Showing posts with label மாற்றம். Show all posts
Showing posts with label மாற்றம். Show all posts

Monday, January 24, 2011

காதல் என்பது காதல் மட்டுமா

நேற்று ஒரு நல்ல  படம் பார்க்க  வாய்ப்பு   கிடைத்தது.  முழுவதும் துபாயில் எடுக்கப் பட்ட படம் என்று   முன்பு    கேள்விப்பட்ட  நினைவு.  பாடல் களின் இனிமையால்  மக்களை மகிழ்வித்த ஆர்.டி. பர்மனின்   நினைவுக்குச் சம்ர்ப்பண்மாக எடுக்கப் பட்ட   படம். அவர்கள் பாடல்களை  வைத்தே  கதையை நகர்த்திச் சென்ற     அழகு   என்னை வெகுவாகக் கவர்ந்தது.
   ஒரு குத்துப்பாடல் இல்லை. ஒரு  அளவுக்கு மீறின  படுக்கை அறைக் காட்சி இல்லை.    நெளியாமல் நகராமல்  பார்க்க முடிந்தது:)

இந்தப் படம்  பார்த்ததின்  தாக்கம்   இணையத்தில்  பழைய பாடல்களைத் தேடிக் கேட்டதில்  மனதுக்கு ஒரு    நிம்மதி.
என் வயது   ஒத்தவர்கள், அநேகமாக வானொலி, ரேடியோ சிலோன்,பிற்பட்ட நாட்களில் சென்னை அலை வரிசையின்  வர்த்தக ஒலிபரப்பு கேட்டே வளர்ந்தோம்.
பாட்டின் இசை,இனிமை மட்டும் மனதில் தங்கிவிடும்.
பிறகு வந்தது தொலைக் காட்சி.
  பிடித்த தமிழ்ப் படத்தை வரிசைப் படுத்த ஆரம்பித்தால் அது   அநேகமாக  முடிவில்லாமல்   போகும்.
அதனால்  சில இந்திப்படங்கள்  அதுவும் நல்ல பாட்டுகளுக்காகவும்,கதைகளுக்காகவும்,  நடிப்புக்காகவும்  நான் தேர்வு செய்த படங்கள்.
  இது என், என்னுடைய மட்டும்  தேர்வு. அநாமிகா,ஆராதனா,ஆவாரா,சுப்கே சுப்கே,ஆந்தி மற்றும் தேவ் ஆநந்தின் சில படங்கள்,மதுபாலா,ராஜ்கபூர்,ஷம்மி கப்பூர்  இப்படி  எத்தனை தடவை கேட்டாலும் ,பார்த்தாலும் சலிக்காத  படங்களின் பாடல்கள்.
ரொம்பக் கர்நாடகமாகத் தெரியும்:)

இங்கே  இந்தப் பாடல்களை ஒரு இடுகையாக எழுதக் காரணமும்  எழுந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்   ஒரு பதிவு ,ஒரு குடிப்பழக்கத்தினால்  கடை நிலைக்கே போய்   ,மீண்ட குடும்பத்தைப்  பற்றி எழுதி இருந்தேன்.
  சிறு  குழப்பம்  அங்கே. என்னதான் பழக்கத்தை விட்டுவிட்டாலும் கண்வன் ,மனைவியரிடையே  பழைய பரிவும் காதலும் வராமல் ஏதோ அவர்களைத் தடுத்தது.
  இது போலவே சென்றால் மீண்டும் பழய நிலை வந்துவிடும் என்கிற    பயமும் ஒட்டிக் கொண்டு இருவரும் தவித்தார்கள்.

இந்த நிலையில் தான்    குடும்பத்தின்   முந்நாள் நண்பர்    தன் சொத்துகளைப் பிரித்து  உயில் எழுதும்போது, தன்    இசைத்தட்டு  கலெக்ஷன்  அத்தனையும்
ஒரு    இருநூறு பாடல்கள்    இருக்கலாம்.
பழைய நாளைய  ரிகார்டிங்   அமைப்பில்  அமைந்த  இசைத் தட்டுகள். அவைகளைக் கேட்க   70களில் வாங்கிய   ரேடியோ க்ராம்!
  நம்ப முடியாத  கண்களுடன் இந்தப் பொக்கிஷத்தை இருவரும் பார்த்ததாக  எனக்குப் பிறகு செய்தி வந்தது. 
அதற்குப் பிறகு நடந்துதான் இன்னும் திரைக்கதை போலவே இருந்தது.   பலத்த வாக்கு வாதத்துக்குப் பிறகு முதலில் கேட்ட பாடல் ''யாதோன் கி பாராத்''!  :0)

வரிசையாக  மேரே சப்னோன்கி ராணி, பாகோன்  மே சலி ஆஆஆஆ:0)
இப்படித்தொடர்ந்ததாம் அவர்கள் மீண்டும் காதல்கதை.

இப்பவும் மூட்  அவுட் '' அப்படி இப்படி என்று சின்னச் சின்ன  தகறாருக்கெல்லாம் கூட சிடுவேஷன் சாங்க் போடப் பெண்ணும் பழகிக் கொண்டு விட்டாளாம்.

அமீரகம் வரை  வந்த இதமான   பாடல்கள்,அவர்களுக்குக் கொஞ்சமாவது மாற்றம் கொடுத்திருப்பது  எனக்குச் சந்தோஷமே.
அமீரகத்தில் கிடைக்காத பாடல்களா  என்று தோன்றிய்து    எனக்கு.

 இருந்தாலும் அவர்களின் அருமையையும், உள்ள அன்பையும் உணர்ந்த ஒருவர்  கொடுத்த  பரிசு  உண்மையிலியே    பயன் பட்டிருக்கிறது.இசையின் பெருமைக்கு   என்ன பெயர் வைப்பது!  மியூசிக் தெரபி??

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Thursday, July 22, 2010

தொடர்ந்து முடிந்தது பாகம் 7



சாயந்திர நேரம் எல்லோரும் ஸ்ரீனிவாசனின் அறையில் உட்கார்ந்து

சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
பெற்றோர் இருக்கும் நாட்களிலிருந்து ராதையும் ஸ்ரீநிவாசனும்

பெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மணி அளவில் கடவுள் துதி சொல்வது வழக்கமாக
இருந்தது.

நடுவில் நின்றிருந்த பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த
ராதை,தன் கணவனையும் பெண்கிருஷ்ணா,
மாப்பிள்ளை,பிள்ளை அனைவரையும் அழைத்து அண்ணன் அறைக்கு வந்து

அவரிடம் சொல்லவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தார் அவர்.

அரைமணி நேரம் பக்திமணத்தில் கரைந்தது.

பாமவின் பிள்ளைகளும் ,மனைவியரும் கூடத்தில் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தையைப் பார்த்து எல்லோரிடமும் குசலம் விசாரித்ததோடு

கடமை முடித்தவர்களாகத் தம் தம் அறை நோக்கிப் போனவர்கள் மீண்டும் கீழே
வந்தது இரவுச் சாப்பாட்டுக்குத் தான்.

நாணிப்பாட்டியும் அவரது மகளும் சுவையாக அளவாகச் செய்திருந்த
சாப்பாட்டை ருசித்து உண்டனர் ராதையும் அவளது குடும்பத்தினரும்.


க்றிஸ்டினாவும் தங்களோடு உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடுவதை
பாமாவின் பிள்ளைகளும் மருமகள்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

இயல்பாக இருக்கும் குழந்தைகளும் இனிமையாகப் பட்டுவுடன் அரட்டை

அடித்தவண்ணம் சாப்பிட்டு முடித்தனர்.

''அத்தை அவர்களுக்கு பீட்சா,பர்கர் அப்படிக் கேட்ப்பியோன்னு
நாங்க நினைத்தோம்'' என்று ஆச்சரியப் பட்ட தன் மருமகன்களைப்
புன்னகையோடு பார்த்தாள் பாமா.

அவர்களுக்கு எந்த இடத்திலும் எல்லாவிதமான சாப்பாட்டையும்
சாப்பிடப் பழக்கி இருக்கிறோம்பா. காரமில்லாத உணவு விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நம் நாணிப்பாட்டிக்கு அது பழகிய மெனு தானே என்றாள்.
சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு விரைந்தாள் ராதை.

அங்கே அண்ணனுக்குக் கஞ்சியும் தயிரும் கொடுத்துமுடித்திருந்த பாமாவைச்

சாப்பிடச் சொல்லி அழைத்தாள்.

நானும் இங்கேயே இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டுவீட்டேன்மா.இனி பழமும் பாலும்

போதும் என்றவளை மெல்ல அணைத்துக் கொண்டாள் ராதை.
விரதம் இருக்கியா என்று கேட்டதும், ஸ்ரீநிவாசன் அவளை அருகில் அழைத்துத்

தங்கள் தினசரி உணவே அதுதான்.காய்கறிகள் கலந்த சாலட் மட்டும் இல்லை,

என்று சைகையில் சொல்ல முனைந்தார்.

அவர் ஆரம்பிக்கப் பாமா முடிக்க நல்ல ஜோடி என்று கைகளை வளைத்து
அண்ணாவிடம் சூப்பர்' என்று காட்டினாள்.
*****************************************************************

''அப்போ கிளம்பலாமா ராதா. குழந்தைகள் களைப்பாக இருக்கிறார்கள்


என்றதும், இதோ வரென் கோவிந்தன்,என்ற வண்ணம்,

சமையலறைக்கு விரைந்தாள் ராதா.

நாணிப்பாட்டியும் அவரது பெண்ணும் சாப்பிட்டு முடித்து, அறையைச்

சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.



பாட்டி, என்னுடன் எங்கள் இடத்திற்கு வரமுடியுமா, உங்களோடு பேச வேண்ட்டும்

என்ற ராதாவைப் பார்த்து ஒரு புரிதலோடு தலை அசைத்தார் பாட்டி.

பெண்ணிடம் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு

படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு

ராதையுடன் பாட்டியும் கிளம்பினார். பாமாவிடமும் விஷயத்தைச் சொல்லி

அனுமதி வாங்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெறவும்,பட்டுக் குட்டி ஓடி வந்து ஏறிக்

கொண்டு விட்டது. அம்மா கிட்ட கேட்டியா செல்லம் என்று ராதா ஆச்சரியப்பட,

நான் பாட்டி கிட்டச் சொல்லிட்டேன் , ஒண்ணும் நடக்காது.பயப்படாதே அத்தே
என்று சிரித்தது அந்தப் பெண்.

வண்டி

அபார்ட்மெண்ட்டை நோக்கிக் கிளம்பியது.

வாசலில் விளக்கு வெளிச்சத்தில் நிற்கும் பாமாவைப் பார்த்து ,அது வரை அழாமல் இருந்த ராதா

நாணிப்பாட்டி மேல் சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.

ஏன் இந்த மாதிரி நடக்கிறது. அண்ணா, பாமா மாதிரி நல்லவா பார்க்க முடியாதே.

இப்படிப் பிள்ளைகள் பெற்றோரிடமு ஒட்டாமல் உற்றாரிடமும் ஒட்டாமல்

ஏன் இப்படியானார்கள்.எனக்குப் புரியலையே என்று மெல்லிய குரலில் புலம்பியவளை

பாட்டி சமாதானப் படுத்தினார்.
காலப் போக்கு மாறிவிட்டது ராதாம்மா.
இப்ப நடப்பது பெண்கள் குடும்பம். நம்வீட்டு வண்டித்தடங்கள் ,

கரூர்,கொடியாலம் நோக்கித்தான் இனிமேல் போகும்.
அதை உன் அண்ணா நன்றகப் புரிந்து கொண்டார். பாமாவுக்குப் பிள்ளைகள்


வெளியூரில் படிக்கப் போனபோதே அவர்களின்

மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருமணம் ஆனதும் பெண்டாட்டிகளை அநுசரிக்க வேண்டிய கடமையும்,

அவர்களுக்குச் சேர்ந்து கொண்டது.

எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே ,என்று சந்தோஷப்படு.

நான் பாமாவையும் சீனுவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவனைப்

பார்த்துக் கொள்ள வந்திருக்கிறானே ஒரு கைகால் டாக்டர்,அவன் என் பையன் தான்.

சம்பத்துனு அண்ணாவைக் குளிப்பாட்டி, மத்தவேலையெல்லாம் செய்வது

என் பெண்ணின் புருஷன். அவனுக்கும் நல்ல சம்பளந்தான் தருகிறார் உங்க அண்ணா.

என்று புன்னகை புரிந்தார் பாட்டி.

தொலைவில் தெரிந்த உச்சிப்பிள்ளையார் கோவில் விளக்குகளையும்,

ஸ்ரீரங்க நாதர் கோபுர விளக்கையும் வணங்கினாள் ராதா.

ஏனோ ஒரே ஒரு ஊரிலே ஒரெ ஒரு ராஜா'' பாட்டு நினைவுக்கு வந்தது.

பக்கத்தில் தூங்கி விட்ட இளந்தளிர் பட்டுக் குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.





எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, September 04, 2008

மந்தையில் தனியாய்

கூட்டத்தில் தனியாய்(alone in a crowd)  9/4/2008

தனியாகப் பிறந்தாய்
தனியாக அலைந்தாய்...இன்று
தனியாக இருக்கப் பயமேன்

இளமையில் கூட்டம் போடும்  மனிதம்
முதுமையில் கலையும்
நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும் பிரியும் நாள்.

நினைக்காத இறைவன் அருகில் வரும் நாள்
நீயும் முதுமையும்  கூடும்  நாள்.

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...