  சில இந்திப்படங்கள்  அதுவும் நல்ல பாட்டுகளுக்காகவும்,கதைகளுக்காகவும்,  நடிப்புக்காகவும்  நான் தேர்வு செய்த படங்கள்.
  இது என், என்னுடைய மட்டும்  தேர்வு. அநாமிகா,ஆராதனா,ஆவாரா,சுப்கே சுப்கே,ஆந்தி மற்றும் தேவ் ஆநந்தின் சில படங்கள்,மதுபாலா,ராஜ்கபூர்,ஷம்மி கப்பூர்  இப்படி  எத்தனை தடவை கேட்டாலும் ,பார்த்தாலும் சலிக்காத  படங்களின் பாடல்கள்.
ரொம்பக் கர்நாடகமாகத் தெரியும்:)

இங்கே  இந்தப் பாடல்களை ஒரு இடுகையாக எழுதக் காரணமும்  எழுந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்   ஒரு பதிவு ,ஒரு குடிப்பழக்கத்தினால்  கடை நிலைக்கே போய்   ,மீண்ட குடும்பத்தைப்  பற்றி எழுதி இருந்தேன்.
  சிறு  குழப்பம்  அங்கே. என்னதான் பழக்கத்தை விட்டுவிட்டாலும் கண்வன் ,மனைவியரிடையே  பழைய பரிவும் காதலும் வராமல் ஏதோ அவர்களைத் தடுத்தது.
  இது போலவே சென்றால் மீண்டும் பழய நிலை வந்துவிடும் என்கிற    பயமும் ஒட்டிக் கொண்டு இருவரும் தவித்தார்கள்.

இந்த நிலையில் தான்    குடும்பத்தின்   முந்நாள் நண்பர்    தன் சொத்துகளைப் பிரித்து  உயில் எழுதும்போது, தன்    இசைத்தட்டு  கலெக்ஷன்  அத்தனையும்
ஒரு    இருநூறு பாடல்கள்    இருக்கலாம்.
பழைய நாளைய  ரிகார்டிங்   அமைப்பில்  அமைந்த  இசைத் தட்டுகள். அவைகளைக் கேட்க   70களில் வாங்கிய   ரேடியோ க்ராம்!
  நம்ப முடியாத  கண்களுடன் இந்தப் பொக்கிஷத்தை இருவரும் பார்த்ததாக  எனக்குப் பிறகு செய்தி வந்தது. 
அதற்குப் பிறகு நடந்துதான் இன்னும் திரைக்கதை போலவே இருந்தது.   பலத்த வாக்கு வாதத்துக்குப் பிறகு முதலில் கேட்ட பாடல் ''யாதோன் கி பாராத்''!  :0)

வரிசையாக  மேரே சப்னோன்கி ராணி, பாகோன்  மே சலி ஆஆஆஆ:0)
இப்படித்தொடர்ந்ததாம் அவர்கள் மீண்டும் காதல்கதை.

இப்பவும் மூட்  அவுட் '' அப்படி இப்படி என்று சின்னச் சின்ன  தகறாருக்கெல்லாம் கூட சிடுவேஷன் சாங்க் போடப் பெண்ணும் பழகிக் கொண்டு விட்டாளாம்.

அமீரகம் வரை  வந்த இதமான   பாடல்கள்,அவர்களுக்குக் கொஞ்சமாவது மாற்றம் கொடுத்திருப்பது  எனக்குச் சந்தோஷமே.
அமீரகத்தில் கிடைக்காத பாடல்களா  என்று தோன்றிய்து    எனக்கு.

 இருந்தாலும் அவர்களின் அருமையையும், உள்ள அன்பையும் உணர்ந்த ஒருவர்  கொடுத்த  பரிசு  உண்மையிலியே    பயன் பட்டிருக்கிறது.இசையின் பெருமைக்கு   என்ன பெயர் வைப்பது!  மியூசிக் தெரபி??

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Friday, August 20, 2010

இரவு போய் பகல் வந்தது

.
 என்ன செய்வதென்று யோசித்தபடியே மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு


மார்க் மற்றும் மனைவி, இரண்டு அழகுக் குட்டி தேவதைகளைப் போல

பெண் குழந்தைகள் எல்லோரும் நீண்ட பயணத்தை முடித்த களைப்போடு,வெளியே

வந்தார்கள்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாண சீதோஷ்ணத்துக்கும் சென்னையின்

உஷ்ணத்துக்கும் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அவர்களுக்கு.



என் நீண்ட நாள் பழக்கத்தினால் உரிமையோடு பழகுவான்.

''ராக்ஸ்'(என் பெயர் ராகவன்) எங்களால் இன்று எங்கும் வர முடியாது.

நாளையும் என் சம்பந்தப் பட்ட எல்லா சந்திப்புகளையும்

ஒத்தி வைத்துவிடு.

வயிறும் சரியில்லை. வீ நீட் டோட்டல் ரெஸ்ட்'' என்றபடி அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த



வண்டியில் ஏறிச் சாய்ந்து கொண்டான். அவன் மனைவியும் என் முகத்தில் தெரிந்த கேள்விகளைப் புரிந்தவள் போல,

அவர் சாப்பிட்டது ஏதோ ஒத்துக் கொள்ளவில்லை.

ஹி ஷுட் பி ஓகே டுமாரோ. சாரி ராக்ஸ். உங்களூடன்

சாயந்திரப் பொழுதை இனிமையாக உங்கள் மனைவியுடனும் சேர்ந்து

கொண்டாட நினைத்திருந்தோம்.'' என்றாள்.

எனக்கு அப்போதுதான் மார்க் அனுப்பியிருந்த வாழ்த்துகள் நினைவுக்கு வந்தது.

அதைக்கூட ஜானுவிடம் சொல்லவில்லையே என்று என்னையே நொந்து கொண்டேன்.





அவர்கள் வண்டியைத் தொடர்ந்து என் வண்டியைச் செலுத்தியபடி ட்ரைடெண்ட் ஹோட்டலை.

வந்தடைந்தேன்.

மார்க் குடும்பத்தின் ,அறையில் அவர்களை அமர்த்திவிட்டு,ஏதாவது உதவி தேவையா என்று கேட்க ஆரம்பிக்கும்

போதே ஹெதர், மார்க்கின் மனைவி,தன் பெட்டியைத் திறந்து அழகான (பொம்மை)

ஸ்விஸ் வீடு ஒன்றை என் கையில் கொடுத்தாள்.

ம்ம். ஓப்பன் இட் '' என்ற அன்புக் கட்டளையோடு.

திறந்ததும் ஜானுவுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படப் பாடல் எடெல்வைஸ் '' பின்னணியில் ஒலிக்க இரு சிறுவர்கள் சுழலுவது போல அமைந்திருந்த அந்தப் பரிசை பார்த்தவண்ணம் இருந்தேன்.



நீ ஒருதடவை சொல்லி இருக்கிறாய் ராக்ஸ். உன் மனைவிக்கு சவுண்ட் ஆஃப் மியுசிக்

படம் மிகவும் பிடிக்கும் என்று. நேற்று சூரிக் ஏர்போர்ட்டில் இதைப் பார்த்ததும் ஹெதர்

தனக்கும் உன் மனைவிக்கும் என்று இரண்டு வாங்கிவிட்டாள்.'' என்று

அந்தக் களைப்பிலும் சிரித்தபடி மார்க் சொன்னான்.



அறுபது ஒரு நல்ல வயது. வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கும் சமயம். கடமைகள் முடிந்து

நமக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும் இல்லையா ராக்ஸ்'' என்ற ஹெதரை நன்றியுடன் பார்த்தேன்.



நாங்கள் வார முடிவில் அவளைப் பார்க்க வருகிறோம்.

நீ இப்போது கிளம்பு. நல்ல பொக்கே வாங்கிக் கொடுத்தாயா' என்று கண்சிமிட்டினான் மார்க்.

பதில் சொல்ல முடியாமல் தலை ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

பிறகு எல்லாமே வேகமாக நடந்துவிட்டன. வீட்டை அடைவதற்கு முன்

நல்ல பூங்கொத்து ஒன்றையும், ஜானுவின் ஆல்டைம் ஃபேவரிட் சோன்பப்டி ஒரு பெட்டியும்

வாங்க நான் மறக்கவில்லை.

வீட்டை அடைந்த போது மதியம் 12 ஆகியிருந்தது.



சாப்பிடலாமா என்ற படி வந்த ஜானுவை புதிதாகப் பார்த்தேன்.

நேற்று போல இன்று ஏன் புலம்பவில்லை.எப்பொழுதும் போலவே

சிரித்தமுகம்.

சிரித்தபடியே சொன்னாள், வேற யாரும் கண்டுக்கலைன்னால் என் பிறந்த நாள் எனக்கு

முக்கியம் இல்லாமல் போய்விடுமா. சந்தோஷமாகத் தான் எழுந்திருப்பேன் என்ற முடிவுடனேயெ

நேற்று தூங்கப் போனேன்'' என்றாள்.



ஓகே இங்க பார் என்று பூங்கொத்தை அவளிடம் நீட்டினேன்.

ஒரு நொடியில் முகம் சிவந்துவிட்டது அவளுக்கு. அய்ய என்ன இது என்றபடி வாங்கிக் கொண்டவளின் கையில் இனிப்புப் பொட்டலத்தையும் பெரிய வாழ்த்து அட்டையையும் நீட்டினேன்.



அம்மாடி என்னது இது எங்க வீட்டுக்காரருக்கு என்ன ஆச்சு என்று திரும்பப் போனவளின்

கையில் 'ஹெதர்' கொடுத்த பரிசுப் பொட்டலத்தையும் திணித்தேன்.

அவள் முகம் பெரிதாக மலர்வதைப் பார்த்து எனக்கும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.



பேச்சு நின்று கண்கள் கலங்குவதைப் பார்த்ததும் ,

பதினைந்து வயதில் என்னுடன் இணைந்த

என் பழைய ஜானுவே வந்தது போல என் மனம் நெகிழ்ந்தது.



''சரி.உனக்குப் பசிக்கிறதா இப்ப?. இல்லை ,வெளியில் வரத் தயாரா'' என்றதும்

போலாமே, புடவையைப் பிரிக்கக் கூட இல்லை. இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்' என்று உள்ளே

விரைந்தாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் வாழ்க்கையிலேயே முதன் முறையாகச் சட் சட் என்று

ரெடிமேட் முடிவுகளை எடுத்து , தொலைபேசியில் முடிக்க வேண்டிய சமாசாரங்களைச் சொல்லிவிட்டு

வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் பத்திரப் படுத்தினேன்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜானு, என்னப்பா சாப்பிடத்தானே போகிறோம். அதற்கு என்னத்துக்கு இவ்வளவு முஸ்தீபு செய்கிறீர்கள்'' என்றாள்.



சாப்பிடலாம் ,அப்புறம் வெளிலயும் போகலாம்' என்றபடி அவளை

வலுவில் இழுத்து வண்டியில் முன் சீட்டில் உட்கார வைத்தேன்.

எதேச்சையாகப் பின்னால் திரும்பியவளின் கண்கள் விரிந்தன.

'என்ன பெட்டி எல்லாம் இருக்கு' எங்க போறோம்?



வண்டி நெடுஞ்சாலையை நோக்கிப் பயணிப்பதைப் பார்த்து,

என்ன தீர்மானம். எங்கதான் போறோம்'' என்றவளிடம் சொன்னேன்.

முதலில் சாப்பிட ஹைவேயில் இருக்கும் பத்மம் ரெஸ்டாரண்ட்.

அப்புறம்...என்று நிறுத்தினேன்.

அப்புறம் மதுராந்தகமா என்று கேட்டாள்.

இல்லையே... ஸ்ரீரங்கம்.!! என்று வெகு நாட்களுக்குப் பிறகு மனசு லேசாகி வாய் நிறைந்த

சிரிப்புடன் அவளைப் பார்த்தேன். நானும் நல்லவன்தான் இல்லையா.:))


இன்னுமொரு டிஸ்கி

*******************************
அன்புத் தோழி துளசியின் சந்தேகம், பொட்டி இருந்தால் பெண்டாட்டிக்குத் தேவையானதை எடுத்து வைத்தார்னு எப்படிச் சொல்ல முடியும். நமக்கு என்ன வேணும்கறது நமக்குத்தானே தெரியும்? என்பதுதான் அது.இவர்கள் கையில் க்ரெடிட் கார்ட் இருக்கிறது. அப்படியே ஏதாவது வேண்டுமானால் வாங்கிக் கொள்ள கடைகள் ஏராளம். ராகவனுக்கு என்ன பயமென்றால், கொஞ்சம் தயங்கினாலும் தன் மனம் மாறிவிடப் போகிறதே என்பதுதான்.:)அதுதான் நொடியில் தீர்மானிக்கப் பட்ட நல்ல பயணம் இது.
**************************
அவர்கள் இருவரும் இரவே சென்று ஸ்ரீரங்கனைத் தரிசித்து,மலைக் கோட்டைப் பிள்ளையாரையும் சேவித்துவிட்டு அடுத்த நாள் பகலில் கிளம்பி ,புதிதாகப் போடப்பட்டிருக்கும் நல்ல சாலையில் 5 மணி நேரப் பயணத்தில் தங்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள்:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Friday, November 13, 2009

நவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்

இன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.

அன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.

வயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .

கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள்.

உடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்
பெற்றொரைப் பாராட்டும் பிள்ளைகள்
பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர்கள்
இப்படி நீளும் பட்டியல்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.
இதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.

அதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.
அவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)
பார்த்தால்,

KINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.
நல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.
அவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக
இயங்க வாழ்த்துகள்
























பெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......
குழந்தைக்கு வாழ்த்துகள்.





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.