Showing posts with label அவள் கருணை.. Show all posts
Showing posts with label அவள் கருணை.. Show all posts

Tuesday, February 09, 2010

ஆத்தா உன் சேலை ..

வலது பக்கம் இருப்பது என் அம்மா.




ஆத்தா உன் சேலை'' பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா.
அண்மையில் கேட்க நேர்ந்தது. அதுவும் எங்கள் அம்மாவின் பிறந்த நாள் அன்று கேட்டதுதான் அதிசயம்.

கைநிறையக் காசிருக்கு
கடைக்குப் போகலாம் எல்லாமும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா!
ஆத்தா உன் சேலை, பாடலில் அம்மாவின் புடவை எடுக்கும் அவதாரங்கள் அநேகமாகிறது.

பிள்ளைக்குத் தூளி,
பையனுக்குத் தலை துவட்ட,
பெண்ணுக்குத் தாவணீயாக,
கிணத்துத் தண்ணியை வடிகட்டித் தண்ணீரை இனிமையாக்குமாம்.
ஆற்றில மீன் பிடிக்கும் வலையாகுமாம்,
காயத்துக்குக் கட்டுப் போடுமாம்.
வெறுந்தரையில் படுக்காமல் ஆத்தா சேலையில் படுத்தால்
தூக்கமும் தாலாட்டோட வருமாம்.
கடைசியில் இந்தக் கவிஞர் தன் இறுதிப் பயணத்துக்கும் ஆத்தா சேலைதான்
வேணும் என்கிறார்.
எழுதியவரின் பெயரைக் கவனிக்காமல் விட்டது என் தவறில்லை.
அது பாடலின் அருமையால் விளைந்த கவனப் பிசகு.

அம்மாவின் கூறைப் புடைவையை இன்னும் என் புடவைகளுக்குப் புதைத்து வைத்திருக்கிறேன்.
அதுவும் குட்டிக்கரா பவுடரின் வாசமும் இன்னும் மெலிதாக மணம் வீசிக் கொண்டு
மனத்தை நிறைக்கிறது.
அம்மாவின் கையால் பிசைந்த குழம்புச் சாதமும்,
கடைசியா நீ எனக்குக் கொடுத்த அரை டம்ப்ளர் பாலும்
இன்னும் என் மனதை நிறைக்கிறது அம்மா.
நீ என்றும் என் மனதில் நிறைவாய்க் கலந்தாய்.
ஆசிகளை வேண்டுகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும்.

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...