எல்லோரும் வளமாகவாழ வேண்டும். படிக்காத மேதை. ரங்கன்.
என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன்,
இந்தப் பாட்டில் வரும் அத்தனை
வரிகளுக்கும் சொந்த மானவன் .
சிவாஜி பக்தன்.
ஒரு சிவாஜி சார் படத்தையும் பார்க்காமல் இருக்க மாட்டான். சினிமா, பாட்டு, நண்பர்கள் என்று அவனைச் சுற்றி பெரிய கூட்டமே இருக்கும்.
எல்லோருக்கும் நண்பன். என் கணவரிடம் அதீத பக்தி. எத்தனையோ. தருணங்களில் என்னுடன். தோள் கொடுத்து நிற்பான்.
தந்தை மறைந்த போது தம்பிகள் இருவரும் என் கைகளைப் பற்றி. கலங்கியபோது நான் கலங்கமல் இருந்தது தான் அதிசயம். மகளின் திருமணம் பத்து நாட்களில். அம்மான் சீர் வந்து சேரும் என்று என் அம்மாவும் தம்பிகளும். சொல்லி அணைத்தார்கள்.
திருமணம் நடந்த அன்று இருவரும் அப்பாவின் படத்தை
மண்டபத்துக்கே கொண்டுவந்தார்கள்.
தம்பிகள் இருவரும் என் இருபக்கத்திலும் நின்று நான் கலங்காமல்
பார்த்துக் கொண்டார்கள்.
பெரிய தம்பி கல்கத்தாவில் பாட்டா கம்பெனியில் வேலை பார்க்கிறவன் சென்னை திரும்பும் போது .பெற்றோரைப் பார்த்து விட்டு அடுத்த நாள் திருச்சிக்கு வந்து விடுவான். கல்கத்தா ரசகுல்லா, இன்னும் பாட்டா செருப்புகள் கலகத்தாவிலிருந்து, ஆடைகள் என்று கொண்டு வருவான் பெட்டி நிறைய!!எங்களுடன் ஒரு வாரம் தங்கி விட்டு
மனமில்லாமல் திரும்பி செல்வான்.
சிங்கத்துக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை அறுவை சிகித்சை
செய்ய வேண்டுமோ என்று பயந்த போது சின்னவன் ஓடி வந்து விட்டான். 22 வயதுக்கு மிகப் பெரிய பொறுப்பு.
தன் அத்திம்பேருக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை
என்று தெரிந்த பிறகே திரும்பினான்.
இன்னும் நிறைய செய்திகள் உண்டு. மீண்டும் பார்க்கலாம். வாழ்க சகோதர பாசம்.
No comments:
Post a Comment