Showing posts with label திருமணங்கள். Show all posts
Showing posts with label திருமணங்கள். Show all posts

Tuesday, April 23, 2019

திருமணம் கைகூட .....1

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

1996  தாம்பரத்துக்கு அருகே  ஊரப்பாக்கம்  இன்னும் வளராத
நிலைமையில்   பாதி டவுன், பாதி கிராமம் என்ற அளவில்

எப்போதோ கணவன் கட்டிய வீட்டில் இருக்கும்  ஒரு அம்மாவின் கதை.
ஜானம்மா  தன்  பெண் ,பையனுடன் அந்தச் சிறிய வீட்டில் இருந்தார் .
கணவர் வேலாயுதம்   அவர்களை இங்கே  கொண்டு வந்து சேர்த்து வைத்த ஆறு மாதங்களில்
திடீர் மாரடைப்பால் இறந்தார். வயது 52.
 ஒரு பெரிய வாகனங்கள் தயாரிக்கும்  நிறுவனத்தில் 
போர்மன்  வேலை.
இஞ்சினீரிங் இறுதி வகுப்பில் மகன்  ஷிகிவாஹனன் படித்துக் கொண்டிருந்தான்.

மகள் கிருத்திகா  பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள்.
கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனம்,எல்லாமே அருகில் இருந்ததால்
அவர்கள்  வாழ்க்கை அழகாகவே நடந்து கொண்டிருந்தது.

ஒரு  வருட காலமாகவே முதுகு வழியால் அவதி பட்டுக் கொண்டிருந்தஆர் .
 வேலை பளு அதிகமாக இருந்ததும் ,அடிக்கடி லிய்வு போடா முடியாததாலும், குடும்ப மருத்துவரிடம் அவ்வப்போது மருந்துகள் வாங்கி வலியை க் குறைக்கப் பார்த்தார்.

டாக்டர் சொன்ன இதய பரிசோதனைகளில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.

ஒரு வார விடுப்பில் இருந்து மீண்டும்  வேலைக்குச் சென்று விட்டார்.

ஒரு ஆடி மாதப் பிறப்பன்று ,தூங்கப் போனவர் எழுந்திருக்கவில்லை.

பக்கத்தில் இருக்கும் மருத்துவர் ஓரு மணி நேரமாகிவிட்டது.
என்று கைவிரித்துவிட்டுப் போய் விட்டார்.

இதோ பத்து வருடங்கள் ஆகி விட்டன.
33 வயது மகனுக்குத் திருமணம்  செய்ய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜானம்மா.

மக்கள் படித்து முடித்தவுடன் அவளது 25 வயதில் அண்ணன் மகனுக்கே  மணமுடித்ததில்
அந்தக் கடமை முடிந்தது.

வேலாயுதம் அவர்களின் அலுவலகம்  மிக்கது தாராளமாக
வராது 30 வருட சேவையைப் பாராட்டி
ஒரு நல்ல தொகையைக் கொடுத்திருந்தார்கள். சிக்கியின் மேற்படிப்புக்கு, கிருத்திகாவின் திருமணத்துக்கும் அந்தத் தொகை உதவியது.

அடுத்த வருடம் நல்ல கணினிக்  கம்பெனியில்
வேலைக்குச் சேர்ந்ததும், கிருத்திகாவின் முதல் குழந்தை பிறந்தது.
எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட அண்ணனைக் கண்டு தங்கைக்கு  ஏக மகிழ்ச்சி.

இன்னும் இரண்டு வருடங்கள் போனது . மகளின் இரண்டாவது பிள்ளைப்  பேற்றையும்  ஜானம்மா ஏற்றுக் கொண்டார்.

நடுவில் அவர்களை பார்த்து  விசாரித்தவர்கள் சிக்கியின் திருமணத்தைப் பற்றி பேசும்போது அவன் 30 வயதை அடைந்திருந்தான்.
ஜானம்மா மனம் குறுக்கிப் போனார்.
இந்தப் பையனைக் கவனிக்காமல் விட்டோமே.

என்ற பாதி ப்பில் தெரிந்த ஜோசியர்களிடம் எல்லாம் அவன் ஜாதகத்தை  எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தாள்.

மகன் விரும்பும் வண்ணம் ஒரு வரனும்  அமையவில்லை..



Friday, March 21, 2008

280,பங்குனி உத்திரம்















இன்னிக்கு இவங்க எல்லாம் திருமணம் செய்துக்கறாங்க.

எனாலே ஒருத்தர் கல்யாணத்துக்கும் போக முடியாதததல கூகிள்ள தேடிப் படம் போட்டுட்டேன்பா.

எங்க கற்பகம்மா, கபாலீஸ்வரரையும்,

ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கனாதரையும்,

எங்கள் வில்லிபுத்தூர்ச் செல்வி கோதை அவள் கண்ணன் வடபத்ரசாயியையும்,

திருப்பரங்குன்றம் திருமுருகன் தெய்வயானையையும்

திருமணம் செய்கிறார்கள்.

இன்னிக்குச் சந்திரன் அவ்வளவு தேஜசோடு இருப்பானாம்.

ஏனெனில் அவனுக்கும் திருமணம் இன்று.

ஸ்ரீமஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து எழுந்து வந்து

தன் நாயகன் பரந்தாமன் மார்பில் வந்து திருவாகத் துலங்கிய நாள்.

ஸ்ரீராமன் சீதா தேவியையும்,

லட்சுமணன் ஊர்மிளையையும்,

பரதன் மாண்டவியையும்,

சத்ருக்னன் சுருதகீர்த்தியையும்,

மிதிலையில் மணம் புரிந்த நாள்.இந்த வளம் மிகு நன்னாளில் நாம் அனைவரும் ,

தெய்வ தம்பதியர்களை நாடி, அவர்கள் அருளைப் பெறலாம் வாருங்கள்.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...