Blog Archive

Showing posts with label என் கண்ணே நிலாவே. Show all posts
Showing posts with label என் கண்ணே நிலாவே. Show all posts

Saturday, March 10, 2012

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம:) மாசி மாத நிலா.

 
மாசியும் மார்ச்சும் வந்தது.
பவுர்ணமியும் வந்தது.

புதிதாகக் கிடைத்த  லென்ஸ்  வழியாகப் பார்த்தால் நிலவு
இன்னும் அழகாகத் தெரியுமோ. ஆவலோடு ஓடி

ஓடிப் பார்த்தால் நிலவுகள் இரண்டு தெரிகின்றன.
நிலவின்   இரண்டு பாகங்கள் மிதக்கின்றன.
ஆஹா நீயுமான்னு  துக்கம் தொண்டையை அடைத்தது.

ஒரு வாரம் ஆனால் பார்வை தெளிவாகிவிடும் என்றாரே வைத்தியர்.
சிங்கத்தை அழைத்து  நிலா  சரியாகத் தான் இருக்கிறதான்னு கேட்டால்

லூசா  நீ'ன்னு கேக்கலை. எப்பவும் மாதிரி வெள்ளையா அழகா ரவுண்டாதான் இருக்கு.
கொஞ்சம் உள்ள வரியா;ன்னுட்டுப் போய்விட்டார்.

அடுத்தநாள் காமிராவோட போனபோது  
காமிராக் கண்ணுக்கு முழுவட்டம் தெரிந்தது.

பார்வை மாறினால் உலகம் மாறுமா என்ன.
அடுத்த மாதம் திருந்திய பார்வையோடு 
உன்னைப் பார்க்கிறேன். என்று   தீர்மானம் இயற்றிவிட்டு
உள்ளே வந்துப் பதிவிலும் போட்டாச்சு.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa